Thursday, February 26, 2009

திருமணம் - ஓ.சரஸ்வதி தேவி

இரண்டு மனங்களின், இரண்டு சிந்தனைகளின் ஒன்றிணைந்த பிணைப்பே திருமணம். திருமணம் என்ற பந்தத்தின் வழி, ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் இரு ஜீவன்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை காலம் முழுவதும் பகிர்ந்து கொண்டு ஒருவர் மற்றொருவரை அனுசரித்துக் கொண்டு, நீண்ட வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதே இல்வாழ்க்கையாகும்.ஆனால் இந்த திருணம் என்பது எப்பொழுதும் மலர்கள் நிறைந்த ஒரு பசுஞ்சோலையாகவே இருந்து விடுவதில்லை.

வறண்டு போன ஒரு பாலைவனமாகவும் கூட இது மாறிவிடுவதுண்டு.திருமண வாழ்க்கை பூத்துக் குலங்கும் ஒரு பசுஞ்சோலையாக இருப்பதும், வறண்டுப் போன பாலைவனமாக மாறுவதும் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும், இல்லற ஜோடிகளின் கைகளில்தான் உள்ளது.காதல் திருமணமாகயிருந்தாலும் சரி, பெற்றோர்கள் பார்த்து முடிக்கும் திருமணமாகயிருந்தாலும் சரி, திருமணமானவர்களிடையே இருக்கும் பொறுமையும், புரிந்துணர்வுமே வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் இரகசியமாகும்.

இருசாரார் ஒன்று சேர்ந்து நடத்துவதுதான் திருமண வாழ்க்கை. ஆதலால் ஒரு காரியத்தை இருபாலரும் சேர்ந்து செய்வதும், தங்கள் எண்ணங்களை ஒருவர் மற்றொருவருடன் பரிமாறிக் கொள்வதும், வெளிப்படையான பேச்சும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு மிக மிக அவசியமான “டானிக்கு” களாகும்.

ஒருவர் மற்றொருவருடன் பேசும் முறை, தம்முடைய எண்ணங்களைப் பகிர்ந்து, உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைகள் ஆகியவை திருமண வாழ்வில் முக்கிய பங்காற்றுகின்றன.இல்லற வாழ்க்கையில் வெற்றி என்பது ஒருவர் தம்முடைய இல்லறத்துணையின் மதிப்பையும், உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் புரிந்து கொள்வதையும்இ விட்டு கொடுக்கும் மனப்பான்மையையும் பொறுத்துள்ளது.ஆனால் துரதிஷ்ட வசமாக தம்பதிகள் பலர் இதனை உணராமலே திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றார்கள்.

இதனால்தான் திருமண முறிவுகளின் எண்ணிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் சிலர் மேற்குறிப்பிடப்பட்ட எது ஒன்றும் இல்லா சூழ்நிலையில் அனைத்தையும் பெற்றுக் கொண்டு காலம் தள்ளி வருகின்றனர். இன்னும் சிலர் எதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் பிரிந்து வாழ முடிவு செய்கின்றனர்.அதிகரித்து வரும் திருமண முறிவுகளும், திருமண பிளவுகளும் ஓர் ஆரோக்கியமான வாழ்க்கையின் அறிகுறிகள் அல்ல! இந்நிலை சமூகத்தினரிடையே குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியும், எதிர்கால சந்ததியினரிடையே பாதுகாப்பற்ற ஒரு நிலையையும் ஏற்படுத்த நேரிடும்.

தொடரும்...

Wednesday, February 25, 2009

வானம் ஏன் நீலநிறமாக காட்சியளிக்கிறது?

இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் ஓர் அற்புதமே. நமது நெருங்கிய பழக்கம் காரணமாக நாம் அவற்றின் அற்புதத் தன்மையைக் காண்பதில்லை. "பூக்கள் பூக்கின்றன; மழை பொழிகின்றன; காற்று அடிக்கிறது; இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன;..." இவையெல்லாம் அன்றாடம் நடக்கும் வழக்கமான நிகழ்வுகளே. வானம் பகலில் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது. அதுவும் தெளிவான வானம் அப்பழுக்கற்ற நீல நிறமாகக் காட்சியளிப்பது எத்தனை அற்புதமான காட்சி.

விப்ஜியார் ( Vibgyor) - சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என்னும் ஏழு வண்ணங்களில், மற்ற ஆறினை விட்டுவிட்டு வானம் ஏன் நீல நிறத்தைத் தன்மீது போர்த்திக் கொண்டது? இக்கேள்வி விடையை அண்ணாந்து பார்த்து இது குறித்துச் சிந்தனை செய்தால் போதும்.

சூரிய ஒளி வானத்தையும் வளிமண்டலத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது. இரவில் நம் கண்களுக்குப் புலப்படாத வளிமண்டலம் சூரிய ஓளியின் மூலம் நமக்குத் தெரிகிறது. பெளர்ணமியன்று தெளிவான வானத்தைப் பார்ப்போம். சந்திர ஒளி சூரிய ஒளியின் பிரதிபலிப்பே என்றும் அறிவீர்கள். சந்திர ஒளியில் பார்க்கும் போது வானம் நீலநிறமாகத் தெரிவதில்லை என்பது விசித்தரமாகத் தோன்றவில்லையா? சூரிய ஒளியில் நீலமாகத் தெரியும் வானம் சந்திர ஒளியில் அவ்வாறு தெரிவதில்லை. இதற்கான விடை சந்திர ஒளி சூரிய ஒளியைக் காட்டிலும் மிக மிகக் குறைவு என்பதே. கணக்கிட்டுப் பார்த்தால் சந்திர ஒளி, சூரிய ஒளியில் ஐந்து லட்சத்தில் ஒரு பங்கே என்று தெரிகிறது. இது மிகமிகக் குறைவான அளவு ஆகும்.


இருப்பினும் இரவில் நமக்கு இது பிரகாசமாகத் தெரிவதற்குக் காரணம் நம் கண்கள் குறைந்த ஒளிக்குப் பழகிக் கொண்டுவிடுவதனாலேயே. சூரிய ஒளி, சந்திர ஒளி இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மனிதர்களின் காட்சி ஆற்றலைப் பற்றிய ஒரு உண்மை விளங்கும். நிறங்களைக் கண்டுணர மனிதர்களுக்கு சூரிய ஒளி பிரகாசமாக இருப்பதனாலேயே வானத்தின் நீல நிறம் நமக்குத் தெரிகிறது. இவ்வாறு அதிகப் பிரகாசமான வெளிச்சத்தில் மட்டுமே நிறங்களை நாம் காணமுடியும். பிரகாசம் குறையக் குறைய நிறங்கள் மறைந்து போகும்.

சூரிய ஒளியின் நிறமாலையில் நீல நிறம் மிகமிகக் குறைந்த பிரகாசத்தைக் கொண்டது. மொத்த ஒளியில் நாற்பதில் ஒரு பங்கே (1/40) நீல நிறத்தின் பிரகாசம். வானத்தில் நாம் காண்பது இந்த நாற்பதில் ஒரு பங்கான நீல நிறத்தை மட்டுமே. அதிக பிரகாசமுள்ள மற்றநிறங்கள் காணாமல் போய்விடுகின்றன. நீல நிறம் மற்ற நிறங்களை மூடி மறைத்து விட்டது இது ஒரு குறிப்பிடத்தக்க உண்மை.

சில சமயங்களில் ஆகாயத்தில் ஆங்காங்கே வெள்ளை மேகங்களைக் காணலாம். இத்தகைய வெள்ளை மேகங்கள் வானில் பவனி வரும் காட்சி மிக அற்புதமான ஒன்றாகும். இவ்வாறு வெள்ளை மேகங்கள் இருக்கும் போது வானம் பளீரென்று நீலநிறமாகக் காட்சியளிப்பதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம், இந்த மேகக் கூட்டங்கள் உண்டாகும் போது அவை வளிமண்டலத்திலிருந்து தூசிப் படலத்தை தாங்கள் ஈர்த்துக் கொண்டு சுத்தம் செய்து விடுவதே.

பளீரென்ற வெள்ளை மேகங்களுக்கிடையே அற்புதமான நீலநிறத்துடன் வானம் காட்சியளிப்பது அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய ஒன்றாகும். உண்மையில் வெள்ளை மேகங்கள் நீர்த்துளிகளாலும் தூசியினாலும் ஆனவை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தூசிகள் இல்லாவிட்டால் மேகங்களே உருவாக முடியாது என்பதே. இவ்வாறு மேகங்கள் உருவாகி வளிமண்டலத்தை ஒரளவிற்குச் சுத்தம் செய்துவிடுகிறது. உண்மையில் நாம் நீலவானத்தைப் பார்க்கும்போது, பூமியின் வளிமண்டலத்தைப் பார்க்கிறோம். அங்கு ஒளிச் சிதறல் ஏற்படுகிறது.

வானத்தில் பச்சை, மஞ்சள்,சிவப்பு ஆகிய நிறங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதுமட்டுமல்ல அவை நீலத்தைவிட பிரகாசமானவையாகவும் உள்ளன. ஆயினும் நாம் ஏன் அவற்றை காணாமல் நீல நிறத்தை மட்டும் காண்கிறோம்? இங்கு மனிதனின் காட்சி அமைப்பு(Vision) ஒரு காரணமாகிறது. நிற மாலையின் நீலப்பகுதி, பிரகாசம் குறைவாக மறைத்து அதுமட்டும் நம் கண்களுக்கு மட்டும் தெரியும். நிறமாலை முழுவதையும் இரண்டாகப் பிரிக்கலாம். நீலநிறம் முடியும் இடம் - அதாவது பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு இவை ஒரு பகுதி. மற்றவை நீலம், கருநீலம், ஊதா. முதல் பகுதியில் மற்ற நிறங்களிருப்பினும் மஞ்சள் நிறமே முதன்மையாக இருக்கும். அவ்வாறே இரண்டாவது பகுதியில் நீல நிறமே முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மஞ்சள் பகுதியை எடுத்துவிட்டால் நீல நிறமே தெரிகிறது. இதுவே வானம் நீலமாகக் காட்சியளிப்பதற்கான காரணம். மஞ்சளின் பிரகாசம் குறைக்கப்படுகிறதே அன்றி அது முழுவதுமாக நீக்கப்படுவதில்லை .

எனவே வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் வளிமண்டலத்தில் உள்ள திரண்மங்கள் ஏற்படுத்தும் ஒளிச்சிதறலே. பெரிய அலைகளைக் கொண்ட( Longwaves) மஞ்சள் நிறத்தின் சிதறல் குறைவாகவும் அடர்த்தியற்றும் இருப்பதால், அதிகமாகவும் அழுத்தமாகவும் உள்ள நீல நிறத்தின் சிதறல் மட்டுமே மிகவும் நன்றாகத் தெரிகிறது.

சுருங்கக் கூறின், வானம் நீலநிறமாக இருப்பதற்குக் காரணங்கள் பின்வருமாறு,

1. நிறங்களைக் கண்டுணர நமக்கு மிகவும் பிரகாசமான வெளிச்சம் தேவை என்பது நமது காட்சித்திறன் பற்றிய ஓர் அடிப்படை அம்சம். எனவே பகலில் சூரிய ஒளியில் மட்டுமே வானம் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது.

2. நமது காட்சித்திறன் பற்றிய மற்றொரு அம்சம் - நிறமாலையின் நீலப்பகுதி, அது பலவீனமாக இருப்பினும், மஞ்சள் நிறம் மிகக் குறைவாக இருக்கும் போது முக்கியத்துவம் பெறுகிறது.

டைனோசர் ஆணா? பெண்ணா?

பிரமாண்டமான டைனோசரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் பார்த்து நாம் பயந்து போயிருக்கிறோம். அருங்காட்சி யகத்திலே அதன் மாதிரி வடிவத்தைப் பார்த்து வியந்து போயிருக்கிறோம். ஆனால் இந்த டைனோசர் ஆணா? பெண்ணா? என்று உங்களுக்கு தெரியுமா?

டைனோசர் ஒரு பெண்தான் என்று அடித்துச் சொல்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ஆதாரமாக இருப்பது அவர்கள் நடத்திய எலும்புத் திசு ஆராய்ச்சி. 6 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைராசோசரஸ் ரெக்ஸ் என்ற டைனோசர் புதைவடிவத்தின் எலும்புத் திசுவை உயிருள்ள பறவைகளின் எலும்புத் திசுக்களுடன் ஒப்பிட்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினா அரசுப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் மேரி ஷ்வைட்ஸர் தலைமையிலான குழு ஆராய்ச்சி நடத்தியது. டி ரெக்ஸ் என்ற அந்த டைனோசர் ஒரு பெண் தான் என்றும் அது இறந்த போது முட்டையிடும் பருவத்தில் இருந்தது என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

டி ரெக்ஸ் டைனோசர் புதைவடிவத்தின் உடைந்த கால் எலும்பில் வழக்கத்திற்கு மாறான எலும்புத் திசு லைனிங் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இப்படைப்பட்ட திசு இருப்பது டைனோசர் ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கின்றது. அது மட்டுமல்ல வெகு காலத்திற்கு முன்பே அழிந்து விட்ட பிரமாண்டமான டைனோசர்களுக்கு தற்போதைய பிரமாண்டமான பறவைகளான நெருப்புக்கோழி மர்றும் எமுள் எனப்படும் ஆஸ்ட்ரேலியப் பறவைக்கும் இடையே உள்ள தொடர்பை நிலைநாட்டவும் இந்த எலும்புத் திசு உதவியாக உள்ளது. டி ரெக்ஸ் டைனோசரின் எலும்பில் காணப்படும் வழக்கத்திற்கு மாறான திசு ஒரு மஜ்ஜை எலும்பாகும். இது இன்றைய பறவைகளில் ஒரு மெல்லிய நாள எலும்பாக உள்ளது.


இந்த எலும்புத் திசு இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. உள்ளீடற்ற கால் எலும்பில் காணப்படும் இந்தத் திசு கடைசி முட்டை போடப்படும் வரை இருந்து விட்டு அப்புறம் மறைந்து விடுகின்றது. இந்தத் திருவை பறவையின் உடம்பு கிரகித்துக் கொள்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தற்காலிகத் திசு ஈஸ்ட்ரோகன் அளவு கூடுவதால் உருவாகிறது. மேலும் முட்டையின் தோடு உருவெடுப்பதற்குத் தேவையான கால்சியம் சத்தை வழங்குகின்றது. இத்தகைய நாள எலும்பு தற்கால பெண் பறவைகளிடம் தான் காணப்படுகின்றது. டைனோசர்க்கு நெருங்கிய சொந்தக் காரரான முதலையிடம் கூட இந்தத் திசு இயல்பாக வளர்ச்சியடைகின்றது. கோழி கவுதாரி போன்ற பறவைகளின் நாள எலும்புக்கும் டைனோசர் நாள எலும்புக்கும் ஒப்பிட முடியவில்லை. ஆகவே நெருப்புக் கோழி எமுஸ் போன்ற பறக்காத பறவைகளின் கால் எலும்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அதில் இந்த ஒற்றுமை தெரிந்து டைனொசர் ஒரு பெண் தான் என்று விஞ்ஞானிகள் முடிவுகட்டினர்.

Sunday, February 22, 2009

இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிகளே நீங்கள் என்ன செத்த பிணங்களா ?

எத்தனை தமிழ்த் தொலைக்காட்சிகள் இருந்தும் என்ன பயன் ?

அவரவர் அரசியல் என்னும் சாக்கடையை விளம்பரப்படுத்தவே உங்களின் தொ(ல்)லைக்காட்சிகள்.
எங்குமே இல்லாத "தொலைக்காட்சிகளிடையிலான யுத்தம்" இந்தியாவில் மட்டும்தான் உள்ளது.
நாள்தோறும் நாலு காசுக்குக்கூட பிரியோசனம் இல்லாத பல நிகழ்ச்சிகளை வழங்கும் அன்பானவர்களே...

உங்களின் தொப்புள்க்கொடி உறவுகளுக்காக தற்போது தமிழகமே திரண்டுள்ளது, ஆனால் நீங்கள் மட்டும் பின்நிற்பது ஏன் ?

நாள்தோறும் உங்கள் அயல் நாட்டிலே உங்கள் உறவுகள் செத்து மடிகிறார்கள், சாவின் விழிம்பிலே நிற்கிறார்கள்.

பச்சிளங் குழந்தைகள் பாசத்தை அறியமுன் பாடைக்கு போகிறார்கள்
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க ஒரு பாயின்றி, நாள்தோறும் பதுங்கு குழிகளுக்குள் பயத்தோடு அடைந்து கிடக்கிறார்கள்.

கேட்ப்பதற்கு யாரும் இல்லை, நாங்கள் கத்துகிறோம், வீதி வீதியாய் சென்று கெஞ்சுகிறோம், கண்டுகொள்ள யாருமில்லை.

சர்வதேசமே ! சிங்கள அரக்கர்களை தட்டிக்கேட்க வக்கில்லாத தலைவர்களே !
இதுதான் உங்கள் மனித நாகரீகமா ?

அன்பான தொலைக்காட்சிகளே, உங்களுக்கும் கேட்க்கவில்லையா ? இல்லை கேட்டும் செவிடர்களாக நடிக்கறீர்களா ?

அண்மையில் காஸாவில், இஸ்றேல் தாக்குதல் நடத்த, காஸாவில் நடப்பவற்றை அனைத்து அரபு தொலைக்காட்சிகளும் அதையே, அமை மட்டுமே ஒளிபரப்புச் செய்தன. அது உலகெலாம் சென்றடைந்தது, உரியவர்களை ஈாத்தது.

ஆனால் !!! நீங்கள் என்ன செய்கறீர்கள் ? உங்கள் உறவுகளுக்காக, தமிழ்பேசும் உறவுகளுக்காக என்ன செய்கிறீர்கள் ???

குறைந்த பட்சம் உங்கள் செய்திகளிலாவது "உண்மையை" ஒளிபரப்ப முடியாது என்றால், எதற்காக உங்கள் சேவை ???

வெளிநாட்டு ஊடகங்கள்கூட தயங்காமல் உண்மையை உரைக்கின்றன, உங்களால் மட்டும் முடியாது என்றால் ???

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?
உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".
உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".
உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".
உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".
உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".
உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".
உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".
உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".
உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".
உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".
உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".
உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".
உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.

உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.

அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.

மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.

உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்

நன்றி : தமிழன் சிவா

உலகியலும் அருளியலும்-III

ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம் எனில் அது மக்கள் வாழ்க்கை நலத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். வள்ளலார் மக்கள் வாழ்க்கை நலத்துடன் மட்டும் இல்லாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டார். எல்லா உயிர்களிடத்தும் இறையை கண்டார். தயவு என்ற தவம் வள்ளலாரை பெரிய நிலைக்கு ஏற்றிவிட்டது. ஆனால் இன்றோ நாகரீகம் மற்றும் கல்வி வளர்ச்சியில் பெரிதும் வளர்ச்சி அடைந்தாலும் மக்கள் புற பூஜை களில் தான் அதிகம் திருப்தி அடைகின்றனர்.

தன்னுடைய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய மறுக்கும் முதலாளி வர்க்கத்தினர் பிரபல கோயில்களில் கோடி கணக்கில் தங்கம் மற்றும் வைரத்தில் வித விதமான பொருட்களை வாங்கி தருவதும் நடைமுறையில் யாவரும் அறிந்ததே.

மற்றும் சிலபேர் போலி சாமியார்களிடம் ஏமாறுகின்றனர். தெருவிற்கு தெரு இப்பொழுது உள்ள தியான மையங்களையும் கூறலாம்.அன்றே காக புஜண்டர் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோ என்பான்

பிரமநிலை காட்டா மற்றான்
காசப் பொய்களையும் அன்றோ சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு
வீரப்பா அடக்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோல முடிந்ததென்று விளம்புவானே....
சித்தர் ஞானக்கோவை : காகசுண்டர் பாடல் :35.

மேலும் சிலர் தயவு மற்றும் கருணையைப்பற்றி மிக அதிக அளவில் விளக்கம் அளித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் நிஜ வாழ்வில் யாருக்கும் உதவி செய்ய முன் வரமாட்டார்கள்.

ஜாதி, மதத்தைப் பற்றி மேடையில் வாதிடுவோர், நிஜ வாழ்க்கையில் தங்களுடைய மகன்/மகளுக்கு அதே இனத்தில் வரன்களை பார்ப்பவர்களாக இருக்கின்றனர்.

ஜீவகாருண்யத்தை நினைப்பவர்கள் வேறு-பிற இனத்தவர்கள் சாப்பிட அழைத்தால் செல்வதில்லை.

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பிற மதங்களை இழி வாக பேசுவதும் , அடுத்தவர்களின் மனதை புண் படுத்துவதும் எவ்வாறு சன்மார்க்கத்திற்கும் பொருந்தும்.

எல்லாருடைய மனமும் இன்புற்றிருக்க வேண்டும் அல்லவா! அதுவும் செய்வதில்லை.

ஒரு சில தியான மையத்தில் இருக்கும் மூல விளக்கங்களைப் பார்க்கும் போது வள்ளலாருடைய கருத்துகள் தான் வியாபித்துருக்கின்றன. ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக யாருக்கும் கூறுவதில்லை. (இங்கு மற்றவர்களை விமர்சனம் செய்வதற்காகவோ, அவதூறு செய்வதற்காகவோ எழுத வில்லை) பலரும் வியாபர ரீதியில் வள்ளாருடைய கருத்துகளை வேறு விதமாக மாற்றி தங்களுக்கு புகழை தேடுகின்றனர்.

அக பூஜையும் ஜீவகாருண்யமும் தான் இறை நிலையை உணர்த்தும் என்பதை பல சித்தர்கள் கூறியுள்ளனர்.
நட்ட க்கல் பேசுமோ நாதன் உள்ளிருக்கை யில்- ………

மற்றும்

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே! -சிவ வாக்கியர்

தவளையைப்போல வேதமெல்லாம் சாற்றுகின்றீர்
வந்தவழி அறியார்க்கு மந்தரமேது........ - ஞானவெட்டியான் 1500

உங்கள் தெய்வ உண்டெனவும் வேறு செய்து
அங்கங்கள் வேறுளதா யாகமங்களுற் பவித்தார்
பங்கமதாய் வேறு செய்யும் பாதகரே அங்குமிங்கும்
எங்கெங்குமாய் நிறைந்த ஈசனென்றறிகிலீரே "
- ஞானவெட்டியான் பாடல் 616

ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீ இருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே "
- பட்டினத்தார் பாடல் :30

நஞ்சுண்ண வேண்டாமே –அகப்பேய்
நாயகன் தாள் பெறவே
நெஞ்ச மலையாதே அகப்பேய்
நீ ஒன்றும் சொல்லாதே -------
-அகப்பேய் சித்தர்


தாம்திமித் திமி தந்தகோனாரே
தீந் திமித்திமி திந்த கோனாரே
ஆனந்த க்கோனாரே- அருள்
ஆனந்தக்கோனாரே!


ஆயிரதெட்டு வட்டமுங்கண்டேன்
அந்த வட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்
மாயிறு ஞாலத்து நூற்றெட்டும் பாத்தேன்
மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் (தாந்)

மெய்வாய்கண் மூக்குசெவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊரோசையாம் காட்டை
எய்யாமல் ஒட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே

மேலும்,
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவகோனே-முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவகோனே
சினமெனும் பாம்பிறந்தால் தாண்டவகோனே-யாவும்
சித்தி யென்றே நினையேடா தாண்டவகோனே............ - இடைக்காடர்

ஆசை என்னும் பசுவையும் , சினம் என்னும் விஷ பாம்பையும் அடக்கினால் இறை வனை உணர முடியும், இவர் பாடல்கள் பெரும்பாலும் தாண்டவகோனே என்றும் கோனாரே என்றும் முடிகிறது.

திருமூலர்,
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே
-திருமந்திரம்
கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்
நல்ல விரதமடி-குதம்பாய்
நல்ல விரதமடி................

என்று ஜீவகாருண்யம் மற்றும் உயிர்ப்பலியைத் தடுக்கும் இவரின் பாடல்கள் எல்லாமே, குதம்பாய் என்று தன்னை அழைத்துக் கொண்டே முடிகிறது.

இதுபோல் நிறைய பாடல்கள் உள்ளன. விரிவஞ்சி ஒரு சில பாடல்கள் மட்டுமே இங்கு தரப்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட பாடல்கள் மற்றும் பல்வேறு சித்தர் பாடல்களில் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் பற்றி மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருவருட்பாவில் வள்ளலார் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இதுவும் ஆண்டவன் திருவிளையாடல் போலும் இல்லையெனில் வள்ளலாருடைய பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்காது அல்லவா! வள்ளலாரும் யார் என்றும் நமக்கு தெரிந்திருக்காது.

ஒரு கடை நிலை பாமர மக்களும் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் மிக தெளிவாக மிக நுட்பமாக வள்ளலார் திருவருட்பா-பாடத்தை வடிவமைத்துள்ளார்கள். எனவே இதில் ஒப்பீடு என்பது தேவையில்லை. அனைவரும் சமுதாயத்தை செம்மைப்படுத்த ஆண்டவனாலே உருவாக்கப்பட்டவர்கள். அல்லது நெற்றிக்கண் திறக்கப்பட்டவர்கள். நாமும் ஆண்டவனால் ஆட்கொள்ளபட வேண்டுமெனில் - நம்முள் இருக்கும் இறைவனை காண வேண்டுமெனில் வள்ளலார் கூறிய அனைத்து ஒழுக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கங்கள் இறையைப்பற்றி தெரிந்துக்கொள்ள உறுதுணை புரியும்.

இதெல்லாம் கடைப்பிடிக்காமல் நம்முள் கடவுள் உள்ளார் என்று சொல்வது வெளிப்படையான வார்த்தைக்கு மட்டுமே உதவுமே தவிர கடவுளை நம்மால் உணர முடியாது.

சாதனம், சாதனை, மற்றும் சாக்கியம் திருவருட்பாவில் கூறப்பட்டுள்ளது. சாதனம்: எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.

சாதனை: நான்கு வித ஒழுக்கங்களை கடைப்பிடித்தல் . இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், மற்றும் ஆன்ம ஒழுக்கம்

சாக்கியம்: புருஷார்த்தகங்களான ஏம சித்தி , சாகாக்கல்வி, தத்துவநிக்கிரம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.

சாதனமும், சாதனையும் உலகியியலில் ஜீவகாருண்யம் மூலமும் பெரு நெறி ஒழுக்கங்கள் மூலமும் நிறைவேற்றினால் சாக்கியம் கூடும் - இறை நிலை வெளிப்படும் . எனவே எல்லாம் வல்ல ஸ்ரீ ராமலிங்க அடிகளை ஞான குருவாக ஏற்றுக்கொண்டு அருளியியல் உண்மையை உணருவோமாக.

முற்றிற்று.

நன்றி :
K.KUMARESAN
2/134, Middle Street
58,Alathur Post, Neravy via
Karaikal
Karaikal, Puducherry, India - 609604
Phone.9952327314

உலகியலும் அருளியலும்-II

ஜீவகாருண்யத்தை கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்பதை வள்ளலார் மட்டுமேஎளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெரிவித்திருக்கிறார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார். பிரவண தேகம் பின் ஞான தேக மாகியது. தியானத்தையும் , யோக முறையும் ஒருவர் கற்றுக்கொண்டு ஒரு குகையிலோ அல்லது தனிமையாகவோ வாழ்ந்தால் அதனால் சமுதாயத்திற்கு ஒரு பயனும் இல்லை என்பதை வள்ளலார் தீவிர மாக கடைப்பிடித்தார்.

கீதையிலே பரமாத்மா கிருஷ்ணன் சொல்கிறார் :(இந்து தர்மத்தின் முக்கிய நூலாக போற்றப்படுவது பகவத்கீதை. இந்த கீதையை உபதேசித்தவனும் கேட்டவனும் சந்நியாசிகள் அல்லர். குடும்பவாழ்விலிருந்தோர்,
மற்றும் மன்னாண்ட மன்னர்கள். வரலாற்று அறிஞர்கள் 5000 வருடத்திற்கு முன் மகா பாரதம் நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இங்கு மதத்தை ப் பற்றி குறிப்பிடுவதை பொறுத்தருளவும்.)

"அர்ச்சுனா, மூன்று உலகங்களிலும் இனி மிஞ்சிற்கும் செயல்,செய்கை ஒன்றும் எனக்குக் கிடையாது. அடையத்தக்கது, அடையப்படாது என ஒரு பேறுமில்லை.எனினும் நான் தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நான் தொழில் செய்யாது வாளாவிருப்பின், உலகத்தில் எல்லா உயிர்களும், என் வழியையே பின் பற்றும்.

அதனால் இந்த உலகம் அழிவு எய்தும். அந்த அழிவுக்கு நான் காரணமாகாமல் தொழில் செய்துகொண்டிருக்கிறேன். ஓயாமல் தொழில் செய்பவன் சிறந்த கர்மயோகி. அவன் ஜீவாத்மாவை இடைவிடாது துதிக்கிறான். சம்சாரத்தை நேசிக்கிறான். குடும்பத்தை காக்கிறான். மனைவி, மக்களை காக்கிறான்.
சுற்றத்தாரை, அயலவரை போற்றுகிறான். எல்லாவற்றையும் துறந்து சென்றால் அவன் முத்திக்கு தகுதியுடைவனாக மாட்டான். எல்லாவற்றையும் துறந்து செல்கிறவன் கடவுளுடைய இயற்கை விதிகளை துறந்து செல்பவனாகிறான்...

இவ்வாறு நாம் பார்க்கும் போது இல்வாழ்க்கையில் முற்று முழுதாக
விடின் இறைவனை அடையலாமா? என்ற கேள்வி எழும். வாழ்வில் பற்றை விலக்க
வேண்டுமே தவிர ஒழிக்க வேண்டியதில்லை.

'படகு தண்ணீரில் இருக்கலாம். தண்ணீர் படகினுள் இருக்ககூடாது'என்று அருமையாக வழிகாட்டுகிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.

இல்லறத்துறவை காட்டிலும், உள்ளத்துறவு சதகோடி மடங்கு மேலானதாகும்.
இல்லாள் அகத்திருக்க இல்லாததது ஒன்றில்லை. கற்புடைய மனைவியை
காதலுற்று, அறம்பிழையாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையாகும்.

கடவுள் அனைத்து உயிர்களிலும் இருக்கிறார். இல்வாழ்க்கையில் இருந்து கொண்டு உற்றார்,உறவினர், உலகத்தாருக்கும் உபசாரம் செய்து கொண்டு அறவழியில் இன்பங்களை அனுபவித்து ஆண்டவனை தொழுது அதனால் மனிதத் துன்பங்களில் இருந்து விடுபட்டு மேன்மையான வாழ்க்கை வாழ்வது மேலான வழியாகும்.

இதனை வள்ளுவப் பெருந்தகை அன்புடைமை, வாழ்க்கை துணைநலம், புதல்வரைப் பெறுதல், விருந்தோம்பல், மற்றும் இனியவை கூறல் என்ற அதிகாரங்களில் மிக சிறப்பாக கூறியுள்ளார்.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போ ஓய்ப் பெறுவது எவன் "

இல்லறத்தினை ஒழுங்காக நடத்துபவன் துறவறத்திற்கு போய் பயன் ஒன்றுமில்லை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை"

இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் புலன்களை அடக்கி முயல்கிற எல்லாரினும் தலை சிறந்தவன்.

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து"

சரியான முறையில் இல்லறம் நடத்துகிறவன் , துறவறத்தானை விட பொறுப்புகளும் சகிப்புகளும் உள்ளவன். இல்லறத்தான் பிறருக்குக்குற்ற துன்பங்களையும் தனக்கு வந்தது போல் எண்ணி அதை நோக்கும் பொறுப்புடையவனாகிறான்.

"அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்ப தில்லாயின் நன்று"

மனிதனுக்கு அறம் என்று நூல்களால் தீர்மானிக்கப்பட்டதே இல்லறம்
ஆகவே, இல்லறத்தை சரியாக நடத்துகிறவன் வானுறையும் தெய்வதுள்
வைக்கப்படுவான்.

எதனைப் பற்றியும் ஆராய்ச்சி இல்லாமலே கர்ம ஒழுக்கங்களினால்
இல்லறத்தில் நின்று வீடுபேறு அடைய முடியும். இல்லறம் என்பது பொறுப்புகளும்,சகிப்புத் தன்மையும் உடையது. இல்லறத்தை நாம் கர்மயோகமாக கருதினால் அதுவே சமுதாயத்துக்கு பயனுள்ளது.

பெரியபுராண வரலாறு மூலம் "அடியார்கள் இல்லறத்தை நடத்தி இறைவனை அடைந்ததைக் காணலாம். இதை கதையாக கொண்டாலும் இதனுடைய கருத்து இல்லறத்தை வலியுறுத்துவதே யாகும்.

"இல்லதென் இல்லவன் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணக் கடை"

என்பதற்கேற்ப இளையான் குடிமாற நாயனாரும், காரைக்காலம்மையாரும் இல்லறத்தில் நின்று கொண்டே ஆன்மீகத்தில் உயர்ந்து பேரின்ப பெருவாழ்வு பெற்றதை அறியலாம்.

இல்லற வாழ்விலே தர்மத் தளத்தில் நின்று செய்யும் கடமைகள்தான் ஆன்மீக உணர்விற்கும் ஆன்மீக தேடலுக்கும் வழிவகுக்கும் என்பதை அடுத்த பகுதியில் பல்வேறு சன்மார்க்கிகள் கூறும் கருத்துகளுடன் வள்ளலார் கூறுகிற முடிவுரையையும் காண்போம்.

உலகியலும்- அருளியலும்

உலக உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவது இறைவனுக்கு ஆற்றும் தொண்டிற்கு சமமாகும். உயிர்களின் இதயக் கோயிலே இறைவன் வாழும் கலைக்கோயிலாகும். அருள் நெறி என்று உயிர்களுக்கு அன்பு செய்ய சமய வாழ்வு வாழ்கிறோம் எனில் அது சமுதாய வாழ்வுடன் இணைந்ததாக அமையவேண்டும். இந்த வகையில் இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவனை அடையலாம் என்பதை வள்ளுவரும் வள்ளலாரும்கூறுகின்றனர்.

இல்வாழ்கையைநடத்துபவர்களுக்கும், ஆன்மீகவாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்கும் முறையே உலகியல் மற்றும் அருளியல் என்று திருவருட்பாவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் சில பேர் மேம்போக்காக சில பாடல்களையும் , பேருபதேசத்தையும் படித்து விட்டு வள்ளலார் எல்லாவற்றையும் விட்ட விட சொல்லுகிறார் என்றும் மதத்தை வெறுக்க சொன்னார் என்றும் பல வழிகளில் மக்களின் மனதை புண்படுத்துகின்றனர்.திசை திருப்புகின்றனர்.

இல்லறத்தை நல்லறமாக மாற்றி வாழ வேண்டும். இல்லறமல்லது நல்லறமன்று.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை- என்கிறார் வள்ளுவர்.

இல்வாழ்க்கையின் பண்பு அன்புடமை. பயன் அறனுடையமையாகும். மனைவி சுற்றம் என்று விரியும் அன்பிலே வாழும் ஒருவன் உலகனைத்தின் பாலும் விரிந்த அன்பு பூணும் மனப்பக்குவம் அடைகிறான். மனைவியும் அதே அன்புசால் மனப்பக்குவம் அடைகிறாள்.

உலகனைத்தையும் அன்புக்கண்களிலே காணும் இந்த விரிந்த மனோபக்குவம் அடைய இல்லறம் வழிகாட்டுகிறது. அன்பும், அறனும் இல்வாழ்க்கையினை சிறப்பாக்குகிறது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேராதார் -வள்ளுவர்

மற்றுமொரு இடத்தில் இல்லறத்தை வலியுறுத்தி கீழ் காணும் தேவர் குறளை எடுத்து மேற்கோளிடுகிறார்.


தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இல்லறம் நடத்தியே இறைவனை அடைந்தாகச் சொல்லப்படும் நாயன்மார்களுடைய கதைகளும், ஆழ்வார் கதைகளும் இதனை தான் சொல்கிறது.

"காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன?
கந்தை சுற்றி ஓடே எடுத்தென்ன?

உள்ளன்பில்லாதவர் ஓங்கு செல்லநாடேயிடை
மருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர்

பால் வீடேயிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுமே"
இங்கு இல்லறத்தானும் வீடுபேறு பெறமுடியுமென கூறப்படுகிறது

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்

இதைதான் வள்ளலார் செய்து காண்பித்தார். மலைக்கும் ,குகைக்கும் செல்ல வில்லை.மனித சமுதாயத்தில் கடமைகளையும் ஜீவகாருண்யத்தையும் கடைபிடித்து மக்கள் உயர்நிலையை அடைய முடியும் என்றும் போதித்தார். மனித உடலை பிரணவ தேக மாக மாற்றி செய்து நிருபித்தார்.

Friday, February 20, 2009

தடை செய்யப்பட்ட உணவு வர்ணம் பரவலாக விற்கப்படுகின்றது! பயன்படுத்த வேண்டாம் என பி.ப.சங்கம் அறிவுரை

ஆறு வகையான வர்ணங்கள் உணவில் பயன்படுத்துவதற்காக தாராளமாக விற்கப்படுவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வுப்படி இந்த வர்ணங்கள், தொழிற்துறைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படிப் பார்த்தால் நமக்கும் பாதுகாப்பில்லை என்பதை அது அதிக அளவு உறுதிப்படுத்துகிறது என்றார் அவர்.

ஆபத்தானது என மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட ஏறக்குறைய இந்த வர்ணங்களில் பெரும்பாலானவை உணவில் சேர்த்துக்கொள்ள முடியாதவையாகும். ஆனால் மனசாட்சியற்ற சில கடைக்கார்கள், இவை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய வர்ணங்கள் என “பொய் மூட்டைகளை” அவிழ்த்துவிட்டு வியாபார வேட்டையாடுகின்றனர்ள என்றார் இத்ரிஸ்.

சிறிய பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பாட்டில்களில் அடைக்கப்பட்ட இந்த வர்ணங்கள் பெரும்பாலான மளிகைக் கடைகளில் விற்கப்படுகின்றன. சில பிரண்டுகளில் இவை “உணவு வர்ணம் அல்ல” என்று எழுதப்பட்டிருந்தாலும் அவை உணவு வர்ணத்தோடு சேர்த்துதான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

சில தயாரிப்பாளர்கள் “இந்த வர்ணங்கள் பொருளுக்கான வர்ணம்” என்று தங்கள் லேபலில் குறிப்பிட்டுள்ளார்கள். எந்த மாதிரியான பொருட்கள் என்றும் குறிப்பிடுவதில்லை என்றார் இத்ரிஸ்.

இந்தப் பொருள், சிறிய அளவிலும், மற்ற உணவுப் பொருட்களுடனும் சேர்த்து விற்கப்படுவதால், இந்த நச்சுத்தன்மை கொண்ட வர்ணம் உணவில் சேர்க்கக்கூடிய வர்ணம் என்ற தவறான அபிப்பிராயத்தை பயனீட்டாளர்களிடையே ஏற்படுத்திவிட்டது என்று இத்ரிஸ் கூறினார்.


தடை செய்யப்பட்ட வர்ணங்கள் அமாரான்த், இது 1982லிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரசாயனம் பாலியல் உறுப்புக்கள், நுரையீரல் மற்றும் அங்கவீன தொடர்பான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று மெத்தானில் - யெல்லோவ் . இது புற்றுநோயை ஏற்படுத்தும். ஆண்களிடையே மலட்டுத்தன்மையை உண்டாக்கும். உணவில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ள இந்த வர்ணம், துடைப்பம், துணிமணிகள், சவர்க்காரம் போன்றவற்றுக்கு வர்ணத்தைக் கொடுப்பதற்கும், சாக்குகளில் எழுதப்படும் மைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

உணவில் சேர்க்கக்கூடாத வர்ணங்களில் நச்சுத்தன்மை கொண்ட இரசாயனங்கள் அதிகமாக இருக்கின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்றவை அல்ல. மாறாக சுவர் வர்ணங்கள், வர்ணம் தீட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் வர்ணங்கள், துடைப்பம், பிளாஸ்டிக் மற்றும் துணிமணிகளில் பயன்படுத்தக்கூடிய வர்ணமாகும்.

பெரும்பாலான கடைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உணவில் சேர்க்கக்கூடாத இந்த வர்ணங்களை சட்டவிரோதமாக சில்லறைக் கடைக்காரர்களிடம் விற்றுவிடுகின்றார்கள். ஒன்றும் அறியாத பயனீட்டாளர்களும் இவற்றை வாங்கி தங்கள் உணவில் சேர்த்து தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் பயனீட்டாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

என்னை பார்!!!!! ஈழத்திலிருந்து........

யுத்தவெற்றியில் தொங்கும் மகிந்த

சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதில் இரண்டு விடயங்கள் தற்போது கவனத்தைக் கவர்ந்தவையாக உள்ளன. ஒன்று யுத்தத்திற்கான நிதி ஒதுக்கீடு, இது 17 ஆயிரம் கோடி ரூபாவைத் (17,000 கோடி) தாண்டி விட்டது. அத்துடன் இவ்வாறான பெருந்தொகை நிதி பாதுகாப்புக்கு ஒதுக்காவிட்டால் கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதியைப்போல் நான்கு மடங்கு நிதியை ஒதுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. அடுத்தது தேர்தல் திணைக்களத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதி. இது 109.8 கோடி ரூபா எனத் தெரியவருகிறது.

இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைப் போல் சுமார் நான்கு மடங்காகும். சிறிலங்காவின் ஐந்து மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகின்றது. அவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்கு இவ்வளவு பெருந்தொகை நிதி தேவையில்லை என்பது அவ தானிகளின் கருத்தாகும். அத்துடன் அடுத்த ஆண்டை மகிந்த ராஜபக்ச தேர்தல் ஆண்டாகத் தமது ஆதரவாளர் மத்தியிலே - அமைப்பாளர்கள் மத்தியிலே பிரகடனப்படுத்தி யிருப்பதாகவும் தமது கட்சி தனியாகப் போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய நிலையை உருவாக்க அனை வரும் களத்தில் இறங்கிச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த நடவடிக்கை மாகாணசபைத் தேர்தலுக்கானதாக இருக்கமுடியாது. பாராளுமன்றத் தேர்தலுக்கானதாகவே இருக்கமுடியும் என எதிர்வு கூறப்படுகிறது. சிறிலங்காவின் இன்றைய பாராளு மன்றத்தின் ஆயுட்காலம் 2010 ஏப்ரல் வரை உள்ளது. அதேபோல சனாதிபதியின் பதவிக்காலம் 2011 நவம்பர் வரை உள்ளது.இருப்பினும் இன்றைய பாராளுமன்றத்தின் நிலைகுறித்து மகிழ்ச்சிகொள்பவராக மகிந்த இல்லை. ஏனெனில் இது கோமாளிகளின் ஒட்டுப் போட்ட சட்டைபோல பல வர்ணங்களில் பல்வேறு போக்குகளைக் கொண்ட கட்சிகளின் கட்சிதாவி களின் கூட்டாக உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் மகிந்தவின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட கட்சியினரும் உள்ளனர் அதிலிருந்து முன்னரே தாவியவர்களும் உள்ளனர். இவர்கள் பதவி ஆசை, பண ஆசை, பாது காப்புத் தொடர்பான அச்சுறுத்தல் என்பவை காரணமாக மகிந்தவிடம் உள்ள நிறைவேற்று அதிகாரத்தின் பலத்தினால் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களாக ஒட்டிக்கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர்.

இதன் காரணமாகப் பாரிய அமைச்சரவை ஒன்றை மகிந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது. இது குறித்து மகிந்த கவலை கொள்ளாவிடினும் அதனால் ஏற்படக் கூடிய செலவீனம் இவர்களைக் கட்டுப் பாட்டில் தொடர்ந்தும் வைத்திருப்பது குறித்து மகிந்த கவனத்தில் கொள்ளாது இருக்க முடியாது.அத்துடன் அவரது பதவியில் அல்லது அதிகாரத்தில் ஏற்படக் கூடிய சிறிய சரிவும் இவர் கள் அனைவரையும் கலைந்தோடச் செய்துவிடும் என்பதும் மகிந்தவுக்குத் தெரியும். எனவே பாராளு மன்ற அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் திட்டமிட்டு வருகின்றார். அதற்கு 2010 ஆம் ஆண்டு வரை பொறுத்திருந்தால் நிலைமைகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறார். 2011 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலின் போது உறுதியானதொரு பாராளுமன்றத்தைக் கையில் வைத்திருப்பதன் மூலம் தில்லுமுல்லுகள் செய்தாவது அத்தேர்தலில் வெற்றி பெற இந்தப் பாராளுமன்ற அதிகாரம் அவருக்கு அவசியமானதாகவே இருக்கும்.

அதேவேளை இப்போதே சனாதிபதித் தேர்தலை நடத்தி 12 வருட சனாதிபதி பதவிக்காலத்தைக் குறைத்துக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை.எனவே இன்றுள்ள சூழலில் பொதுத்தேர்தலை நடத்தி பாராளுமன்றத்தை உறுதியாகத் தமது பிடிக் குள் கொண்டுவர அதாவது தனது கட்சியின் முற்று முழுதான அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அவர் எண்ணுகிறார். ஆனால் இப்பொதுத் தேர்தலானது எத்தகைய சூழ்நிலையில் நடக்கும் என்றால் அவரது படைகள் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய பின்னரே எனத் திட்டமிடுகிறார். அவ்வாறே யுத்தத்தில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்து எல்லாத் தேர்தல்களையும் நடத்தி அதிகாரத்தை நீண்டகாலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதே அவரது திட்டமாகும். ஆக அவர் தமிழ் மக்கள் மீது மனிதாபிமானம் பொங்கி எழுகின்ற இராணுவ நடவடிக்கையின் நோக் கம் என்ன? அது அடுத்த ஆண்டில் மேலும் தீவிரமாகத் தொடரும் என்பதையே யுத்தத்திற்கும் தேர்தல் திணைக்களத்திற்கும் ஒதுக்கிய பெருமளவு நிதி வெளிக்காட்டுகின்றது.

அவர் தமிழ் மக்கள் மீதான மனிதாபிமானம் காரணமாகவோ அல்லது சிறிலங்காவின் இறைமை யைக் காக்க அல்லது தேசப்பற்றுக் காரணமாகவோ யுத்தத்தை நடத்துவாராயின் தேர்தலைப்பற்றி சிந்தித் திருக்கக்கூடாது. இதனைப் புரிந்து கொள்ளமாலோ அல்லது புரிந்துகொண்டும் இனவாதம் தலைக்கேறிய நிலை யிலோ சிங்கள மக்களும் மகிந்தவின் யுத்த வெறிக்குப் பின்னால் இழுபட்டுச் செல்கின்றனர். இன்று உலகத்தின் வல்லரசுகளே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால் சிறிலங்காவின் பொருளாதாரம் உறுதியான நிலை யில் தான் இருக்கிறது என்று நிதியமைச்சும் மத்திய வங்கியும் கூறுகின்றன. நாட்டை அடகுவைத்து மகிந்த புரியும் யுத்தத் தினால் ராஜபக்ச குடும்பமும் அதனைச் சர்ந்தவர் களும் பெரும் பயனடைந்துகொண்டு செல்கின்றனர். யுத்தம் வெற்றிபெற்றால் அவர்கள் தமது பதவியில் நீடிக்க முடியும்.

தோல்வியுற்றால் அவர்கள் அதுவரை காலமும் சுரண்டிய பணம் அவர்களுக்குப் போதும்.ஆனால் வெற்றிபெற்றாலென்ன தோல்வியடைந் தாலென்ன சிறிலங்கா மீளமுடியாத நெருக்கடிக்குள் சென்று கொண்டிருப்பது குறித்து மகிந்தவுக்கும் சரி, சிங்கள மக்களுக்கும் சரி அக்கறையிருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலைவாசி உயர்வு போதிய வருவாயின்மை அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வெளிநாட்டு நிறுவனங்களே நிர்ணயிக் கின்றன. மாவின் விலை, அரிசியின் விலை, எரிபொரு ளின் விலை என்பனவற்றை நிர்ணயிக்கும் அதிகாரம் சிறிலங்கா ஆட்சியாளர்களின் கைகளைவிட்டு என்றோ போய்விட்டன. மேலும் பல நிறுவனங்களை விற்று (குறிப்பாக போக்குவரத்துச் சேவை, மின் சாரசபை) தொடர்ந்து யுத்தத்தை நடத்த மகிந்த அரசு விடாப்பிடியாக நிற்கின்றது.மகிந்த கூறுவது போல யுத்தத்தில் ஒரு போதுமே அவர்கள் வெல்லப்போவதில்லை. விடுதலைப் போராட்டம் என்பது எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது ஏற்க மறுக்கின்றனர். இறுதியில் யுத்தத்தில் களைப் படைந்து தோல்வியைத் தழுவும் போது சிறிலங்கா மீள முடியாத நிலைக்குச் சென்றுவிடும் என்பது மட்டும் உறுதி.

எழுதியவர் - வேலவன்

Thursday, February 19, 2009

தமிழ் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும், ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும் - படையினரை உற்சாகப்படுத்திய கோத்தபாய

வன்னியில் உள்ள மக்களை இலக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெருமளவு ஆண்களும் இளம் பெண்களும் விசாரணைகளுக்காக என படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு கதறியழுதபடி உள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள பெண்கள் மீதான கொடுமைகள் ஒரு புறம் வேகமாக நடபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து பெருமளவு தினமும் படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தவாரம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில்

"இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்''

என்றும் கூறி படையினரை உசுப்பேத்தியுள்ளார்.

இதனைக் கேள்வியுற்று வவுனியா முகாமுக்குள் அடைபட்டுள்ள மக்கள் பதறிப் போயிருப்பதாக வவுனியாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது அவர் இதனை எம்மிடம் தெரிவித்தார்.

நன்றி : மருதன்

Wednesday, February 18, 2009

மக்கள் தொலைக்காட்சி மீதான தடை! பினாங்கு பயனீட்டாளர் சங்கள் கவலை.

உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு, தினந்தோறும் அமுத சுரபியாய் தமிழ் நிகழ்ச்சிகளை வாரி வழங்குகின்ற, தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தொலைக்காட்சிக்கு மதம் பிடித்த இலங்கை இராணுவத்தினர் விதித்துள்ள தடை ஒரு மதிகெட்ட செயலாகும்.

உலகத் தமிழர்களின் உரிமைக் குரலாக, எழுச்சிக் குரலாக அனைத்து தகவல்களையும் உண்மையாக, நடுநிலயாக யாருக்கும் அஞ்சாது அள்ளித் தருகின்ற ஒரு ஊடகத்திற்குத் தடை விதித்திருப்பது இராணுவத்தின் அட்டூழிய குணத்தையே காட்டுகின்றது.


இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தன்மானமுள்ள தமிழர்கள் எதிர்த்து வருகின்றனர். இது பற்றிய முழுமையான தகவல்களைத் தருகின்ற ஒரே தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான்.

மனசாட்சியின்றி, காட்டுமிராண்டித்தனமாக சிறுவர்களையும், தாய்மார்களையும், பத்திரிகை செய்த¢யாளர்களையும் கொன்று குவிக்கின்ற இலங்கை இராணுவத்தின் மதிகெட்ட செயலை முறியடிக்க வேண்டும் என்றால், மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உலகம் முழுவதும் தடையின்றி போக வேண்டும்.

இலங்கை இராணுவம் விதித்துள்ள இந்தத் தடைக்கெதிராக, அனைத்துலக பத்திரிகையாளர் சங்கமோ அல்லது ஊடகப் பொறுப்பாளர்களோ மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

சிறிலங்கா அரசு படைகளால் மேற்கொள்ளப்படும் இனத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல், பச்சிளங் குழந்தைகள் மீதான கொலைத் தாக்குதல் ஆகியவற்றைக் கண்டும் காணாதது போல் மேற்கத்திய ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த செய்தியை, பிபிசி போன்ற நிறுவனங்கள் மணிக்கு ஒரு முறை முதன்மைச் செய்தியாகச் சொல்லி வந்தன.

ஆனால் ஒரு கிழமைக்குள்ளே 500க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்படும் செய்தியை மேற்கத்திய தகவல் ஊடகங்கள் கண்டு கொள்ளவேயில்லை.

ஆகவே, உலகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான தகவல்களை, துணிச்சலோடு கூறி வருகின்ற மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு சேவை தொடரப்பட வேண்டும்.

மக்களின் மக்கள் தொலைக்காட்சியை தடை செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை.

தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம் - சீமான் பேச்சு

இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.

இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.

நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.

திருச்செந்தூர் வந்த மத்திய மந்திரி லல்லு பிரசாத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கினார்கள். அந்த ஆட்டுக்குட்டி தாயை பிரிந்து பால் குடிக்காமல் தவிப்பதை பார்த்து அதிகாரிகள் ஓடோடி வந்து ஆட்டுக்குட்டியின் தாயை பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.என்ன கரிசனம்..ஆட்டுக்குட்டி மீதுள்ள பாசம் கூட தமிழர்கள் மீது இல்லையே? அங்கே என் உறவுகள் சாவுகிறார்கள். தாயையும் தந்தையையும் பிரிந்து அனாதையாக அழுகிறார்கள். ஆட்டுக்குட்டியை ஒன்று சேர்த்தவர்கள் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கவில்லையே.

அங்கே இருக்கும் உறவுகள் நம்மை நம்பி இருக்கிறார்கள். பிரபாகரன் நம் உயிரை கேட்கவில்லை. உணர்வை கேட்கிறார்.நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேனாம். எங்கே இருக்கிறது இறையாண்மை? பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாரானார்கள். நமது கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக்கொன்றார்கள். அப்போது யாருமே தட்டிக்கேட்க வில்லையே. பாகிஸ்தானுடன் என்றால் கிரிக்கெட் விளையாடமாட்டார்கள். இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எங்கே இருக்கிறது இறையாண்மை.

ஜப்பான், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடன் கொடுக்கிறது.அதை கொடுக்காதே என்று கர்நாடகாக்காரன் ஜப்பானுக்கு கடிதம் எழுதுகிறான். முல்லை பெரியாறு' காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றி பேசக்கூடாது என்றால் பிரபாகரனை எதிர்த்தும் பேசக்கூடாது. எதிர்த்து பேசுகிறவர்களை விட்டு விடுகிறார்கள். பிரபாகரன் பேட்டி கொடுத்தால் இந்தியா முழுவதும் செய்தி வருகிறது. அவரைப் பற்றி பேசினால் தடையா? இந்த தடையை உடைக்க வேண்டும்.

சினிமா படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனின் உறவுகளை எதிரிகள் கொலை செய்வார்கள். கதாநாயகன் அதை கண்டு பிடித்து பழி வாங்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஒரு கற்பனை கதாபாத்திரம் செய்தால் பாராட்டும் நாம் அதை நிஜத்தில் செயல்படுத்துபவர்கள் தீவிரவாதிகளா?

இந்திரா காந்தியின் கனவு, எம்.ஜி.ஆரின் கனவு, தமிழ் ஈழம். அங்கே தமிழ் தாய்மார்களின் கருவை கலைக்கிறார்கள். உலகத்திற்கு உண்மைகளை கொண்டு செல்ல நான் பேசுகிறேன்.நீங்கள் உணர்வை வாக்கு பதிவில் காட்டுங்கள். 40 தொகுதியில் வெற்றியை கொடுத்தோம். இனி 40 தொகுதியிலும் வீழ்த்துவோம். எந்த நாட்டிலும் சொந்த மக்களே அகதிகளாக இருந்ததில்லை. இலங்கையில் மட்டும் தான் இந்த அவலம். அங்கு தஞ்சம் புகுந்தவர்களை சிங்கள ராணுவம் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் கம்பி சிறைக்குள் அடைத்து பட்டினி போடுகிறது.ஒரு இனம் செத்து மடிகிறது. எல்லாரும் அழுகிறார்கள். நான் கதறி அழுகிறேன். இதில் பிழை இல்லை. போரை நிறுத்தச் சொல்வது மனித உரிமை. போப் ஆண்டவர் போரை நிறுத்தச் சொல்கிறார்.

ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று பேசுபவர்கள், ராஜீவ்காந்தியின் பின் மண்டையை தாக்கிய சிங்கள ராணுவ வீரனை என்றாவது கண்டித்து பேசியது உண்டா?

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள், மாணவர்கள், மக்கள், திருநங்கைகள் என்று அனைத்துதரப்பினரும் போராட்டம் நடத்தி விட்டார்கள். இந்த மக்களை மதித்து ராணுவ உதவிகளை நிறுத்துங்கள். நமது ராணுவ வீரர்களை திருப்பி அழையுங்கள். மூன்று நாளில் பிரபாகரன் ஒட்டு மொத்த இலங்கையையே கைப்பற்றி விடுவார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வேறு, விடுதலை புலிகள் வேறு அல்ல.எல்லா நாட்டிலும் விடுதலையை அங்கீகரிக்கிறது ஐ.நா. சபை. -ஆனால் ஈழத்தமிழ் நாட்டை அங்கீகரிக்க மறுப்பது ஏன்? பிரபாகரன் சாவதற்கு முன் தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம்.

இந்த எழுச்சி மோதல் களம் வரை இருக்கட்டும். வாக்கு கேட்க வருகிறவர்களிடம் உங்கள் உணர்ச்சியை காட்டுங்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உதவுங்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

Tuesday, February 17, 2009

மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணி

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் நேற்று திங்கட்கிழமை கண்டனப் பேரணி நடத்தினர். இப்பேரணியின் போது காங்கிரஸ் கொடி எரிக்கப்பட்டதுடன் அப்பகுதியில் உள்ள தந்தி அலுவலகத்தின் மீதும் கல் வீசப்பட்டது.



ஈழத் தமிழரை அந்நாட்டு இராணுவம் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்துக்கு வழி ஏற்படுத்தக் கோரியும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்றலில் இருந்து பேரணி புறப்பட்டது.



தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கத்தினர் இதில் கலந்து கொண்டனர். தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற பதாகைகள் மற்றும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தையும் ஏந்தி வந்தனர்.



சிறிலங்கா, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டன. தல்லாகுளம் பெருமாள் கோயில் பகுதிக்கு பேரணி வந்தபோது அங்கிருந்த காங்கிரஸ் கொடிக் கம்பத்தை சாய்த்து அதிலிருந்த கொடியை சிலர் எரித்தனர்.

தமுக்கம் அருகே உள்ள தந்தி அலுவலகத்தை பேரணி அடைந்தபோது, அந்த அலுவலகத்தை நோக்கி சிலர் கற்களை வீசினர். தடியால் அலுவலக பெயர்ப் பலகையை தாக்கினர். தந்தி அலுவலகம் முன் உள்ள சாலையில் வழக்கறிஞர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மறுலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு நீதிமன்றத்திற்குள் வைத்து சுப்பிரமணியசுவாமி மீது கடும் தாக்குதல்

சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதி முன்னிலையில் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமியை வழக்கறிஞர்கள் சிலர் அடித்து உதைத்தனர். மேலும் அவர் மீது அழுகிய முட்டைகளையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை, தீட்சிதர்கள் பிடியிலிருந்து மீட்கும் வகையில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.தீட்சிதர்களால் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட முடியாத நிலையும் இருந்து வந்தது.


இது தொடர்பாக சிவனடியார் ஆறுமுகச்சாமி தலைமையில் நீண்ட காலமாக போராட்டமும் நடைபெற்று வந்தன.இந் நிலையில், சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்கு அரசு கொண்டு வந்தது.

இதை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்தது.இந்த நிலையில் அரசின் முடிவை எதிர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று மனு தாக்கல் செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.கே. மிஸ்ரா, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் விசாரித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது விசாரணை அறைக்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் அங்கிருந்த காவல்துறையினரை வெளியே போக சொல்லிவிட்டு கதவை உள்பக்கமாகப் பூட்டினர்.

பின்னர் நீதிபதிகளின் கண் முன்பாகவே சுப்பிரமணியம் சுவாமியை வழக்கறிஞர்கள் சரமாரியாக அடித்து உதைக்க ஆரமிபித்தனர். அடி வாங்கிய வெளியே போக முடியாத நிலையில் உள்ளேயே சுற்றி வந்தார். ஆனாலும் விடாமல் அவரை அறைந்தும், குத்தியும் வழக்கறிஞர்கள் தாக்கினர்.

சுவாமியின் பாதுகாப்புக்கு வந்த சிஆர்பிஎப் படையினரையும் உள்ளே வழக்கறிஞர்கள் அனுமதிக்கவில்லை. அழுகிய முட்டைகளை எடுத்து சுவாமியின் முகத்தில் வீசியடித்தனர். அழுகிய தக்காளிகளையும் வீசினர்.

இதனால் உயர் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில வக்கீல்கள் விரைந்து வந்து சுவாமியை மீட்டு அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவாமி இவ்வாறு நீதிமன்றத்தி்ல் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானபோது அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகளைத் தொடர்ந்த சுவாமியை அதிமுகவினர் எல்லா இடங்களிலும் தாக்க முயன்றனர்.

உயர் நீதிமன்றத்தில் வைத்துக் கூட தாக்கும் முயற்சி நடந்தது. அப்போது அவரை வட சென்னை திமுகவினர் தான் காப்பாற்றினர்

Monday, February 16, 2009

மின்தூக்கிகளில் மாட்டிக்கொள்வது மலேசியாவில் அன்றாட நிகழ்வாகி வருகிறது

நம்முடைய பிரதமர் கடந்த 12.2.2009ல் உரையாற்றச் செல்லும் ஒரு நாளில் சுமார் 30 நிமிடங்களுக்கு மின்தூக்கியில் மாட்டிக்கொண்டதாக செய்திகள் வெளியாயின. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் அவர் மாட்டிக்கொண்டது புத்ராஜாயாவின் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில்.

அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு இது அன்றாட நிகழ்வாகி வருகிறது. சில இடங்களில் மின்தூக்கி வேலை செய்யாமல் போவது அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகி வருகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல்தான் இருக்கின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இப்படி மின்தூக்கி இயங்காமல் போகும் பிரச்னை மிகவும் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட 25 மின்தூக்கிகளில் 7 ஆய்வுக்கு உட்பட்ட சமயத்தில் முறையாக வேலை செய்யவில்லை. நிறைய மின்தூக்கிகளில் விளக்கு ஒழுங்காக எரியவில்லை. பாதுகாப்பு அம்சங்களும் இருக்கவில்லை என்றார் இத்ரிஸ்.

15 மாடிகளைக் கொண்ட 180 யூனிட்டுக்கள் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வெறும் இரண்டே மின்தூக்கிகள்தான் இருந்தன. ஒரு மின்தூக்கி ஆறு மாதங்களாக இயங்கவில்லை. இன்னொன்று முதல் நாள்தான் வேலை செய்யாமல் போனது. மின்தூக்கி வேலை செய்யாமல் இருப்பதை அடுக்குமாடிக் குடியிருப்பின் நிர்வாகத்தினரிடம் புகார் செய்து செய்து அலுத்துப்போய்விட்டதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் கூறினர். பல முறை புகார் செய்த பிறகுதான் நிர்வாகம் மின்தூக்கியைப் பழுது பார்க்கும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மின்தூக்கி மறுபடியும் வேலை செய்யாமல் போகும். யாராவது உள்ளே மாட்டிக்கொள்வர். ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மின்தூக்கிகளிலும் இதே நிலைதான் என்றார் இத்ரிஸ்.

கடந்த 20.3.2006ல் பழுதான மின்தூக்கி கதவியால் ஓர் ஆடவர் இறந்துபோனபொழுதுஇ மின்தூக்கி பாதுகாப்பு தொடர்பாக பிரத்தியேக நடவடிக்கைக் குழு ஒன்றை நிர்மாணிக்கவிருப்பதாக தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா (னுழுளுர்)இ அறிவித்திருந்தது. அப்படி இதுவரைக்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிய விரும்புவதாக இத்ரிஸ் கூறினார்.

அடுக்குமாடி கட்டிட நிர்வாகிகளும், அடுக்குமாடி பராமரிப்பு கம்பெனிகளும் தங்களுடைய வேலையை முறையாகச் செய்கிறார்களா என்பதனைத் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா உறுதி செய்ய வேண்டும். கட்டிடங்களை 15 மாதங்களுக்கு ஒரு முறை சோதனையிடுவதை விட்டு விட்டு 10 மாதங்களுக்கு ஒரு முறையாவது சோதனையிட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

மின்தூக்கி கோளாறுகள் தொடர்பாக வந்த புகார்கள், எத்தனை முறை மின்தூக்கி பழுதாயிருக்கிறது என்பதை தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா ஆராய வேண்டும். மின்தூக்கி அடிக்கடி முறையாக இயங்காத இடங்களில் மின்தூக்கியை முழுமையாக மாற்றியமைக்கவோ அல்லது முழுப் சீரமைப்புப் பணியை மேற்கொள்ளவோ வேண்டும் என்றார் இத்ரிஸ்.

தூரத்திலிருந்தே மின்தூக்கிகளைக் கண்காணிக்கும் ஒரு முறையை தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா கொண்டு வர வேண்டும். இம்முறை மூலம் எந்த இடத்தில் மின்தூக்கி வேலை செய்யவில்லை என்பதை இனங்காண முடியும். இம்முறை நிறைய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

அடுக்குமாடி குடியிருப்புக்களில் மின்தூக்கிகளின் தரத்தை உறுதி செய்யவும்இ அவை முறையாக இயங்குகின்றனவா என்பதனைக் கண்காணிக்கும் பொருட்டும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய இலாகா முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் மின்தூக்கிகளை முறையாக இயக்குவதிலும் அவற்றைச் சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

Sunday, February 15, 2009

சிறிலங்காவின் இனப்படுகொலையின் சாட்சிகள் இவை

தமிழீழம் - [வன்னியன்]
கடந்த 31ம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள். ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததை விட கொடூரமானவை இனப்படுகொலைகளை சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகள் சில சாட்சிகள்.
முக்கிய குறிப்பு :- "மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை திறந்து பாருங்கள்"






.








Thursday, February 12, 2009

பினாங்கில் காற்று தூய்மைக்கேடு! சுமாத்திரா காடு எரிவதை சோதனை செய்யுங்கள்!

பினாங்கில் இப்பொழுது தலைகாட்டியிருக்கும் காற்று தூய்மைக்கேடு பிரச்னைக்கு, மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்கள் சுமத்திராவில் எரிக்கப்படுவது காரணமா என்பதை அரசாங்கம் உடனடியாக சோதனை செய்து கண்டறிய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

23.1.2009 அன்று வெளியான ஜாகார்த்தா போஸ்ட் பத்திரிகையில் சுமாத்திராவில் உள்ள ரியாவ் பகுதி தூய்மைக்கேட்டு பகுதியாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சுமத்திரா காடுகள் மற்றும் தோட்டங்கள் எரியும் போது இந்நிலை அங்கு தலைதூக்கும். இப்பொழுது இங்கு ஏற்பட்டிருக்கும் காற்று தூய்மைக்கேடு சுமத்திராவிலிருந்து காற்று வீசும் திரைசயால் இங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

இந்தத் தோட்டங்களை எரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலேசியா மற்றும் இந்தோனிசியா அரசாங்கத்தை இத்ரிஸ் கேட்டு கொண்டார். பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்நிறுவனங்கள் அதற்குரிய நஷ்ஈட்டையும் வழங்க வேண்டும்.

பினாங்கில் ஏற்பட்டிருக்கும் தூய்மைகேட்டுக்கு உள்ளூர் சம்பவங்களும் காரணமாக இருக்கலாம். நம்முடைய பழைய அனுபவங்களை வைத்து பார்க்கும் போதுஇ காற்று தூய்மைக்கேட்டுக்கு காரணமாக இருப்பவர்கள் மீது போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது புலப்படுகிறது. காற்று தூய்மைக்கேட்டுக்கு பொறுப்பாக இருக்கும் உள்ளூர்வாசிகள் மீதி ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக இத்ரிஸ் கூறினார்.

தூய்மைக்கேட்டு பிரச்னையைச் சமாளிப்பதற்தகாக அரசாங்கத்தால் வரையப்பட்டிருக்கும் காற்று தூய்மைக்கேடு நடவடிக்கை திட்டம் அமுலாக்காம் தற்போதைய தூய்மைக்கேட்டு பிரச்னையை சமாளிக்க உதவும். இது தவிர தூய்மைக்கேடு மற்றும் காற்று மாசுபாடு பிரச்னைகளைக் களைவதற்குரிய ஏனைய நடவடிக்கைகளும் அரசாங்கம் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்தை கேட்டு கொண்டார்.

புகைப்பதற்கு எதிரான விளம்பரங்கள்! பி.ப.சங்கம் வேண்டுகோள்!

மலேசியாவில் பிரசுரமாகும் அனைத்து மொழி தினசரி பத்திரிகைகளில், சுகாதார அமைச்சின் புகைப்பதால் ஏற்படும் நோய்களைப் பற்றிய விளம்பரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுகாதார அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புகைப்பதால் ஏற்படும் அபாயங்களை வர்ண புகைப்படம் வழி பொதுமக்களுக்கு அறிவுரைகளை கூறி வரும் இந்த விளம்பரங்கள் பாராட்டுக்குரியது என அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூறினார்.
சிகரெட் புகைப்பதால், இரத்தக்கட்டு,புற்றுநோய், குறைப்பிரசவம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும் என கூறியுள்ள சுகாதார அமைச்சு, அது தொடர்பான வர்ண படங்களை வெளியிட்டு கூடவே புகைப்பதினால் பயனேதுமில்லை, புகையிலை நிறுவனங்களினால் ஏமாந்து விடாதீர்கள் எனவும் அறிவுரை கூறியிருக்கின்றது. இந்த எச்சரிக்கை மிகவும் வரவேற்கக்கூடிய ஒன்று என இத்ரிஸ் கூறினார்.


ஆனால் புகையிலை நிறுவனங்களுக்கு இந்த விளம்பரங்கள் பெரும் தலைவலியைக் கொடுத்திருப்பதால், இந்த விளம்பரங்கள் தொடரப்படக்கூடாது என அவை எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்பது எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும், அதனை அரசாங்கம் எந்த அளவுக்கு கடுமையானதாக கருதுகிறது என்பதையும் இந்த விளம்பரங்கள் புலப்படுத்துவாத இருக்கிறது என இத்ரிஸ் கூறினார்.

தினசரி பத்திரிகைகளில் இந்த விளம்பரங்கள் தொடர்ந்து வெளிவருவதோடு தொலைக்காட்சியிலும் அவை காட்டப்படுவதற்கு அரசாங்கம் ஆவன வழங்க வேண்டும்.


சிகிச்சையளிக்க முடியாத நோய்களுக்கும், மரணங்களுக்கும் புகையிலையே மூல காரணமாக திகழ்கின்றது. புகைக்கப்படும் ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள்தான் ஒளிந்துள்ளன. இவை புற்றோநோயை ஏற்படுத்தக்கூடியவையாகும்.


புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைப்பதுதான் மூலக்காரணம் என உலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளின் புள்ளிவிவரப்படி, நுரையீரல் புற்றுநோய் ஆண்களிடையே அதிகமாக இருப்பது தெரிய வந்திருக்கின்றது. நுரையீரல் புற்றுநோய்க்கு மூல காரணமே புகையிலைதான் என்றார் இத்ரிஸ்.

நாட்டில் புகைக்கும் பழக்கம் அபாய கட்டத்தை நெறுங்கிவிட்டது என்றும் அவர் கூறினார். மலேசியாவில் உள்ள மொத்த இளம் வயது கொண்ட ஆண்களில் பாதிப்பேர் புகைப்பவர்களாக இருக்கின்றனர. 1999-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வென்றில் ஐந்து மலேசிய இளைஞர்களின் ஒருவர் புகைப்பவராக இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் 50 இளைஞர்கள் புகைக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும், புகைபிடிக்கும் பழக்கத்தால் 10,000 மரணங்கள் மலேசியாவில் நிகழுகின்றன. புகையிலை தொடர்பான நோய்களை குணப்படுத்த செலவிடப்படும் தொகை பில்லியன் கணக்கிலான வெள்ளி என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே, அரசாங்கம் எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த விளம்பர பிரசாரத்தலிருந்து பின்வாங்கி விடலாகாது. இந்த விளம்பரங்கள் புகைக்கும் பழக்கம் ஏற்படுத்தும் படுமோசமான நிலைகளை மிகத் தெளிவாக படம் பிடித்து காட்டுவதால், இந்த வர்ணப்படங்கள் தொடர்ந்து நமது பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்வதாக எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

Wednesday, February 11, 2009

குறுந்தகவல் மோசடிகள்! அரசாங்க நடவடிக்கை அவசியமாகிறது!பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

குறுந்தகவல்கள் மோசடிகள் குறித்து பயனீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு நின்று விடாமல் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பையும் அரசாங்கப் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

அண்மையில் வியாபார தந்திர அடிப்படையில் அனுப்பட்ட ஒரு குறுந்தகவலினால் ஒரு பயனீட்டாளர் பாதிக்கப்பட்டிருந்தார். இப்போஸ் (EPPOS) எனப்படும் பயனீட்டாளர்கள் சொந்தமாக தங்கள் கட்டணங்களை (உதா மின்கட்டணம், தொலைபேசி கட்டணம்) செலுத்தும் இயந்திரத்தில் முதலீடு செய்ய கோரும் மோசடி தந்திரம் அது. பயனீட்டாளர்களின் வசதிக்காக இந்த இயந்திரங்கள் பேரங்காடிக் கடைகள், உணவகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இயந்திரத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மாதம் மவெ1000 வருமானமாக பெறலாம் என்று கூறிக்கொள்ளப்படுகிறது. முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் உறுதிக் கூறப்படுகிறது.

இந்த இயந்திரத்தின் விலை மவெ19,888 என்றும் அதனை கிரெடிட் அட்டை மூலமாகவும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான முழுக்கட்டணத்தைச் செலுத்தியப் பிறகு, மாதாந்திர வருமானமும் கிடைப்பதில்லை, அந்த நிறுவனமும் அதன் பின்பு தொடர்பு கொள்வதில்லை.

இத்தகைய ஏமாற்று மோசடிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் இருவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

முதலில், பயனீட்டாளர்களுக்கு எப்படி இப்படி தேவையில்லாத குறுந்தகவல்கள் வருகின்றன என்பதை ஆராய வேண்டும். பெரும்பாலும் பயனீட்டாளர் தங்களைப் பற்றி கொடுக்கும் தனிப்பட்ட தகவல்களிலிருந்தே இவை எடுக்கப்படுகின்றன. (உதாரணத்திற்கு மனு பாரங்களிலிருந்து பெறப்படுகிறது) அதாவது இத்தகைய தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் இத்தகவல்களைத் தவறுதலாக பயன்படுத்துகின்றார்கள் அல்லது அத்தகவல்ககளைப் பாதுகாப்பற்ற முறையில் கையாளப்படும் போது அவை அடுத்தவர் கையில் கிடைப்பதற்கு ஏதுவாகி விடுகிறது.

ஒரு தனிநபர் பற்றிய சொந்த விவரங்கள் அவரது அனுமதி இல்லாமல் மற்றுவர்களுக்கு கொடுக்கப்படக்கூடாது.

இப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அதற்கு தக்க தண்டனை வழங்குவதற்கும் நமக்கு தனிநபர் பாதுகாப்பு சட்டம் தேவையாக இருக்கிறது.
இரண்டாவதாக, ஒப்பந்த விதிகளை மீறும் கிரேடிட் அட்டை நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பிரிட்டனின் பயனீட்டாளர் கிரேடிட் சட்டம் 1974 பிரிவு 75ன் கீழ் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பொருளின் ரொக்க விலை 100 பவுனிலிருந்து 30,000 பவுனுக்குள் இருந்தால் (மவெ527லிருந்து மவெ158,222குள்) அவருக்குரிய கடன் 25இ000 பவுனை (மவெ131இ852) தாண்டக்கூடாது. கார்டு உரிமையாளர்கள் தனது அட்டையைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருள் அல்லது பெறப்பட்ட சேவை பிரச்னைக்குரியதாக இருந்தால் கிரேடிட் அட்டை நிறுவனத்தில் அதற்குரிய கோரிக்கையை அவர்கள் பெறலாம்.

பயனீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், கிரேடிட் அட்டை நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தை மீறி நடக்கும் போது அதற்குரிய முழு பொறுப்பை ஏற்கும் முறை இங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கேட்டு கொண்டார்.
எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Tuesday, February 10, 2009

காக்கும் தெய்வம் காட்டிக் கொடுத்துவிட்டது!

சென்ற கிழமைம எழுதும் போது தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டுள்ளார் என எழுதியிருந்தேன். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார் இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது என்றும் எழுதியிருந்தேன்.

இதற்கான விடை இந்தக் கிழமை கிடைத்திருக்கிறது. இனமானம், தன்மானத்தை விட பதவி சுகமே பெரிதென்று கருணாநிதி சொல்லிவிட்டார். இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக கடந்த பெப்ரவரி 3 இல் அண்ணா அறிவாலயத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுக மூன்று நீண்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.

தமிழ் உணர்வாளர் முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நீங்கலாக ஏனைய இரண்டு தீர்மானங்களின் முக்கிய பகுதி; கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பெற்றுத்தரவும் - அந்த நாட்டில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதியான நிலை தோன்றவும் - மக்களாட்சி முறையில் அந்த நாட்டில் ஒரு தீர்வு காணவும் ஒத்தக் கருத்துடைய சமுதாய இயக்கங்கள், தமிழ்ச்சான்றோர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைக் கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பின் பெயரால் தமிழகத்தின் பட்டி-தொட்டியெங்கும் மக்களைத் திரட்டி விளக்கக்கூட்டங்கள், மக்கள் பேரணிகள், மனிதச்சங்கிலிகள், மாநாடுகள் போன்ற பரப்புரை கருவிகளைப் பயன்படுத்தி அறப்போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப்பணிகளைத் தொடர்வது என்று இந்தச் செயற்குழு தீர்மானிக்கின்றது.

முதற்கட்டமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயல்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை மக்கள் மன்றத்தில் விளக்கி ஆதரவு திரட்டி வலிமை சேர்த்திட தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் பரப்புரை விளக்கப் பொதுக்கூட்டங்களையும் பேரணிகளையும் வருகிற 7 ஆம் நாள் சென்னையிலும் 8, 9 ஆகிய நாட்களில் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவதென்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் மூலம் முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சியை இழக்கத் தயாரில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சியோடான கூட்டணி தொடரும் என்பதையும் சொல்லிவிட்டார்.

மேலும் முதல்வர் கருணாநிதி தனக்கும் மத்திய அரசுக்கும் பகை ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கச் சதி நடக்கிறது, நாங்கள் வெளியேறி விடுவோம் என்று எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள். திண்ணை காலியானால் ஜெயலலிதா வந்து படுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அண்ணனும் சாக மாட்டான், திண்ணையும் காலி ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மார் தட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி பழைய குருடி கதவைத் திறவடி என்ற பழமொழிக்கொப்ப 1984 இல் தொடங்கிய தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (வுயஅடை நுநடயஅ ளுரிpழசவநசள ழுசபயnளையவழைn (வுநுளுழு) போன்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கும் இப்போது தொடங்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது. தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமிழீழத் தனியரசு அமைவதை ஆதரித்ததோடு இந்தியா, ஸ்ரீலங்காவில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழீழம் என்ற சொற்பதம் தீண்டப்படாத சொல்லாகக் கருதப்பட்டு அது நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதில் 'தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதிகளில் முழுமையான அதிகார பகிர்வும் தன்னாட்சியும் கிடைக்கின்ற அளவிற்கு, நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினைக் குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவாக்கிச் செயற்படுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் இதை விளக்கி பொதுக்கூட்டம், பேரணி நடத்தும் என்பது தான் தீர்மானம்.

இதன் மூலம் தமி;ழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இறுதித் தீர்மானம் உட்பட 3 தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்ட போர் நிறுத்த கோரிக்கையை தமிழக முதல்வர் கைகழுவிவிட்டு விட்டார்.

போர் நிறுத்தம் பற்றிச் செயற்குழு தீர்மானத்திலே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சியும், முழுமையான அதிகார பகிர்வு கலந்த அரசியல் தீர்வும் உருவாக்க, செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தீர்மானம் கூறுகிறது.

தமிழீழ மக்கள் வாழும் வட- கிழக்குப் பகுதி தமிழீழம் என்பது மறைக்கப்பட்டுவிட்டது. இது தற்செயலான நீக்கம் அல்ல. இந்திய காங்கிரஸ் அரசின் கொள்கைக்கும் நிலைப்பாட்டுக்கும் இசையச் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தமிழீழ விடுதலைக்கு ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டு சகோதர யுத்தம் செய்த காரணத்தாலேயே ஆயுதப் போராட்டம் பலவீனம் அடைந்தது என்ற கருத்தை எழுதும் போதும் பேசும் போதும் முன்வைக்கிறார்.

'1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்களாலும், அவரது தளபதியாக விளங்கிய நாவலர் அமிர்தலிங்கம் அவர்களாலும் பிரகடனப்படுத்தப்பட்டதும், வலியுறுத்தப்பட்டதும், தாய்த் தமிழகம் போன்ற பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவைத் தேடிப் பெற்றதுமான 'தமிழ் ஈழம்" அமைப்பதற்கான குரல், வலிமை அடைந்து - அந்தக் குறிக்கோளின் வெற்றிக்காக பல போராளிக் குழுக்கள் அமைந்து, அத்தனை போராளிகளும் ஒன்றாக இருந்து சிங்கள அரசை எதிர்த்து சில காலம் - பின்னர் அவை தனித்தனியாகப் பிரிந்து சகோதர யுத்தங்கள் நடத்தி பலவீனப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இப்படி முதல்வர் சொல்வதில் இருந்து அவர் இறந்த காலத்திலியே இன்னமும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. இவர் குறிப்பிடும் சகோதர யுத்தம் என்பது அவரது நட்புக்கும் அரவணைப்புக்கும் உரிய ரெலோவின் தலைவர் சபாரத்தினத்தைக் குறிக்கும். முதல்வர் எழுதிய பாலைவன ரோசாக்கள் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாத்திரத்துக்கு (சத்தியராஜ்) அந்தப் பெயரை கலைஞர் வைத்திருந்தார்.

அவர் குறிப்பிடும் சகோதர யுத்தத்துக்குக் காரணம் இந்திய உளவு நிறுவனமான றோ என்பதை அவர் வசதியாக மறந்துவிட்டார். வி.புலிகளின் வளர்ச்சியை விரும்பாத றோ அதனை அழிக்க ரெலோ அமைப்புக்கு ஆயுதங்கள் வழங்கியதன் காரணமாகவே சகோதர யுத்தம் வெடித்தது.

றோ மீதுள்ள நம்பிக்கையைச் சோதிக்கவே அதன் பணிப்பின் பேரிலேயே ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிலங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் இருவரையும் கொலை செய்தது. கொலை செய்து விட்டு பழியை வி. புலிகள் மீது சுமத்தியது.

'இலங்கை தமிழர் நலத்துக்காக 50 ஆண்டு காலமாகப் போராடி, சிறை சென்று, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை துறந்து, அதற்கும் மேலாக தமிழக ஆட்சியையே இரு முறை இழந்து வீண் பழிச் சொற்களைச் சுமந்து, இப்போது 5 ஆவது முறையாக பொறுப்பேற்று மக்களுக்கான சாதனை சரித்திரத்தையே படைத்து வருகிற ஆட்சியை சாய்த்து விட சதித்திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்" எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக ஆட்சியை இரண்டு முறை இழந்ததாக ஒரு பல்லவியை தமிழக முதல்வர் கருணாநிதி நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார். ஆனால் அது உண்மையல்ல. முதன்முறை ஊழல் குற்றச்சாட்டிலேயே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

1991 இல் திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு தேர்தலைச் சந்திக்க விரும்பிய ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய காங்கிரஸ் பிரதமர் சந்திரசேகரருக்கு கொடுத்த நெருக்கடியால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் சந்திரசேகரருக்கு வழங்கிக் கொண்டிருந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்ட போது அவரது ஆட்சியும் கவிழ்ந்தது. இதுதான் நடந்த உண்மை.

இதே போல் 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் நலத்துக்காக திமுக போராடி வந்தது என்பதும் உண்மையல்ல.

முதல்வர் கருணாநிதியே கிமு, கிபி என்பது போல வி.புலிகளோடான திமுகவின் உறவை ராஜீPவ் காந்திக்கு முன் ராஜீPவ் காந்திக்குப் பின் எனப் பிரித்து 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வி.புலிகளுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது அவர்களுக்கும் எங்களுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். முதல்வர் கொடுத்துள்ள ஆண்டு வாரியான திமுகவின் சாதனைப் பட்டியலில் 1995 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் முழு அடைப்பு என்ற பதிவுக்குப் பின்னர் எந்தப் பதிவும் பதியப்படவில்லை. உண்மையும் அதுதான்.

திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றிக் கருத்துச் சொன்ன மருத்துவர் இராமதாஸ் நிவாரண நிதி திரட்டுகிறோம் என்று சொல்லி தொடக்க முதலே இலங்கைத் தமிழர் சிக்கலையே முதல்வர் கருணாநிதி திசை திருப்பி விட்டார் என்றும் போர் நிறுத்தம் தொடர்ர்பான கோரிக்கைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் 'திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏதோ ராஜபக்ச கட்சித் தீர்மானத்தைப் போல உள்ளது. அது திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தையே அளித்துள்ளது. தமிழ் இனம் இலங்கையில் அழிகிறது, மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று கடந்த சனவரி மாதம் 23 ஆம் நாள் முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அவர் சொன்ன விளக்கத்தில் 'கேட்டுக் கேட்டுப் பலன் கிடைக்காததால் இந்த தீர்மானத்தை முன்மொழிவதாக" சொல்லி இருந்தார். உடனே இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதியை நிலவச் செய்யவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டால் திமுகவின் அடுத்த நடவடிக்கையாக செயற்குழு அல்லது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். தற்போது அவரது இறுதி வேண்டுகோள் ஒன்றுமே இல்லாமல் போனதால் திமுக.வின் செயற்குழு கூடி தீர்மானம் போட்டிக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுத்து இருப்பதன் மூலம் இலங்கை தமிழர் சிக்கலில் திமுக அரை நூற்றாண்டிற்குப் பின்நோக்கி போயிருக்கிறது" என்று மருத்துவர் இராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தத் தெய்வம் தங்களைக் காக்கும் என்று தமிழ்மக்கள் எதிர்பார்த்தார்களோ அந்தத் தெய்வம் கை விட்டதும் அல்லாமல் காட்டியும் கொடுத்துவிட்டது. இவ்வளவு எளிதாக - எந்த வெட்கமோ துக்கமே இன்றி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை காற்றில் பறக்கவிட தமிழக முதல்வர் நினைத்தது எதைக் காட்டுகிறது?

அவர் தொடக்க முதல் உள்ளத் தூய்மையோடு தமிழீழ மக்கள் பற்றிய சிக்கலைக் கையில் எடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. முதல்வர் கால் சறுக்குவார், வாக்குத் தவறுவார் என்று சிலர் முன்கூட்டியே எதிர்கூறல் சொன்னார்கள். வைகோ தமிழக முதல்வர் நாடகம் ஆடுகிறார் இது வெறும் கண்துடைப்பு என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டார். அப்போது வைகோ மீது நாம் வருத்தப்பட்டோம். ஆனால் இப்போது அவர் சொன்னது சரியாகப் போய்விட்டது.

தனது கடைசிக் காலத்தில் ஏதோ தமிழீழத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட்டு நல்ல பெயரோடும் புகழோடும் கண்ணைமூடுவார் என்று நாம் எதிர்பார்த்தோம். அந்த எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது. இனி அவர் மீது படிந்து விட்ட வரலாற்றுக் கறையை உலகத்தில் உள்ள அத்தனை சோப் போட்டுக் கழுவினாலும் போக்க முடியாது.

சிறிலங்காவில் சிங்கள இனவாத ஆட்சித்தலைவர் தொடங்கி சாதாரண சிங்கள அரசியல்வாதி வரை முதல்வர் கருணாநிதிக்குச் பாமாலை பாடி புகழ்மாலை சூட்டுகிறார்கள். பசில் ராஜபக்ச தமிழ்நாட்டின் வாயை மூடச் செய்துவிட்டார் என எழுதுகிறார்கள். முதல்வர் கருணாநிதியின் வாலை ஒட்ட வெட்டிவிட்டதாக பௌத்த தேரர்கள் அறிக்கை விடுகிறார்கள். கருணாநிதியின் சரணாகதி சிங்கள இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்று சிங்கள - ஆங்கில ஊடகங்கள் கொக்கரிக்கிறன. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று சிங்கள - பௌத்த இனவெறியன் மகிந்த இராஜபக்ச இலங்கை வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுகிறான்.

இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் முழு வெற்றி பெற்றிருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பினரும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் தானியங்கி ஓட்டுநர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களின் பல்வேறு சட்டவாதிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7,200 பேர் கைது செய்து சிறையில் டைக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தத்தை முறியடிக்க வேலை நிறுத்தம் சட்டத்துக்கு மாறானது - உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறானது - என முதல்வர் கருணாநிதி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. உச்ச நீதிமன்றமே தமிழர்கள் தங்கள் தமிழ் உணர்வைக் காட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது முதல்வர் கருணாநிதியின் முகத்தில் கரி பூசி விட்டது.

வேலை நிறுத்தம் வெற்றிபெற மாணவர்களே கடுமையாக உழைத்துள்ளார்கள். அறுபதுகளில் இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களே போர்க்கொடி தூக்கினார்கள். இப்போது மீண்டும் அவர்களே போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்து வெருண்டு போன தமிழக அரசு கல்லூரிகளை மூடிவிட்டது.

தமிழ் உணர்வாளர் முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் அலைமோதிய மக்கள் கூட்டம் அவர் எழுதி வைத்துவிட்டுச் சென்ற சாவோலையில் 'என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்" எனக் கேட்டுக் கொண்டார். அவரது ஆசை நிறைவேறிவருகிறது.

தமிழக முதல்வர் தனது ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியை நம்பி இருககிறார். காங்கிரஸ் திமுகவை நம்பி இருக்கிறது. ஆனால் மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை புறந்தள்ளப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு புதிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது.

-நக்கீரன்-

Friday, February 6, 2009

தைப்பூச திருநாள் வாழ்த்துகள்


இந்திய சமூகத்தினர் அனைவருக்கும் தமிழ் மருதத்தின் தைப்பூச திருநாள் வாழ்த்துகள்!

Thursday, February 5, 2009

ஒரு தேங்காய் போதும்! பொருளாதார வீழ்ச்சியையும் வேலை இழப்பையும்! கூடுதல் தேங்காய்கள் குப்பைக்குத்தான் போகின்றன!

ஒரு தேங்காய் உடையுங்கள்! இதுதான் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தைப்பூசத்திற்குத் தேங்காய் உடைக்கும் பக்தர்களுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்.

உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக தெய்வீக அம்சம் கொண்ட தைப்பூசத்தினத்தன்று விரயத்தையும் குறைத்துக்கொண்டு,சேமிப்பை அதிகரிக்க பக்தர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

விரயம் என்று சொல்லும்போது, உணவுப் பொருளான தேங்காயும், பாலும் அதிக அளவில் செலவிடப்படுவதை குறைக்க வேண்டும் என அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.


ஒரு தேங்காய் உடைத்து நமது வேண்டுதலை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் நூறிலிருந்து ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டு யாருக்குமே பயனில்லாமல் குப்பை மேட்டுக்குச் செல்வதை நாம் கட்டாயமாக நிறுத்த வேண்டும்.

உணவுக்காக ஓடி அலையும் மக்கள் இருக்கும்போது நாம் அந்த உணவை யாருக்கும் பயன் தராமல் குப்பை மேட்டுக்கு அனுப்புவது சரியான செயல் அல்ல என சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

இப்பொழுதுள்ள பொருளாதார மற்றும் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை கருத்தில் கொண்டு விரயத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தேங்காயின் விலை மவெ. 1.50 என விற்கப்படுகிறது. ஆயிரம் தேங்காய்களை வாங்கி உடைப்பதால் யாருக்கு என்ன பயன்? அதுவும் வேண்டிக்கொள்பவர் ஒரு தேங்காயை மட்டும்தான் உடைப்பார். வேண்டுதல் செய்யாதவர்களும் நடந்து செல்பவர்களும் ஏதோ தேங்காய் உடைக்கும் போட்டியில் கலந்துகொள்வது போல தேங்காய்களை உடைக்கின்றனர். அப்படி உடைக்கப்படும் தேங்காய்களில் ஏறக்குறைய 25 விழுக்காடு தேங்காய்கள் கெட்டுப்போனவையாக இருப்பதும் தெரிய வந்திருப்பதாக சுப்பாராவ் கூறினார்.

வாங்கும் தேங்காய்களிலும் ஏமாந்து, அவற்றை யாருக்குமே பயனில்லாமல் செலவழிப்பதை பக்தர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார்கள் என தாங்கள் நம்புவதாக சுப்பாராவ் கூறினார்.

தேங்காய் உடைப்பது அவரவர் உரிமையும், சுதந்திரமாக இருந்தாலும் அது கேளிக்கையாகவும் வரம்பு மீறியும் இருக்கக்கூடாது என்றார் அவர்.

ஒரு தேங்காய் உடைத்து நமது வேண்டுதலை நிவர்த்தி செய்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று கூலிம் தியான ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் கூறியிருக்கிறார்.

அதேப்போன்று குறிப்பிட்ட நிறுவனங்களின் பால் போத்தல், பேக்கட்டுக்களை வாங்கி பாலையும் அதிக அளவில் வீணடிக்கிறோம் என்றார் சுப்பாராவ். போதாததற்கு பால் உற்பத்தி நிறுவனங்கள் தைப்பூச நல்வாழ்த்துக்கள் எனக் கூறி இல்லாத ஒன்றை தோற்றுவித்திருக்கின்றார்கள். சமயத் திருநாள் ஒரு வர்த்தக நாளாக மாறிவருவது வேதனையை அளிக்கிறது.


ஆகவே ஆயிரக்கணக்கான தேங்காய்களுக்கும் பல லிட்டர் பாலுக்கும் செலவழிக்கும் பணத்தை, பொருளாதார நெருக்கடியால் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டு வரும் அனாதை ஆசிரமங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள், அபலைப் பெண் நிலையங்கள், முதியோர் இல்லங்கள், தனித்து வாழும் தாய்மார் இல்லங்கள் போன்றவற்றில் தங்கியிருக்கும் நமது இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் உதவி செய்ய முன் வர வேண்டும் என சுப்பாராவ் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இப்படிப்பட்ட இல்லங்களில் தங்கியிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இல்லங்களை நடத்துவோர் பணத்துக்காகப் பலரிடம் கையேந்தி நிற்கின்றார்கள். அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை. இப்படிப்பட்ட ஆதரவற்றோர்களுக்கு நாம் செய்கின்ற சேவைதான் நாம் இறைவனுக்குச் செய்கின்ற சேவை.

ஆகவே தைப்பூசத்திற்குக் கூடுதலாக தேங்காய்களை உடைக்க எண்ணியிருக்கின்ற பக்தர்கள் இந்தக் கருத்தை மனத்தில் கொண்டு ஆதரவற்றிருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் அவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைத் தந்துகொண்டிருக்கிற இந்திய தொண்டூழிய அமைப்புக்களுக்கும் இந்தத் தைப்பூசத் தினத்தின்போது நிதி உதவி தர முன் வருமாறு பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக என்.வி.சுப்பாராவ் கூறினார்.

Tuesday, February 3, 2009

பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் தைப்பூச சமூக சேவைப் பந்தல்

படத்தைச் சுட்டி பதிவிறக்கம் செய்து பார்க்கவும். இச்சேவைக்கு தன்னார்வத் தொண்டூழியர்கள் தேவைப்படுகின்றனர்! மேலும் தகவல்களுக்கு : திரு.சுரேஷ் 019-4586587, திரு.கலை 012-5637614, சரஸ்வதி 012-7162884, திரு.மாறன் 012-5557522, திரு.செல்வம் 016-4827974

நன்றி : ஓலைச்சுவடி

Monday, February 2, 2009

சிங்களச் சித்ரவதைகள் - கொலைகார வெள்ளை வேன்

இலங்கை தமிழர்கள் பல கொடுமைகளுக்கு உட்படுத்திய சிங்கள இராணுவத்தின் அராஜகங்களை விவரிக்கும் ஆய்வு கட்டுரை,ஆனந்த விகடன் இந்த முகப்பு படம் கொண்ட பிரிதியை வாங்கி படிக்கலாம். கிடைக்காதவர்களுக்கு இஙகே அக்கட்டுரையைப் பதிவுயேற்றம் செய்துள்ளேன்.

நன்றி: ஆனந்த விகடன் 21-1-2009


(1)

(2)

(3)

(4)