Tuesday, August 16, 2011

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.


இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.

வாழ்க்கை மன்னிக்க மறுத்துவிடும்

அவ்வப்போது தொலைக்காட்சி மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் நான் நுழைந்து கொண்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் தொலைக்காட்சி நுழைந்ததா என்று யோசித்துப் பார்க்கிறேன்.
இல்லை. சிறு வயதிலிருந்தே வாழ்க்கை என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

அதனால், தொலைக்காட்சி நம் தேசத்தில் அறிமுகமான ஆரம்ப வருடங்களில்கூட என்னைப் பெரிதாக வசீகரித்ததில்லை. வாழ்க்கையில் எதுவும் உருப்படியாக நடக்காதவர்கள்தாம்
தொலைக்காட்சியே கதி என்று கிடப்பார்கள். அதில் காணும் வேறு யார் மூலமோ தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள முற்படுவார்கள். பசுமையான மலையையோ, அழகான நீரோடையையோ பார்த்து ரசித்துவிட்டு வந்தபிறகும், அந்த அதிர்வுகள் வெகு நேரம் உங்கள்
மனதில் தங்கியிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?


தொலைகாட்சியின் அதிர்வுகளும் அப்படித்தான் உள்ளே இறங்கும். பார்த்த ஒவ்வொரு பிம்பத்தையும், ஒலியையும் மனம் அசைபோடும்.குடிக்காரர்கள்,கொலைகாரர்கள், போதை மருந்துக்கு அடிமையானவர்கள், மற்றவர் வாழ்க்கையைக் கெடுக்க சூழ்ச்சி செய்பவர்கள், இன்னும் யார் யார் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்க ஆசைப்படுவீர்களோ , யார் யாருடன் எந்த வித சகவாசமும் வைத்துக்கொள்ளவே கூடாது என்று தீர்மானமாக நினைக்கிறீர்களோ, அவர்களைத் தொலைக்காட்சி மூலம் உங்கள் வீட்டுக்குள் சுதந்திரமாக நுழைய அனுமதிக்கிறீர்கள்.

அவர்களால், உங்கள் வீட்டுக் குழந்தைகளின் புத்திசாலித்தனம் பெரிதளவு சிதைக்கப்படுகிறது. அவர்களின் மூளை வளர்ச்சி பெரும் அளவு தடை செய்யப்படுகிறது. தொலைக்காட்சி என்ற கண்டுபிடிப்பு அபாரமானது. ஆனால், அளவுக்கு அதிகமாக அதற்கு இடம் கொடுத்ததால், அது புத்தகங்கள் படிக்கும் வழக்கம், விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் இவற்றைக் குழந்தைகளிடமிருந்து பறித்துவிட்டது. கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை ஒரு நிலையாக உட்காரச் சொன்னால், வெகு இயல்பாக செய்கிறார்கள்.


சத்குரு ஜக்கி வாசுதேவ்

அதே நேரம், நகரத்து மாணவர்கள் உடைந்த பம்பரங்கள் போல் ஒரு புறமாகச் சாய்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய உடல்நலம், விளையாட்டை மறந்து, அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைக்காட்சி முன் உட்கார்ந்து, யாரோ மலையேறுவதைப் பார்த்து, நீங்களே மலையேறிவிட்ட திருப்தி கொள்கிறீர்கள். யாரோ நடக்கிறார்கள். யாரோ μடுகிறார்கள்.

யாரோ நீந்துகிறார்கள். யாரோ காதலிக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையையே அந்த நபரின் மூலம் வாழப் பார்க்கிறீர்கள். வாழ்க்கையின் நேரடி அனுபவங்களைச் சந்திக்காமல், யாருடைய பிம்பம் மூலமாகவோ பொய்யாக வாழ்வது புத்திசாலித்தனமா? நாளைக்குத் தொலைக் காட்சித் திரையைப் பொருத்திவிட்டால், கல்லறையில் கூட உட்கார்ந்திருக்க நீங்கள் தயார். அப்படித்தானே? மக்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி, அவர்களை மேம்படுத்தி சமூகக் கட்டுக்கோப்பையே மாற்றி அமைக்கக்கூடிய மிகச் சக்தி வாய்ந்த μர் ஊடகம், பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே தயாரித்து வழங்கிக்கொண்டு இருப்பது எவ்வளவு அபத்தமான விஷயம். பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நிகழ்ச்சிகளைத் தயாரிப்பவர்கள் பற்றித்தான் கவலையாக இருக்கிறது. அவர்கள் முதலில் தங்கள் ரசனையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

நிஜ வெள்ளத்தை மறந்து தொலைக்காட்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர் பொழுது போக்கு அம்சங்களே இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதை அமைதிப்படுத்தி, புத்துணர்ச்சி ஊட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால், இன்று பெரும்பாலான தொடர்களின் உள்ளடக்கமும், தரமும் பார்ப்பவரின் புத்திசாலித்தனத்தின் மீது தொடுக்கப்படும் போராகவே இருக்கிறது. தொழில்நுட்பங்களில் மற்ற எந்தத் தலைமுறையை விடவும் நாம் முன்னணியில் இருக்கக்கூடும். ஆனால், உடல்ரீதியாக, மனரீதியாக மக்கள் தொகையில் பெரும் பகுதி மிகப் பலவீனமாகவே விளங்குகிறது.

உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு ஜனத் தொகையில் ஒரு பெரும்பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். தொலைக்காட்சியோ, கைபேசியோ புதிதாக எது கிடைத்தாலும், சரியான பக்குவம் இன்றி, தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றோம். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், வாழ்க்கையையே அவற்றின் மீது எழுப்ப முயற்சிக்கின்றோம்.

தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய்விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரி செய்ய முடியாத அளவுக்கு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக்கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.

நன்றி : ஆனந்த விகடன்

Sunday, August 14, 2011

பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்.

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காகப் பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள்.

பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும் பொழுது 40 சென்னாகவும் அதே
நீரை விடுதிகளில் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது. பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீர் என்றும், வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்பதும் பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது.கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம், பொட்டேஸியம், துத்தநாகம் போன்றவை பாட்டில் நீரில் மிக மிக சொற்ப அளவில்தான் இருக்கின்றன. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். பாட்டில் பானத்தை வாங்கும்பொழுது அந்த நீருக்காக நீங்கள் கொடுக்கும் தொகை மொத்த
விலையில் 10% மட்டுமே. எஞ்சிய 90% பிளாஸ்டிக் பாட்டிலுக்காக நீங்கள் கொடுக்கும் தொகையாகும். ப ¡ ட் டி ல் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு
பாட்டில்களைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன.



இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும் 500 வருடங்களாவது பிடிக்கும். பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1, PET, PETE ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் நீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் இந்த நீர் பாட்டில்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30OC சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் நீர் பாட்டில்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரிலும் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும். PET ரக பாட்டிலில் உள்ள நச்சு இரசாயனங்களும் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பாட்டில்நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத் தன்மை உடையதாக ஆகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும். பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.

மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல.

அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில துளி எலுமிச்சையைக் கலந்து அருந்தினாலே புத்துணர்ச்சி கிட்டும்.

Thursday, August 11, 2011

பூர்வீகக் குடிகளின் மருத்துவ மகிமைகள்

பூர்வீகக் குடிகளின் நில உரிமையைத் தற்காக்கும் பொறுப்பிலிருந்து நாம் நழுவும் பட்சத்தில், அவர்களிடையே பொதிந்திருக்கும் மருத்துவ மூலிகைகள் தொடர்பான தகவல் பொக்கிஷங்கள் நம்மை விட்டு மறைந்துபோகும். எந்த ஒரு இனமாக இருக்கட்டும். பாரம்பரியமாக அவர்கள் உடல் நலத்தைப் பேண நம்பி இருந்தது மூலிகைகளைத்தான்.

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் 80% தங்களுடைய ஆரோக்கிய மேம்பாட்டுக்கு தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பியுள்ளனர். உலகத்தில் உள்ள சுமார் 150 மில்லியன் பூர்வீகக் குடிகளுக்கு இயற்கைதான் மருந்துக்கடை. மூலிகை தொடர்பான அவர்களுடைய அறிவும் அபாரமானவை. இயற்கையோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்ததால் அனுபவ அறிவால் வழிவழியாக வந்த அருமைச் சொத்து அவர்களுடையது.


உதாரணத்திற்கு அமேசோனைச் சேர்ந்த யனோமாமி என்ற பூர்வீகக் குடிகள் woody cat's claw vine என்ற மூலிகையை பேதியைக் குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். பைனி மரத்தின் copal tree) பட்டையை கண் தொற்று வியாதிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இக்குவாடோர் மற்றும் பெருவைச் சேர்ந்த சுவார் பூர்வீகக் குடிகள் வயிற்றுப் பிரச்சனைகளுக்காக நூற்றுக்கும் குறையாத மூலிகைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மட்சிகென்கா என்ற இன்னொரு பூர்வீகக் குடியினர் தங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகத் தண்ணீர் குடத்தில் மூலிகைகளைப் போட்டு
வைக்கிறார்கள்.

பூமியின் ஆசனத்திலிருந்து வெளிப்படும் துர்வாடையும் நீராவியுமே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். பூர்விகக் குடியினர்களிடையே ஷாமன் (shamans) என்னும் ஒருவரே மருத்துவராக செயல்படுவார்.

உலக உயிர்களுக்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் இடையே தூதுவராக செயல்படுவார். மூலிகைகளின் குணப்படுத்தும் தன்மைகளை தன்வசமாக்கி வைத்தியத்திற்கு உபயோகிப்பர். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளோடு சிகிச்சை பெற வந்திருப்பவர்களுக்கு நோயின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்து வைத்தியம்
செய்வர். மூலிகைகளின் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி நோயாளிகளின் நோயைக் கண்டுபிடிப்பர். "ஒய் கனாஹி" மரத்தின் துகள்களை நுகரும்பொழுது, சாபிரிப் என்ற வன தேவதைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். படிப்படியாக அவை தங்களை உங்களுக்கு வெளிக்காட்டும்" என்கிறார் பிரேசிலைச் சேர்ந்த டாவி கோப்பேனாவா என்ற ஷாமன்.

சில மூலிகைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. அவை கிராமத்தில் உள்ள எலிகளையும் பேய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்தவை. மழை வருவதையும், வேட்டைக்குச் செல்பவர்கள் வெற்றியோடு திரும்புவதையும் அவை உறுதிப்படுத்துகின்றன என்று
லண்டனில் உள்ள மூலிகை ஆராய்ச்சியாளர் வில்லியன் மில்லிகேன் கூறுகிறார்.

சில ஷாமன்கள் மூலிகைகளின் பெயரை வேகமாகக் கூறுவதில்லை. காதில் மட்டும் கிசுகிசுக்கிறார்கள். அவை மிகவும் சக்தி வாய்ந்த மூலிகைகளாம். வழிவழியாகக் கொண்டு வரப்படும் ஷாமன் பாரம்பரியங்கள் இவை.

பூர்வீகக் குடியினர்களின் மொழியும் இயற்கை வளம், பூகோளம், மருந்து, சீதோஷ்ண நிலை போன்றவை சார்ந்தே இருக்கின்றன. பொலிவியாவில் உள்ள கல்லவாயா என்ற மேட்டுநில விவசாயிகளின் மூலிகை அறிவு அபாரமானது. மூலிகை மற்றும் மருத்துவ குணங்கள் தொடர்பான இரகசிய மச்சாச் ஜூயாய் என்ற மொழி வைத்துள்ளனர். இது இன்கா அரசர்களின் மொழி என்று சிலர் நம்புகின்றனர். உலகில் 7,000 மொழிகளுக்கும் மேலாக இருந்தன.

இவற்றில் 4,000 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. "ஒவ்வொரு மொழியும் கலாச்சாரமும் ஒரு சமுதாயத்தின் கலாச்சாரத்தை வளர்ச்சியை பெருமைகளை கோடிட்டுக் காட்டுபவை ஆகும். ஆகையால் ஒரு மொழி அழியும்பொழுது, வாழ்க்கை முறை, பிரச்னைகளுக்கான தீர்வுகள் எல்லோமே சேர்த்து அழிகின்றன என்கிறார் மொழி ஆய்வாளர் டேனியல் எவரட்.

பூர்வீகக் குடிகளின் புண்ணியத்தால் நமக்கு நிறைய மூலிகைகளின் மருத்துவ குணங்கள் தெரிய வந்த பயன்பாட்டில் உள்ளன. தெற்கு அமெரிக்க இந்தியர்களால் நஞ்சாக பயன்படுத்தப்பட்ட சில மூலிகை வகைகள் இப்பொழுது மேலை நாட்டு மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணத்திற்கு, குராரே (curare) என்ற மூலிகைச் செடி. இந்த மூலிகைகளை அம்புகளின் நுணியில் பொருத்தி மிருகங்களின் மீது பாய்ச்சி அவற்றைச் செயலிழக்கச் செய்வர்.

அதே மூலிகையை, நவீன மருத்துவத்தில் தசைகளை இலகுவாக்கும் பொருளாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் திறந்த இருதய அறுவைச் சிகிச்சை சாத்தியமாகிறது. பூர்வீகக் குடியினரின் மருத்துவ அணுகுமுறையும் வியக்க வைக்கிறது. நோயற்ற வாழ்க்கை மட்டும் ஆரோக்கியம் என்று அவர்கள் நினைத்துவிடவில்லை.

மனோ நலத்தையும் ஆன்மீக நலத்தையும் இணைத்து ஒருவரின் ஒட்டுமொத்த நலத்தைக் கணிக்கிறார்கள். மனிதன் ஒரு தனித்தீவு கிடையாது.

ஆரோக்கியமான மனித உறவுகள் மற்றும் இயற்கையோடு சுமூகமான தொடர்பும் முக்கியம். நவீன மருத்துவம் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுவதில்லை. ஒவ்வொருவரையும் ஒரு தனி அமைப்பாகவே அது பார்க்கிறது. இப்பொழுது இந்த உண்மையை நாம் உணர ஆரம்பித்துவிட்டோம்.

பித்தப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களின் படுக்கைக்கு வெளியே இயற்கைக் காட்சிகள் இருக்குமாறு அமைப்பு இருந்தபொழுது அவர்களுக்கு மிகவும் குறைவான அளவு வலி நிவாரண மருந்துகளே தேவைப்பட்டன என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

போர்னியோ காடுகளில் உள்ள பின்தாங்கோர் மரம் ஒரு விஷேசமான இரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. எச்.ஐ.வி. வைரஸ் பெருகுவதை இந்த இரசாயனம் கட்டுப்படுத்தும் என்பதால்
இப்பொழுது இந்த மரங்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பவளப்பாறைகளும் மருந்து மூலங்களாக இருக்கின்றன. புற்றுநோய், மூட்டு வலி, இருதய நோய் போன்றவற்றுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலை நாடுகள் காடுகளின் மருத்துவ மகத்துவத்தைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தவுடன், காடுகளையும் பவளப்பாறைகளையும் சிறிது சிறிதாக சுரண்ட ஆரம்பித்துவிட்டன. இதனால் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளும் அருக ஆரம்பித்துவிட்டன. மூலிகைகளை அளவுக்கு அதிகமாக அறுவடை செய்வதால் 50,000க்கும் மேற்பட்ட மருத்துவ மூலிகைகள் அழியும் விளிம்பில் இருப்பதாக அனைத்துலக மூலிகை பாதுகாப்புக் கழகம் கூறுகிறது.

இப்படி அழியும் மூலிகைகளைப் பாதுகாக்க வேண்டுமானால் முதலில் பூர்வீகக் குடியினரின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் எனக்குக் கட்டை விரலில் மரு உண்டாகும். ஒரு பிரபலமான கண் மருத்துவரான என் தாத்தா இதற்கு எப்படி மருத்துவம் பார்ப்பார் தெரியுமா? ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டுவார்.

பாதி ஆப்பிளைக் கொண்டு மருவைத் தடவுவார். இன்னொரு பாதியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் சூரிய ஒளி படும் இடத்தில் புதைத்து வைப்பார். மரு μரிரு தினங்களிலேயே மறைந்து போகும். இயற்கையோடு இணைந்து எதற்கும் தீர்வு காண முயலும்பொழுது அது நமக்கு வேண்டிய தீர்வை அளிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மோர்பைனைவிட 200 மடங்கு அதிகமான சக்தி வாய்ந்த வலி நிவாரணியை இக்குவாடோர் தவளைகளிலிருந்து பெற முடியும் என்றால், நம்முடைய மலைக்காடுகளில் நமக்கு இதுவரை தெரியாத இன்னும் நிறைய அதிசயங்கள் பொதிந்து கிடக்கத்தான் செய்யும். பூர்வீகக் குடியினரின் மொழிகளில் எல்லாம் இந்தத் தகவல்கள் எல்லாம் பொதிந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

உங்களைக் கொல்ல கால் தேக்கரண்டி பூச்சிக்கொல்லியே போதுமானது - கார்போபியூரானை தடை செய்யுங்கள்!

விவசாய அமைச்சு உடனடியாக கார்போபியூரான் என்ற பூச்சிக்கொல்லியைத் தடை செய்ய வேண்டும். இந்த வருட ஆரம்பத்தில், கெடா, பெண்டாங்கைச் சேர்ந்த 5 விவசாயிகளின் 18 மாடுகள் கார்போபியூரான் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி செத்துப்போன காரணத்தால் அவர்கள் மவெ. 30,000.00 இழப்பை எதிர்நோக்கியுள்ளனர். கார்போபியூரான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்ததால் இந்த மாடுகள் செத்துப்போயின.

சோளம் வளர்க்கும் விவசாயிகள் அவற்றை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கும் பொருட்டு சோளச்செடியின் முளைகளில் கார்போபியூரான் சிற்றுருண்டைகளை வைக்கின்றனர்.

இதேப்போன்று குமட்டி வளர்ப்பவர்களும் அவற்றைப் பூச்சிகள் தாக்காமல் இருக்கும் பொருட்டு மண்ணில் கார்போபியூரானைப் இடுகின்றனர். கார்போபியூரான் அதிக அளவு நச்சுத்தன்மை வாய்ந்த காரணத்தால் அதை கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் 2008ல் தடை செய்தது.

ஆகக் கடைசியாக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகமும் கார்போபியூரான் உபயோகத்தைத் தடை செய்துள்ளது. கார்போபியூரானை பியூராடான் (Furadan) என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். உணவு சட்டம் 1985ன்படி கார்போபியூரான் அரிசி, சோளம், மிளகு (கருப்பு, வெள்ளை), மாங்காய், வாழைப்பழம், கரும்பு மற்றும் கத்திரிக்காய் பயிர் வளர்ப்பில் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பயிர்களுக்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளில் கார்போபியூரான்தான் அதிக அளவு நச்சுத்தன்மை கொண்டது. ஒருவரைக் கொல்வதற்கு வெறும் கால் தேக்கரண்டி கார்போபியூரான் போதுமானது.

இந்த நச்சு நரம்பு மண்டலத்தைத் தூண்டி, குமட்டல், தலை சுற்றல், குழப்பம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. அளவு அதிகமானால் சுவாசக் குழாய் செயலிழப்பை ஏற்படுத்தி இறப்புக்கும் இட்டுச் செல்லும். நரம்பு மண்டலம் மற்றும் இன உற்பத்தி உறுப்பில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும். கார்போபியூரான் எச்சங்கள், சாப்பிடும் உணவிலும் குடிக்கும் நீரிலும் கலக்கும்பொழுது இந்தப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகின்றன.

கார்போபியூரான் சுற்றுச்சூழல் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். 1967ல் கார்போபியூரான் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இலட்சக்கணக்கான பறவைகள்
மற்றும் வனவிலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த கார்போபியூரான் சிற்றுருண்டைகளைக் குருவிகள் தீனி என்று நினைத்து அவற்றைத் தின்று மடிகின்றன. செத்துப்போன
பறவைகளை இதர மிருகங்கள் தின்னும்பொழுது அவையும் சாகின்றன. இந்த கார்போபியூரான் மீன் இனத்தையும் நச்சுக்குள்ளாக்கி வருகிறது.

அமெரிக்காவில் வஞ்சன மீன் இனம் குறைந்து போனதற்கு இந்த கார்போபியூரான்தான் காரணம். கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சிங்கங்களைக் கொல்வதற்கு கார்போபியூரானைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. கார்போபியூரானின் நச்சுத்தன்மை காரணமாக மலேசியாவில் இந்த நச்சு பூச்சிக்கொல்லி தடை செய்யப்பட வேண்டும். கார்போபியூரானால் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை இதன் மூலம் பெரும் அளவில் குறைக்க முடியும்.

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி
என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம்
நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது
வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய
10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன.

உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப்
பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.

சிந்து, கங்கை,பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.

இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை
நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.