Tuesday, September 29, 2009

விண்டோஸில் ஒருங்குறித்தமிழ்

நாம் அனைவரும் பொதுவாக தமிழில் தட்டச்ச எ-கலப்பை, முரசு அஞ்சல், ரைட்டர் போன்ற பல மென்பொருட்களை உபயோகித்துதான் தட்டச்சுகிறோம் அல்லவா..? சில நண்பர்களுக்கு அவர்களது பணி செய்யும் இடத்தில் இத்தகைய மென்பொருட்களை நிறுவுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்கக்கூடும்.

புதிய மென்பொருட்கள் எதையும் நிறுவாமலேயே விண்டோஸிலேயே ஒருங்குறி(unicode)-த் தமிழில் தட்டச்ச வழி இருக்கிறது என்பதை ஒரு சிலர் அறியாமல் இருக்கக்கூடும். அவர்களுக்காகவும் புதிய யுனிகோட் ஒருங்குறி முறையில் தமிழைத் தட்டச்சி மன்ற உறவுகள் பழக வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே இப்பதிவு.


1. ஸ்டார்ட் (Start) பொத்தானை அழுத்துங்கள்.


2. கண்ட்ரோல் பேனலுக்கு (Control Panel) செல்லுங்கள்.


3. "ரீஜனல் அண்ட் லாங்குவேஜ் ஆப்ஷன்ஸ்" (Regional and Languages Options) ஐகானை சொடுக்குங்கள்.


4. அதில் "லாங்குவேஜஸ்"(Languages)- ஐ தேர்ந்தெடுங்கள்.


5. "சப்ளிமெண்டல் லாங்குவேஜ் சப்போர்ட்" (Supplemental Language support) பகுதியில் "இன்ஸ்டால் காம்ப்ளெக்ஸ் ஸ்கிரிப்ட் அண்ட் ரைட்-டூ-லெஃப்ட் லாங்குவேஜஸ் (இன்க்ளூடிங் தாய்)" - (Install files for comples script and right-to-left-languages (including Thai) என்பதை தேர்வு செய்யவும்.


6. "அப்ளை" (Apply) பொத்தானை அழுத்துங்கள்.


7. தேவையான எழுத்துருக்கள் தானாக நிறுவப்படும் (சில கணினிகளுக்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் சி.டி.(Windows Installation CD) தேவைப்படலாம். ஆகவே அருகில் வைத்திருங்கள்).


8. எழுத்துருக்கள் நிறுவப்பட்ட பின்னர் "கணினியை நிறுத்தி, இயக்கவா" என்ற அறிவிப்பு புதிய பெட்டிச்செய்தியில் வரும். அதில் "நோ" (NO) என்ற பொத்தானை அழுத்துங்கள்.


9. இப்போது டெக்ஸ்ட் செர்வீசஸ் அண்ட் இன்புட் லாங்குவேஜில் (Text Services and input languages) இருக்கும் "டீடெய்ல்ஸ்" (Details) பொத்தானை அழுத்துங்கள்.


10. "இன்ஸ்டால்டு டிவைசஸ்" (Installed devices) பகுதியில் "ஆட்" (Add) பொத்தானை அழுத்துங்கள்.


11. "இன்புட் லாங்குவேஜ்" (Input language) என்பதில் "தமிழ்" (Tamil) என்பதை தேர்ந்தெடுங்கள்.


12. "கீ போர்ட் லே அவுட் / ஐ.எம்.ஈ" (Keyboard layout/IME) என்பதை தேர்வு செய்து அதிலும் "தமிழ்" (Tamil) என்பதை தேர்வு செய்யுங்கள்.


13. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.


14. இப்போது புதிய தமிழ் விசைப்பலகை நிறுவப்பட்டிருப்பதை உங்களால் காண இயலும்.


15. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.


16. "அப்ளை" (Apply) மற்றும் "ஓக்கே" (OK) பொத்தான்களை அழுத்துங்கள்.


17. கணினியின் இயக்கத்தை நிறுத்தி (Restart Computer) மீண்டும் இயக்குங்கள்.


18. டாஸ்க் பாரில் (Task bar) "EN" என்ற எழுத்து இருப்பதைக் காணுங்கள்.


19. லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துவதன் மூலம் தமிழ் விசைப்பலகைக்கு மாற முடியும். தமிழ் விசைப்பலகைக்கு மாறியுள்ளது எனில் டாஸ்க் பாரில் (Task bar) "TA" என்று எழுத்துக்கள் மாறி இருப்பதைக் காணலாம். மீண்டும் ஆங்கில விசைப்பலகைக்கு மாற வேண்டுமெனில் மீண்டும் லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துங்கள்.


19. தற்போது நம்மால் ஒருங்குறி தமிழில் (Unicode Tamil) தட்டச்ச இயலும். (இந்த வகை தமிழ் ஒருங்குறி ஃபோனடிக் தட்டச்சு முறையில் இல்லை என்பதை கவனிக்கவும்)


20. எந்த விசைக்கு என்ன எழுத்து என்பதை காண வேண்டுமெனில் ஸ்டார்ட் ( Start ) - ரன் (Run)-க்கு செல்லுங்கள்.


21. பெட்டியில் ஓஎஸ்கே (osk)-என்பதை அடைப்புக்குறிகள் இல்லாமல் தட்டச்சி, "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள். (On Screen Keyboard என்பதின் சுருக்கம்தான் osk).


22. இப்போது திரையில் விசைப்பலகையை காண இயலும். நாம் தேர்வு செய்திருக்கும் விசைப்பலகைக்கேற்ப இந்த திரை விசைப்பலகையில் எழுத்துருக்கள் காணப்படும்.


23. திரை விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களையும் அவ்விதம் காண இயலும். ஷிஃப்ட் விசையை அழுத்தினால் தமிழ் எழுத்துருக்கள் மாறுவதையும் காண முடியும்.


24. முதலில் இவ்விதம் புதிய முறையில் தட்டச்சி பழகுவது சிரமமான காரியம் என்றாலும் நாளடைவில் இது மிகவும் எளிதானது என்பதைக் கண்டு கொள்ள முடியும்.

இவ்வகையில் தட்டச்சுவதில் பல நன்மைகளும் இருக்கின்றன.

எவ்விதம் தமிழ் ஒருங்குறிக்கு மாற்றுவது என்பதை இங்கே தட்டச்சி விளக்கி இருப்பதை யூடியூப்-(YouTube)பில் அசை படமாக (Flash video) நேரே காணலாம்.


இந்த வீடியோவை சொடுக்கவும் :



இங்கு தரப்பட்டிருக்கும் விடயங்களில் மேலும் சேர்க்க வேண்டும் என விரும்பும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.

நன்றி : தமிழ் மன்றம்

கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி


இ-கலப்பை, என்.ஹெச்.எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களை நிறுவி தமிழில் தட்டச்சுவது குறித்து மன்றத்தில் சில திரிகள் இருக்கின்றன.

நமது மன்றத்திலேயே நேரடியாக தமிழை தட்டச்ச வசதி உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது வேறு மென்பொருள் எதையும் நிறுவாமலேயே தமிழில் நேரடியாக தட்டச்சலாம்.

1. கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி - Google Transliteration Box: இதில் ஃபோனடிக் முறையில் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சியதை நகல் எடுத்து பதிவிட முடியும்.

2. ஒருங்குறி மாற்றி - Unicode convertor : இதில் திஸ்கி, அஞ்சல், மயிலை, பாமினி, டேப், டேம் ஆகிய தட்டச்சு முறைமைகளில் தட்டச்சு செய்தவற்றை ஒருங்குறியாக மாற்றவும், ரோமனைஸ்டு முறையில் தட்டச்சு செய்து ஒருங்குறியாக மாற்றவும் முடியும். அவ்விதம் மாற்றியதை நகல் எடுத்து மன்றத்தில் எளிதாக பதிக்க முடியும்.

இந்த இரண்டு வசதிகளும் மன்றத்தின் பக்கங்களில் கீழ்ப்பகுதியில் இருக்கின்றன.

இப்போது கூகிள் இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் நேரடியாக ஃபோனடிக் முறையில் தமிழில் ஒருங்குறியைத் தட்டச்ச வசதி செய்திருக்கிறது.

அதன்படி மிகச்சிறிய அளவுள்ள ஜாவா நிரலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கருவிப்பட்டையை நமது உலாவியில் நிறுவிக்கொள்ள வேண்டும். நிறுவிக்கொண்ட பின்னர் நேரடியாக தமிழில் தட்டச்சலாம்.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அரபி மொழிகளுக்கான கருவிப்பட்டை கிடைக்கிறது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், குரோம், சஃபாரி ஆகிய உலாவிகளில் நாம் அதைப் பொருத்திக்கொள்ள முடியும். கூகிளின் உதவித்தளங்களில், ஒவ்வொரு உலாவியிலும் நாம் எவ்விதம் இந்தக்கருவிப்பட்டையை இணைப்பது என்பதையும், எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதையும் படங்களுடன் தெளிவாக கொடுத்திருக்கிறார்கள்.

எப்படி கருவிப்பட்டையை நிறுவுவது என்பதை அறிய : (How to install transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk...s/help_ta.html

எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய : (Using the transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk...lp_ta.html#Use

கூகிளின் இந்த வசதியின் மூலம் பெரும்பாலான வலைத்தளங்களில் நாம் நேரடியாக தமிழில் தட்டச்ச முடியும். ஒரு சில இடங்களில் இது வேலை செய்வதில்லை என்ற குறை இருந்தாலும், உடனடியாக நேரடியாக தமிழில் தட்டச்ச வசதியைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நான் அதை நிறுவி நமது மன்றத்தில் சோதித்ததில், புதிய திரி தொடங்கும் போது தலைப்புப் பகுதி (தலைப்பு கருவிப்பட்டையைக்கொண்டே தட்டச்சு செய்யப்பட்டது), கூகிள் தமிழ் தட்டச்சும் வசதி, ஒருங்குறி மாற்றி ஆகியவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்ச முடிகிறது. ஆனால் பதிவுகளை தட்டச்சும் பகுதியில் கூகிள் கருவிப்பட்டை வேலை செய்யவில்லை.

வழங்கி, இயங்குதளம் மற்றும் மென்பொருள் ஒத்துழைக்குமெனில் இந்த இடத்திலும் தட்டச்சும் வசதியை மன்ற நிர்வாகம் ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை முன் வைக்கிறேன்.
இப்பதிவு யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்வேன்.

Sunday, September 27, 2009

சினிமா நடிகர்களின் கூடாரமாக திகழும் தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

மயில் இறகு, குத்துவிளக்கு, தீப ஒளி, சூரியோதயம் போன்ற படங்களோடு மிளிரும் தீபாவளி வாழ்த்து கார்டுகளே முன்பெல்லாம் பிரதானமாக விற்பனையிலிருக்கும். ஆனால் இப்பொழுது சினிமா நடிகர் - நடிகைகளின் படங்களை கொண்ட வாழ்த்து கார்டுகளே சந்தையை ஆக்கிரமித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்படிபட்ட வாழ்த்து கார்டுகள் தீபாவளியின் மகத்துவத்தை மாசுபடுத்துவதாக இருக்கிறது என பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


தீபாவளியின் மகிழ்ச்சியை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கும் அன்பை பரிமாறிகொள்தற்கும்இ நட்பைத் தொடர்வதற்கும் அன்பான பண்பான வார்த்தைகளால் தீபாவளி வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதற்கும் தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

அதேப்போல் தீபாவளி வாழ்த்துக் கார்டுகளின் அட்டைப்படங்களும் தீபாவளியை நினைவுகூர்ந்து பார்க்கும் வகையில் அமைந்திருப்பதும் மிக முக்கியமாகும் என்றார் சுப்பாராவ்.

முன்பு தீபாவளி வாழ்த்துக் கார்டுகளின் அட்டைப்படங்களில் தீப ஒளிகள் கதிரவன் மயில் இறகு, குத்துவிளக்கு, கண்ணன், ஊதுவர்த்தி பழங்கள்,பூஜை பொருட்கள் போன்றவை அச்சிடப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

முன்பு சினிமா நடிகர்களைக் கொண்ட வாழ்த்து கார்டுகள் அச்சிடப்பட்டு வந்தாலும் நடிகர் நடிகையின் சிறிய படங்களே அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்பொழுது வருகிற வாழ்த்து கார்டுகளில் கவர்ச்சியான நடிகைகளின் படங்களும் சினிமா நடிகர்களின் வன்முறை காட்சிகளும் கொண்ட படங்கள் அச்சிடப்பட்டு வருவது கவலையைத் தருவதாக இருக்கின்றது என்றார் சுப்பாராவ்.

துப்பாக்கி ஏந்தி நிற்பது போலவும் ஒரு நடிகை தான் அணிந்திருக்கும் சட்டையைக் கழட்டுவது போலவும் இன்னொரு படத்தில் குட்டை பாவாடை அணிந்து தொடையைக் காட்டுவது போலவும் உள்ள தீபாவளி வாழ்த்துக் கார்டுகளும் விற்கப்பட்டு வருகின்றன என்றார் சுப்பாராவ்.

முன்பு சிறிய வடிவில் அமைந்திருந்த தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் இப்பொழுது மெகா அளவில் வரத் தொடங்கிவிட்டன.

பி.ப.சங்கம் மேற்கொண்ட ஆய்வில் இது போன்ற கார்டுகள் பினாங்கு, ஈப்போ, கிள்ளான், கோலாலும்பூர், சுங்கைப்பட்டாணி , ஜோகூர் பாரு, போன்ற இடங்களில் பரவலாக விற்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களிடம் இது போன்ற தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் மிகவும் பிரபலம் அடைந்து வருவதாக சுப்பாராவ் கூறினார்.

இது போன்ற நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தீபாவளி சினிமா நடிகர் - நடிகைகளுக்கே கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாக அமைந்துவிடும் என்றும் சுப்பாராவ் எச்சரிக்கை விடுத்தார்.

நமது பாரம்பரிய சின்னங்கள், படங்கள், பணபுநலன்கள் போன்றவை எத்ரகால தலைமிறையினருக்கு காட்டப்படாமலேயே மறைக்கப்படுவதற்கு சினிமா நடிகர் நடிகைககளின் ஊடுருவல் அமைந்துவிடம் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

இது போன்ற படங்கள் கொண்ட தீபாவளி வாழ்த்துக்கார்டுகளை வாங்க வேண்டாம் என பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.

வியாபாரிகளும் இது போன்ற படங்களைக் கொண்ட தீபாவளி வாழ்த்துக்கார்டுகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விற்க வேண்டாம் என பி.ப.சங்கம் கேட்டு கொள்வதாக என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

பிரம்மசீடன் எழுதிய... காலம் கட்டவிழ்த்துவிடும் வழி

இருபது ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தலைநிமிர்ந்து நின்ற தமிழீழ அரசு, இன்று அஞ்ஞாதவாச நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொழுதும், தமிழீழ தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கை தணியவில்லை என்பதை நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் ஊடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி வருகின்றோம். இதேபோன்று, தமிழீழ தனியரசை நிறுவுவதற்காக என்றென்றும் எமக்குத் தோள்கொடுத்து உறுதுணை நிற்பதற்கான தமது தார்மீக ஆதரவை எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். படை வலிமையின் மூலம் எமது மண்ணை இன்று சிங்களம் ஆக்கிரமித்துவிட்ட பொழுதும், எந்தவிலை கொடுத்தாவது எமது மண்ணை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற ஓர்மம் எம்மை விட்டு அகலவில்லை. இதனையே கரும்புலிகள் நாளில் மேற்குலக தேசங்கள் தோறும் நிகழ்ந்தேறிய உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வுகள் ஊடாக ஈழத்தமிழினம் வெளிப்படுத்தியது. இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பெங்க@ரிலும் உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றது. வரலாறு காணாத இழப்புக்களையும், அழிவுகளையும், துன்பங்களையும் சந்தித்து நிற்கும் ஈழத்தமிழினம், உலகத் தமிழினத்தின் உறுதுணையுடன் அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுந்து தமிழீழ தனியரசை மீண்டும் நிறுவும் என்ற மெய்யுண்மையையே இவ்வாறான நிகழ்வுகள் கட்டியம்கூறி நிற்கின்றன எனக்கூறின் அது மிகையில்லை. இவ்வாறான பின்புலத்தில் நின்றவாறு, உலகத் தமிழினம் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகளையும், கடப்பாடுகளையும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

11 செப்டம்பருக்குப் பின்னரான உலக ஒழுங்கு என்பது முற்றுமுழுதாக மேற்குலகின் வலிமையில் இருந்து கட்டியெழுப்படுகின்றது. பனிப்போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியம் - அமெரிக்கா என்ற இருதுருவ நிலையில் இருந்த உலக ஒழுங்கு, பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட பல்துருவ நிலையில் இயங்கியது. ஆனால் இதற்கு ஆப்பு வைத்து, அமெரிக்காவை சீண்டியிழுத்து உலக ஒழுங்கை அமெரிக்காவின் முழுமையான மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒருதுருவ நிலைக்கு இட்டுச்சென்றது பின்லாடனின் இஸ்லாமிய அடிப்படைவாதம். சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் பனிப்போர் முடிவுக்கு வந்த பொழுது, பொதுவுடமைத்துவமும், மார்க்சியமும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவே அன்றைய தாராண்மைத்துவவாதிகள் வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், அப்பொழுது பொதுவுடமைத்துவ ஆடையணிந்தவாறு முதலாளித்துவத்தை ஆரத்தழுவிக் கொண்ட சீனாவின் பொருண்மிய வளர்ச்சியும், தாராண்மைத்துவத்தின் வெற்றியை குறியீடு செய்து வரலாற்றின் முடிவில் மனித குலத்தை கொண்டு வந்திருப்பதாகவே அப்பொழுது பிரான்ஸிஸ் புக்குயாமா மார்தட்டிக் கொண்டார். புக்குயாமாவின் கருத்துப்படி, ஹேகலிடம் கடன்வாங்கி கார்ல் மார்க்ஸ் தரிசித்த வரலாற்றின் முடிவை பொதுவுடமைத்துவம் நிர்ணயிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்தியல்களை வெற்றிகொண்ட தாராண்மைத்துவமே வரலாற்றின் முடிவை நிர்ணயிக்கும் என்பதே புக்குயாமாவின் வாதமாக அமைந்தது. அவரைப் பொறுத்தவரை, தாராண்மைத்துவத்தின் மாற்றுக் கருத்தியல்களாக கருதக்கூடிய இஸ்லாமும், தேசியவாத இயக்கங்களும் கருத்தியல்களுக்கான பண்புகளை கொண்டிருக்கவில்லை. எனவே, பனிப்போரின் முடிவுடன் சனநாயக சமாதானக் கோட்பாட்டை இறுகப் பற்றிக்கொண்ட அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், உலகெங்கும் தாராண்மைத்துவ ஆட்சியைப் பரப்பும் தனது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கக் தொடங்கியது. பனிப்போர்க் காலத்தில் மனிதநேயம் பேசிய ஐக்கிய நாடுகள் சபையும், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்களும், பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகின் தூண்களாக தம்மைக் கட்டமைத்துக் கொண்டன.

தேசிய இனங்களின் தன்னாட்சியுரிமை என்பது தாராண்மைத்துவத்தின் மூலவேர்களில் ஒன்று. இதனை பொருளியல் கருத்துலகில் நின்றவாறு மார்க்சியமும் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதை பல தடவைகள் லெனின் நிதர்சனமாக்கியிருந்தார். ஆனால், துர்ப்பாக்கியவசமாக பனிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கில், இதன் வாரிசுரிமையை முன்னைநாள் சோவியத் ஒன்றிய தேசிய இனங்களான கிழக்கு ஐரோப்பியர்களுக்கு மட்டும் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம் உரித்தாக்கிக் கொண்டது. தமிழீழ தேசத்தின் தன்னாட்சியுரிமையையும், தனியரசுக்கான கோரிக்கையையும் உதாசீனம் செய்த மேற்குலகம், கிழக்கு ஐரோப்பியர்களின் தன்னாட்சியுரிமையை தயக்கமின்றி அங்கீகரித்து அவர்களுக்கு தனியரசு நிலையை வழங்கிக் கொண்டது. அப்படியிருந்த பொழுதும்கூட, ஆயுதவழி தழுவிய விடுதலைப் போராட்டங்களை மேற்குலகம் ஓரங்கட்டிவிடவில்லை. 1997ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பயங்கரவாதமாக இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவெடுக்கத் தொடங்கிய பொழுது பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியை அரசியல் அரங்கில் முடக்கும் கொள்கையளவிலான முடிவை அமெரிக்கா எடுத்தது. இதன் வெளிப்பாடாகவே 1997ஆம் ஒக்ரோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துக் கொண்டது. இங்கு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய விடுதலை இயக்கங்களின் அரசியல் அபிலாசைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இவ்வாறான தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆணையளித்த தேசிய இனங்களின் விருப்பு வெறுப்புக்களும் இங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை. மாறாக, தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்கு விரோதமான தீண்டத்தகா விடயங்களாகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் கருதப்பட்டன. அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகைப் பொறுத்தவரை, சனநாயகம், தாராண்மைத்துவ பொருளாதாரம், தனிமனித சுதந்திரம், பன்மைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி உலகில் வேரூன்ற வேண்டும். இங்கு தேசிய இனங்கள் என்றோ, சிறுபான்மை இனங்கள் என்றோ வேறுபாடுகள் இருக்கக்கூடாது. தேசிய இனங்களாயினும், சிறுபான்மை இனங்களாயினும், இன அடிப்படையிலான தேசிய அடையாளங்களைக் கைவிட்டு, ஏற்கனவே இருக்கக்கூடிய தேசிய அடையாளத்துடன் ஒத்திசைவாகவும், நல்லிணக்கத்துடனும் வாழப் பழக வேண்டும். இதுவே தாராண்மைத்துவ உலக ஒழுங்கு நிலைபெறுவதற்கு வழிகோலும்.

இந்த வகையில், ஈழப்பிரச்சினையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளும், சிங்கள தேசத்திடன் இருந்து அவர்கள் பட்டறிந்த கசப்பான அனுபவங்களும், அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்கு பொருட்டாகத் தென்படவில்லை. மாறாக, ஆயுத எதிர்ப்பியக்கம் என்ற நிலையில் இருந்து, ஆயுதங்கள் களையப்பட்ட அரசியல் கட்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணமிக்க வேண்டும், தமிழீழ தனியரசுக்கான கோரிக்கை கைவிடப்பட வேண்டும், சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்று, ஒன்றுபட்ட சிறீலங்காவிற்குள் அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான அல்லது ஆகக்கூடியது இணைப்பாட்சி வடிவத்தைக் கொண்ட அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்பதே தாராண்மைத்துவ உலகின் நிலைப்பாடாகியது. அதேநேரத்தில், சிங்கள தேசியம் என்ற நிலையைக் கடந்து, சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர் என நான்கு இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டியெழுப்பி, மத்தியில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைப் பரவலாக்கி, தாராண்மைத்துவ பொருளாதாரத்தை சிங்கள தேசமும், அதன் அதிகார வர்க்கமும் இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதும் தாராண்மைத்துவ உலகின் நிலைப்பாடாகத் திகழ்ந்தது.

இப்படியான அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தவாறு நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, 2001ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு தடைவிதித்தது. அதேநேரத்தில், சமாதானப் புறவாக 1999ஆம் ஆண்டில் ஈழத்தீவில் களமிறங்கிய நோர்வே, 2000ஆம் ஆண்டின் இறுதியுடன் தாராண்மைத்துவ உலகின் நிகழ்ச்சித் திட்டத்தை முழுவீச்சுடன் அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் மூழ்கியது. இங்கு, தமிழீழ மக்களுக்கு நீதியளிப்பது நோர்வேயின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, ஆயுதவழி தழுவிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதான அரசியல் போராட்டமாகத் தரமிறக்கி, தமிழீழ ஆயுத எதிர்ப்பியக்கமாக விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் படைவழியில் பலவீனப்படுத்தி, அதிகாரப் பகிர்வு அல்லது இணைப்பாட்சி என்ற வரையறைகளுக்குள் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை குறுக்கிக் கொள்வதே நோர்வேயின் நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக அமைந்தது. என்றோ ஒரு காலத்தில் ஆயுதக் களைவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்க வேண்டும் என்று 2005ஆம் ஆண்டில் விதார் ஹெல்கிசன் கூறியமை இதற்கு சான்று பகர்ந்தது. அதேநேரத்தில், அன்று தாராண்மைத்துவ உலகின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்கவை அரசியல் - படைவழிகளில் பலப்படுத்தி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக தென்னிலங்கையில் பொருண்மிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, சிங்கள தேசத்திற்கு முண்டுகொடுக்கும் மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தையும், அப்பொழுது நோர்வே கச்சிதமாக செயற்படுத்தியது.

எனவே, ஈழத்தீவில் மேற்குலகின் தேசிய அல்லது கேந்திர - பூகோள – பொருண்மிய நலன்கள் என்பது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீச்சை சிதைத்து, வலுவான தாராண்மைத்துவ ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டியெழுப்புவதையே மையமாகக் கொண்டிருந்தன. இங்கே தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளும், மனித உரிமைகளும் கிஞ்சித்தளவும் கணக்கிலெடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிக்குண்டு சிதறடிக்கப்பட்டது என்பதை விட, தாராண்மைத்துவ உலக ஒழுங்கை ஏற்படுத்தும் மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தில் நயவஞ்சகமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் இழுத்துச் செல்லப்பட்டு, யுத்தத்தின் மூலம் பெரும் பின்னடைவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிங்களம் தோற்கடிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய தாராண்மைத்துவக் கூட்டு வகுத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய, இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும் வழங்கிய படைவழி உதவிகளுடன், தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது என்பதே உண்மை.

இன்று தனது நிலங்களையும், இறையாட்சியையும், அரசையும் தமிழீழ தேசம் இழந்துள்ள பொழுதும், தமிழீழ தனியரசை நிறுவும் ஆற்றலை, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்து விடவில்லை. தமிழீழத்தில் இன்று தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் திகழ்வதாக சிலர் கூறுவது அபத்தமானது. தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ தனியரசை நிறுவும் உறுதியுடன் இன்றும் தமிழீழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் உள்ளார்கள் என்பதே மெய்யுண்மை. இப்படியான சூழலில், தமிழீழ தேசியத் தலைவரை தமிழ்கூறும் நல்லுலகில் இருந்து அழித்துவிடுவதற்கும், ஆயுதவழி தழுவிய போராட்டம் இனிச் சாத்தியமில்லை என்ற நஞ்சை விதைப்பதற்கும் சில சக்திகள் முற்படுகின்றன. இவற்றுக்கு துணைபோகும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை கொச்சைப்படுத்தும் புழுதிகளும் சில பொய்வழுதிகளால் கிளப்பிவிடப்படுகின்றன. இவற்றை அடியோடு நிராகரித்து, தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ மண்ணில் மீண்டும் தனியரசை நிறுவுவதற்கு உலகத் தமிழர்கள் உறுதிபூண வேண்டும். நாடு கடந்து அரசமைப்பது வேறு. ஆனால், நாட்டில் உள்ள தலைமையை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் கடல்கடந்து அரசமைத்து அமைச்சர்களாக வலம்வரும் முனைப்புக்களில் ஈடுபடுவதும், ஆயுதவழி தழுவிய விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுவதும், இவ்வாறான சக்திகளின் உண்மையான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

இதுவரை காலமும் தமிழீழ மக்களை வஞ்சித்து, தமிழீழ அரசை சீர்குலைத்து, சிங்களத்திற்கு வெற்றியை அளித்த அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், இன்று சிங்களத்திற்கு எதிராக வரிந்துகட்டத் தொடங்குகின்றது. வன்னியில் மனிதப் பேரவலத்தை தமிழீழ மக்கள் எதிர்கொண்ட பொழுது அமைதி காத்த உலக ஊடகங்கள், இன்று வதைமுகாம் கொடூரங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்தத் தொடங்கி விட்டன. யுத்த காலத்தில் சிங்கள தேசத்திற்கு படைய – பொருண்மிய – அரசியல் - இராசதந்திர உதவிகளை வழங்கி, அதற்கு முண்டுகொடுத்த தாராண்மைத்துவ மேற்குலக சமூகம், இன்று தலைகுத்துக்கரணம் அடித்து சிங்கள தேசத்திற்கான பொருண்மிய உதவிகளை இழுத்தடிக்கத் தொடங்கி விட்டது. சிங்கள தேசம் இழைத்த போர்க் குற்றங்களுக்கு எதிரான குரல்கள் இன்று மேற்குலகில் மெதுவாக எழத் தொடங்கிவிட்டன. அன்று யுத்தகாலத்தில் சிறீலங்காவை சொர்க்கபுரியாக வர்ணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியாவின் மரபுவாத ஊடகமான த ரைம்ஸ் நாளேடு, இன்று சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான முகப்புச் செய்திகளையும், ஆசிரியர் தலையங்கங்களையும், ஆய்வுப் பத்திகளையும் வெளியிடுகின்றது. இதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இங்கு எமது பரப்புரைகள் வெற்றியை ஈட்டித் தந்திருப்பதாக நாம் மார்தட்டிக் கொள்ளத் தேவையுமில்லை. அன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை மேற்குலகம் புரிந்து கொண்டிருப்பதாக எண்ணி நாம் ஏமாந்து விடவும் தேவையில்லை.

மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துதல் அல்லது அழித்தல் என்ற நிகழ்ச்சித் திட்டத்துடன், இதுவரை காலமும் நோர்வேயின் ஊடாக இயங்கிய மேற்குலகம், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், சிங்கள தேசத்தின் கடும்போக்குவாத மகிந்த ராஜபக்~வின் ஆட்சியை பலவீனப்படுத்தி, தனது தாராண்மைத்துவ மூலோபாயத்தையும், நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முற்படுகின்றது என்பதே உண்மை. சீனாவுடன் சிங்கள தேசம் நெருங்கி உறவாடுவது, இவ்வாறான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள சிங்களத்தின் அச்சவுணர்வையே புலப்படுத்துகின்றது. இதுவரை காலமும் ஈழப்பிரச்சினையில் மேற்குலகின் ஆதிக்கத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியாவே கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்க மேலாதிக்கத்தின் துணாக மாறிவரும் இந்தியா, மேற்குலகின் தாராண்மைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்கு இசைவாகவே ஈழப்பிரச்சினையையும், ஈழத்தீவு தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றது. இந்தியா விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஆட்சியில் இருக்கும் வரை, மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டமே இனி ஈழத்தீவில் அமுல்படுத்தப்படும்.

எனவே, இற்றைவரை எம்மை வஞ்சித்து, எமக்குத் துரோகம் இழைத்த மேற்குலகம், இன்று சிங்கள தேசத்திற்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்குவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று துடிக்கும் நாம் ஒவ்வொருவரும், இனி சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுக்கப் போகும் பொருண்மிய - இராசதந்திர வலிந்த தாக்குதலுக்கு துணைநின்று, சிங்கள தேசத்திற்கு தகுந்த பாடம்புகட்ட வேண்டும். சிங்கள தேசத்தின் பொருண்மிய வலிமையை முற்றாக சிதறடித்து, அதன் படைவலிமையை சிதைக்க வேண்டும். சிங்கள தேசத்தை நோக்கி மேற்குலகம் ஏவப்போகும் ஒவ்வொரு அம்புகளும், எம்மால் வழங்கப்பட்டவையாக இருக்க வேண்டும். சிங்களத்தை நோக்கி மேற்குலகம் வாளை நீட்டும் பொழுது, அதனைக் கூர்மைப்படுத்திக் கொடுக்கும் வகையில் எமது அரசியல் - பரப்புரைப் பணிகள் அமைய வேண்டும். எம்மை எப்படி மேற்குலகம் ஓரம்கட்டி தீண்டத்தகாத பயங்கரவாதிகளாக புறந்தள்ளியதோ, அதேபோன்று சிங்களத்தை மேற்குலகம் முற்றுமுழுதாக புறந்தள்ளி, அடாவடி அரசு என்ற நிலைக்கு இட்டுச் செல்வதற்கு நாம் இனி உந்துசக்தியாக அமைய வேண்டும். தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில், தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான போராட்டம் மீண்டும் தனது பாய்ச்சலை தொடங்கும் பொழுது, சிங்கள தேசத்தை பலவீனப்படுத்திய பெருமைக்குரியவர்களாக நாம் இருக்க வேண்டும். இதுவே இன்று எம்முன்னே உள்ள தலையாய பணியாகும்.

இதனைவிடுத்து, தேர்தல் சகதியில் இறங்கி சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்வதோ, இந்தியாவின் காலடியில் மண்டியிடுவதோ, அன்றி தமிழீழ மண்ணில் உள்ள தலைமைக்கு மாற்றீடான தலைமையை மேற்குலகில் உருவாக்குவதோ, அன்றி ஏதோ எம்மால் இயலுமானதை செய்கின்றோம் என்றுகூறி தமிழீழ தேசத்தின் தலைமையை அழிக்க முற்படும் சக்திகளுக்கு நாம் துணைபோவதோ, எமது தலையில் நாமே மண்ணை வாரிப்போடும் செயலாகவே அமையும். நாடுகடந்து அமைக்கப்பட்ட அஞ்ஞாதவாச அரசுகளில், முப்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை திபெத் தேசம் கொண்டுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக திபெத்தில் தோற்றம் பெறும் மக்கள் கிளர்ச்சிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் அரசியல் வழியில் நசுக்குவதற்கு துணைபோகும் மேற்குலகின் கருவியாக, இந்தியாவில் இயங்கும் தலாய் லாமாவின் அஞ்ஞாதவாச அரசு இயங்குவதை நாம் மறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு திபெத்தில் மக்களின் ஆயுதக் கிளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அதனைக் கண்டித்தவர்களில் ஒருவராக தலாய் லாமாவும் விளங்கியிருந்தார்.

எனவே, இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் தேவைகளைப் புரிந்து, சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுக்கப் போகும் பொருண்மிய – அரசியல் தாக்குதல்களுக்கு உந்துசக்தியாக நாம் செயற்படுவோம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலுக்கு அமைய, மேற்குலகைக் கொண்டு இப்பொழுது சிங்கள தேசத்தை நாம் தாக்குவோம். அதேநேரத்தில், தமிழீழ மண்ணில் தமது உயிரை வேலியாக்கிப் போராடும் எமது போராளிகளையும், தலைமையையும் பாதுகாப்போம். எமது பெருந்தலைவரின் தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டுமொரு பாய்ச்சலைத் தொடங்கும் பொழுது, சிங்களத்தைப் பலவீனப்படுத்தி, எமது தேசத்தின் விடுதலையை விரைவுபடுத்திய பெருமைக்குரியவர்களாக மாறுவோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று முன்னெடுத்துச் செல்லும் முழுப்பொறுப்பும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடன் கையளிக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் உந்துசக்தியாக நின்று, தமிழீழ மண்ணில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெறுவதற்கு துணைநிற்கும் கடப்பாடே இன்றும்கூட எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைத்துவம் என்றென்றும் தமிழீழ மண்ணில் இருந்தே வழங்கப்படும். அதனை சிதைத்து சீர்குலைக்கும் நோக்கத்துடன் மாற்றுத் தலைமைத்துவத்தை புகலிட தேசங்களில் உருவாக்குவது அல்லது கவர்ச்சிகரமான பூடகமான பெயர்களில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை துடைத்தழிப்பதற்கு கங்கணம்கட்டி நிற்கும் நாசகார சக்திகளுக்கு துணைபோகும் செய்கையே அன்றி வேறேதும் அல்ல.

கருத்துக்களுக்கு: பிரம்மசீடன் brahmaseedan@yahoo.co.uk

Monday, September 21, 2009

புவா பாலா கிராமத்தின் பாரம்பரியம் புதைக்கப்பட்டுவிட்டது அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டனர்

ஒரு 200 ஆண்டு கால இந்திய பாரம்பரிய சின்னமாகத் திகழ்ந்து வந்த ஒரு கிராமம் “அத்திப்பட்டி” போல் சிதறி உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மேம்பாடு என்ற பெயரில் லட்சக்கணக்கான வெள்ளியில் சொகுசான வீடுகள் கட்டப்படுவதற்காக, சரித்திரம் படைத்த புவா பாலா என்ற தமிழர்களுக்கே சொந்தமான கிராமத்தின் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி, புவா பாலா கிராமத்தை எப்படியாவது காப்பாற்றிவிடலாம் என முழு நம்பிக்கையில் இருந்த கிராமவாசிகளுக்கு இந்த ஏமாற்றம் தங்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாக இருக்கும்.

தங்களின் வீடுகள் தங்கள் கண்ணெதிரிலேயே உடைக்கப்படுவதைக் கண்டு வயதானவர்கள் கண் கலங்கினர். வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்படும்போது எழுந்த ஒவ்வொரு சத்தத்தின்போது, இந்த முதியவர்களின் கண்களிலிருந்து சொட்டு சொட்டாகக் கண்ணீர் வந்ததைப் பலர் கண்டு வேதனைப்பட்டனர்.

லட்சக்கணக்கான வெள்ளி மதிப்புடைய வீடு தருகிறார்கள், போக்குவரத்து செலவு கொடுக்கிறார்கள், உடனடியாக வீட்டை விட்டுக் காலி செய்யுங்கள் என, மேம்பாட்டாளருக்கு சாதகமாகவே “மந்திரங்கள்” வாசித்த அரசியல்வாதிகள், சரித்திரம் படைத்த இந்த கிராமத்தை காப்பாற்றுவதற்கோ அல்லது இதனைப் பாரம்பரிய சின்னமாகப் பிரகடனப்படுத்துவதற்கோ எந்த வித அக்கறையோ அல்லது நடவடிக்கையோ எடுத்தததாகத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளின் அவதூறான, அறிக்கைகளால், புவா பலா கிராமத்தின் இந்தியர்கள் பணப் பேராசைக்காரர்கள், பிடிவாதம் பிடித்தவர்கள் என்ற அவப்பெயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

மிகப் பழமையான, நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட ஒரு வீட்டையும், கடையையும், கோயிலையும், கல்லையும் பாரம்பரிய சின்னமாக பிரகடனப்படுத்தும் அரசாங்கம், மக்களின் உயிரைக் காப்பாற்ற உணவு கொடுத்த ஒரு கிராமத்தை, இது தனிப்பட்டவர்களின் நிலம் என பிரகடனம் செய்துள்ளது.

பிரிட்டிஷ் காலத்தில், பினாங்கு பெரிய மருத்துவமனைக்குப் பால் பற்றாக்குறை ஏற்பட்டது. பிறந்த சிசுக்களுக்கும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் கொடுப்பதற்குப் பால் இல்லை.

என்ன செய்வதென்று அறியாது தத்தளித்த நிர்வாகத்தினர், புவா பலா கிராமத்துக்கு ஓடினர்.

அங்கே அப்பொழுது பசு மாடுகளை வளர்த்த தமிழர்களின் உதவியை கேட்டனர். மருத்துவமனைக்கு பால் வழங்க முடியுமா என்று கேட்டனர்.

நல்ல இதயம் படைத்த புவா பாலா மக்கள் தினந்தோறும் 300 லிட்டர் பசும்பாலை மருத்துவமனைக்கு வழங்க சம்மதித்தனர். பல உயிர்களை வாழ வைத்த தெய்வங்களாகப் புவா பாலா மக்கள் திகழ்ந்தனர்.

அதோடு மட்டுமல்லாது பினாங்கு தீவில் ஒரு முறை குடிப்பதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.


புவா பாலா கிராமத்தில் மிகப் பழமையான கிணறு ஒன்று இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அந்தக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் வழங்கப்பட்டது. தாகம் தீர்க்க குடிநீர் வழங்கிய புவா பாலா கிராமம் இன்று இல்லை.

மேம்பாடு என்ற பெயரில் இரண்டு முக்கியமான சரித்திர புகழ்பெற்ற சம்பவங்கள் மறைக்கப்பட்டுவிட்டன.

200 ஆண்டுகள் புவா பாலா கிராமத்தின் பாரம்பரியத்தை ஒற்றுமையாகக் கட்டிக் காத்து காப்பாற்றிய இந்தியர்கள் இன்று வெவ்வேறு மூலைகளில் வாழ விரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு இதே கிராமத்தைக் கொடுத்து விடுங்கள் என ஓட்டுப்போட்ட மக்கள், இன்று வீட்டுக்காக அலைகின்றார்கள்.

பாராட்டி வழங்க வேண்டிய இழப்பீடுகளுக்காக, போராடிப் பெற வேண்டியவர்களாக புவா பாலா மக்கள் பல இன்னல்களுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு அமைதியான, மகிழ்ச்சியான ஒற்றுமையுடைய சூழ்நிலை கொண்ட கிராமம் எங்கே கிடைக்கப்போகின்றது? இது பல முதியவர்களின் ஆசை. நிறைவேறுமா?

ஒரு வாரத்திற்கு முன்பு, புவா பாலா கிராமத்தில் சுபாஷினி என்ற குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. அக்குடும்பத்தின் 6வது தலைமுறை அக்குழந்தை. இக்கிராமத்தில் பிறந்த கடைசிக் குழந்தையும் இதுதான்.

இனி சுபாஷினிக்கு விவரம் தெரியும்போது, தான் பிறந்த புவா பாலா கிராமம் எங்கே என தன் பெற்றோர்களைக் கேட்டால், அவர்கள் அங்கே அமரவிருக்கும் சொகுசான அடுக்குமாடி வீடுகளைத்தான் காட்ட வேண்டும்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
012-537 4899

Bookmark and Share

Saturday, September 19, 2009

இன்றைய தமிழ் சினிமா - கேள்விகள் ஆயிரம் - பகுதி 1



Bookmark and Share

இன்றைய தமிழ் சினிமா - கேள்விகள் ஆயிரம் - பகுதி 2



Bookmark and Share

இன்றைய தமிழ் சினிமா - கேள்விகள் ஆயிரம் - பகுதி 3



Bookmark and Share

இன்றைய தமிழ் சினிமா - கேள்விகள் ஆயிரம் - பகுதி 4



Bookmark and Share

இன்றைய தமிழ் சினிமா - கேள்விகள் ஆயிரம் - பகுதி 5



Bookmark and Share

இன்றைய தமிழ் சினிமா - கேள்விகள் ஆயிரம் - பகுதி 6



Bookmark and Share

Monday, September 14, 2009

முல்லா கதைகள் - முல்லா ஒரு காப்பாளர்

முல்லா கதைகள் - முல்லாவின் தந்திரம்

முல்லா கதைகள் - முல்லா விற்ற கழுதை

முல்லா கதைகள் - ஆயிரம் நாணயங்கள்

முல்லா கதைகள் - எருதுச்சண்டை

முல்லா கதைகள் - இரகசிய வியாபாரம்

முல்லா கதைகள் - வில் வித்தை வீரர்

முல்லா கதைகள் - வாய் ஜாலம்

முல்லா கதைகள் - மூன்றாவது கண்

முல்லா கதைகள் - பொய் நண்பன்

Thursday, September 10, 2009

மரம் - ஆவணப்படம் - கவிஞர் வைரமுத்து

மரத்தை நாம் நேசிக்க வேண்டும், அப்போதுதான் மரங்களின் தாயான பூமாதேவி...நம்மை
பாதுகாத்து அரவணைப்பார்.

இதற்கு இந்த ஆவணப்படம் உதாரணம் :



நன்றி : கவிஞர் வைரமுத்து

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் “ஹோம்” (Home)

பிரபல பிரான்சு நாட்டு புகைபட நிபுணர் யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் Home என்ற வானிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிகழ்வுகள் பற்றிய படம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்று எண்ணுகிறேன். பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக சுற்றுச்சுழல் தினத்தன்று ( 5 ஜுன் 2009 ) முறையாக வெளியிடப்படுகிறது. திரு.அல் கோர் அவர்களின் An Inconvenient Truth படத்திற்கு பின் உலகமெங்கும் மக்களின் மனதில் சுற்றுச்சுழல் பற்றிய விழிப்புணர்வை இந்த ஆவணப்படம் ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை இப்பூவுலகிற்கு தரும் என்று நம்புகிறேன்.



திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் (United Nations Environment Program(UNEP) Goodwill Ambassador ) தனது சுற்றுச்சுழல் பற்றிய முனைப்பிற்காகவும், பணிக்காகவும் “எர்த் சாம்பியன் ” ( Earth Champion ) என்ற பட்டத்தை பெற்றவர்.

இப்படம் உலகின் எல்லா பகுதிகளிலும் திரையிடப்பட்டு சுற்றுச்சுழல் பற்றிய திருப்புமுனை படமாக வரலாற்றில் இடம் பெற இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

நிலா காய்கிறது - இந்திரா

அச்சமில்லை - இந்திரா

மெட்டுப் போடு - டூயட்

நதியே நதியே - ரிதம்

அடுத்த ஆண்டில் கூகிள் ஆபரேடிங் சிஸ்டம் -கூகிள் அறிவிப்பு


கூகிள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது .அடுத்த ஆண்டு நடுவில் கூகிள் (Chrome OS) ஆபரேடிங் சிஸ்டம் வெளியிடுகிறோம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.ஓபன் சோர்ஸ் முறையில் அந்த (os) இயங்கும் என்று அறிவிக்க பட்டுள்ளது.மேலும் இந்த புதிய (os)லைட் வெயிட் ஆகா இருக்கும் லினக்ஸ் கெர்னலை அடிபடையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது முற்றிலும் புதிய ப்ராஜெக்ட் கூகிள் (android) லிருந்து வித்யாசபடும் என்றும் அறிவித்துள்ளது .

புதிய இயங்குதளம் மூலம் இணையம் தொடர்பான சேவைகளை உடனடியாக பெறமுடியும் என்றும் .மேலும் வைரஸ் போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கும் வகையில் இந்த இயங்கு தளம் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இயங்குதளத்தின் முக்கிய குறிக்கோள் வேகம்,பாதுகாப்பு,எளிமை. அதாவது இந்த புதிய (os) இயக்குவதற்கு வேகமாகவும் ,வைரஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பாவும் ,பயன்படுத்துவதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.இந்த இயங்கு தளம் இணையத்தை அடிபடையாக கொண்டு இயங்கும் என்றும் அதனால் ஏற்கனவே உள்ள இணையம் தொடர்பான (web based applications)மென் பொருட்கள் எந்த மாற்றமும் செய்யாமல் இதில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு நடுவில் (netbooks)இக்கு கூகிள் கிரோம் (0s)வெளியிடப்படும் பின்பு ஆல்பா பதிப்பு வெளியிட்டு பல்வேறு விதமான சோதனைகள் மேற்கொள்ள படும் என்று கூறியுள்ளது .

கூகுளின் இந்த அதிரடி அறிவிப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும் கூகுளுக்கும் கடும் போட்டி நிலவும்.கூகுளின் சவாலை மைக்ரோசாப்ட் சமாளிக்குமா ? என்பதை பொறுத்து இருந்து பார்போம் .