Sunday, December 26, 2010

10 விஷயங்கள் மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள் தொடர்பாக மருத்துவ ஆராய்ச்சி கழகம் (IMR) செய்திருந்த மனுவுக்கு, தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம்(NBB), அனுமதி அளித்திருக்கின்றது. மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்த ஆண் கொசுக்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும், எவ்வளவு காலம் அவற்றால் உயிர் வாழ முடியும் போன்ற பரீட்ச்சார்த்த சோதனைகளை பெந்தோங் மற்றும் ஆலோர் காஜாவில் நடத்தவிருக்கின்றது.

இந்த மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நோக்கம் மரபணு மாற்றபட்ட ஆண் கொசுக்களைப் பெண் கொசுக்களுடன் ஜோடி சேர வைப்பதாகும். ஆண் கொசுவின் மரபணு மாற்றப்பட்டிருப்பதால், கொசுக்குஞ்சுகள் வளர்ச்சியடைவதற்கு முன்பதாகவே இறந்துவிடும். இதன் வழி கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி டெங்கி காய்ச்சலைக் குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்போடு இதைச் செய்கின்றார்கள்.


1. மரபணு தொழில்நுட்பம் அல்லது மாற்றம் பாதகமான விளைவுகளைக் கொண்டு வரலாம். அதன் விளைவுகளைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களின் பாதுகாப்பு குறித்த ஏராளமான சந்தேகங்களுக்கு இன்னும் விடை காணப்படாமலேயே இருக்கிறது.

2. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைப் பற்றி மிக குறைந்த அறிவும் அனுபவமே இருப்பதால் அது சுகாதாரத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் பற்றி சில அறிவியலாளர்கள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள். சில விஞ்ஞானிகள் தங்கள் அச்சம் குறித்து தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் மற்றும் இயற்கை வள சுற்றுப்புற அமைச்சிடம் அறிக்கை சமர்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளிடையே இதன் பாதுகாப்பு பற்றிய சர்ச்சைகள் ஏற்பட்டிருப்பதால், இந்தக் கொசுக்களை வெளியிடுவதில் நாம் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

3. இந்த பரீட்ச்சார்த்த சோதனை பல தடவைகள் செய்யப்படவிருப்பதால், அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் வெளியில் விடப்படும். இந்தச் சோதனையின் போது நாள் ஒன்றுக்கு 2,000-3,000 கொசுக்கள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து விடப்படும். அதாவது ஒரு சோதனையின் போது ஏறக்குறைய 4,000லிருந்து 6,000 கொசுக்கள் வெளியே விடப்படும். இதுவே தேர்ந்தெடுக்கபட்ட இரு பகுதிகள் என்றால் 16,000லிருந்து 24,000 மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மலேசிய சுற்றப்புறத்தில் உலா வந்து கொண்டிருக்கும். அப்படி இச்சோதனை தொடரப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகும்.

4. மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்கள் மட்டுமே வெளியே விடப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஆராய்ச்சி கழகம் கொசுக்களை வெளியே விடுவதற்கு முன் ஆண் பெண் கொசுக்களைப் பிரித்தெடுக்க வேண்டும். அதிக எண்ணிக்கை என்பதால், அப்பணியின் போது, மனித தவறுகள் நிகழுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உருவாகும். பெண்கொசுக்களே மனிதர்களைக் கடித்து நோயைப் பரப்புவுதால் இதுவும் அச்சப்படவைக்கும் விஷயமாக இருக்கிறது.
5. செத்துமடியும் படி வடிவமைக்கப்படும் சில கூட்டுப்புழுக்கள் தப்பி உயிர் பிழைக்கலாம். ஆண் பெண் கொசுக்கள் ஜோடி சேரும் போது உற்பத்தியாகும் கூட்டுப்புழு செத்து மடிய வேண்டும். ஆயினும் சொற்ப எண்ணிக்கையிலான கூட்டுப்புழுக்கள் உயிர் தப்பலாம் (ஆய்வுக்கூட சோதனையில் உயிர் தப்பியவை3-4%) இப்படி உயிர்தப்பிப்பவைப் பெண் கொசுக்களாக இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட உயிர்தப்பும் கூட்டுப்புழுக்கள் என்பது நமது சுற்றுச்சூழலில் அந்நிய மரபணு உலா வரும் என்று அர்த்தமாகிறது. அவற்றின் பாதிப்புக்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.

6. மலேசியாவில் டிங்கி காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் ஒரு வழி முறையாக பின்பற்றப்பட்டால், தொடர்ந்தார் போல் பல இலட்சக்கணக்கான கொசுக்கள் வெளியே விடப்பட வேண்டும். கொசுக்கள் தொடர்ந்தார்போல் இனப்பெருக்கம் செய்யக்கூடியது என்பதால், அடிக்கடி இந்தக் கொசுக்களை வெளியே விடவேண்டி வரும். அதுவும் வாராவாரம் இப்படி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு 100 மில்லியனிலிருந்து 1 பில்லியன் வரையிலான மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் பயன்படுத்தப்படுவதற்குச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது.

7. மரபணு மாற்றப்பட்ட கொசு தொழில்நுட்பம் பிரிட்டனைச் சேர்ந்த ஒக்சிடெக் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தத் தொழில்நுட்பத்தின் உலகளாவிய உரிமத்தை இந்த ஒக்சிடெக் நிறுவனம் கொண்டுள்ளது. தொடர்ந்தார் போல் இந்தக் கொசுக்கள் விடப்படும் என்றால் இந்த நிறுவனத்திற்குத் தொடர்ச்சியான லாபம் கிடைத்துவரும். அண்மைய காலமாக இந்நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதால், தனது உற்பத்திக்கு அனுமதி பெறுவதில் அது நிறைய நெருக்குதலுக்கு உள்ளாகலாம்.

8. மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் எண்ணிக்கை நீண்ட நாட்களுக்குக் குறைவாகவே இருந்தால், டெங்கி மற்றும் சிக்கன்கூனியா நோய்களைப் பரப்பும் இன்னும் ஒரு வகையான கொசுக்களின் எண்ணிக்கை பெருகக்கூடும். இயற்கையும் இப்படிதான் இயங்குகிறது - ஒரு இனம் குறையும் போது மற்றொரு வகை வளர்ச்சி அடைவது இயற்கையின் நியதியும் ஆகும்.

9. உலக அளவில் மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைச் சுற்றுச்சூழலில் பரவ செய்வதில் மலேசியா இரண்டாவது நாடாக இருக்கிறது - மலேசியர்களும் மலேசிய சுற்றுச்சூழலும் ஏன் சோதனை எலிகளாக்கப்பட வேண்டும்? 2010ல் கெய்மென் தீவு என்ற இடத்தில் பரீட்ச்சார்த்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அங்குள்ள சுற்றுச்சூழல் (சூழியலும் மனிதர்களும்) முற்றிலும் வேறுப்பட்டது. கெய்மென் தீவின் முழுமையான மதிப்பீட்டு சோதனை இன்னும் பொதுவாக விவாதிக்கப்படவில்லை.

10. கொசுக்கள் விடப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த பரீட்ச்சார்த்த சோதனைக்கு மறுப்பு தெரிவிக்கலாம். அனுமதிக்காக உள்ள விதிமுறைகளில் ஒன்று தேசிய உயிரியல் பாதுகாப்பு மன்றம் பொது விவாத மேடை வைத்து, அங்கு வசிப்பவர்களின் அனுமதியைப் பெற்றிருப்பதாகும்.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Monday, November 15, 2010

நீரிழிவு நோய் - அமைதியான உயிர்கொல்லி!

இன்று உலக நீரிழிவு தினம். சர்வதேச நீரிழிவு சம்மேளனமும் உலக சுகாதார நிறுவனமும் 1991ம் ஆண்டு நவம்பர் 14 தேதியை நீரிழிவு தினமாக பிரகடனப்படுத்தியதிலிருந்து, உலக அளவில் நீரிழிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று சுகாதார அமைச்சும் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும் மலேசியாவில் இந்நோய் குறிப்பாக 2ம் ரக நீரிழிவு, தொற்றுநோய் போல எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.


ஆசியாவிலேயே நீரிழிவு நோயாளிகளில், மலேசியா 4வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நீரிழிவு சம்மேளனம் கூறுகிறது. 2007ல் எட்டு இலட்சமாக இருந்த நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, 2010ல் 3.4 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025ம் ஆண்டுகளில், தென் கிழக்காசிய நாடுகளில் நீரிழிவு நோயாளிகள் மிக அதிகமாக இருப்பார்கள் என்றும் அச்சம்மேளனம் கணித்திருக்கிறது என்றார் அவர்.

தேசிய சுகாதாரம் மற்றும் நோய்கள் பற்றி மிக அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை திடுக்கிடும் வகைனில் அதிகரித்திருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. 1996-ல் 8.3 விழுக்காடாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை, 2006ல் 14.9 விழுக்காடாக அதிகரித்தது. பத்தே வருடத்தில் 30 வயதுக்கும் அதிகமான மலேசியர்களிடையே 80% வரை இந்நோய் அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.

இதே ஆய்வில் 18 வயதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்தியில், 1996ல் 4.4 விழுக்காடாக இருந்த உடல் பருமன், 2006ல் 14.0 விழுக்காடாக உயர்ந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது பத்தே வருடத்தில் 200 விழுக்காடு உயர்வாகும்.

ஆசியாவிலேயே அதிக உடல் பருமனும் கூடுதல் எடை கொண்டவர்களும் மலேசியாவில் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கான மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் உடல் பருமன் அல்லது கூடுதல் எடையோடு இருக்கின்றார்கள். இந்த எண்ணிக்கை 10 வருடங்களுக்கு முன் 24.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது. இப்பொழுது 10 மலேசியர்களில் (பெரியவர்கள்) எழுவர் மோசமான பிணிக்கு உளாகியிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

அதிகமான சீனி உட்கொள்ளும் பழக்கமே மலேசியர்களிடையே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்ரிஸ் கூறினார். நாள் ஒன்றுக்கு 26 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதோடு, சீனி அதிகமாக உபயோகிப்பவர்கள் பட்டியலில் நாம் எட்டாவது இடத்தை வகிக்கின்றோம்.

நீரிழிவு உயிர்க்கொல்லி நோயாக கருதப்படுவதற்கு காரணம் அது உடலில் முக்கிய உறுப்புக்களான இருதயம், சீறுநீரகம், நரம்புகள், கண்கள் போன்றவற்றைப் பாதிக்கிறது. நீரிழிவு நோய் முறையாக கட்டுபட்டுத்தப்படவில்லை என்றால், அது பல்வேறு சிக்கல்களை உடலில் ஏற்படுத்தும். முக்கிய உடல் உற்றுப்புக்களைத் தாக்கும் அதே வேளை, கால்களையும் அது குறி வைக்கிறது. 40%லிருந்து 70% கால் துண்டிப்பு சம்பவங்களுக்கு நீரிழிவே காரணமாக இருக்கிறது.

உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில்:
* 10 வினாடிகளில் இருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது
* 10 வினாடிகளில் ஒருவர் நீரிழிவு நோயினால் இறக்கிறார்.
* 30 வினாடிகளில் ஒருவர் கை அல்லது காலை நீரிழிவு நோய்க்கு பலி கொடுக்கிறார்

நீரிழிவு நோயின் முற்றிய நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படுவது மலேசியாவில் மிகப் பெரிய சுகாதார பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. சுமார் 13,000 நீரிழிவு நோயாளிகள் டயலிசிஸ் செய்து கொள்கிறவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 2,500 பேர் நீரிழிவு நோயின் இறுதி கட்டத்தை அடைகின்றார்கள் என்றார் இத்ரிஸ்.

நீரிழிவு நோயாளிகளில் ஐவரில் நான்கு பேர் இருதய நோயால் இறக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் அறுவர் பக்கவாதத்திற்கு பலியாகிறார்கள்.

இருவருக்கு நீரிழிவு நோய் என்று அறியப்படும் பொழுது ஒருவர் தனக்கு இந்நோய் இருப்பது தெரியாமலேயே இருக்கிறார். வயதானவர்களுக்கு அல்லது மத்திய வயதை ஒத்தவர்களுக்கு ஏற்படும் என்று மட்டுமே கருதப்பட்ட 2ம் ரக நீரிழிவு இப்பொழுது 10 வயது குழந்தைக்கும் ஏற்படுகிறது.

இளைஞர்களிடையே நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கமும், வாழ்க்கை முறையும் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 18க்கும் 29 வயதுக்கும் இடைபட்டவர்களிடையே 2ம் ரக நீரிழிவு ஏற்படுவது அதிகமாக இருக்கிறது என்று இத்ரிஸ் மேலும் கூறினார்.

குழந்தைகள் உண்ணும் “நாகட், பர்கர், பொறித்த கோழி, பொறியல், கேஸ் பானங்கள் அவர்களை உடல் பருமனானவர்களாக மாற்றுகிறது. நீண்ட நேரத்துக்கு அமர்ந்து நிலையில் வீட்டுப்பாடம் செய்வது, தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுக்களை விளையாடுவது” அவர்களிடையே உடல் பருமன் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

அதிக புருக்டோஸ் உள்ள சோள சீரப்பில் இருக்கும் மலிவான சீனி பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களிலும், பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது இன்சுலினுக்கு எதிராக செயல்பட்டு 2ம் ரக நீரிழிவு நோய்க்கு வித்திடுகிறது. ஜேம், சாக்லட், பேக் செய்யப்பட்ட பதார்த்தங்கள், பேக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட பானங்கள், சத்து பானங்கள், பசியாறல் சீரியல்கள், சாஸ் வகைகள், சூப் வகைகளில் இந்த சீரப் தாராளமாக பயன்படுத்தப்படுகிறது.

நீரிழிவு பொதுமக்களின் சுகாதாரத்தைக் குறிவைக்கும் ஒரு மோசமான நோய். உலக அளவில் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். மக்கட்தொகை எண்ணிக்கை அதிகரிப்பு, நகரமயமாக்குதல், உடல் பருமன் அதிகரிப்பு, குறைவான உடல் உழைப்பு போன்றவை முக்கிய காரணமாகிறது.

மலேசியாவில் நீரிழிவின் அதிகரிப்பு எதிர்பார்த்த அளவைவிட மிக அதிகமாக இருக்கிறது. இந்த நோய்க்கான செலவினங்கள் அதிகரிப்பதோடு, அது நோயாளிகளின் கைகால்கள், கண் பார்வை போன்றவற்றைப் பலி கொள்கிறது.

தொற்றுநோய் போன்று அதிகரித்து வரும் இந்நோயைத் தடுப்பதற்கு அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டு கொள்கிறது:

* உணவுகளில் சோள சீரப் பயன்பாட்டைத் தடை செய்ய வேண்டும்

* உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்பில் சீனி பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு வகை செய்ய வேண்டும்.

* தங்கள் தயாரிப்பில் எவ்வளவு சீனி இருக்கிறது என்பதை லேபல்களில் குறிப்பிடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

* குழந்தைகள் தொலைகாட்சி பார்க்கும் சமயங்களில் அதிக சீனி சேர்த்த உணவுகளின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்.

* பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலையிலும், பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட தூரம் வரை இந்த உணவுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

* மருத்துவமனை, விமான நிலையம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களில் தின்பண்டங்களை விற்கும் தானியங்கி இயந்திரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்குப் பதில் குடிநீர் தானியங்கி இயந்திரங்களைப் பொருத்த வேண்டும்.

* நீரிழிவு நோயின் ஆபத்துக்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரிய அளவிலான பிரச்சாரங்கள் தீவிரமாக்கப்பட வேண்டும்.

* பயனீட்டாளர்கள் உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் விரிவான பிரச்சாரங்கள் மெற்கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

Tuesday, November 2, 2010

எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது! எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! எச்சரிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!

கடந்த 10 ஆண்டுகளில், மலேசியா எலிகளின் பெருக்கத்தில் ஆச்சிரியப்படக் கூடிய வளர்ச்சியை கண்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மோசமான ஆரோக்கிய பழக்கங்களும், கழிவு முறைகளுமே என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.
நகர்புறத்தின் அதிக வளரச்சி, மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் முறையாக செயல்படாத திட்டங்களுமே இதற்கு மற்றொரு காரணமும் என்றார் இத்ரிஸ்.

இந்த உலகத்தில், தோன்றிய இயற்கை பிராணியாக ஏற்றுக்கொண்டாலும் மனித உயிருக்கு இந்த எலிகள் இன்று மிகவும் மிரட்டலாக இருக்கின்றது. “லெப்டோஸ்பிரோஸிஸ் எனப்படும் எலிகளின் எச்சத்தால் ஏற்படும் நோய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.
எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களும் மரணங்களும் அதிக அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ல் எலிகளின் மூலமாக 62 மரணங்களும், 1418 நோய்களும் ஏற்பபட்டதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது. மலேசியாவில் எலி தொடர்பான மற்றொரு நோய் தொடர்பான தகவல்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்றார் இத்ரிஸ்.

தீபகற்ப மலேசியாவில் எவ்வளவுதான் எலிகள் இருக்கின்றன? கோலாலம்பூரில் மட்டும் ஏறக்குறைய 44 லட்சம் எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பினாங்கு நகராண்மை கழகம், கடந்த 2009ம் ஆண்டில் 14,639 எலிகளை பிடித்து கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது என்றார் இத்ரிஸ்.

உண்மையில் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்றார் இத்ரிஸ். ஊதாரணத்திற்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வில், 600 லட்சம் எலிகள் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு ஒரு எலி என்ற விகிதத்தில்.
மலேசியாவில் எலிகளை ஒழிப்பதற்காக, சில இலாக்காக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எலிகளின் வசிப்பிடங்கள் அதிகரித்துகொண்டே போவதற்கு முக்கிய காரணம், சுத்தமின்மை, உணவுகளை தூக்கி எறிவது மற்றும் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதுதான் என்றார் இத்ரிஸ்.

சரியான முறையில் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கும் என எச்சரித்தார் இத்ரிஸ்.

எலிகள் ஒரு ஆண்டில் நான்கிலிருந்து ஏழு முறை குட்டியிடும். ஒவ்வொரு முறையும் 6லிருந்து 12 குட்டிகளை அது ஈன்றெடுக்கும்.

ஒரு பெண் எலி ஒரு ஆண்டில் 4 முறை குட்டியிட்டால், ஏறக்குறைய ஒரு ஆண்டில் 582லிருந்து 954 எலிகள் சுற்றித்திரியும் என்றார் இத்ரிஸ்.

ஆகவே அதிகித்துவரும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக சுத்தத்தை கடைப்பிடிக்கும் உயர்ந்த அடுக்குமாடிகள் மற்றும் உணவங்களில் எலிகள் குடியிருக்கும் போது, சந்தைகள், உணவுச் சந்தைகள் மற்றும் பிற உணவு அங்காடி இடங்களில் எலிகளின் சாம்பிராஜயிம் இருக்காது என்பதில் என்ன உறுதி என்றார் இத்ரிஸ்.

மலேசியாவில் இரண்டுவிதமான எலிகள் இருக்கின்றன. குடியிருப்பு, வாணிபம் மற்றும் தொழிற்துறை பகுதிகளில் இருப்பவை, வீட்டு எலியான ராட்டுஸ் மற்றும் நோர்வே எலியான ராட்டுஸ் நோர்வெகிகுஸ்.

மனித ஆராக்கியத்திற்கு எலிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. பலதரப்பட்ட நோய்களையும் இது ஏற்படுத்துவதாக இத்ரிஸ் கூறினார்.

எலிகளின் சிறுநீர் தாக்கத்ததால் பலருக்கு லெப்டோஸ்பிரோஸிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அப்படி இந்நோய் குணப்படுத்தப்படாவிடில், அந்நோய் சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் ஈரல் பாதிப்பும் ஏற்படலாம்.

எலிகள் நோய்களையும் தருகிறது, உணவுகளை அசுத்தப்படுத்துவதோடு, மின்சார கம்பிகளை கடிக்கின்றன, மேலும் பயிர்களையும் நாசப்படுத்துகின்றன.

எலிகளை கட்டுப்படுத்துவதற்கு பூனைகளை வளர்ப்பது நல்லதுதான். ஆனால், சிறப்பான தூய்மையான சூழலுக்கு, பொது மக்களும், உணவுகளை கையாளுபவர்களும் தங்களது பொருப்பற்றப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் இத்ரிஸ்.
உணவு விற்கப்படும் எல்லா கடைகளிலும் மற்றும் உணவு கிடப்பில் வைக்கப்பட்டிpருக்கும் வர்த்தக இடங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உணவுகளை தூக்கியெறியும் இடங்களில் எலிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும். ஆகையால் உணவுகளை கண்மூடித்தனமாக தூக்கி எறிவதைவிடுத்து, சுத்தத்திலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் நமது நன்மைக்காக இந்த எலிகளின் தொல்லை பிரச்சனையை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்ளவதாக எஸ்எம். முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.


எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Thursday, October 7, 2010

மருத்துவ விளம்பரங்கள் தேவையில்லை என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

பொது மருத்துவமனைகள், கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை தங்களுடைய துறையைப் பிரபலப்படுத்த விளம்பரம் செய்வது தேவையில்லாதது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மருத்துவ சுற்றுலா வளர்ந்து வரும் ஒரு துறையாக இருப்பதால் மருந்து (விளம்பரம் மற்றும் விற்பனை) சட்டம் 1956ல் உள்ள விதிமுறைகளைக் தளர்த்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவிக்கை விடுத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இல்லை என்று இத்ரிஸ் கூறினார்.

சென்ற வருடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மட்டும் 336,000 சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் 20 விழுக்காட்டைக் கூட்டுவதற்கு எண்ணம் கொண்டிருப்பதாலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார் இத்ரிஸ்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் “மருத்துவத் துறை” என்ற ஒன்று இப்பொழுது இல்லை. அது வெறும் “மருத்துவ தொழிற்துறை”யாகவே இயங்கி வருகிறது. ஒரு பெரிய கும்பல் மருத்துவமனைகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் எல்லாவற்றின் உற்பத்தியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, அரசாங்கத்தை அவர்களுக்குச் சாதகமாக இயக்கி வருகிறது. தகவல் சாதனங்களின் மூலமாக தங்களுடைய துறையை மிகவும் அபரிமிதமாக விளம்பரம் செய்து இலாப நோக்கோடு செயல்படுகின்றனர்.

விளம்பரங்கள் மருத்துவத் துறையையும் மருந்து கம்பெனிகளையும் பலப்படுத்துகின்றன. ஒரு மருந்து விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தப்படும்பொழுது, மருத்துவரை அந்தக் குறிப்பிட்ட மருந்தைப் பரிந்துரைக்குமாறு நோயாளிகள் கேட்டுக்கொள்வர் அல்லது அந்த மருந்தை பரிந்துரை செய்யும் மருத்துவரை நாடிச் செல்வர் என்றார் இத்ரிஸ்.

ஒருவர் அதிக நோய்வாய்ப்படும்பொழுதுதான் இந்த மருத்துவ விளம்பரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். யாராவது தன்னுடைய நோய்க்கு உடனடி நிவாரணம் கொடுப்பார்களா என்று ஏங்கும் பட்சத்தில் மருத்துவ விளம்பரங்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கும். பெரும்பாலோர் தங்களுடைய வைட்டமின்கள், டானிக், ஜீரணமின்மை, வலி நிவாரணத்திற்கு மருந்துக் கடைகளின் உதவியையே நாடுகின்றனர். ஏனெனில் இவையெல்லாம் விளம்பரம் செய்யப்படுகின்றன. மருத்துவர்களை நாடிச் சென்று அவர்களைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் மருந்துவத் துறையை விளம்பரம் செய்யும்பொழுது அதற்கான செலவுகளையெல்லாம் நோயாளிகளின் மீது சுமத்தி ஈடுகட்டும் ஒரு நிலை உருவாகும் என்றார் இத்ரிஸ்.

மருத்துவத் துறை ஒரு புனிதமான துறையாகும். அதனை இலாப நோக்கோடு தீவிரமாக விளம்பரப்படுத்தும்பொழுது முறைகேடுகள் ஏற்பட்டு நோயாளிகளின் நலனுக்கு பாதகத்தை உருவாக்கும் நிலை ஏற்படலாம். மருத்துவத்துறையை ஒரு வியாபாரமாக பார்க்கலாகாது. என்றார் இத்ரிஸ்.

மருத்துவச் சுற்றுலாத்துறையைப் பிரபலப்படுத்த நினைக்கும் சுகாதா அமைச்சின் நோக்கத்திற்கு அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது நம் நாட்டின் மருத்துவத்துறையில் இருக்கும் கோளாறுகளை இனங்கண்டு அதனை நிவர்த்தி செய்வதே இந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் தலையாய கடமையாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Monday, September 13, 2010

தற்கொலை காட்சிகள் தொடர வேண்டுமா? நடிகை ராதிகாவின் செல்லமே தொடர் குடும்ப நல்லுணர்வு சீரழிக்கின்றது பி.ப.சங்கம் குற்றச்சாட்டு!

குடும்ப சமூக மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சினிமாப் படங்களை விட மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்து வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோமோ அதற்கு எதிராகவே, சின்னத்திரைகளில் காட்சிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்றார் பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு இங்கே மறு ஒலிபரப்பாக தினமும் திரையிடப்படும் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் குடும்ப சீரழிவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் ஒவ்வொன்றாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஆகக் கடைசியாக காற்றாடியில் சேலையைத் தொங்கவிட்டு கறுத்தில் இறுக்கி எப்படித் தற்கொலை செய்துகொள்வது என்ற காட்சி அண்மையில் செல்லமே மெகா தொடரில் காட்டப்பட்டது. இந்தக் காட்சி பலரின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில்தான் தற்கொலைக் காட்சிகள் அதிக அளவு காட்டப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது மெகா தொடர்களில் இதுபோன்ற காட்சிகள் வரத்தொடங்கிவிட்டன என்றார் சுப்பாராவ்.

நமது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

எப்படித் தற்கொலை செய்து கொள்வது என்பதை இந்த நாடகங்களே சொல்லித் தருகின்றன. தமிழ் மெகா தொடர்களைப் பார்த்தே தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொள்வதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்த நிலை மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் ஏற்படக்கூடாது.


செல்லமே போன்ற நாடகங்கள் மிக முக்கிய நேரத்தில் காட்டப்படுவதால் அனைவராலும் பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தற்கொலைக் காட்சிகள் பார்ப்பவர்களின் மன நிலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்கு தவறான முடிவுகளை எடுக்கவும் தூண்டிவிடலாம் என்றார் சுப்பாராவ்.

கணவன் மற்றும் மகன், மகளுக்கு எதிரிலேயே அம்மா உயர்ரக மது குடிக்கும் காட்சி, உணவில் விஷத்தைக் கலப்பது, ஆண் பெண்ணை அறைவது, பெண் ஆணை அறைவது, காப்பியில் தூக்க மாத்திரையைப் போட்டுவிட்டு உறவு கொள்வது, பழிக்குப் பழி வாங்குவதற்காக சொந்த தந்தையே தன் மகளை வழி தவறிச் செல்ல உதவுவது போன்ற மனதை நோகடிக்கும், தலைக்குனிவை ஏற்படுத்தும் காட்சிகள் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் தொடர்ந்து கொண்டே போகின்றன.


இப்படிப்பட்ட தொடர்களை ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பார்ப்பதில்லை. பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சில சமயங்களில் பாட்டிமார்களும் இத்தொடர்களில் கண் விழித்து பொழுதைக் கழித்துவிடுகிறார்கள்.

மிக மோசமான காட்சிகள் காட்டப்படும்போது அது அவர்களின் மனதில் தங்கிவிடுகிறது. ஏதோ பொழுது போக்கிற்காக பார்க்கக்கூடிய நாடகங்கள் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் உண்மை நிலை தெரிய வருகிறது என்றார் சுப்பாராவ்.

மற்ற சமூகத்தோடு எல்லா துறைகளிலும் போட்டி போட்டுக்கொண்டும் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும் இருக்கிற சமூகத்துக்கு செல்லமே போன்ற தொடர் நாடகங்கள் இன்னும் அதிகமாக கேடுகளையே கொண்டு வரும்.

இதுபோன்ற சமூக நலனுக்கு பாதகங்களை விளைவிக்கும் நாடகங்களை ஒளிபரப்புவதை விடுத்து, உருப்படியான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒலிபரப்ப வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.



என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
தொலைபேசி : 012-5374899

Tuesday, September 7, 2010

பறவைகள் பலவிதம்










உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்

* இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.

* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.

* எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும்.

* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை
மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.

* இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. <உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.

* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே! உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.

* நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

* எதிலும் கவனம் வேண்டும்
பேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.

""நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே! உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்?'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.

நரேன் ஆசிரியரிடம், ""ஐயா! இவ்வளவு நேரம் பேசியது நான் தான்! இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா?

* துணிச்சலும் வேண்டும் கருணையும் வேண்டும்
விவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது

* வெளிநாட்டு சகோதரன்
பேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, August 29, 2010

ஏன் இந்த நிலை?

தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுள்ளனர்.



தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Saturday, August 28, 2010

அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டைப் பயன்படுத்துவது சரியான முடிவு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பு!

அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டை ஒரு நாணயமாக பயன்படுத்துவதற்கு வெளிநாட்டு நாணய மாற்று நிர்வாக விதிகளை தளர்த்துவதற்கு பேங் நெகாரா எடுத்துள்ள முடிவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கிறது.

இந்த முடிவு சரியான பொருளாதாரத்துக்குச் சாதகமானது என அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

முன்பதாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் உள்நாட்டு வியாபாரத்தின் பல இலட்சக்கணக்கான வெள்ளியை பாதுகாத்திருக்கலாம் என அவர் கூறினார்.

உண்மையில் இப்பிரச்னையை பேங் நெகாராவின் கவனத்திற்கும் நிதி அமைச்சின் கவனத்திற்கும் ஜனவரி 2008ல் பி.ப.சங்கம் கொண்டு வந்தது.

அச்சமயம் நாங்கள் அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான பலவீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் ஏற்றுமதி கணக்கை ரிங்கிட் நாணயத்திலேயே குறிப்பிட்டிருந்திருந்தால் அதிக அளவு அவர்கள் நன்மை அடைந்திருப்பார்கள் என்றார் அவர். அனைத்துலக வர்த்தகத்தில் உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்துவது இவ்வட்டாரத்தில் பிரபலப்படுத்தப்பட்டால் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறையக்கூடும் என தாங்கள் நம்புவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Thursday, August 26, 2010

கண்ணனைத் தேடி



ஆசிரியர் : டி.கே.வி.ராஜன்
வெளியீடு :கற்பகம் புத்தகாலாயம்

பல தொல்பொருள் ஆராயச்சிகளில் பல ஆண்டுகளாக தன்னை ஈடுப்படுத்திருந்த டி.கே.வி.ராஜனின் "கண்ணனைத் தேடி" என்ற ஆய்வு நூலை வாங்கிப் படித்து பல அதிசய செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

பூச்சிகள் தகவல் களஞ்சியம்


ஆசிரியர்: ஆர்.வி. பதி
வெளியீடு: குறிஞ்சி
(பக்கம்: 112).

பதினைந்து பூச்சிகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு உள் ளது. நகைச்சுவை ததும்பும் வகையில் பூச்சி விவரம் தெளிக்கப்பட்டுள்ளது. "சிக்கன் குனியா' என்பது தவறு, அது "சிக்குன் குனியா' என்பதே சரி. கரப்பானின் தலை துண்டானாலும் ஐந்து நாட்கள் உயிர் வாழும். பூச்சி புத்தகத்தில் ஏராளமான ஆச்சர்யமூட்டும் நெளியல்கள் உண்டு.

Tuesday, August 24, 2010

கண்ணனைத் தேடி புத்தகம்



டி.கே.வி.ராஜன் அவர்களின் கண்ணனைத் தேடி என்ற ஆய்வு நூலின் கட்டுரைகள், ஆசிரியர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரனின் ஆவிகள் உலகம் என்ற அமானுஷ்ய ஆன்மீக மாத இதழில் தொடர் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளை இங்கே PDF முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1. ஜனவரி 2010
2. பிப்ரவரி 2010
3. மார்ச் 2010

Sunday, August 22, 2010

தேவையில்லாத, ஆபத்தான தடுப்பூசித் திட்டத்தை ரத்து செய்யுங்கள்!

நாட்டில் உள்ள 13 வயதுடைய எல்லா சிறுமிகளுக்கும் யூமன் பப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி.) (Human papillomavirus) தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து வருவதை பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் எதிர்ப்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பாலியல் தொடர்புகளின் மூலம் பரவும் வைரஸ் தொற்றுக்காக போடப்படும் இந்தத் தடுப்பூசி தேவையில்லாதது, அறிவியல் பூர்வமாக நிருபீக்கப்படாதது. பாதுகாப்பற்றதும் கூட. பல தரப்பிலிருந்து இந்த தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்புக்கள் வந்திருந்தாலும் கூட, அரசாங்கம் சுமார் 300,000 சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியைப் போடுவதற்கு வருடத்திற்கு மவெ. 150 மில்லியனை செலவு செய்யவிருக்கிறது. வைரஸ் தொற்றால் ஏற்படும் 40 விதமான புற்றுநோய்களில் இரண்டு வகையான புற்றுநோய்க்கு மட்டுமே இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்று இத்ரிஸ் கூறினார்.

பாலியில் தொடர்புகளினால் எச்.பி.வி. தொற்றுகிறது. பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் அபாயங்களை சமய மற்றும் நன்னெறிக் கல்வி மூலம் தடுப்பதை விட்டுவிட்டு தடுப்பூசி மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயல்வது அறிவுப்பூர்வமாகப் படவில்லை என்று இத்ரிஸ் கூறினார். எச்.பி.வி. தடுப்பூசி பாலியல் தொடர்பு மூலமாக பரவும் எல்லா விதமான வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பு கொடுக்கும் என்று சிறுமிகளுக்கு தப்பான அபிப்பிராயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இது மிகவும் ஆபத்தானது.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலமாகவே இரண்டு வருட காலக்கட்டத்திற்குள் 90% எச்.பி.வி. தொற்றுநோயை விரட்டிவிட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது உண்மை என்றால் இந்த தொற்றுநோய் தடுப்பூசிக்கு தேவையே இல்லை.

எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்காவில் ஒவ்வாமை காரணமாக 53 பேர் இறந்துபோயுள்ளனர். எச்.பி.வி. தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைவிட அது ஏற்படுத்தும் பக்க விளைவுகள் ஏராளம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் டாயன் ஹாப்பர் கூறுகிறார்.

மெர்க் கம்பெனியின் கார்டாசில் (Gardasil) மற்றும் க்ளாக்சோஸ்மித்க்ளின் கம்பெனியின் செவாரிக்ஸ் (Cervarix) எச்.பி.வி. தடுப்பூசிகளே நம்முடைய குழந்தைகளுக்குப் போடப்படவிருக்கின்றன. கார்டாசில் பக்கவாதம், வலிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தடுப்பூசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் அதிக தொடர்பிருப்பதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது. மயக்கம் மற்றும் இரத்தம் கட்டிக்கொள்ளுதல் போன்றவை கார்டாசில் வகை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏற்பட்டதாக 2008ன் ஆய்வு காட்டுகிறது. கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட இரண்டு சிறுமிகள் மோசமான நோய்க்கு ஆளானதால் 2009ல் ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சு கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடுவதை நிறுத்தியது. செவாரிக்ஸ் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பெண்களும் தலைவலி, குமட்டல் மற்றும் இறப்புக்கு ஆளானதாக இங்கிலாந்தில் ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆகையால் சுகாதார அமைச்சு 150 மில்லியனை எச்.பி.வி. தடுப்பூசி போடுவதற்காக செலவு செய்யாமல், அதே தொகையை, இளம் பிராய பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் ஆபத்துக்கள், எச்.பி.வி. தொற்றுநோய்க்கிருமிகளின் பாதிப்பு பற்றி கல்வி ஊட்டுவதற்கு பயன்படுத்துவது பலனளிக்கும். தடுப்பூசிகளை விட பெப் ஸ்மியர் சோதனையே கருப்பை புற்றுநோய் தடுப்புக்கு இன்னும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடம் நவம்பர் மாதத்திலும் இந்த வருட மார்ச் மாதத்திலும் பி.ப.சங்கம் சுகாதார அமைச்சோடு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தேவையில்லாத இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தைத் துடைத்தொழிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் பினாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில், 13 வயது சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசி விளக்கங்களை அளித்து தடுப்பூசி தொடர்பான அவர்களுடைய பயத்தைப் போக்கவிருப்பதாக அறிவித்தது. பிறகு இந்த சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு இதன் நன்மையை எடுத்து விளக்கி தடுப்பூசி போட அனுமதி பெற வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்காமல், அவர்களுடைய குழந்தைகளுக்கு மட்டும் விளக்கத்தை அளிப்பதன் மூலம் பிள்ளைகளின் நலனையும் ஆரோக்கியத்தையும் முடிவு செய்ய வேண்டிய பெற்றோர்களுக்கு தடுப்பூசி தொடர்பான முழு விபரங்களை அளிக்கும் பொறுப்பிலிருந்து இவர்கள் நழுவிக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்றே தெரிகிறது. இது பெற்றோர்களின் உரிமையை மீறும் செயலாகும். எச்.பி.வி. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு அவசியம் விளக்கியாக வேண்டும் என்றார் இத்ரிஸ்.

அவசியமற்ற இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தை சுகாதார அமைச்சு அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் முதலில் 13 வயது சிறுமிகளின் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இந்தத் தடுப்பூசி தொடர்பான முழுமையான விபரங்களை அளிக்க வேண்டும்.

தேவையற்ற, ஆபத்தை விளைவிக்கும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் உள்ள பக்க விளைவுகளையும் ஆபத்துக்களையும், மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சுகாதார அமைச்சு முழுமையாக எடுத்து விளக்க வேண்டியது அவசியமாகும். அதோடு எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுமியாவது பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவாரானால் அதற்கு சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

இந்து ஆலயங்களில் கைபேசியை உபயோகிப்பதற்கு தடை விதியுங்கள் விதவிதமான விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோன் கலாச்சார சீரிழிவுக்கு இட்டுச் செல்கிறது!

அண்மைய காலமாக இந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடைபெறும்போது கைப்பேசியை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது கவலையைத் தருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.

கோயில்களில் அர்ச்சகர் பூஜை செய்யும்போதும், மந்திரம் உச்சரிக்கும்போதும், வரிசையில் இருக்கும் பக்தர்கள் பலரின் கைப்பேசியில் அழைப்புக்கள் வருவது என்பது இப்பொழுது ஒரு புதிய கலாச்சாரமாகிவிட்டது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

வருகின்ற அழைப்புக்கள் அமைதியாக வருவதில்லை அதற்கு மாறாக விரசமான சினிமா பாடல்களின் ரிங் டோனாக வருவதுதான் மற்ற பக்தர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது என்கின்றார் சுப்பாராவ்.

ஒரு சிலர் அழைப்பு வந்தால் சாமி கும்பிடுவதையும் விட்டு விட்டு சற்று தூரம் சென்று பேசிவிட்டு வருகின்றனர். இறைவினைவிட, கைப்பேசியில் வந்த அழைப்பே இவர்களுக்கு மிக முக்கியமாகிவிட்டது. கோயிலுக்கு வராமல் வீட்டில் இருந்தே கைப்பேசிகளில் வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கலாமே.

வேறு சிலர் இருந்த இடத்திலேயே வரிசையில் நின்றவாறு ஆங்கிலத்தில் “பிறகு கூப்பிடு” என சத்தம் போட்டு சொல்வதும் நின்றுகொண்டிருக்கிற பக்தர்களை மதிக்காதது மட்டுமல்ல, இவர்களுக்கு உண்மையிலேயே இறை பக்தி உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது என்றார் சுப்பாராவ்.

வருகின்ற அழைப்புக்களின் ரிங்டோன், அர்ச்சகர்கள் மந்திரம் ஓதுவதைவிட மிக அதிக சத்தத்துடன் இருப்பதும் இப்பொழுது ஒரு கலாச்சாரமாகிவிட்டது.

இந்த நவீன கலாச்சாரம் ஆலயத்தின் புனிதத்தன்மையை இழிவுபடுத்துகின்ற ஒரு செயலாக மாறிவருகின்றது என்றார் சுப்பாராவ்.

ஆலயங்களில் அதிக அளவு கைப்பேசியைப் பயன்படுத்துவோர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். கை எடுத்து கும்பிடும்போது, கைப்பேசி உள்ளங்கைகளுக்கு நடுவே இருக்கும் அவல நிலை வெட்கித் தலை குனிய வைக்கும் ஒரு செயலாகும். இப்படியெல்லாமா கடவுள் வழிபாடு செய்வது?

அரை மணி நேரம் ஆலயத்தில் இருக்கும்போது 10 அழைப்புக்கள் வருவதும், அதற்கு ஈடாக அழைப்பதும் நாகரீகமாக செயல் அல்ல.

ஆலயங்களில் கைப்பேசியை பயன்படுத்துவதற்கு ஆலய நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

அதையும் மீறி பயன்படுத்துவோரின் கைப்பேசியை பறிமுதல் செய்வதையும் நிர்வாகங்கள் ஆலோசிக்க வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை மீனாட்சியம்மன்


மதுரை மீனாட்சியம்மன்

Monday, August 9, 2010

37 வருட போராட்டத்திற்குப் பிறகு ரோடாமைன் பி இன்னும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது!


எப்பொழுதோ தடை செய்யப்பட்ட ரோடாமைன் என்ற வர்ணம் இன்னும் உணவுப் பொருட்களில் வலம் வருவதைப் பார்க்கும்பொழுது சுகாதார அமைச்சு உணவு சட்டத்தை இன்னும் முறையாக அமல்படுத்தவில்லை என்றே தெரிகிறது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பெலாச்சானில் ரோடாமைன் பி சேர்க்கப்பட்டிருப்பதாக 1973ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கண்டுபிடித்து அறிவித்தது. அதற்குப் பிறகு 1983, 1993, 1995, 1999, 2000, 2001, 2002, 2007 மற்றும் 2008 வருடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் ரோடாமைன் பி பெலாச்சானோடு சேர்த்து இன்னும் நிறைய உணவுப் பொருட்களில் இருப்பது தெரிய வந்தது.

ஒவ்வொரு முறையும் உணவில் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியபொழுது, சுகாதார அமைச்சுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவெல்லாம் பயனளித்ததாகத் தெரியவில்லை. இரு தசாப்தங்கள் கடந்தும் உணவில் ரோடாமைன் பி இன்னும் பயன்படுத்தப்படு வருகின்றது என்றார் இத்ரிஸ்.

புற்றுநோயை வரவழைக்கும் ரோடாமைன் பி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அதை உணவுக்கு வர்ணம் கொடுக்க அறவே பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களுக்கும் துணிக்கு வர்ணம் கொடுக்கவுமே இந்த வர்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

உணவு சட்டம் 1985 படி, ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்துபவர்களுக்கு மவெ. 5,000 அபராதம் அல்லது 2 வருடத்திற்கு மேற்போகாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார் இத்ரிஸ்.

உணவு மற்றும் போதைப்பொருள் சட்டம் 1952ன் கீழ் ரோடாமைன் பி உணவில் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அப்படியானால் இந்த வர்ணத்தை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கான தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகிவிட்டன.

ஆகக் கடைசியாக ஏப்ரல் 2010ல் பி.ப.சங்கம் மேற்கொண்ட சோதனையில், கோலாலம்பூரில் வாங்கப்பட்ட 2 பிளாச்சான் மாதிரிகளிலும் நொறுக்குத் தீனியிலும் ரோடாமைன் பி இருப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் சோதனைகள் காட்டியுள்ளன. ரோடாமைன் பியை உணவில் உபயோகிக்கத் தடை ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்கள் ஆகியும் இன்னும் உணவுப் பொருட்களில் ரோடாமைன் பி இருப்பது அதிர்ச்சியைத் தருவதாக இத்ரிஸ் கூறினார்.

ரோடாமைன் பியை உணவில் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத காரணத்திலேயே இந்நிலை நிலவுகிறது. மலேசியாவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. உணவில் அதிகமாகச் சேர்க்கப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்களே இதற்குக் காரணமாகும் என்றார் இத்ரிஸ்.

ரோடாமைன் பி வர்ணம் கொண்டு வரும் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உணவு சட்டம் 1985 முழுமையாக அமலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இரசாயன வர்ணங்களை உணவில் பயன்படுத்தும் நோக்கத்திற்காக விற்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும். வர்ணம் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை பயனீட்டாளர்கள் வாங்காமல் இருக்கும் பொருட்டு பயனீட்டாளர்களுக்கான கல்வித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். சந்தைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை அவ்வப்பொழுது சோதைனைக்கு அனுப்பி அவற்றில் ஆபத்தான வர்ணங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டத்திற்கு எதிராக உணவில் வர்ணங்களை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் அபகரிக்கப்பட வேண்டும். வர்ணங்கள் சேர்க்கப்பட்ட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உணவுப் பொருட்கள் ஆபத்தானவை என்ற காரணத்தால் அவற்றைப் பயனீட்டாளர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

சாலையில் சாவைச் சந்தித்தவர்களின் எண்ணிக்கை 62,323 சட்ட அமலாக்கம் முறையாக நடைபெற வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்


அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது 2001ல் படையெடுத்ததிலிருந்து இன்று வரை சுமார் 28,778 பேர் போரில் பலியாகியுள்ளனர். அதே காலக்கட்டத்தில் மலேசியாவில் 62,323 பேர் சாலை விபத்தில் இறந்து போயுள்ளனர். சாலை விபத்துக்களில் மோசமான காயங்களுக்கு உள்ளானவர்கள் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்பொழுது போரினால் பாதிக்கப்படும் நாட்டை விட நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. சில சமயங்களில் சாலை விபத்துக்களில் ஒட்டு மொத்த குடும்பமே மரணம் என்ற பெயரில் அப்படியே துடைத்தொழிக்கப்படுகிறது. இப்படி நடந்தாலும் கூட சாலை விபத்துக்களைப் பற்றி நாம் ஒன்றும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

2000ல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 250,429 ஆக இருந்தது. சென்ற வருடத்தில் இது 397,268 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரி 18 பேர் சாலை விபத்துக்களினால் உயிர் இழக்கின்றனர். உலகிலேயே சாலை விபத்துக்களில் அதிகம் உயிரிழக்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்று இத்ரிஸ் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் 9,081 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் 4,540 பேர் நிரந்தர செயலிழப்புக்கு உள்ளாகின்றனர். சென்ற வருடம் மட்டும் சாலை விபத்துக்களினால் மவெ. 7.8 பில்லியன் செலவானது. ஆகையால் கூடிய வரையில் விபத்துக்களை தடுப்பது ஒரு நல்ல முதலீடாகும் என்றார் இத்ரிஸ்.

சாலையில் ஓடும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கின்றனவா என்பது கேள்விக்குறி. மிகவும் பிரபலமான விலை உயர்ந்த தோயோட்ட மற்றும் ஹோண்டா ரக கார்களில் கோளாறுகள் இருந்ததால் உலக சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வாகனத்தை அதி வேகமாகச் செலுத்துவது, வாகனத்தை திறமையாகச் செலுத்துவது, வாகன நெரிசல், சாலை மோசமான நிலையில் இருத்தல், சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருத்தல் போன்றவை சாலை விபத்துக்குக் காரணமாக இருக்கின்றன என்று இத்ரிஸ் கூறினார். பாதசாரிகளுக்கு பிரத்யேகமாக உள்ள வழிகளைப் பயன்படுத்தாமல் வாகனங்கள் ஓடும் சாலைகளையே கடக்கின்றனர். ஓய்வு இல்லாமல் சாலையில் வாகனங்களைச் செலுத்துதல், மோசமான சீதோஷ்ண நிலை போன்றவை அயர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது.

குடிபோதையில் வாகனமோட்டியதால் விபத்துக்குள்ளாகி 2,698 பேர் இறந்து போயுள்ளனர். வாகனமோட்டும்பொழுது சாப்பிடுவதாலும், கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவதாலும் 1,318 பேர் சாலை விபத்து ஏற்பட்டு இறந்து போயுள்ளனர். 16லிருந்து 25 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களுடைய பெற்றோரின் வாகனங்களை அவர்கள் அனுமதி இல்லாமல் ஓட்டிச் சென்றதால் ஏற்படும் விபத்து மொத்த விபத்துக்களில் 41% ஆகும்.

லைசென்ஸ் மற்றும் அமுலாக்கத்தில் நிகழும் ஊழலும் விபத்துக்களுக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருக்கின்றன. வாகனமோட்டும் பயிற்சி பெறாமலும், சாலை விதிமுறைகளைக் கற்காமலும், வர்த்தக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அதற்குரிய தகுதி இல்லாமலே மருத்துவச் சான்றிதழ் வழங்குவதும் விபத்துக்களுக்கு இன்னொரு காரணமாக இருக்கிறது.

அமுலாக்க அதிகாரிகளும் வாகனமோட்டும் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் பாரபட்சத்தைக் காட்டுகிறார்கள். இருக்கை பெல்ட் போடாத அரசாங்க அதிகாரிகளைக் கண்டு கொள்ளவதில்லை ஆனால் மற்றவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் கோலாலம்பூர் வாசிகள் புகார் கூறியுள்ளனர் என்றார் இத்ரிஸ்.

எல்லாவற்றிற்கும் மேலாக சட்ட அமுலாக்கத்தில் உள்ள ஓட்டைகளே சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைகள் கடுமையாக இருக்கும் பட்சத்தில், வாகனோமோட்டுனர்கள் தவறிழைக்கத் தயங்குவார்கள் என்றார் இத்ரிஸ்.

விபத்து தொடர்பாக போலீஸ் பதிவில் உள்ள விபரங்களை வைத்துப் பார்க்கும்பொழுது, வேகமாக வாகனத்தைச் செலுத்துவது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லுதல் ஆகியவற்றுக்கு அடுத்து, சாலையில் உள்ள குழிகளே சாலையில் ஏற்படும் மரணங்களுக்குக் காரணமாக அமைகின்றன என்றார் இத்ரிஸ்.

நிறைய சாலைகளை சம்பந்தப்பட்ட கம்பெனிகள் தோண்டிக் விட்டு அவற்றை மறுபடியும் புணர் நிலைக்குக் கொண்டு வருவதில்லை. கனரக வாகனங்களும் தங்கள் பங்குக்கு சாலைகளை சேதப்படுத்திவிடுகின்றன. இப்படிச் சாலைகளில் பழுது ஏற்படுத்தி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இத்ரிஸ்.

வாகனமோட்டுனர்கள் சாலை விதிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுகிறார்களா என்பதனை உறுதி செய்யும் அதே வேளையில், வாகனங்களும் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாலைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதனை உறுதி செய்ய சட்டத்தில் முறையான மாற்றங்களைக் கொண்டு அவற்றை உடனடியாக அமலாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Tuesday, July 6, 2010



உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அந்தப் பாடல்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -

உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 1 )
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 2 )

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)
கம்பன் நாட் ஆழ்வாரும், கவி அரசியாம், வேய் நல்லாளும்
எம் மதமும், ஏற்றோம் புகழ்கின்ற, எம் மதமும் ஏற்று புகழ் கின்ற
எத்தனயோ ஆயிரம் கவிதைகள் கோர்த்த, தாடை அணைத்து கொண்டுதாக விளங்கும் மொழி
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம்மொழி நம் மொழி – அதுவே

செம்மொழி – செம்மொழி – நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . . )

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே…

————————————————————————————————-

TMS : Pirapokkum Ella Uyirkkum Pirandha Pinnar

A.R.R : Yaadhum Oore Yaavarum Kelir

Harini : Onbadhu Naazhi Udupathu Irande

Chinmayi : Uraividam Enbadhu Ondre

Karthik : Uraithu Vazhndhom Uzhaithu Vazhvom

Hariharan : Theedhum Nandrum Pirar Thara Vaarai Yenum Nan Mozhiye Nam Pon Mozhiyaam

A.R.Rahman, Yuvan : Porrai Puram Thallzhi Porulai Podhuvaakave

Chorus : Amaidhi Vazhi Kaatum Anbu Mozhi Ayyan Valluvarin Vaaimozhiyaam

A.R.R, Yuvan ,Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

P.Susheela Humming…

Vijay Yesudas : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum

P.Susheela : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum

G.V.Prakash Kumar : Thozhgapugal Tolkappiyamum Oppatra Kural Koorum Uyar Panpaadu

Naresh Iyer, Chorus : Olikindra Silamubum Meghalayum Sindhamaniyudane

T.L. Maharajan : Valayapathi Kundalakesiyumm

Chorus, Nithya Shree Humming : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Blaaze, Rayhanah : Kamba Naataaivarum Kavi Arasavai Nallaalum Yemmadhamum Yetrum Pugal Endrum Yethanayo Aayiram Kavidhai Neivor Tharum Thadai
Anaithukkum Vithaaga Vilangum Mozhi

Nagoor Brothers : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Dr. Bala Murali Krishna, Srinivas, Chorus : Agam Endrum Puram Endrum Vazhvai Azhagaaga Vaguthalithu Aadhi Andam Illathu Irukindra Iniya Mozhi Modhi Valarum
Uyiraana Ulaga Mozhi Tham Mozhi Nam Mozhi Adhuve..

Shruti Haasan : Semmozhiyaana Tamizh Mozhiyaam Tamizh Mozhi Tamizh Mozhi Tamizh Mozhi Ya Ghaa..

Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Chinnaponnu : Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam
Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam

A.R.Rahman : Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve
Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve

A.R.Rahman : Semmozhiyaana Tamizh Mozhiyaam

Sunday, July 4, 2010

அசுத்தமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பினாங்கில் மிகவும் அசுத்தமாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கையில் பினாங்கு நகராண்மைக் கழகம் இறங்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பினாங்கில் உள்ள சவ்ராஸ்தா, சென்ட்ரல், பாயான் பாரு, ஆயர் ஈத்தாம், பூலாவ் தீக்கூஸ், ஜெலுத்தோங், ரைபல் ரேன்ச், தாமான் துன் சார்டோன், பாடாங் தேம்பாக், பட்டர்வெர்த்தில் உள்ள ஜெட்டி லாமா ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்விலிலிருந்து இங்கு சுத்தம் மிகவும் அரிதாகவே கடைபிடிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது என்றார் இத்ரிஸ்.


தரைகள் அசுத்தமாகவும் வழுக்கும் நிலையிலும், ஓட்டைகள் நிறைந்தும் இருந்தன. குப்பைகள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூரையில் ஒட்டடை ஆங்காங்கு தொங்கிக் கொண்டிருந்தது. எலிகளும் இதர ஜந்துக்களும் திரிந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக அருகில் உள்ள சாக்கடைகளில் குப்பைகளும் மண்ணுமாக நிறைந்து கிடந்த இடங்களில் ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அழுக்கான தரைகளிலேயே காய்கறிகளையும் இறைச்சிகளையும் கிடத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு சந்தையில் விற்பனைக்கு உள்ள தேங்காய்கள் அடைபட்டிருந்த சாக்கடையில் வைக்கப்பட்டிருந்தன என்றார் இத்ரிஸ்.

வழுக்கும் தரைகளும் சந்தைக்கு வருபவர்களுக்கு சில வேளைகளில் ஆபத்தாகவே முடிகிறது. குறிப்பாக சந்தைக்கு வரும் முதியோர்களுக்கு இது பெருத்த ஆபத்தாக முடிகிறது.


சந்தைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், குப்பைக் கூளங்களும் எஞ்சிய கெட்டுப்போன அழுகிய பொருட்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் உள்ளூர் அரசாங்க சட்டம் 1976ன் கூறுகிறது. ஆனால் தற்போதைய சந்தை நிலையைப் பார்க்கும்பொழுது இதனை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றார் இத்ரிஸ்.


ஆகையால் கீழ்கண்ட விதிமுறைகளை சந்தை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பரிந்துரை செய்கிறது. சந்தைகள் அன்றாடம் சுத்தம் செய்யப்பட வேண்டும். காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் கலன்கள் தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் தாங்கிகள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட வேண்டும். சுகாதார அதிகாரிகள் அவ்வப்பொழுது சந்தைகளில் விற்கப்படும் இறைச்சிகளை சோதனையிட்டு அவற்றில் பாக்டீரியா இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகராண்மைக் கழகம் சந்தை தூய்மையாக இருப்பதை அவ்வப்பொழுது சோதித்துக்கொண்டு இருப்பதும் நன்மை பயக்கும் என்றார் இத்ரிஸ்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கு சந்தைகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் மற்ற இடங்களில் உள்ள சந்தையின் சூழ்நிலையையும் ஓரளவுக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆகையால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நகராண்மைக் கழகங்களும் சந்தை தூய்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும். செயலில் இறங்கத் தவறிய நகராண்மைக் கழகங்கள் மீது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பள்ளி மாணவர்கள் உழவர்களாகத் திகழ வேண்டும் காய்கறிகளின் விலை குறையும் ஆரோக்கியம் உயரும் : சுப்பாராவ் வேண்டுகோள்

பள்ளி மாணவர்கள் தொழில் நுட்பம், கணினி, தொழில்திறன், அறிவியல் போன்ற புறப்பாட நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், விவசாயத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

விவசாய நடவடிக்கை என்றாலே கைகளை அசுத்தப்படுத்தும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு, விவசாயம்தான் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாழ வைக்கும், என்ற உண்மையை ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும் என பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

அதிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் உண்மை நிலவரங்களை எடுத்துரைப்பது மிக அவசியமாகும் என்றார் அவர். உலகளாவிய நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறட்சி, நீரில் வாழும் உயிரினங்களின் பாதிப்பு, நிலங்கள் மலடாவது, வெள்ளம் போன்றவை ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

மக்கள் இயற்கையை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாகவே சேதப்படுத்துகின்றார்கள் என்றார் சுப்பாராவ்.

விவசாயிகள் இரசாயனம் கலந்த உரங்களை தங்களது பயிர்களுக்கு தெளித்து பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்கும் அதே நேரத்தில் நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும் கூட அழித்துவிடுகின்றார்கள்.

நிலத்தில் இரசாயன உப்புகளை கொட்டி கொட்டி, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொன்று அதன் ஆற்றலை, செழிப்பை, தன்மையை அழித்து மண்ணை மலடாக்கி வருகின்றனர்.


பினாங்கு தஞ்சோங் பூங்கா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 44 மாணவர்களும் 4 ஆசிரியர்களும், பி.ப.சங்க பணிமனையில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கின் போது சுப்பாராவ் இந்தத் தகவல்களைக் கூறினார்.

டாக்டர் அருணாசல பாண்டியா அவர்களை தலைமைஆசிரியராகக் கொண்ட இந்த இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி மேலும் அறிந்து தெரிந்துகொள்வதற்காக, பி.ப.சங்கத்தில் இருக்கும் மண்புழு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயம் தொடர்பான செயல் விளக்கங்கள் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது.

இப்பொழுது உள்ள விவசாயிகள் செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடாவிடில், எதிர்காலத்தில் மக்கள் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாவார்கள். இந்த அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் தலைமுறையினர் இயற்கையை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றார் சுப்பாராவ்.


குறிப்பாக பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறிய சுப்பாராவ் உழவுத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடத் தொடங்கினால்தான் இவ்வுலகை ஓரளவாவது காப்பாற்ற முடியும் என்றார்.

மண்ணைத் தொடுவது, மண்புழுக்களை வளர்ப்பது, இயற்கை விவசாயத்திற்குத் தொடர்புடைய மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் இயற்கை தொடர்புடைய பொருட்களை தேர்வு செய்து தயார் செய்வது போன்றவற்றில் இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.
இவற்றை அசிங்கம் மற்றும் அழுக்கு என்கின்றனர் இவர்கள். ஆனால் இவற்றால் நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தி கூறிய சுப்பாராவ், இரசாயனத்தால் ஏற்படும் பாதிப்புக்களை விவரமாக எடுத்துச் சொன்னார்.


கலந்து கொண்ட மாணவர்களுக்கு, பி.ப.சங்க பணிமனையில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மண்புழுக்களின் பயன்கள் எடுத்துச் சொல்லப்பட்டன. அந்த மண்புழுக்களுக்கு எம்மாதிரியான உணவு தரப்பட வேண்டும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டது. மண்புழுக்கள் தரும் எருவையும் மாணவர்கள் தொட்டுப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

அதன் பின் மீன் கரைசல், எலுமிச்சை முட்டை கரைசல், பூச்சி விரட்டி, மண்புழு நீர் ஆகிய இயற்கை பூச்சிவிரட்டிகள் மற்றும் பயிர் ஊக்கிகள் தொடர்பான விளக்கங்கள் சொல்லித் தரப்பட்டன.

இறுதியாக கற்றுக்கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் 2 வெண்டை விதைகள் கொடுக்கப்பட்டு அவற்றை நடும் முறை விளக்கப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் ஒரு சிறிய பையில் வெண்டை விதையை விதைத்து அதனை தங்களது இல்லம் கொண்டு சென்றனர்.

காய்கறிகளின் விலைகள் மலைபோல் உயர்ந்துகொண்டே போகின்றன. ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பதில்லை. காய்கறிகளை சொந்தமாக நட வேண்டுமென்றால் நிலம் இல்லை. இதற்காக கவலைப்படாமல், பழைய வாளி, தொட்டி, டயர் போன்றவற்றில் இரண்டு அல்லது மூன்று விதைகளை நட்டு செடி வளர்க்கலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி கூறினார்.

Thursday, July 1, 2010

ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருத்த கேட்டை உண்டாக்கும் தடை செய்யப்பட்ட என்டோசல்பான் எளிதாகக் கிடைக்கிறது

என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லியை பயனீட்டாளர்கள் தொடர்ந்து உபயோகிப்பதை பூச்சிக்கொல்லி வாரியம் இன்னும் துடைத்தொழிக்காமல் இருப்பது வேதனையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

என்டோசல்பான் மிகவும் மோசமான நச்சுப்பொருளாகும். என்டோசல்பான் உயிரினங்களின் ஹோர்மோன் சுரப்புகளின் இயக்கத்தில் மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், பூச்சிக்கொல்லி சட்டம் 1974ன் கீழ் அதன் உபயோகம் தடை செய்யப்பட்டது என்று இத்ரிஸ் கூறினார்.

பூச்சிக்கொல்லி வாரியம் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் என்டோசல்பான் பயன்பாட்டுக்கான பதிவு 15.8.2005ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது. இந்த நஞ்சை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் பூச்சிக்கொல்லி சட்டம் 1974 பிரிவு 53Aன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பபடாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது குற்றம் என்றும் அப்படி வைத்திருப்பவர்களுக்கு மவெ. 10,000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை காரணமாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற காரணத்தாலும், ஸ்டோக்ஹோல்ம் ஒப்பந்தத்தின் கீழ் என்டோசல்பானை உலகம் முழுக்க தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.


ஆனால் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் கெடாவில் உள்ள கெர்பான், சங்லாங், பென்டாங் மற்றும் சீக் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட இந்த நஞ்சு மிகவும் எளிதாகக் கிடைக்கிறது.

விவசாய இரசாயனங்களை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து இந்த நஞ்சை எளிதில் வாங்கிவிடலாம். என்டோசல்பானை பார்வையில் படுமாறு கடைகளில் வைத்திருப்பதில்லை. கேட்டால் மட்டும் எடுத்துக்கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் பூச்சிக்கொல்லி மவெ.32.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்டோசல்பான் நிரப்பப்பட்ட போத்தலில் லேபல் எதுவும் கிடையாது.

நெல் மற்றும் நாற்றுக்களை தின்னும் நத்தைகளைச் (siput gondang emas) சாகடிக்க என்டோசல்பானை பயன்படுத்தப்படுவதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி 10லிருந்து 15 நிமிடங்களுக்குள் நத்தைகளை சாகடித்துவிடும். மற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் நத்தைகளைச் சாகடிக்க குறைந்தது 2 வாரங்களாவது பிடிக்கும்.

இந்த வட்டாரங்களில் உள்ள நெல் விவசாயிகளும் தாங்கள் என்டோசல்பான் பயன்படுத்துவதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள். இதனை “சீன விஷம்” (Racun Cina) என்ற பெயரிலேயே இவர்கள் அழைக்கிறார்கள். என்டோசல்பான் பாட்டிலில் சீன எழுத்துக்களில் எழுதியிருப்பதால் இந்தப் பெயர்.

என்டோசல்பானைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. மூட்டு பலவீனத்தால் அவதிப்படுகின்றனர். இந்த நஞ்சு நத்தைகளை உடனடியாகக் கொல்லும் அதே சமயத்தில் விவசாயிகளும் பக்க விளைவுகளால் அவதிப்படுகின்றனர் என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் இப்போதைக்கு சந்தையில் உள்ள மிகவும் மோசமான நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியாகும். உடலில் உள்ள ஏஸ்ட்ரோஜன் ஹோர்மோன்களின் இயக்கத்தில் ஊறு விளைவித்து, மனித மற்றும் பிராணிகளின் இன உற்பத்தி உறுப்பில் பல விதமான சேதங்களை ஏற்படுத்துகிறது. வலிப்பு, மனநல பிரச்னைகள், பக்கவாதம், மூளை வீக்கம், மூளைத்திறன் பாதிப்பு போன்றவற்றையும் இன்டோசல்பான் ஏற்படுத்துவதாக நிறைய ஆய்வுகள் உறுதி செய்கின்றன என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்டோசல்பான் வனவிலங்குகளிடையே, குறிப்பாக வண்டுகளிடையே அதிக நச்சுத்தன்மையை உண்டாக்கும் என்றும் அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு சங்கம் கூறுகிறது. பறவைகள், வாத்து இனங்கள், காடை போன்றவற்றுக்கும் என்டோசல்பான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீரில் வாழும் உயிரினங்களுக்கும் என்டோசல்பான் பெருத்த கேடுகளைச் செய்கிறது. என்டோசல்பானால் நிறைய மீன்கள் சாகின்றன.

என்டோசல்பான் கொண்டு வரும் சொல்லொணா கேடுகளைக் கருத்தில் கொண்டு அதன் உபயோகத்தை கடுமையான சட்டவிதிகளின் மூலம் தடை செய்ய வேண்டும். என்டோசல்பான் கொண்டு வரும் மோசமான பாதிப்புக்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும். நத்தைகளை அழிக்க பாதுகாப்பான வழிமுறைகளை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு வாத்துக்களை வளர்க்கலாம். வாத்துக்கள் நத்தைகளை உண்பதால் நத்தை பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

என்டோசல்பான் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதனைத் தடை செய்துவிட்டோம் என்று காகிதத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு, என்டோசல்பான் விற்கப்படுவதையும், விவசாயிகள் அதனை வாங்கிப் பயன்படுத்தி மனித குலத்தையும், பிராணிகளையும், சுற்றுச்சூழலையும் நஞ்சுக்குள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டிருந்தால் அந்தத் தடையினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

பெண்கள் அதிகமாகப் புகைக்கத் தொடங்கியுள்ளனர் இது ஆபத்தானது என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


உலகத்தில் இருக்கின்ற ஒரு பில்லியன் புகைப்பாளர்களில் 20 விழுக்காட்டினர் பெண்கள் என்பது அதிர்ச்சியைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

அதிக அளவு ஆண்கள் புகை பிடித்தாலும் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவு புகைப்பதாக ஆண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார். 151 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாதி நாடுகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் புகைப்பது தெரிய வந்திருக்கின்றது.

புகைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் மரணமடைகின்றனர். இவர்களில் 15 லட்சம் பேர் பெண்கள் என்றும் திரு இத்ரிஸ் கூறினார்.

2030 ஆண்டு இறுதிக்குள் புகைப்பதால் இறப்பவரின் எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக காட்டப்படும் விளம்பரங்களினால் பெண்கள் புகைக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர் என்றார் அவர். புகைப்பதால் “உல்லாசம் உற்சாகம் ஏற்படுகிறது”, “மனம் இலேசாகிறது”, “உடல் இளைக்கின்றது”, “எனது நண்பர்கள் புகைக்கின்றார்கள்”, “நான் கோபமாக இருக்கும்பொழுது புகைப்பது என் கோபத்தைத் தணிக்க உதவுகிறது” என்று புகைக்கும் பெண்கள் தாங்கள் புகைப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என்று இத்ரிஸ் கூறினார். புகைப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதை இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திரு இத்ரிஸ் பெண்கள் புகைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

புகைப்பது என்பது கவர்ச்சியோ அல்லது உல்லாசமான ஒரு செயலோ கிடையாது. அது ஒரு அருவருக்கத்தக்க, அபாயகரமான, அநாகரீகமாக செயல் என்று இத்ரிஸ் கூறினார்.

18லிருந்து 29 வயதிற்கு உட்பட்ட பெண்களே அதிகம் புகைக்கத் தொடங்குவதாகவும் ஆய்வு தெரிவித்திருப்பதால் இவ்வயதுக்கு உட்பட்ட பெண்களின் பழக்க வழக்கத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உலக ரீதியில் சராசரி 430,000 மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டம் தரப்பு புகை காரணமாக ஏற்படுகின்றது. இதில் 64% பெண்கள் என்பதையும் இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் அவர்களுடைய கருவில் வளரும் சிசுக்கள் இந்த இரண்டாம் நிலையின் புகையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் கருப்பொருள் பெண்களையொட்டி இருந்தாலும் புகையிலை நிறுவனங்கள் கொண்டு வருகின்ற விளம்பரங்களுக்கு எதிராக ஆண்களும் பெரியவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இப்போதைய புகையிலை விளம்பரங்கள் சிறார்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. புகைப்பது உத்வேகத்தையும் தெம்பையும் தருவதாகக் கோரி விளம்பரங்கள் புகைப்பவரிடையே ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றன.

ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்டவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை புகை பிடிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Wednesday, May 26, 2010

டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்


நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்
டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்

பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.

அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.

படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.

இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.

மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.

அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-

மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.

பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.

10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-

நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.

தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்

http://www.maalaimalar.com/2010/05/26161455/sslc-exam-results.html