Tuesday, July 6, 2010



உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள அந்தப் பாடல்:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -

பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளிர்

உண்பது நாழி உடுப்பது இரண்டே

உறைவிடம் என்பது ஒன்றேயென

உரைத்து வாழ்ந்தோம் -

உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

நன் மொழியே நம் பொன் மொழியாம்

போரைப் புறம் தள்ளி

பொருளைப் பொதுவாக்கவே

அமைதி வழி காட்டும்

அன்பு மொழி

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 1 )
ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ( . . 2 )

ஓல்காப் புகழ் தொல்காப்பியமும்

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)
கம்பன் நாட் ஆழ்வாரும், கவி அரசியாம், வேய் நல்லாளும்
எம் மதமும், ஏற்றோம் புகழ்கின்ற, எம் மதமும் ஏற்று புகழ் கின்ற
எத்தனயோ ஆயிரம் கவிதைகள் கோர்த்த, தாடை அணைத்து கொண்டுதாக விளங்கும் மொழி
செம்மொழியான நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . .)

அகமென்றும் புறமென்றும் வாழ்வை

அழகாக வகுத்தளித்து

ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -

ஓதி வளரும் உயிரான உலக மொழி -

நம்மொழி நம் மொழி – அதுவே

செம்மொழி – செம்மொழி – நம் தமிழ் மொழியாம் ( . . மீண்டும் மீண்டும் . . )

வாழிய வாழியவே வாழிய வாழியவே வாழிய வாழியவே…

————————————————————————————————-

TMS : Pirapokkum Ella Uyirkkum Pirandha Pinnar

A.R.R : Yaadhum Oore Yaavarum Kelir

Harini : Onbadhu Naazhi Udupathu Irande

Chinmayi : Uraividam Enbadhu Ondre

Karthik : Uraithu Vazhndhom Uzhaithu Vazhvom

Hariharan : Theedhum Nandrum Pirar Thara Vaarai Yenum Nan Mozhiye Nam Pon Mozhiyaam

A.R.Rahman, Yuvan : Porrai Puram Thallzhi Porulai Podhuvaakave

Chorus : Amaidhi Vazhi Kaatum Anbu Mozhi Ayyan Valluvarin Vaaimozhiyaam

A.R.R, Yuvan ,Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

P.Susheela Humming…

Vijay Yesudas : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum

P.Susheela : Orrarivu Mudhal Aararivu Uyirinam Varayile Unarndhidum Udal Amaipai Pagairthu Koorum

G.V.Prakash Kumar : Thozhgapugal Tolkappiyamum Oppatra Kural Koorum Uyar Panpaadu

Naresh Iyer, Chorus : Olikindra Silamubum Meghalayum Sindhamaniyudane

T.L. Maharajan : Valayapathi Kundalakesiyumm

Chorus, Nithya Shree Humming : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Blaaze, Rayhanah : Kamba Naataaivarum Kavi Arasavai Nallaalum Yemmadhamum Yetrum Pugal Endrum Yethanayo Aayiram Kavidhai Neivor Tharum Thadai
Anaithukkum Vithaaga Vilangum Mozhi

Nagoor Brothers : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Dr. Bala Murali Krishna, Srinivas, Chorus : Agam Endrum Puram Endrum Vazhvai Azhagaaga Vaguthalithu Aadhi Andam Illathu Irukindra Iniya Mozhi Modhi Valarum
Uyiraana Ulaga Mozhi Tham Mozhi Nam Mozhi Adhuve..

Shruti Haasan : Semmozhiyaana Tamizh Mozhiyaam Tamizh Mozhi Tamizh Mozhi Tamizh Mozhi Ya Ghaa..

Chorus : Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam
Semmozhiyaana Tamizh Mozhiyaam

Chinnaponnu : Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam
Thamizh Mozhiyam Engal Thamil Mozhiyam

A.R.Rahman : Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve
Vazhiya Vazhiya Ve.. Thamizh.. Vazhiya Vazhiya Ve

A.R.Rahman : Semmozhiyaana Tamizh Mozhiyaam

Sunday, July 4, 2010

அசுத்தமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்துங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!

பினாங்கில் மிகவும் அசுத்தமாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் இருக்கும் சந்தைகளை சுத்தப்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கையில் பினாங்கு நகராண்மைக் கழகம் இறங்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பினாங்கில் உள்ள சவ்ராஸ்தா, சென்ட்ரல், பாயான் பாரு, ஆயர் ஈத்தாம், பூலாவ் தீக்கூஸ், ஜெலுத்தோங், ரைபல் ரேன்ச், தாமான் துன் சார்டோன், பாடாங் தேம்பாக், பட்டர்வெர்த்தில் உள்ள ஜெட்டி லாமா ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்விலிலிருந்து இங்கு சுத்தம் மிகவும் அரிதாகவே கடைபிடிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது என்றார் இத்ரிஸ்.


தரைகள் அசுத்தமாகவும் வழுக்கும் நிலையிலும், ஓட்டைகள் நிறைந்தும் இருந்தன. குப்பைகள் ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. கூரையில் ஒட்டடை ஆங்காங்கு தொங்கிக் கொண்டிருந்தது. எலிகளும் இதர ஜந்துக்களும் திரிந்து கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. குறிப்பாக அருகில் உள்ள சாக்கடைகளில் குப்பைகளும் மண்ணுமாக நிறைந்து கிடந்த இடங்களில் ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அழுக்கான தரைகளிலேயே காய்கறிகளையும் இறைச்சிகளையும் கிடத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு சந்தையில் விற்பனைக்கு உள்ள தேங்காய்கள் அடைபட்டிருந்த சாக்கடையில் வைக்கப்பட்டிருந்தன என்றார் இத்ரிஸ்.

வழுக்கும் தரைகளும் சந்தைக்கு வருபவர்களுக்கு சில வேளைகளில் ஆபத்தாகவே முடிகிறது. குறிப்பாக சந்தைக்கு வரும் முதியோர்களுக்கு இது பெருத்த ஆபத்தாக முடிகிறது.


சந்தைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும், குப்பைக் கூளங்களும் எஞ்சிய கெட்டுப்போன அழுகிய பொருட்கள் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் உள்ளூர் அரசாங்க சட்டம் 1976ன் கூறுகிறது. ஆனால் தற்போதைய சந்தை நிலையைப் பார்க்கும்பொழுது இதனை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை என்றார் இத்ரிஸ்.


ஆகையால் கீழ்கண்ட விதிமுறைகளை சந்தை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பரிந்துரை செய்கிறது. சந்தைகள் அன்றாடம் சுத்தம் செய்யப்பட வேண்டும். காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் தண்ணீர் நிரப்பப் பயன்படுத்தப்படும் கலன்கள் தினந்தோறும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். தண்ணீர் தாங்கிகள் அவ்வப்பொழுது சுத்தம் செய்யப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட வேண்டும். சுகாதார அதிகாரிகள் அவ்வப்பொழுது சந்தைகளில் விற்கப்படும் இறைச்சிகளை சோதனையிட்டு அவற்றில் பாக்டீரியா இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நகராண்மைக் கழகம் சந்தை தூய்மையாக இருப்பதை அவ்வப்பொழுது சோதித்துக்கொண்டு இருப்பதும் நன்மை பயக்கும் என்றார் இத்ரிஸ்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பினாங்கு சந்தைகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் மற்ற இடங்களில் உள்ள சந்தையின் சூழ்நிலையையும் ஓரளவுக்குக் கோடிட்டுக் காட்டுகிறது. ஆகையால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நகராண்மைக் கழகங்களும் சந்தை தூய்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும். செயலில் இறங்கத் தவறிய நகராண்மைக் கழகங்கள் மீது வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பள்ளி மாணவர்கள் உழவர்களாகத் திகழ வேண்டும் காய்கறிகளின் விலை குறையும் ஆரோக்கியம் உயரும் : சுப்பாராவ் வேண்டுகோள்

பள்ளி மாணவர்கள் தொழில் நுட்பம், கணினி, தொழில்திறன், அறிவியல் போன்ற புறப்பாட நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், விவசாயத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

விவசாய நடவடிக்கை என்றாலே கைகளை அசுத்தப்படுத்தும் என்று நினைக்கும் மாணவர்களுக்கு, விவசாயம்தான் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாழ வைக்கும், என்ற உண்மையை ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும் என பி.ப.சங்க அதிகாரி என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

அதிலும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் உண்மை நிலவரங்களை எடுத்துரைப்பது மிக அவசியமாகும் என்றார் அவர். உலகளாவிய நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறட்சி, நீரில் வாழும் உயிரினங்களின் பாதிப்பு, நிலங்கள் மலடாவது, வெள்ளம் போன்றவை ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

மக்கள் இயற்கையை எவ்வளவு சேதப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாகவே சேதப்படுத்துகின்றார்கள் என்றார் சுப்பாராவ்.

விவசாயிகள் இரசாயனம் கலந்த உரங்களை தங்களது பயிர்களுக்கு தெளித்து பயிர்களை நாசம் செய்யும் பூச்சிகளை அழிக்கும் அதே நேரத்தில் நன்மை செய்யும் பூச்சிகளையும் பறவைகளையும் கூட அழித்துவிடுகின்றார்கள்.

நிலத்தில் இரசாயன உப்புகளை கொட்டி கொட்டி, மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொன்று அதன் ஆற்றலை, செழிப்பை, தன்மையை அழித்து மண்ணை மலடாக்கி வருகின்றனர்.


பினாங்கு தஞ்சோங் பூங்கா இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 44 மாணவர்களும் 4 ஆசிரியர்களும், பி.ப.சங்க பணிமனையில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கின் போது சுப்பாராவ் இந்தத் தகவல்களைக் கூறினார்.

டாக்டர் அருணாசல பாண்டியா அவர்களை தலைமைஆசிரியராகக் கொண்ட இந்த இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி மேலும் அறிந்து தெரிந்துகொள்வதற்காக, பி.ப.சங்கத்தில் இருக்கும் மண்புழு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயம் தொடர்பான செயல் விளக்கங்கள் அவர்களுக்குச் சொல்லித் தரப்பட்டது.

இப்பொழுது உள்ள விவசாயிகள் செயற்கை இரசாயன உரத்தை பயன்படுத்தும் பழக்கத்தை கைவிடாவிடில், எதிர்காலத்தில் மக்கள் பலதரப்பட்ட நோய்களுக்கு ஆளாவார்கள். இந்த அழிவிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், அடுத்து வரும் தலைமுறையினர் இயற்கையை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றார் சுப்பாராவ்.


குறிப்பாக பள்ளி மாணவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறிய சுப்பாராவ் உழவுத் தொழிலில் மாணவர்கள் ஈடுபடத் தொடங்கினால்தான் இவ்வுலகை ஓரளவாவது காப்பாற்ற முடியும் என்றார்.

மண்ணைத் தொடுவது, மண்புழுக்களை வளர்ப்பது, இயற்கை விவசாயத்திற்குத் தொடர்புடைய மாட்டுச் சாணம், கோமியம் மற்றும் இயற்கை தொடர்புடைய பொருட்களை தேர்வு செய்து தயார் செய்வது போன்றவற்றில் இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.
இவற்றை அசிங்கம் மற்றும் அழுக்கு என்கின்றனர் இவர்கள். ஆனால் இவற்றால் நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தி கூறிய சுப்பாராவ், இரசாயனத்தால் ஏற்படும் பாதிப்புக்களை விவரமாக எடுத்துச் சொன்னார்.


கலந்து கொண்ட மாணவர்களுக்கு, பி.ப.சங்க பணிமனையில் வளர்க்கப்படும் ஆயிரக்கணக்கான மண்புழுக்களின் பயன்கள் எடுத்துச் சொல்லப்பட்டன. அந்த மண்புழுக்களுக்கு எம்மாதிரியான உணவு தரப்பட வேண்டும் என்றும் விளக்கிச் சொல்லப்பட்டது. மண்புழுக்கள் தரும் எருவையும் மாணவர்கள் தொட்டுப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.

அதன் பின் மீன் கரைசல், எலுமிச்சை முட்டை கரைசல், பூச்சி விரட்டி, மண்புழு நீர் ஆகிய இயற்கை பூச்சிவிரட்டிகள் மற்றும் பயிர் ஊக்கிகள் தொடர்பான விளக்கங்கள் சொல்லித் தரப்பட்டன.

இறுதியாக கற்றுக்கொண்ட ஒவ்வொரு மாணவருக்கும் 2 வெண்டை விதைகள் கொடுக்கப்பட்டு அவற்றை நடும் முறை விளக்கப்பட்டது. வந்திருந்த மாணவர்கள் ஒரு சிறிய பையில் வெண்டை விதையை விதைத்து அதனை தங்களது இல்லம் கொண்டு சென்றனர்.

காய்கறிகளின் விலைகள் மலைபோல் உயர்ந்துகொண்டே போகின்றன. ஆரோக்கியமான காய்கறிகள் கிடைப்பதில்லை. காய்கறிகளை சொந்தமாக நட வேண்டுமென்றால் நிலம் இல்லை. இதற்காக கவலைப்படாமல், பழைய வாளி, தொட்டி, டயர் போன்றவற்றில் இரண்டு அல்லது மூன்று விதைகளை நட்டு செடி வளர்க்கலாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்க அதிகாரி கூறினார்.

Thursday, July 1, 2010

ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருத்த கேட்டை உண்டாக்கும் தடை செய்யப்பட்ட என்டோசல்பான் எளிதாகக் கிடைக்கிறது

என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லியை பயனீட்டாளர்கள் தொடர்ந்து உபயோகிப்பதை பூச்சிக்கொல்லி வாரியம் இன்னும் துடைத்தொழிக்காமல் இருப்பது வேதனையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

என்டோசல்பான் மிகவும் மோசமான நச்சுப்பொருளாகும். என்டோசல்பான் உயிரினங்களின் ஹோர்மோன் சுரப்புகளின் இயக்கத்தில் மிகவும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்துவதால், பூச்சிக்கொல்லி சட்டம் 1974ன் கீழ் அதன் உபயோகம் தடை செய்யப்பட்டது என்று இத்ரிஸ் கூறினார்.

பூச்சிக்கொல்லி வாரியம் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் என்டோசல்பான் பயன்பாட்டுக்கான பதிவு 15.8.2005ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தது. இந்த நஞ்சை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் பூச்சிக்கொல்லி சட்டம் 1974 பிரிவு 53Aன் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பபடாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது குற்றம் என்றும் அப்படி வைத்திருப்பவர்களுக்கு மவெ. 10,000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அளவுக்கு அதிகமான நச்சுத்தன்மை காரணமாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்ற காரணத்தாலும், ஸ்டோக்ஹோல்ம் ஒப்பந்தத்தின் கீழ் என்டோசல்பானை உலகம் முழுக்க தடை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.


ஆனால் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் கெடாவில் உள்ள கெர்பான், சங்லாங், பென்டாங் மற்றும் சீக் போன்ற இடங்களில் தடை செய்யப்பட்ட இந்த நஞ்சு மிகவும் எளிதாகக் கிடைக்கிறது.

விவசாய இரசாயனங்களை விற்பனை செய்யும் கடைகளில் இருந்து இந்த நஞ்சை எளிதில் வாங்கிவிடலாம். என்டோசல்பானை பார்வையில் படுமாறு கடைகளில் வைத்திருப்பதில்லை. கேட்டால் மட்டும் எடுத்துக்கொடுக்கிறார்கள். ஒரு லிட்டர் பூச்சிக்கொல்லி மவெ.32.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்டோசல்பான் நிரப்பப்பட்ட போத்தலில் லேபல் எதுவும் கிடையாது.

நெல் மற்றும் நாற்றுக்களை தின்னும் நத்தைகளைச் (siput gondang emas) சாகடிக்க என்டோசல்பானை பயன்படுத்தப்படுவதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள். இந்தப் பூச்சிக்கொல்லி 10லிருந்து 15 நிமிடங்களுக்குள் நத்தைகளை சாகடித்துவிடும். மற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் நத்தைகளைச் சாகடிக்க குறைந்தது 2 வாரங்களாவது பிடிக்கும்.

இந்த வட்டாரங்களில் உள்ள நெல் விவசாயிகளும் தாங்கள் என்டோசல்பான் பயன்படுத்துவதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள். இதனை “சீன விஷம்” (Racun Cina) என்ற பெயரிலேயே இவர்கள் அழைக்கிறார்கள். என்டோசல்பான் பாட்டிலில் சீன எழுத்துக்களில் எழுதியிருப்பதால் இந்தப் பெயர்.

என்டோசல்பானைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு சரும பிரச்னைகள் ஏற்படுகின்றன. மூட்டு பலவீனத்தால் அவதிப்படுகின்றனர். இந்த நஞ்சு நத்தைகளை உடனடியாகக் கொல்லும் அதே சமயத்தில் விவசாயிகளும் பக்க விளைவுகளால் அவதிப்படுகின்றனர் என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் இப்போதைக்கு சந்தையில் உள்ள மிகவும் மோசமான நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லியாகும். உடலில் உள்ள ஏஸ்ட்ரோஜன் ஹோர்மோன்களின் இயக்கத்தில் ஊறு விளைவித்து, மனித மற்றும் பிராணிகளின் இன உற்பத்தி உறுப்பில் பல விதமான சேதங்களை ஏற்படுத்துகிறது. வலிப்பு, மனநல பிரச்னைகள், பக்கவாதம், மூளை வீக்கம், மூளைத்திறன் பாதிப்பு போன்றவற்றையும் இன்டோசல்பான் ஏற்படுத்துவதாக நிறைய ஆய்வுகள் உறுதி செய்கின்றன என்றார் இத்ரிஸ்.

என்டோசல்பான் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்டோசல்பான் வனவிலங்குகளிடையே, குறிப்பாக வண்டுகளிடையே அதிக நச்சுத்தன்மையை உண்டாக்கும் என்றும் அமெரிக்காவின் தேசிய வனவிலங்கு சங்கம் கூறுகிறது. பறவைகள், வாத்து இனங்கள், காடை போன்றவற்றுக்கும் என்டோசல்பான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீரில் வாழும் உயிரினங்களுக்கும் என்டோசல்பான் பெருத்த கேடுகளைச் செய்கிறது. என்டோசல்பானால் நிறைய மீன்கள் சாகின்றன.

என்டோசல்பான் கொண்டு வரும் சொல்லொணா கேடுகளைக் கருத்தில் கொண்டு அதன் உபயோகத்தை கடுமையான சட்டவிதிகளின் மூலம் தடை செய்ய வேண்டும். என்டோசல்பான் கொண்டு வரும் மோசமான பாதிப்புக்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும். நத்தைகளை அழிக்க பாதுகாப்பான வழிமுறைகளை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு வாத்துக்களை வளர்க்கலாம். வாத்துக்கள் நத்தைகளை உண்பதால் நத்தை பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

என்டோசல்பான் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதனைத் தடை செய்துவிட்டோம் என்று காகிதத்தில் மட்டும் பதிவு செய்துவிட்டு, என்டோசல்பான் விற்கப்படுவதையும், விவசாயிகள் அதனை வாங்கிப் பயன்படுத்தி மனித குலத்தையும், பிராணிகளையும், சுற்றுச்சூழலையும் நஞ்சுக்குள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டிருந்தால் அந்தத் தடையினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

பெண்கள் அதிகமாகப் புகைக்கத் தொடங்கியுள்ளனர் இது ஆபத்தானது என்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


உலகத்தில் இருக்கின்ற ஒரு பில்லியன் புகைப்பாளர்களில் 20 விழுக்காட்டினர் பெண்கள் என்பது அதிர்ச்சியைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்தது.

அதிக அளவு ஆண்கள் புகை பிடித்தாலும் புகை பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவு புகைப்பதாக ஆண்மையில் மேற்கொண்ட ஓர் ஆய்வு காட்டுவதாக அவர் கூறினார். 151 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பாதி நாடுகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் புகைப்பது தெரிய வந்திருக்கின்றது.

புகைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் மரணமடைகின்றனர். இவர்களில் 15 லட்சம் பேர் பெண்கள் என்றும் திரு இத்ரிஸ் கூறினார்.

2030 ஆண்டு இறுதிக்குள் புகைப்பதால் இறப்பவரின் எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக காட்டப்படும் விளம்பரங்களினால் பெண்கள் புகைக்கும் பழக்கத்திற்கு உள்ளாகின்றனர் என்றார் அவர். புகைப்பதால் “உல்லாசம் உற்சாகம் ஏற்படுகிறது”, “மனம் இலேசாகிறது”, “உடல் இளைக்கின்றது”, “எனது நண்பர்கள் புகைக்கின்றார்கள்”, “நான் கோபமாக இருக்கும்பொழுது புகைப்பது என் கோபத்தைத் தணிக்க உதவுகிறது” என்று புகைக்கும் பெண்கள் தாங்கள் புகைப்பதற்கான காரணத்தை தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் இது எதுவுமே உண்மை இல்லை என்று இத்ரிஸ் கூறினார். புகைப்பதற்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதை இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.

இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்ற உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திரு இத்ரிஸ் பெண்கள் புகைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

புகைப்பது என்பது கவர்ச்சியோ அல்லது உல்லாசமான ஒரு செயலோ கிடையாது. அது ஒரு அருவருக்கத்தக்க, அபாயகரமான, அநாகரீகமாக செயல் என்று இத்ரிஸ் கூறினார்.

18லிருந்து 29 வயதிற்கு உட்பட்ட பெண்களே அதிகம் புகைக்கத் தொடங்குவதாகவும் ஆய்வு தெரிவித்திருப்பதால் இவ்வயதுக்கு உட்பட்ட பெண்களின் பழக்க வழக்கத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உலக ரீதியில் சராசரி 430,000 மரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டம் தரப்பு புகை காரணமாக ஏற்படுகின்றது. இதில் 64% பெண்கள் என்பதையும் இத்ரிஸ் சுட்டிக்காட்டினார்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் அவர்களுடைய கருவில் வளரும் சிசுக்கள் இந்த இரண்டாம் நிலையின் புகையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் கருப்பொருள் பெண்களையொட்டி இருந்தாலும் புகையிலை நிறுவனங்கள் கொண்டு வருகின்ற விளம்பரங்களுக்கு எதிராக ஆண்களும் பெரியவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இப்போதைய புகையிலை விளம்பரங்கள் சிறார்களை ஒட்டியே அமைந்திருக்கின்றன. புகைப்பது உத்வேகத்தையும் தெம்பையும் தருவதாகக் கோரி விளம்பரங்கள் புகைப்பவரிடையே ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றன.

ஒரு சிகரெட்டில் 4000 இரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்டவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை புகை பிடிப்பவர்கள் மறந்துவிடக்கூடாது எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்