Saturday, October 31, 2009

சிங்கப்பூர் வரலாறு - சிங்கபுரம்

எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின் நோக்கி உங்களை - உங்கள் வரலாற்றை புரிந்துக் கொள்ள அறிவு கிடைக்கிறது.


சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை,அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளன.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.



இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975). பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச் சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது. அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடர்ந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்றேறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல்.தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழத் தங்கினான். ஆனால்,மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை.சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரனுக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது.ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தைத் செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்துவிட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடித் தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார், அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிஸ்.அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார்.140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 -இல் சிங்கப்பூர் அன்றைய "மலாயா" வுடன் இணைந்தது.சிங்கப்பூர்,மலாயா இணைந்த நாட்டை "மலேசியா" என அழைத்தார்கள்.ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது.கருத்து வேற்றுமையாலும், கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது. சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்குத் தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது.

மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு,மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களைப் பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புகுரியது.

சிங்கப்பூரில் தமிழர்


1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது.1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர். இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர்.தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். "திருவள்ளுவர்", "வாசுகி", "அரவிந்தர்", "நாகம்மையார்", "சாரதா தேவி","கலைமகள்", "உமறுப் புலவர்" போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.


ஆலயங்கள்

வழிபாட்டின் திருவிடங்களாகத் திருக்கோயில்கள் திகழ்கின்றன். திரைகடலோடி திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் உருவாக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது.
அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறன்றன.

ஆலய முகவரி
Sri Krishnan Temple,
152 Waterloo St.,
Singapore 187961
Tel 6337 7957 F, 6334 2712
67695784 F. 67699003
srikrisnatemple@hotmail.com

- கிருஷ்ணன், சிங்கை

தனுஷ்கோடி புயல், 1964

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்
புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964.

1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி, அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் போய்க் கொண்டிருந்தது. அதற்கு அப்போது போட் மெயில் என்று பெயர். தனுஷ்கோடி வரை செல்லும் இந்த ரயிலில் தமிழ்நாட்டில் பிறபகுதிகளில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை செல்வார்களாம். அப்போதெல்லாம் இலங்கைக்கும், நமக்கும் நல்லுறவும், பயணப் போக்குவரத்தும் இருந்து வந்தது.

(தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்)

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.

Friday, October 30, 2009

புகைப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் உண்மையிலே ஆக்கப்பூர்வமானதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்!


வருகின்ற 2010லிருந்து 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒரு சிகரெட் பேக்கட்டின் ஆகக் குறைந்த விலை மவெ. 6.20 என்று நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவித்துள்ளதை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆனாலும் இந்த விலை அப்படி ஒன்றும் குறைவு என்றும் கூறிவிட முடியாது. உண்மையிலேயே புகைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றால், புகைப்பதால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த விலை நிர்ணயம் ஒன்றும் நினைத்த அளவுக்கு பயனைத் தராது என்று இத்ரிஸ் கூறினார்.

“தர மதிப்பு” கொண்ட சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது. லங்காவியிலிருந்து வரி விலக்கு பெற்ற சில பிரண்டு சிகரெட்டுக்கள் பயனீட்டாளர்களுக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. இன்னும் சில பிரண்டு வகைகள் வியட்னாம், வங்காளதேசம் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சிலவற்றில் புகைப்பதால் விளையும் கேடுகள் தொடர்பான எச்சரிக்கை படங்களும் இல்லை என்றார் இத்ரஸ்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்களின் இப்போதைய வாங்கும் விலை மவெ. 9லிருந்து மவெ. 30 வரைக்கும் ஆகும். “தர மதிப்பு” கொண்ட சிகரெட்டுக்கள் (20 சிகரெட்டுக்கள்) மவெ.2.20லிருந்து மவெ. 2.50 வரைக்கும் விற்கப்படுகின்றன. இவை 73மூ விலை குறைவாகும்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்கள் இங்கிலாந்தில் மவெ.36 - மவெ.60இ அயர்லாந்து மவெ. 37 - மவெ. 98இ சிங்கப்பூர் மவெ. 27 - மவெ. 80இ நியூசிலாந்து மவெ. 27 - மவெ. 20, ஜப்பான் மவெ. 10 - மவெ. 60இ ஸ்ரீலங்கா மவெ. 10 - மவெ. 90 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.

மலேசியாவில் புகைக்கும் பழக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மலேசிய ஆண்கள் புகைக்கிறார்கள். 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 50 மலேசிய பதின்மர்கள் ஒவ்வொரு நாளும் புகைக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் புகைப்பது சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கிறார்கள். மலேசிய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் தோராயமாக மவெ. 4.8 பில்லியனை புகையிலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க செலவழிக்கிறது.

பிரிவு 16(1)ன் படி “20 சிகரெட்டுக்கும் குறையாத எண்ணிக்கையில் உற்பத்தியாளர் சிகரெட்டுக்களை பேக் செய்ய வேண்டும்” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் இன்னும் விற்பனையில் உள்ளன. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட் விற்பனைக்கான தடை 2010 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

சிகரெட்டின் உதிரி விற்பனையையும் மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் பி.ப.சங்கம் பினாங்கில் 15 கடைகளில் மேற்கொண்ட சோதனையில் 8 கடைகளில் இன்னும் சிகரெட் உதிரியாகத்தான் விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிகரெட்டும் 60 காசுக்கு விற்கப்படுகிறது. இப்படி விற்கும்பொழுது 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒவ்வொரு பேக்கட்டையும் விற்று முடிக்கும்பொழுது விற்பனையாளருக்கு மவெ. 3.80 இலாபம் கிடைக்கிறது. இவ்வாறு உதிரி சிகரெட் விற்கும் சில கடைகள் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலேயே இருப்பதால் மாணவர்கள் வாங்கிப் புகைக்கவும் வழி வகுத்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

சிகரெட் விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் அதனுடைய லைசென்ஸை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்குமாறு விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். சிகரெட் விற்பனைக்கான விதிமுறைகளை மீறும் பட்சத்தில் இந்த லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்.

சிகரெட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் இயற்கையாகவே சிகரெட் விலை ஏற்றம் காணும். இந்த விலை ஏற்றம் சிறார்கள் புகைக்க ஆரம்பிப்பதற்கு ஓரளவு தடையாக இருக்கும் என்றார் இத்ரிஸ்.

சிகரெட் வாங்குவதற்கான குறைந்த பட்ச வயதான 18 வயதை 21 வயதாக அரசாங்கம் உயர்த்த வேண்டும். ஓட்டு போடுவதற்கும் 21 வயதுதாயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞர் எவ்வளவு காலத்திற்கு புகைக்கும் பழக்கத்தை தொடங்காமல் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் புகைக்காமலே இருப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.

விமான நிலையங்களில் வரி இல்லா சிகரெட் விற்பனைக்குத் தடை செய்யப்பட வேண்டும். லங்காவித் தீவில் சிகரெட் விற்பனைக்கு அறவே வரி இல்லை. இது முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட வேண்டும். பொருட்கள் வாங்கிவிட்டு காசு செலுத்தும் கவுண்டரில் பயனீட்டாளர்களைத் தூண்டும் வகையில் சிகரெட்டுக்களை அடுக்கி வைப்பதும் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

புகையிலையை முற்றிலும் துடைத்தொழித்து வருகின்ற இளம் சமுதாயத்தினர் ஆரோக்கியமாக வழி வகுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Wednesday, October 28, 2009

எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி தகவல் பெறுவதற்காக பி.ப.சங்கத்திற்கு வருகை

சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள எயிம்ஸ் பல்கலைக்கழகத்தின் 85 உயிரியல் தொழில்நுட்ப மாணவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணி மனைக்குஇ கல்வி தொடர்பாக வருகை மேற்கொண்டார்கள்.


(பி்.ப.சங்கத்தின் இயற்கை வேளாண்மை பட்டறை பயிற்ச்சிக்கு கலந்து கொண்ட எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர்)

டாக்டர் ஹஷாமுடின் ரஹ்மாட் தலைமையில் வந்த இம்மாணவர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை வேளாண்மை தொடர்பான பல விளக்கவுரைகள் இம்மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த செயல் விளக்க முறை நடவடிக்கையில் எலுமிச்சை முட்டை கரைசல்இ நுண்ணுயிர் ஊக்கிஇ குணப்பசலம்இ மூலிகை பூச்சி விரட்டிஇ மண்புழு குளியல் நீர்இ மண்புழு இயற்கை உரம் தொடர்பான தெளிவான விளக்கங்கள் தரப்பட்டதாக இச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அவர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க
இம்மாணவர்களின் கல்விக்குத் தொடர்பான இந்த செயல்விளக்க முறைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக டாக்டர் ஹிஷாமுடின் அமாட் தெரிவித்ததாகவும் சுப்பாராவ் கூறினார்.


என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Monday, October 26, 2009

ஜோதிடம் பயில்


ஜோதிடம் என்பது வான் வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும் அவைகளின் கதிவீச்சுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன. இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்

ஜோதிடம்

அண்டத்தில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் அந்தந்த கோள்களின் கதிர்வீச்சுகளின் பலம், நகர்வுகளின் வேகம் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை கற்று பலன் பெறுவதே எமது நோக்கம்.

ஜோதிடத்துக்கான வானியல் அடிப்படை:

அண்டவெளியில் பல ஆயிரகணக்கான விண்மீன் குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய குடும்பமும் ஒன்றாகும். நமது சூரிய குடும்பத்தில் பல கிரகங்கள் உள்ளன. அவை யாவும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன. அவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும். சந்திரன்; பூமியின் உப-கிரகமாகும். இவையாவும் தம்மிடையே உள்ள ஈர்ற்ப்பு விசையால் இணைக்கப்பட்டு ஒரு குடும்பம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

விண்மீன்கள் தானாகவே (மின்னி மின்னி) மிளிர்வன. ஆனால் கிரகங்கள் தானாக ஒளிர்வதில்லை. கிரகங்களும், உப-கிரகங்களும் விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன.

நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமியின் உப-கிரகமான சந்திரனும் பூமியைச் சுற்றி வலம் வருவதுடன் (பூமியை ஒரேபக்கப் பார்வையுடன் இணைந்து) சூரியனையும் சுற்றி வருகின்றது.

அத்துடன் பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 8-கிரகங்களும, சூரியனை மையமாக கொண்டு பூமி சுற்றும் அதே சுற்றுப் பாதையில் வித்தியாசமான வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிபு.

இதன் அடிப்படையில் புவியில் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.

விளக்கமாக கூறுவதாயின் சூரியனும் மற்றைய 8-கிரகங்களும் பூமியை மையமாக வைத்து சுற்றி வருவதாக சோதிட சாஸ்திரம் கணிக்கின்றது. இம் முறை மூலம் கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் வாழும் உயிரினங்களிற்க்கு ஏற்படுத்தும் பலாபலன்களை (நன்மை, தீமைகளை) கணிக்க முடிகின்றது.

பூமியை மையமாக கொண்டு கணிக்கப்படும் இராசிச் சக்கரம் Zodiac என்றழைக்கப்படும். இது கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் ஞாயிற்றின் தோற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும்.

பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு 24 மனித்தியாலங்கள் (1-நாள்) எடுக்கின்றது. ஆனால் சூரியனை (சூரியன் பூமியச் சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கிறது.) பூமி (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) ஒருமுறை சுற்றிவர ஒரு ஆண்டு 365 1/4 நாட்கள் ஆகின்றன. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றுவதால் பருவ காலங்கள் பூமியில் தோன்றுகின்றன.

சந்திரன் பூமியைச் சுற்றுவதற்கு 27.32 நாட்கள் எடுக்கின்றது. அதன் பயனாக பூமியில் பூரணை, அமாவாசை, போன்ற 30 திதிதிகள் பூமியில் உண்டாகின்றன (விபரமாக பஞ்சாங்கம் பகுதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு ஜோதிட உலகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும்

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்தில் ரிஷபத்தில் உதயமாவர். இப்படியே மாதம் ஒரு ராசியில் சஞ்சரித்து திரும்பத் திரும்ப 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார் (சூரியன் சுற்றுவதில்லை ராசிகள் தான் சூரியனை சுற்றி வருகின்றன எனக்கொள்க). இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார்

ஒவ்வொரு மனிதனின் ஜாதக-குறிப்பும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 360 பாகை கொண்ட (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) நீள் வட்டத்தின் அமைப்பை குறிப்பதாகும். (நீள்வட்டம் வரைதல் காலப்போக்கில் திரிபுற்று நீள் சதுரமாக தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும்; பன்னிரண்டு இராசிகள் எனப்படும்.

இராசிச்-சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இராசிகள் 12:

1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் உதய-லக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோள அமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் பார்க்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களுண்டு. ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும் ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும்.

சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியன ஆகுதல் இதற்கு உதாரணங்களாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து (வெளிப்படுத்திக்) கொண்ட வண்ணம் உள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

பண்டைக்காலச் சோதிட நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன.

அக்கோள்கள் பின்வருமாறு:


1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)


மேலும், கோள்களின் அளவு, அவற்றின் தட்ப-வெட்பநிலை, அவற்றில் அடங்கியுள்ள தாதுக்களின் அடைப்படையில் தான் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படும். அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுக்கள் அந்த கதிர்வீச்சை எந்த அளவு கிரகிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நன்மை, தீமைகளை அடையும் நிலை உள்ளதாக ஜோதிடம் பொதுவாகக் கூறுகிறது.

இக் குறைகளைப் போக்குவதற்காக "அதிஸ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். இவற்றின் மூலம் நன்மை தரக்க்கூடிய கதிர்களை உள்கிரகிக்க முடியும். அதன் பயனாக வாழ்க்கையில் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிஸ்டக்கற்களை பாவிப்பதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தவறான கற்களை பாவித்தால் தீமைகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. (நன்மை தரக்கூடிய அதிஸ்டக் கற்கள் பற்றிய விபரங்கள் இவ் இணையத் தளத்தில் "அதிஸ்டக் கற்கள்" என்னும் பகுதியில் பதியப்பட்டுள்ளன.)

பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் "கிரக வலிமை" என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் போழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது என்று கூறலாம்.

எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்) யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்படுதல் போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள் நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறக்கும் காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.

இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.

அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.

இலக்கினம்
புவி தன்னைத்தானே ஒரு நாளில் சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் அதனைச் சுற்றியுள்ள 12 இராசிகளையும் கடந்து செல்கின்றது. ஜோதிடம் சார்பாகப் பார்க்கும் போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம்.

எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது.

மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாக "//ல" குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும் போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கம். சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது.

இராசிச் சக்கரத்தின் அமைப்பைப் பற்றி அறிவோம்.
சூரியனினின் தோற்றப்பாதை (முழுவதுமாக 360 பாகை ) ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட பன்னிரண்டு இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றுள் சிலவே பூமியின் சுற்றுப்பாதைக்குள் அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன.

அவைகள் 27 நட்சத்திரங்கள்(கூட்டங்கள்) என கணக்கிடப்பட்டு ஒவ்வொன்றும் 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே 27 நட்சத்திரங்களும் 108 பாதங்களை கொண்டன எனலாம். ஒவ்வொரு இராசியும் நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களை கொண்டனவாக கணிக்கப்படுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வித்தியாசமான வேகத்தினைக் கொண்டன. சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.32 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கு ஒரு வருடம் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள்; ராகு, கேதுவிற்கு 18 ஆண்டுகள்; சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

"அசுவினி" நட்சத்திரம் ஞாயிற்றின் தோற்றப் பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" நட்சத்திரம் கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.

ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது பூமி இந்த வான மண்டலத்தை (சூரியனை) ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். பூமி ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது வான மண்டலத்தின் ராசிச்சக்கரத்தில் உள்ள மேஷ ராசியில் சூரிய பகவான் மீண்டும் உதயமாகும் காலமே தமிழ் புத்தாண்டு தினமாகும்.

மேட ராசியில் இருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது என ஜோதிடம் கணிக்கின்றது. (சூரியன் ராசி சக்கரத்தைச் சுற்றுவதில்லை; ராசிச் சக்கரம் தான் சூரியனை சுற்றுவதாக கொள்வோம்). இந்த ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய ஒரு சுற்று முடியும். இந்த காலம் தான் ஒராண்டாகும்.

இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "சர்வதாரி" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கின்றன.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒவ்வொரு ராசிக்குதான் அதிபதி (உரிமைக்காரன்). ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.

சூரியன் விண்மீன்: சிங்க-ராசிக்கும் அதிபதியாவார்.

சதிரன் கிரகம்: கடகம்-ராசிக்கும் அதிபதியாவார்.

செவ்வாய் கிரகம்: மேஷ-ராசிக்கும், விருட்சிக-ராசிக்கும் அதிபதியாவார்.

புதன் கிரகம்: மிதுன-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.

குரு கிரகம்: மீன-ராசிக்கும், தன-ராசிக்கும் அதிபதியாவார்.

சுக்கிரன் கிரகம்: இடப-ரசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.

சனி கிரகம்: மகர-ராசிக்கும், கும்ப-ராசிக்கும் அதிபதியாவார்.

ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றதோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள் அசைவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

பஞ்சாங்க விளக்கம்:
பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 1. திதி, 2.வாரம், 3.நக்ஷ்த்திரம், 4.யோகம், 5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன. ஒன்று திருகணித பஞ்சாங்கம், மற்றையது வாக்கிய பஞ்சாங்கம்.

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தை "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "ரெலஸ் கோப்புகள்" வந்துவிட்டன. இக்காலத்தில் கிரகங்களின் வேகம், அவற்றின் பாதையைக் கண்டறியும் அளவிற்குக் விஞ்ஞானம்-கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள விஞ்ஞான-கணித முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று கருதுவோரும் உளர்.

காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருது" மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகை" என்னும் சோதிட நூல்கள் திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது.

திதி:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படுகின்ற விரிசலினால் சந்திரனில் விழும் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு சந்திரனின் தோற்றத்தில் உண்டாகும் மாற்றங்களாகும். அமாவாசை தினம் சூரியனும் சந்திரனும் "0" டிகிரியில் காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார்.அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

அதே போல் பெர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி, .........அம்மாவாசை
முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்ம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர் (அட்டமி, நவமி தொட்டது நாசம் - என்பது பழமொழி).

வாரம்:
வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.

நக்ஷ்த்திரம்:
1. அஸ்வினி, 2. பரணி,
3. கார்த்திகை, 4. ரோகினி,
5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம்,
12. உத்திரம், 13. ஹஸ்தம்,
14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம்,
18. கேட்டை, 19. மூலம்,
20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம்,
24. சதயம், 25. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.

கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம், 2.ப்ரீதி,
3.ஆயுஷ்மான், 4.சௌபாக்யம்,
5.சோபனம், 6.அதிகண்டம்,
7. சுகர்மம், 8. திருதி,
9.சூலம், 10.கண்டம்,
11.விருதி, 12.துருவம்,
13. வியாகாதம், 14. ஹர்ஷணம்,
15. வஜ்ரம், 16. சித்தி,
17.வியதிபாதம், 18. வரீயான்,
19.பரீகம், 20. சிவம்,
21. சித்தம், 22. சாத்தீயம்,
23. சுபம், 24.சுப்ரம்,
25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தே யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம்,புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

மீதியுள்ள நக்ஷ்த்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம்,
பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நக்ஷ்க்ஷத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும்.
சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம்.
மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.
பஞ்ச அங்கங்களான திதி,வாரம்,நக்ஷ்த்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள்.

ஜோதிட காலவாய்பாடு


60 தற்பரை = 1 வினாடி
60 வினாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்

60 வினாழிகை = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
2 1/2 நாழிகை = 1 மணி
2 1/2 வினாழிகை 1 நிமிஷம்

நாள் என்றால் என்ன?
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள் என்பது ஆங்கிலேயரின் முறை. நமது பண்டைய (சோதிட) முறை சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

ஜோதிடத்தில் விண்மீன் குழுக்கள்:

"அசுவினி" ஞாயிற்றின் தோற்றப்பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:

இராசிகளும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களும்:

மேக்ஷம்: (0 பாகை தொடக்கம் - 30 பாகை வரை)
அஸ்வனி 1, 2, 3, 4 பாதங்கள்; பரணி 1, 2, 3, 4 பாதங்கள்; கார்த்திகை 1ம் பாதம்.

ரிஷபம்: (30 பாகை தொடக்கம் - 60 பாகை வரை)
கார்த்திகை 2, 3, 4, பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.

மிதுனம்: (60 பாகை தொடக்கம் - 90 பாகை வரை)
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்; திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள்; புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.

கடகம்: (90 பாகை தொடக்கம் - 120 பாகை வரை)
புனர்ப்பூசம் 4ம் பாதம்; பூசம் 1, 2, 3, 4 பாதங்கள்; ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள்

சிம்மம்: (120 பாகை தொடக்கம் - 150 பாகை வரை)
மகம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூரம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திரம் 1ம் பாதம்.

கன்னி: (150 பாகை தொடக்கம் - 180பாகை வரை)
உத்திரம் 2, 3 ,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்

துலாம்: (180 பாகை தொடக்கம் - 210 பாகை வரை)
சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்

விருச்சிகம்: (210 பாகை தொடக்கம் - 240 பாகை வரை)
விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1, 2, 3, 4 பாதங்கள்; கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள்

தனுசு: (240 பாகை தொடக்கம் - 270 பாகை வரை)
மூலம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திராட்டம் 1-ம் பாதம்.

மகரம்: (270 பாகை தொடக்கம் - 300 பாகை வரை)
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள், திருவோணம் - 1, 2, 3, 4 பாதங்கள்; அவிட்டம் - 1, 2 பாதங்கள்

கும்பம்: (300 பாகை தொடக்கம் - 330 பாகை வரை)
அவிட்டம் - 3, 4 பாதங்கள்; சதயம்- 1, 2, 3, 4 பாதங்கள்; பூரட்டதி- 1, 2, 3 பாதங்கள்

மீனம்: (330 தொடக்கம் - 360 பாகை வரை)
பூரட்டாதி- 4 ம் பாதம், உத்திரட்டாதி- 1, 2, 3, 4 பாதங்கள்; ரேவதி- 1, 2, 3, 4 பாதங்கள்

Friday, October 23, 2009

"சம்சு" - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் + அல்ஜாசீரா வழங்கும் ஆவணப்படம்



பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் அல்ஜாசீரா தொலைக்காட்சி நிலையமும் சேர்ந்து வழங்கும் "சம்சு" தொடர்பான ஆவணப்படம்.

Tuesday, October 20, 2009

புவா பாலா கிராமத்தின் கடைசி அத்தியாயம்!

கம்போங் புவா பாலா
-------------------------------------------------------------------------------------
புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம்இ முருகன்இ சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி.ப.சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.


ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி.ப.சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.


தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது
-------------------------------------------------------------------------------------
படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.



கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.


இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் நாம் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Bookmark and Share