Tuesday, December 29, 2009

அதிகமான இந்தியர்கள் திவால் ஆகின்றார்கள் உத்தரவாதம் வழங்கியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் எச்சரிக்கின்றார் - என்.வி. சுப்பாராவ்

கடந்த சில ஆண்டு காலமாக இந்தியர்கள் பலர் திவால் ஆவதும் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதும் அதிகரித்து வருவது கவலையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திவால் ஆகிறவர்களில் பலர் 30 வயதுக்கு உப்பட்டவர்களாகவும் சிலர் பெண்களாகவும் இருப்பது வேதனையைத் தருவதாக இருக்கின்றது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

திவாலைத் தவிர்த்து பலரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படும் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகின்றது என்றும் சுப்பாராவ் கூறினார்.

இந்தியர்கள் சம்பந்தப்பட்ட திவால் மற்றும் ஏலம் தொடர்பான அறிக்கைகள் ஆங்கில பத்திரிகைகளில் பரவலாக வெளியிடப்பட்டு வருகிறது.

அப்படி வெளியிடப்படும் அறிக்கைகளிலிருந்து பார்ப்போமானால் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் உண்மை தெரிகிறது என்றார் அவர்.

கடன் வாங்கியவர்கள் ஒரு புறமிருக்க அக்கடனுக்காக உத்தரவாதம் வழங்கியவர்களும் இந்தப் பட்டியலில் சிக்கிக்கொள்கின்றனர்.

முறையான திட்டமிடாதது, நிர்வாகத் திறன் இன்மை, அளவுக்கு அதிகமான செலவு, குறைவான நாட்களிலேயே கூடுதலான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை போன்ற காரணங்களால் இவர்கள் திவால் ஆகக்கூடியவர்களாக அமைந்துவிடுகின்றனர் என்றார் சுப்பாராவ்.

திவால் சட்டப்படி மொத்த கடன் மவெ. 30இ000க்கு மேற்பட்டு இருக்க வேண்டும். வாங்கிய கடனை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் செலுத்த முடியாதவர்களே திவாலாக ஆக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே வாங்கிய வீட்டிற்கு மாதா மாதம் தவணைப் பணத்தை செலுத்த முடியாததால் ஏலம் விடப்படும் சம்பவங்களும் தொடர்கதையாக தொடர்ந்துகொண்டிருப்பதையும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் வீடுகளை கடனுக்கு வாங்கி, சில மாதங்களுக்குப் பிறகு பணத்தைச் செலுத்த முடியாத பட்சத்தில் இவ்வீடுகளை ஏலத்திற்குச் சென்றுவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

ஏலம் விடப்படும் அறிக்கைகள் தினசரி பத்திரிகைகளில் தினந்தோறும் பிரசுரிக்கப்பட்டு வருவதாக சுப்பாராவ் கூறினார்.

கடன் வாங்குபவர்கள், இளம் வயதினராக இருப்பதும், அவர்களே திவால்காரர்களாக ஆக்கப்படுவதும், பிறகு அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதும் வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்திற்கு சிறந்தது அல்ல என்றார் சுப்பாராவ்.

தொழில் துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு முறையான நிர்வாகத் திறன் சொல்லித்தரப்படாததே இதற்குக் காரணம்.

வங்கியில் கடன் பெற நினைப்பவர்களும், அவர்களுக்கு உத்தரவாதம் வழங்க இருப்பவர்களும், முறையான திட்டத்தை வகுக்க மிகச் சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டும் என என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Thursday, December 3, 2009

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.



சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!

சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.


காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.

மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.

இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.

ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.

வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.

பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.

அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.

நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?

தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது.

Thursday, November 26, 2009

உணவு விரயம் செய்வோருக்கு தண்டனை வழங்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

மலேசியர்கள் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 42 பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை நிரப்பும் அளவுக்கு நாம் கழிவுகளை உற்பத்தி செய்கின்றோம்!

2005ல் மலேசியர்கள் 7.34 மில்லியன் டன் திட கழிவுகளை உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த திடக் கழிவு 2020ல் நாள் ஒன்றுக்கு 30,000 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடப்பொருள் கழிவுகளில்இ 45% உணவு கழிவுகளாகும். (ஆதாரம்: வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு)


இந்த புள்ளி விவரம் ஒன்றும் நம்மை ஆச்சிரியப்படுத்தும் விஷயம் இல்லை. உணவுக் கடைகளிலும்,ரெஸ்டாரண்டுகளிலும், காப்பி கடைகளிலும், வீடுகளிலும் கூட சாப்பிடாமல் மீந்து போகும் உணவுகளைக் சர்வ சாதாரணமாக குப்பை தொட்டிகளில் கொட்டுவதை நாம் கண்கூடாக காணலாம். பிறந்தநாள், திருமண வைபவங்களிலும் சாப்பிட்டு முடிக்கப்படாத உணவுகள் குப்பை தொட்டிகளில்தான் தஞ்சம் புகுகின்றன.

சமூகம் வசதியாகி கொண்டு வரும் போது கூடவே உணவு விரய கலாச்சாரமும் சேர்ந்தே வருகிறது. சிங்கப்பூரில் 2008ல் 558,900 டன் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002ல் இருந்த அளவைவிட 6.2 மடங்கு அதிகமாகும். ஜப்பானியர்கள் தங்கள் உணவுகளில் நான்கில் ஒரு பங்கை வீசி எறிகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 4.1 மில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். அமெரிக்காவில் வருடத்தில் 30 விழுக்காடு உணவு அதாவது 38.3 பில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு வருடமும் 6 பில்லியன் வெள்ளிக்கு சமமான உணவுகளை வீசுகின்றனர். இது ஆஸ்திரேலிய முழுவதிலும் உள்ள மக்களுக்கு 3 வாரங்களுக்கு உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

நாம் ஏன் உணவுகளை விரயம் செய்யக்கூடாது:

உணவுகளை விரயம் செய்வது அதர்மமான ஒரு செயலாகும். உலகில் பலர் உணவு இல்லாத காரணத்தினாலும், பசியினாலும், பட்டினியாலும் செத்து மடிகின்றார்கள். ஐக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் கூற்றுப்படி உலகெங்கிலும் 920 மில்லியன் மக்கள் பசியினால் மரிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் சாப்பிடாமல் வீணாக்கப்படும் உணவுகள் ஒரு நாளைக்கு 4 மில்லியன் மக்களுக்கு உணவாக கொடுக்கப்படலாம்.

நீங்கள் சாப்பிடாத உணவுக்கு காசு கொடுப்பாது அநியாயமான ஒரு செயலாகும்.

நீங்கள் சாப்பிடாத உணவுகளை வாங்குவதுஇ உணவுக்கு போலியான ஒரு தேவையை ஏற்படுத்தி விடும். வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வீசப்படும் உணவினால் அந்த உணவு தேவை அதிகரிப்பதோடு அதன் விலையும் ஏற்றமடைகிறது. இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அல்லலுறுகின்றன.

உணவு உற்பத்திக்காக நிறைய தண்ணீரும், எரிசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் கேடாக அமைகிறது.

குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும் மக்கும் குப்பைகள் உற்பத்தி செய்யும் மெத்தீன் வாயு சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வாயுவாகும்.

உணவு விரயத்துக்கு எதிராக நாம் ஒரு பிரச்சாரம் நடத்தியாக வேண்டும். (பிரிட்டன் உணவை விரும்பு, விரயத்தை வெறு என்ற பிரச்சாரத்தை 2007ல் நடத்தியது) இந்த இயக்கம் உணவுகளை முறையாக திட்டமிடுதல், மீந்த உணவுகளை மிச்சப்படுத்துதல், தேவையான உணவுகளுக்கு மட்டுமே ஆர்டர் செய்வது, கையுடன் ஒரு பையைக் கொண்டு சென்று மிச்ச உணவுகளை வீட்டு நாய்களுக்கு கொண்டு வருவது போன்றவற்றை செய்யலாம். விழக்காலங்கள், பிறந்தநாள், திருமணங்களின் போது விரயத்தைத் தடுப்பதற்கு பயனீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் உணவு விரயத்தைத் தடுக்கும் எளிமையான நடவடிக்கைகளாகும்.

கழிவுகளை மக்க வைத்து உரமாக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்த வீட்டுக் கழிவுகளும் கூட குப்பை தொட்டியில் போய் சேரும்.

அரசாங்கங்களும், நிறுவனங்களும் தங்கள் நிகழ்ச்சிகளில் கண்மூடித்தனமாக உணவுகளை பரிமாறக்கூடாது. உணவு விடுதிகள் தட்டுக்களில் மீதம் வைக்கும் உணவுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உணவு விடுதிகள், ரொட்டி கடைகள், பேராங்காடிகள் விற்கமுடியாது ஆனால் சாப்பிடும் நிலையில் உள்ள உணவுகளை அனாதை இல்லாங்கள் போன்ற இடங்களுக்கு அனுப்பலாம். பெரிய அளவில் உணவு விரயம் செய்யும் ஓட்டல்கள், சொகுசு உணவு விடுதிகள், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகளைத் தண்டிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் 5 நட்சத்திர ஓட்டல்களாக இருந்தாலும் கூட அடுத்தவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.

மற்றவர்கள் பசித்திருக்கும் போது உணவுகளைக் கீழே கொட்டுவது ஒரு இழிவான செயல், பணத்திற்குக் கேடு, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துகிறது. நாம் வீசி எறியும் உணவுகள் இன்னொருவரின் பசியை ஆற்றும். ஒருவரின் தட்டுக்கு செல்ல வேண்டிய உணவை வீசி எறிவதற்கு நமக்கு உரிமை கிடையாது. உணவுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரத்திற்கு உரியவர்கள் நாம். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம் உணவு விரயத்தை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

உணவு விரயத்துக்கு எதிரான போரை இப்பொழுதே தொடங்குவோம்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்இ ஜேபி.
தலைவர்

Monday, November 23, 2009

மலேசிய இந்திய இளைஞர்களின் அவல நிலை!

இந்த வீடியோவை பாருங்கள். நமது இந்திய இளைஞர்களின் திறமைகள் இப்படிப்பட்ட செயல்களில்தான் சிறந்து விளங்குகின்றன.


Find more videos like this on My Journeys Videos

Thursday, November 5, 2009

பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்யுங்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய கேடு!

நம் நாட்டில் பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காக பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள். பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும்பொழுது 40 சென்னிலிருந்து அதே நீரை விடுதிகளால் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது.

பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீருக்கும்இ வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்று பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது என்றார் இத்ரிஸ்.

குழாய் நீரில் குளோரின் சேர்த்திருப்பதற்கான வாடை இருக்கும். ஆனால் பாட்டில் நீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழாய் நீருக்கும் பாட்டில் நீருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பாட்டில் நீர் குடிப்பவர்கள் நவீனமாகவும்இ கவர்ச்சியாகவும்இ வசதி படைத்தவர்களாகவும்இ ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்களாகவும் விளம்பரங்கள் பறை சாற்றுவதால் பயனீட்டாளர்கள் பாட்டில் நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பாட்டில் நீர் குடிப்பதால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் கிடைப்பதாக இன்னும் சில பயனீட்டாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம்இ பொட்டேஸியம்இ துத்தநாகம் போன்றவை தண்ணீரில் மிக மிக சொற்ப அளவில் இருக்கிறது. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இத்ரிஸ்.

பாட்டில் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய்இ பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடம் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள்இ பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு பாட்டிலைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன. இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது 1000 வருடங்களாவது பிடிக்கும் என்றார் இத்ரிஸ்.

பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1இ Pநுவுஇ Pநுவுநு ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் தண்ணீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் பாட்டில் நீர்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30ழுஊ சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் பாட்டில் நீர்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரில் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும் என்றார் இத்ரிஸ்.

Pநுவு உபயோகத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பாட்டில் நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத்தன்மை உடையதாக ஆகிறது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும்.

பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை. மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில சிறிது எலுமிச்ச்சையைக் கலந்து குடித்தாலே புத்துணர்வு கிட்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Saturday, October 31, 2009

சிங்கப்பூர் வரலாறு - சிங்கபுரம்

எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின் நோக்கி உங்களை - உங்கள் வரலாற்றை புரிந்துக் கொள்ள அறிவு கிடைக்கிறது.


சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை,அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளன.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.



இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975). பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச் சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது. அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடர்ந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்றேறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல்.தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழத் தங்கினான். ஆனால்,மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை.சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரனுக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது.ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தைத் செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்துவிட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடித் தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார், அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிஸ்.அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார்.140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 -இல் சிங்கப்பூர் அன்றைய "மலாயா" வுடன் இணைந்தது.சிங்கப்பூர்,மலாயா இணைந்த நாட்டை "மலேசியா" என அழைத்தார்கள்.ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது.கருத்து வேற்றுமையாலும், கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது. சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்குத் தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது.

மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு,மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களைப் பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புகுரியது.

சிங்கப்பூரில் தமிழர்


1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது.1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர். இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர்.தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். "திருவள்ளுவர்", "வாசுகி", "அரவிந்தர்", "நாகம்மையார்", "சாரதா தேவி","கலைமகள்", "உமறுப் புலவர்" போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.


ஆலயங்கள்

வழிபாட்டின் திருவிடங்களாகத் திருக்கோயில்கள் திகழ்கின்றன். திரைகடலோடி திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் உருவாக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது.
அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறன்றன.

ஆலய முகவரி
Sri Krishnan Temple,
152 Waterloo St.,
Singapore 187961
Tel 6337 7957 F, 6334 2712
67695784 F. 67699003
srikrisnatemple@hotmail.com

- கிருஷ்ணன், சிங்கை

தனுஷ்கோடி புயல், 1964

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. இதன்போது சென்னையில் இருந்து இராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த தொடருந்து அடித்துச் செல்லப்பட்டதில் அதில் சென்று பயணித்த 123 பேரும் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்
புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. தனுஷ்கோடியைப் புதுப்பிக்க அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது. தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது.

அதன் தொடர்பான கட்டுரையை கீழே படிக்கவும்.

தனுஷ்கோடி - டிசம்பர் 23,1964 தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம்.

தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் டிசம்பர் 23,1964.

1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று தனுஷ்கோடியைத் தாக்கிய சுனாமி, அழகிய தனுஷ்கோடியை சின்னாபின்னமாக்கி, அலங்கோலப்படுத்தி விட்டுப் போனது.

மன்னார்வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. அதை அப்போது கடல் கொந்தளிப்பு என்று பொதுவான வார்த்தையால் அழைத்தனர்.

அன்றெல்லாம் சுனாமி என்றால் என்ன என்றே அக்காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நமது காலத்தில் நம்மைத் தாக்கிய சுனாமியைப் போன்ற ஆழிப் பேரலைதான் அன்றைய தனுஷ்கோடியையும் அலைக்கழித்துள்ளது.

இந்த அலை 20 அடி உயரத்துக்கு ராட்சத அளவில் எழும்பி வந்தது. ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் தனுஷ்கோடி நகரம் இருந்தது. 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட அழகிய மீனவ நகரம்.

அப்போது அதிகாலை 3 மணி இருக்கும். மீனவ மக்களும், பிறரும் நிம்மதியாக கண்ணயர்ந்திருந்த நேரம் அது. ஆனால் கடல் மட்டும் காட்டுத்தனமாக விழித்துக் கொண்டிருந்தது.

பொங்கி வந்த கடல் வெள்ளமும், திரண்டு வந்த ஆழிப் பேரலைகளும், தனுஷ்கோடிக்குள் புகுந்து, புரட்டிப் போட்டது. நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.
நகரிலிருந்த முக்கால்வாசிப் பேர் முகவரி தெரியாமல் கடல் அன்னையின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு ஒரு ரயில் போய்க் கொண்டிருந்தது. அதற்கு அப்போது போட் மெயில் என்று பெயர். தனுஷ்கோடி வரை செல்லும் இந்த ரயிலில் தமிழ்நாட்டில் பிறபகுதிகளில் இருந்து பயணிகள் தனுஷ்கோடி சென்று அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை செல்வார்களாம். அப்போதெல்லாம் இலங்கைக்கும், நமக்கும் நல்லுறவும், பயணப் போக்குவரத்தும் இருந்து வந்தது.

(தனுஷ்கோடியில் அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம்)

எனவே இலங்கை செல்ல ஏராளமான பயணிகள் அதில் இருந்தனர். தனுஷ்கோடியைத் தாக்கிய புயலுக்கும், ஆழிப் பேரலைக்கும் இந்த ரயிலும் தப்பவில்லை. அப்படியே கடலுக்குள் இழுத்துப் போட்டு விட்டது போட் மெயிலை, கடலில் எழுந்து வந்த ஆழிப் பேரலை.
அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் 2000 பேர் உயிரிழந்தனர்.

அழகிய தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே.

தனுஷ்கோடியைப் புதுப்பிக்க நமது அரசுகள் ஏனோ மறந்து போய் விட்டன. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிப்பதைக் காணலாம். அவர்களும் கூட தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். சுடச் சுட மீன் சுட்டுத் தருவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர்.

ஒரு காலை கடலுக்குள்ளும், இன்னொரு காலை கடல் மண்ணிலுமாக வைத்து தனுஷ்கோடி தடம் மாறிப் போய்க் கிடக்கிறது.

தனுஷ்கோடியின் ரயில் நிலையத்தை கடல் கொண்டு விட்டது. ரயில் தண்டவாளம் மட்டும் பாதி கடலுக்குள் சென்றபடி காட்சி அளிக்கிறது - கடந்த காலத்தில் தாங்கள் 'தடம் புரண்ட' கதையை சொல்லியபடி.

ராமேஸ்வரம் வரும் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், ஒரு எட்டு தனுஷ்கோடிக்கும் சென்று வருவது வழக்கம். இப்படி வந்து செல்பவர்களால்தான் இன்னும் தனுஷ்கோடி நமது மன 'டைரி'யிலிருந்து அழியாத காவியமாக உள்ளது.

Friday, October 30, 2009

புகைப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் உண்மையிலே ஆக்கப்பூர்வமானதாக இருப்பதை உறுதி செய்யுங்கள்!


வருகின்ற 2010லிருந்து 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒரு சிகரெட் பேக்கட்டின் ஆகக் குறைந்த விலை மவெ. 6.20 என்று நிர்ணயிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோ தியோங் லாய் அறிவித்துள்ளதை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

ஆனாலும் இந்த விலை அப்படி ஒன்றும் குறைவு என்றும் கூறிவிட முடியாது. உண்மையிலேயே புகைப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றால், புகைப்பதால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த விலை நிர்ணயம் ஒன்றும் நினைத்த அளவுக்கு பயனைத் தராது என்று இத்ரிஸ் கூறினார்.

“தர மதிப்பு” கொண்ட சிகரெட்டின் விலை அதிகரித்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மேற்கொண்ட ஆய்வு காட்டுகிறது. லங்காவியிலிருந்து வரி விலக்கு பெற்ற சில பிரண்டு சிகரெட்டுக்கள் பயனீட்டாளர்களுக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. இன்னும் சில பிரண்டு வகைகள் வியட்னாம், வங்காளதேசம் மற்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சிலவற்றில் புகைப்பதால் விளையும் கேடுகள் தொடர்பான எச்சரிக்கை படங்களும் இல்லை என்றார் இத்ரஸ்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்களின் இப்போதைய வாங்கும் விலை மவெ. 9லிருந்து மவெ. 30 வரைக்கும் ஆகும். “தர மதிப்பு” கொண்ட சிகரெட்டுக்கள் (20 சிகரெட்டுக்கள்) மவெ.2.20லிருந்து மவெ. 2.50 வரைக்கும் விற்கப்படுகின்றன. இவை 73மூ விலை குறைவாகும்.

முதன்மை பிரண்டு சிகரெட்டுக்கள் இங்கிலாந்தில் மவெ.36 - மவெ.60இ அயர்லாந்து மவெ. 37 - மவெ. 98இ சிங்கப்பூர் மவெ. 27 - மவெ. 80இ நியூசிலாந்து மவெ. 27 - மவெ. 20, ஜப்பான் மவெ. 10 - மவெ. 60இ ஸ்ரீலங்கா மவெ. 10 - மவெ. 90 என்ற விலைகளில் விற்கப்படுகின்றன.

மலேசியாவில் புகைக்கும் பழக்கம் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மலேசிய ஆண்கள் புகைக்கிறார்கள். 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 50 மலேசிய பதின்மர்கள் ஒவ்வொரு நாளும் புகைக்கத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000 பேர் புகைப்பது சம்பந்தப்பட்ட நோய்களால் இறக்கிறார்கள். மலேசிய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் தோராயமாக மவெ. 4.8 பில்லியனை புகையிலை தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க செலவழிக்கிறது.

பிரிவு 16(1)ன் படி “20 சிகரெட்டுக்கும் குறையாத எண்ணிக்கையில் உற்பத்தியாளர் சிகரெட்டுக்களை பேக் செய்ய வேண்டும்” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் இன்னும் விற்பனையில் உள்ளன. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட் விற்பனைக்கான தடை 2010 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது. 14 சிகரெட்டுக்கள் கொண்ட பேக்கட்டுக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கூறினார்.

சிகரெட்டின் உதிரி விற்பனையையும் மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. ஆனால் பி.ப.சங்கம் பினாங்கில் 15 கடைகளில் மேற்கொண்ட சோதனையில் 8 கடைகளில் இன்னும் சிகரெட் உதிரியாகத்தான் விற்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிகரெட்டும் 60 காசுக்கு விற்கப்படுகிறது. இப்படி விற்கும்பொழுது 20 சிகரெட்டுக்கள் கொண்ட ஒவ்வொரு பேக்கட்டையும் விற்று முடிக்கும்பொழுது விற்பனையாளருக்கு மவெ. 3.80 இலாபம் கிடைக்கிறது. இவ்வாறு உதிரி சிகரெட் விற்கும் சில கடைகள் பள்ளிக்கூடத்திற்கு பக்கத்திலேயே இருப்பதால் மாணவர்கள் வாங்கிப் புகைக்கவும் வழி வகுத்துவிடுகிறது என்றார் இத்ரிஸ்.

சிகரெட் விற்பனை செய்யும் ஒவ்வொரு கடையும் அதனுடைய லைசென்ஸை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்குமாறு விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும். சிகரெட் விற்பனைக்கான விதிமுறைகளை மீறும் பட்சத்தில் இந்த லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்.

சிகரெட்டுக்கான வரியும் அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் இயற்கையாகவே சிகரெட் விலை ஏற்றம் காணும். இந்த விலை ஏற்றம் சிறார்கள் புகைக்க ஆரம்பிப்பதற்கு ஓரளவு தடையாக இருக்கும் என்றார் இத்ரிஸ்.

சிகரெட் வாங்குவதற்கான குறைந்த பட்ச வயதான 18 வயதை 21 வயதாக அரசாங்கம் உயர்த்த வேண்டும். ஓட்டு போடுவதற்கும் 21 வயதுதாயே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞர் எவ்வளவு காலத்திற்கு புகைக்கும் பழக்கத்தை தொடங்காமல் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் புகைக்காமலே இருப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.

விமான நிலையங்களில் வரி இல்லா சிகரெட் விற்பனைக்குத் தடை செய்யப்பட வேண்டும். லங்காவித் தீவில் சிகரெட் விற்பனைக்கு அறவே வரி இல்லை. இது முற்றிலுமாகத் துடைத்தொழிக்கப்பட வேண்டும். பொருட்கள் வாங்கிவிட்டு காசு செலுத்தும் கவுண்டரில் பயனீட்டாளர்களைத் தூண்டும் வகையில் சிகரெட்டுக்களை அடுக்கி வைப்பதும் துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்றார் இத்ரிஸ்.

புகையிலையை முற்றிலும் துடைத்தொழித்து வருகின்ற இளம் சமுதாயத்தினர் ஆரோக்கியமாக வழி வகுக்க வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Wednesday, October 28, 2009

எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி தகவல் பெறுவதற்காக பி.ப.சங்கத்திற்கு வருகை

சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள எயிம்ஸ் பல்கலைக்கழகத்தின் 85 உயிரியல் தொழில்நுட்ப மாணவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணி மனைக்குஇ கல்வி தொடர்பாக வருகை மேற்கொண்டார்கள்.


(பி்.ப.சங்கத்தின் இயற்கை வேளாண்மை பட்டறை பயிற்ச்சிக்கு கலந்து கொண்ட எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர்)

டாக்டர் ஹஷாமுடின் ரஹ்மாட் தலைமையில் வந்த இம்மாணவர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை வேளாண்மை தொடர்பான பல விளக்கவுரைகள் இம்மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த செயல் விளக்க முறை நடவடிக்கையில் எலுமிச்சை முட்டை கரைசல்இ நுண்ணுயிர் ஊக்கிஇ குணப்பசலம்இ மூலிகை பூச்சி விரட்டிஇ மண்புழு குளியல் நீர்இ மண்புழு இயற்கை உரம் தொடர்பான தெளிவான விளக்கங்கள் தரப்பட்டதாக இச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அவர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க
இம்மாணவர்களின் கல்விக்குத் தொடர்பான இந்த செயல்விளக்க முறைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக டாக்டர் ஹிஷாமுடின் அமாட் தெரிவித்ததாகவும் சுப்பாராவ் கூறினார்.


என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Monday, October 26, 2009

ஜோதிடம் பயில்


ஜோதிடம் என்பது வான் வெளியில் உள்ள கோள்களின் நகர்வுகளும் அவைகளின் கதிவீச்சுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் பல விழைவுகளை உண்டு பண்ணி பலன்களை பிரதிபலிக்கின்றன. இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்

ஜோதிடம்

அண்டத்தில் உள்ள கோள்களின் இயக்கத்தை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் அந்தந்த கோள்களின் கதிர்வீச்சுகளின் பலம், நகர்வுகளின் வேகம் அடிப்படையில் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஏற்படும் பலாபலன்களை கணித முறையில் கணக்கிட்டு ஜோதிட சாஸ்திர மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றை கற்று பலன் பெறுவதே எமது நோக்கம்.

ஜோதிடத்துக்கான வானியல் அடிப்படை:

அண்டவெளியில் பல ஆயிரகணக்கான விண்மீன் குடும்பங்கள் உள்ளன. அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய குடும்பமும் ஒன்றாகும். நமது சூரிய குடும்பத்தில் பல கிரகங்கள் உள்ளன. அவை யாவும் சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன. அவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும். சந்திரன்; பூமியின் உப-கிரகமாகும். இவையாவும் தம்மிடையே உள்ள ஈர்ற்ப்பு விசையால் இணைக்கப்பட்டு ஒரு குடும்பம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

விண்மீன்கள் தானாகவே (மின்னி மின்னி) மிளிர்வன. ஆனால் கிரகங்கள் தானாக ஒளிர்வதில்லை. கிரகங்களும், உப-கிரகங்களும் விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன.

நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமியின் உப-கிரகமான சந்திரனும் பூமியைச் சுற்றி வலம் வருவதுடன் (பூமியை ஒரேபக்கப் பார்வையுடன் இணைந்து) சூரியனையும் சுற்றி வருகின்றது.

அத்துடன் பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 8-கிரகங்களும, சூரியனை மையமாக கொண்டு பூமி சுற்றும் அதே சுற்றுப் பாதையில் வித்தியாசமான வேகத்துடன் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிபு.

இதன் அடிப்படையில் புவியில் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.

விளக்கமாக கூறுவதாயின் சூரியனும் மற்றைய 8-கிரகங்களும் பூமியை மையமாக வைத்து சுற்றி வருவதாக சோதிட சாஸ்திரம் கணிக்கின்றது. இம் முறை மூலம் கிரகங்களும், நட்சத்திரங்களும் பூமியில் வாழும் உயிரினங்களிற்க்கு ஏற்படுத்தும் பலாபலன்களை (நன்மை, தீமைகளை) கணிக்க முடிகின்றது.

பூமியை மையமாக கொண்டு கணிக்கப்படும் இராசிச் சக்கரம் Zodiac என்றழைக்கப்படும். இது கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் ஞாயிற்றின் தோற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும்.

பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு 24 மனித்தியாலங்கள் (1-நாள்) எடுக்கின்றது. ஆனால் சூரியனை (சூரியன் பூமியச் சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கிறது.) பூமி (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) ஒருமுறை சுற்றிவர ஒரு ஆண்டு 365 1/4 நாட்கள் ஆகின்றன. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றுவதால் பருவ காலங்கள் பூமியில் தோன்றுகின்றன.

சந்திரன் பூமியைச் சுற்றுவதற்கு 27.32 நாட்கள் எடுக்கின்றது. அதன் பயனாக பூமியில் பூரணை, அமாவாசை, போன்ற 30 திதிதிகள் பூமியில் உண்டாகின்றன (விபரமாக பஞ்சாங்கம் பகுதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).

சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. இந்த 9 கிரஹங்களில் சந்திரனுக்கு ஜோதிட உலகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தினத்தன்று எந்த நட்சத்திரத்தின் மேல் சந்திரன் சஞ்சாரம் செய்கிறாரோ அதுவே அன்றைய நட்சத்திரம் ஆகும்

சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் உதயமாவர். வைகாசி மாதத்தில் ரிஷபத்தில் உதயமாவர். இப்படியே மாதம் ஒரு ராசியில் சஞ்சரித்து திரும்பத் திரும்ப 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார் (சூரியன் சுற்றுவதில்லை ராசிகள் தான் சூரியனை சுற்றி வருகின்றன எனக்கொள்க). இவ்வாறாக சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் உதயம் ஆகிறார்

ஒவ்வொரு மனிதனின் ஜாதக-குறிப்பும் அவன் பிறந்த நேரத்தின் கோள் அமைப்பை 360 பாகை கொண்ட (Zodiac எனப்படும் இராசிச் சக்கரம்) நீள் வட்டத்தின் அமைப்பை குறிப்பதாகும். (நீள்வட்டம் வரைதல் காலப்போக்கில் திரிபுற்று நீள் சதுரமாக தற்போது வரையப்படுகிறது.) இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டங்கள் பன்னிரண்டும்; பன்னிரண்டு இராசிகள் எனப்படும்.

இராசிச்-சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இராசிகள் 12:

1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் உதய-லக்கினம் என்பது பிறந்தோரின் அண்ட இருப்பு நிலையைக் குறிக்கும். அதாவது இந்தப் பேரண்டம் 360 பாகைகளில் பிரிக்கப் படும் போது இந்த உயிர் பிறந்த இடம் மற்றும் கோள அமைவு அமைந்த இடம் எத்தனையாவது பாகையில் அமைந்தது என்பதைக் குறிக்கும்.

மேலும் பார்க்கையில், ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறம், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களுண்டு. ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும் ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும்.

சனிக் கோள் கருநீல நிறத்துக்கும், செவ்வாய்க் கோள் செந்துவர் நிறத்துக்கும் உரியன ஆகுதல் இதற்கு உதாரணங்களாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை உமிழ்ந்து (வெளிப்படுத்திக்) கொண்ட வண்ணம் உள்ளன. அவை முறையே அமைந்த இடத்தால் பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.

பண்டைக்காலச் சோதிட நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக் கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன.

அக்கோள்கள் பின்வருமாறு:


1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)


மேலும், கோள்களின் அளவு, அவற்றின் தட்ப-வெட்பநிலை, அவற்றில் அடங்கியுள்ள தாதுக்களின் அடைப்படையில் தான் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படும். அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுக்கள் அந்த கதிர்வீச்சை எந்த அளவு கிரகிக்கிறதோ அதற்கேற்றாற்போல் நன்மை, தீமைகளை அடையும் நிலை உள்ளதாக ஜோதிடம் பொதுவாகக் கூறுகிறது.

இக் குறைகளைப் போக்குவதற்காக "அதிஸ்டக் கற்களை" பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். இவற்றின் மூலம் நன்மை தரக்க்கூடிய கதிர்களை உள்கிரகிக்க முடியும். அதன் பயனாக வாழ்க்கையில் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிஸ்டக்கற்களை பாவிப்பதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். தவறான கற்களை பாவித்தால் தீமைகள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. (நன்மை தரக்கூடிய அதிஸ்டக் கற்கள் பற்றிய விபரங்கள் இவ் இணையத் தளத்தில் "அதிஸ்டக் கற்கள்" என்னும் பகுதியில் பதியப்பட்டுள்ளன.)

பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் தொகு பயனாகப் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் உச்சம் பெற்றதாக உரைக்கப்படும். இதைத்தான் "கிரக வலிமை" என்பர்.

ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.

இனி சோதிடம் என்பது எவ்வாறு ஒரு மனிதனை ஆட்சி செய்யும் எனக் காண்போம். ஒவ்வொரு மனிதனுக்கும் தலை வட துருவமாகவும், கால்கள் தென் துருவமாகவும் அமைகின்றன. (எனவேதான் தலையை வடக்குப் பக்கம் வைத்துப் படுக்கக் கூடாதெனப் பெரியோர் கூறுவர். ஏனெனில், ஒத்த தன்மையுடைய காந்தத் துருவங்கள் விலகும். இதனால் ஏற்படும் விலக்கு விசை மூளையில் மென்மையான அழற்சி மற்றும் தகைவின்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் பிறக்கும் போதே அவனுக்கு நிலைப் படுத்தப்படுகிறது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. நாம் பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீசல்கள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து என்ன வலிமையுடன் பெறப் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.

வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் போழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது என்று கூறலாம்.

எவ்வாறெனில் ஒரு புகைப்பட வீழ்த்தியில் (காமிரா) படச்சுருளில் பதியும் முதல் ஒளி (எக்ஸ்போசிங்) யின் வடிவமே அதில் நிலைப்படுத்தப்படுதல் போல் நாம் பிறந்த வேளையின் கோளமைப்பு, அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள் நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மந்தமாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நமது பிறக்கும் காலத்தின் உயிர்க் காந்தப் புலமும் கோள் நிலைகளால் அமைக்கப்படுவது இதனால் தெளிவாகும்.

இனி வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.

அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனைக் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.

இலக்கினம்
புவி தன்னைத்தானே ஒரு நாளில் சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் அதனைச் சுற்றியுள்ள 12 இராசிகளையும் கடந்து செல்கின்றது. ஜோதிடம் சார்பாகப் பார்க்கும் போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம்.

எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது.

மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாக "//ல" குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும் போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கம். சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது.

இராசிச் சக்கரத்தின் அமைப்பைப் பற்றி அறிவோம்.
சூரியனினின் தோற்றப்பாதை (முழுவதுமாக 360 பாகை ) ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட பன்னிரண்டு இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும் அவற்றுள் சிலவே பூமியின் சுற்றுப்பாதைக்குள் அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன.

அவைகள் 27 நட்சத்திரங்கள்(கூட்டங்கள்) என கணக்கிடப்பட்டு ஒவ்வொன்றும் 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனவே 27 நட்சத்திரங்களும் 108 பாதங்களை கொண்டன எனலாம். ஒவ்வொரு இராசியும் நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களை கொண்டனவாக கணிக்கப்படுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வித்தியாசமான வேகத்தினைக் கொண்டன. சந்திரன் பூமியைச் சுற்றி வர 27.32 நாட்கள் ஆகின்றது. சூரியனுக்கு ஒரு வருடம் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள்; ராகு, கேதுவிற்கு 18 ஆண்டுகள்; சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

"அசுவினி" நட்சத்திரம் ஞாயிற்றின் தோற்றப் பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" நட்சத்திரம் கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.

ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது பூமி இந்த வான மண்டலத்தை (சூரியனை) ஒருமுறை சுற்றி வரும் காலம் ஆகும். பூமி ஒருமுறை வானமண்டலத்தைச் சுற்றிவிட்டால் ஒர் ஆண்டு முடிந்து விடுகிறது. இந்த வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது எனக் கூறுகின்றோம். அதாவது வான மண்டலத்தின் ராசிச்சக்கரத்தில் உள்ள மேஷ ராசியில் சூரிய பகவான் மீண்டும் உதயமாகும் காலமே தமிழ் புத்தாண்டு தினமாகும்.

மேட ராசியில் இருந்துதான் சூரியன் சுற்ற ஆரம்பிக்கின்றது என ஜோதிடம் கணிக்கின்றது. (சூரியன் ராசி சக்கரத்தைச் சுற்றுவதில்லை; ராசிச் சக்கரம் தான் சூரியனை சுற்றுவதாக கொள்வோம்). இந்த ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முடிய ஒரு சுற்று முடியும். இந்த காலம் தான் ஒராண்டாகும்.

இந்த ஆண்டுக்கும் பெயர் வைத்து இருக்கிறோம். வருகின்ற ஆண்டின் பெயர் "சர்வதாரி" ஆண்டாகும். இது தமிழ் ஆண்டு. இதே போன்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்த பின்பு திரும்ப முதலிருந்து ஆரம்பிக்கின்றன.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதிகளாக இருக்கிறார்கள். சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒவ்வொரு ராசிக்குதான் அதிபதி (உரிமைக்காரன்). ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.

சூரியன் விண்மீன்: சிங்க-ராசிக்கும் அதிபதியாவார்.

சதிரன் கிரகம்: கடகம்-ராசிக்கும் அதிபதியாவார்.

செவ்வாய் கிரகம்: மேஷ-ராசிக்கும், விருட்சிக-ராசிக்கும் அதிபதியாவார்.

புதன் கிரகம்: மிதுன-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.

குரு கிரகம்: மீன-ராசிக்கும், தன-ராசிக்கும் அதிபதியாவார்.

சுக்கிரன் கிரகம்: இடப-ரசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.

சனி கிரகம்: மகர-ராசிக்கும், கும்ப-ராசிக்கும் அதிபதியாவார்.

ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றதோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள் அசைவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.

பஞ்சாங்க விளக்கம்:
பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 1. திதி, 2.வாரம், 3.நக்ஷ்த்திரம், 4.யோகம், 5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன. ஒன்று திருகணித பஞ்சாங்கம், மற்றையது வாக்கிய பஞ்சாங்கம்.

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தை "சித்தாந்த ஜோதிஷ காலம்" என அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப் பட்டன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது "வாக்கிய முறை" எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களைப் பார்ப்பதற்கு "ரெலஸ் கோப்புகள்" வந்துவிட்டன. இக்காலத்தில் கிரகங்களின் வேகம், அவற்றின் பாதையைக் கண்டறியும் அளவிற்குக் விஞ்ஞானம்-கணிதம் வளர்ந்து விட்டது. தற்போதுள்ள விஞ்ஞான-கணித முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமை வாய்ந்தது என்று கருதுவோரும் உளர்.

காளிதாஸனுடைய "உத்திர காலாம்ருது" மந்த்ரேஸ்வருடைய "பல தீபிகை" என்னும் சோதிட நூல்கள் திருகணித முறைதான் சரியான முறை எனக் கூறுகிறது.

திதி:

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்படுகின்ற விரிசலினால் சந்திரனில் விழும் சூரிய கதிர்களின் பிரதிபலிப்பு சந்திரனின் தோற்றத்தில் உண்டாகும் மாற்றங்களாகும். அமாவாசை தினம் சூரியனும் சந்திரனும் "0" டிகிரியில் காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார்.அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும். இந்தப் 15 நாட்களை சுக்கில பக்ஷ்க்ஷம் என்பார்கள்.

அதே போல் பெர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி, .........அம்மாவாசை
முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை கிருஷ்ணபக்ஷ்ம் என்பார்கள். தமிழில்கூறினால் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும். பொதுவாக அஷ்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர் (அட்டமி, நவமி தொட்டது நாசம் - என்பது பழமொழி).

வாரம்:
வாரத்தைப் பற்றி நாம் அதிகம் கூற வேண்டியது இல்லை. திங்கள், செவ்வாய், புதன் என்கிற கிழமைகள்தான் வாரம் என்பது. இன்றைக்கு என்ன கிழமை என்கிற விபரமும் பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். பஞ்சாங்கத்தைப் பார்க்காமலேயே எல்லோருக்கும் என்ன கிழமை என்று தெரியும்.

நக்ஷ்த்திரம்:
1. அஸ்வினி, 2. பரணி,
3. கார்த்திகை, 4. ரோகினி,
5. மிருகசீரிஷம், 6. திருவாதரை,
7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம்,
10. மகம், 11. பூரம்,
12. உத்திரம், 13. ஹஸ்தம்,
14. சித்திரை, 15. ஸ்வாதி,
16. விசாகம், 17. அனுஷம்,
18. கேட்டை, 19. மூலம்,
20. பூராடம், 21. உத்திராடம்,
22. திருவோணம், 23. அவிட்டம்,
24. சதயம், 25. பூரட்டாதி,
26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.

கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகம். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ, 2. பாலவ, 3. கெலவ, 4. தைதூலை, 5. கரசை, 6. வணிசை, 7. பத்தரை, 8. சகுனி, 9. சதுஷ்பாதம், 10. நாகவம், 11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
இதில் இரண்டு வகைப்படும். முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம், 2.ப்ரீதி,
3.ஆயுஷ்மான், 4.சௌபாக்யம்,
5.சோபனம், 6.அதிகண்டம்,
7. சுகர்மம், 8. திருதி,
9.சூலம், 10.கண்டம்,
11.விருதி, 12.துருவம்,
13. வியாகாதம், 14. ஹர்ஷணம்,
15. வஜ்ரம், 16. சித்தி,
17.வியதிபாதம், 18. வரீயான்,
19.பரீகம், 20. சிவம்,
21. சித்தம், 22. சாத்தீயம்,
23. சுபம், 24.சுப்ரம்,
25.பிராம்யம், 26.ஐந்திரம், 27. வைதிருதி.

மற்றொறு யோகம் தினமும், சந்திரனும் சம்மந்தப்பட்டது. நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தே யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம்,புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

மீதியுள்ள நக்ஷ்த்திரங்களான கார்த்திகை, சித்திரை, மகம், விசாகம்,
பூராடம், உத்திராடம், பூரட்டாட்தி ஆகிய 7 நக்ஷ்க்ஷத்திரகள் வந்தால் மரணயோகம் ஆகும்.
சித்தயோகத்திலும், அமிர்தயோகத்திலும் நல்ல காரியங்கள் எல்லாம் செய்யலாம்.
மரண யோகத்தில் எல்லா நற்காரியங்களும் விலக்கப்படவேண்டும்.
பஞ்ச அங்கங்களான திதி,வாரம்,நக்ஷ்த்திரம், யோகம், கரணம் ஆகியவைகளைத் தெரிந்து கொண்டீர்கள்.

ஜோதிட காலவாய்பாடு


60 தற்பரை = 1 வினாடி
60 வினாடி = 1 நாளிகை
60 நாளிகை = 1 நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்

60 வினாழிகை = 1 நாழிகை
60 நாழிகை = 1 நாள்
2 1/2 நாழிகை = 1 மணி
2 1/2 வினாழிகை 1 நிமிஷம்

நாள் என்றால் என்ன?
இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு 12.01 மணியில் இருந்து மறுநாள் இரவு 12.00 மணி முடிய ஒரு நாள் என்பது ஆங்கிலேயரின் முறை. நமது பண்டைய (சோதிட) முறை சூரியோதயம் முதல் மறு நாள் சூரியோதயம் வரை ஒரு நாள். உதாரணமாக இன்றைக்கு காலை 6.40க்கு சூரியோதயம் எனக் கொள்ளுங்கள். நாளைக் காலை 6.39க்கு சூரியோதயம் எனவும் கொள்ளுங்கள். இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது ஒரு சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் உள்ள காலமே ஒரு நாள் எனப்படும்.

ஜோதிடத்தில் விண்மீன் குழுக்கள்:

"அசுவினி" ஞாயிற்றின் தோற்றப்பாதையில் முதற் இராசியிலும் "ரேவதி" கடைசி இராசியிலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். "மேடம்" இராசி சக்கரத்தில் முதற் கூறு ஆகும், "மீனம்" கடைசிக் கூறு ஆகும்.

இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:

இராசிகளும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களும்:

மேக்ஷம்: (0 பாகை தொடக்கம் - 30 பாகை வரை)
அஸ்வனி 1, 2, 3, 4 பாதங்கள்; பரணி 1, 2, 3, 4 பாதங்கள்; கார்த்திகை 1ம் பாதம்.

ரிஷபம்: (30 பாகை தொடக்கம் - 60 பாகை வரை)
கார்த்திகை 2, 3, 4, பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்.

மிதுனம்: (60 பாகை தொடக்கம் - 90 பாகை வரை)
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்; திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள்; புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்.

கடகம்: (90 பாகை தொடக்கம் - 120 பாகை வரை)
புனர்ப்பூசம் 4ம் பாதம்; பூசம் 1, 2, 3, 4 பாதங்கள்; ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள்

சிம்மம்: (120 பாகை தொடக்கம் - 150 பாகை வரை)
மகம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூரம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திரம் 1ம் பாதம்.

கன்னி: (150 பாகை தொடக்கம் - 180பாகை வரை)
உத்திரம் 2, 3 ,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்

துலாம்: (180 பாகை தொடக்கம் - 210 பாகை வரை)
சித்திரை 2, 3 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்கள்

விருச்சிகம்: (210 பாகை தொடக்கம் - 240 பாகை வரை)
விசாகம் 4-ம் பாதம், அனுஷம் 1, 2, 3, 4 பாதங்கள்; கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள்

தனுசு: (240 பாகை தொடக்கம் - 270 பாகை வரை)
மூலம் 1, 2, 3, 4 பாதங்கள்; பூராடம் 1, 2, 3, 4 பாதங்கள்; உத்திராட்டம் 1-ம் பாதம்.

மகரம்: (270 பாகை தொடக்கம் - 300 பாகை வரை)
உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள், திருவோணம் - 1, 2, 3, 4 பாதங்கள்; அவிட்டம் - 1, 2 பாதங்கள்

கும்பம்: (300 பாகை தொடக்கம் - 330 பாகை வரை)
அவிட்டம் - 3, 4 பாதங்கள்; சதயம்- 1, 2, 3, 4 பாதங்கள்; பூரட்டதி- 1, 2, 3 பாதங்கள்

மீனம்: (330 தொடக்கம் - 360 பாகை வரை)
பூரட்டாதி- 4 ம் பாதம், உத்திரட்டாதி- 1, 2, 3, 4 பாதங்கள்; ரேவதி- 1, 2, 3, 4 பாதங்கள்

Friday, October 23, 2009

"சம்சு" - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் + அல்ஜாசீரா வழங்கும் ஆவணப்படம்



பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் அல்ஜாசீரா தொலைக்காட்சி நிலையமும் சேர்ந்து வழங்கும் "சம்சு" தொடர்பான ஆவணப்படம்.

Tuesday, October 20, 2009

புவா பாலா கிராமத்தின் கடைசி அத்தியாயம்!

கம்போங் புவா பாலா
-------------------------------------------------------------------------------------
புவா பாலா கிராமத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் தாங்கள் தினமும் பினாங்கு மாநிலத்தில் உள்ள பசும்பால் குடிக்கும் பயனீட்டாளர்களுக்கு வழங்கிவந்த பசும்பாலை தொடர்ந்து வழங்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

இந்த புவா பாலா கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மிகப்பெரிய மாட்டுக்கொட்டகையை வைத்திருக்கின்ற இந்த 3 சகோதரர்களான சிவானந்தம்இ முருகன்இ சுப்பிரமணியம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை புவா பாலா கிராமத்தில் மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் மேம்பாட்டாளர் உடைத்ததன் காரணமாக இந்த அச்சம் ஏற்பட்டிருப்பதாக பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

கடந்த புதன்கிழமை வரை இந்த சகோதரர்களுக்குச் சொந்தமான 150 மாடுகள் தினமும் 300 லிட்டர் பசும்பாலை கொடுத்து வந்தன. ஆனால் நேற்று மேம்பாட்டாளர் திடீரென்று மாட்டுக்கொட்டகையின் ஒரு பகுதியை உடைத்துத் தரைமட்டமாக்கியதால் திகிலும் பயமும் அடைந்த கறவைமாடுகள் 300 லிட்டர் பால் கொடுப்பதற்குப் பதிலாக 140 லிட்டர் பாலையே கொடுத்ததாக சிவானந்தம் பி.ப.சங்கத்திடம் தனது மனக்குமுறலைக் கொட்டியதாக சுப்பாராவ் மேலும் கூறினார்.


ஏற்கெனவே வீடுகளை உடைத்த மேம்பாட்டாளர் இப்பொழுது திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மாட்டுக்கொட்டகையை உடைத்தது மிகப்பெரிய தவறு என அவர் கூறினார்.

திரு சிவாவும் அவருடைய சகோதரர்களும் பிரிதொரு இடத்தில் மாட்டுக்கொட்டகையை கட்டிக்கொள்வதற்கு இரண்டு வாரம் காலக்கெட்டு கேட்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேம்பாட்டாளர் சம்மதிக்காமல் திடீரென்று மாட்டுக்கொட்டகையை உடைத்தது இந்தக் கால்நடைகள் மீது கருணை இல்லாததையே காட்டுகின்றது என்றார் அவர்.

இப்பொழுது இந்த மாட்டுக்கொட்டகையிலிருக்கும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் கறவை மாடுகள் கொடுக்கின்ற 300 லிட்டர் பால் இப்பொழுது 150 லிட்டர் பாலாக குறைந்திருக்கின்றது. இது மேலும் குறையக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அச்சகோதரர்கள் பி.ப.சங்கத்திடம் கூறியதாக சுப்பாராவ் கூறினார்.


தங்களின் வருமானத்தை இழந்துள்ள இச்சகோதரர்களுக்கு மாநில அரசாங்கம் கட்டாயமாக நிதி உதவி செய்து தர வேண்டும் என்றும் என்.வி.சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

200 ஆண்டு கால கிணறு மூடப்படுகின்றது
-------------------------------------------------------------------------------------
படத்தில் காணப்படும் கிணறுதான் சுமார் 200 ஆண்டு காலமாக இந்த கம்போங் புவா பாலா கிராமத்தில் இருக்கின்றது. ஒரு காலத்தில் பினாங்கு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது இக்கிராமத்தில் இருக்கும் சுமார் இதே போன்ற 10 கிணறுகளிலிருந்துதான் பினாங்கு மக்களுக்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டிருக்கின்றது.



கே.டி.சிவானந்தம் என்பவரின் மாட்டுக் கொட்டகையிலிருக்கும் இந்தக் கிணறு இப்பொழுது மேம்பாட்டாளரின் அராஜகப் போக்கினால் எந்த நேரத்திலும் மூடப்படக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றது. சிவானந்தம் தன் மாட்டுக் கொட்டகையில் இருக்கும் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் இந்தக் கிணற்றிலிருந்தான் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்.


இந்தக் கிணற்றிலிருந்து சுமார் 50 லிட்டர் தண்ணீர் ஒரு தடவை எடுக்கப்பட்ட அடுத்த ஐந்தே நிமிடங்களிலேயே அந்தக் கிணற்றில் 50 லிட்டர் தண்ணீர் ஊறிவிடும். இந்தக் காட்சியை நேரடியாகப் பார்க்கும்பொழுதுதான் நாம் இந்த புவா பலா கிராமத்தில் எவ்வாறு கிணறுகளில் தண்ணீர் தேங்கிக்கிடக்கிறது என்ற உண்மை தெரிகிறது.

இந்த நீரின் சுவையே வித்தியாசமாக இருக்கிறது. இப்பொழுது இந்தக் கிணற்றை மேம்பாட்டாளர் மூடவிருப்பதால் சிவானந்தத்தின் 150 மாடுகளுக்கும் 50 ஆடுகளுக்கும் எங்கேயிருந்து அவர் தண்ணீர் எடுக்கப்போகின்றார் என்பதுதான் பெரிய கேள்வி.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திலும் தனது மனக்குறையை திரு சிவானந்தம் பகிர்ந்துகொண்டார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Bookmark and Share

Tuesday, September 29, 2009

விண்டோஸில் ஒருங்குறித்தமிழ்

நாம் அனைவரும் பொதுவாக தமிழில் தட்டச்ச எ-கலப்பை, முரசு அஞ்சல், ரைட்டர் போன்ற பல மென்பொருட்களை உபயோகித்துதான் தட்டச்சுகிறோம் அல்லவா..? சில நண்பர்களுக்கு அவர்களது பணி செய்யும் இடத்தில் இத்தகைய மென்பொருட்களை நிறுவுவதற்கு அனுமதி இல்லாமல் இருக்கக்கூடும்.

புதிய மென்பொருட்கள் எதையும் நிறுவாமலேயே விண்டோஸிலேயே ஒருங்குறி(unicode)-த் தமிழில் தட்டச்ச வழி இருக்கிறது என்பதை ஒரு சிலர் அறியாமல் இருக்கக்கூடும். அவர்களுக்காகவும் புதிய யுனிகோட் ஒருங்குறி முறையில் தமிழைத் தட்டச்சி மன்ற உறவுகள் பழக வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே இப்பதிவு.


1. ஸ்டார்ட் (Start) பொத்தானை அழுத்துங்கள்.


2. கண்ட்ரோல் பேனலுக்கு (Control Panel) செல்லுங்கள்.


3. "ரீஜனல் அண்ட் லாங்குவேஜ் ஆப்ஷன்ஸ்" (Regional and Languages Options) ஐகானை சொடுக்குங்கள்.


4. அதில் "லாங்குவேஜஸ்"(Languages)- ஐ தேர்ந்தெடுங்கள்.


5. "சப்ளிமெண்டல் லாங்குவேஜ் சப்போர்ட்" (Supplemental Language support) பகுதியில் "இன்ஸ்டால் காம்ப்ளெக்ஸ் ஸ்கிரிப்ட் அண்ட் ரைட்-டூ-லெஃப்ட் லாங்குவேஜஸ் (இன்க்ளூடிங் தாய்)" - (Install files for comples script and right-to-left-languages (including Thai) என்பதை தேர்வு செய்யவும்.


6. "அப்ளை" (Apply) பொத்தானை அழுத்துங்கள்.


7. தேவையான எழுத்துருக்கள் தானாக நிறுவப்படும் (சில கணினிகளுக்கு விண்டோஸ் இன்ஸ்டாலேசன் சி.டி.(Windows Installation CD) தேவைப்படலாம். ஆகவே அருகில் வைத்திருங்கள்).


8. எழுத்துருக்கள் நிறுவப்பட்ட பின்னர் "கணினியை நிறுத்தி, இயக்கவா" என்ற அறிவிப்பு புதிய பெட்டிச்செய்தியில் வரும். அதில் "நோ" (NO) என்ற பொத்தானை அழுத்துங்கள்.


9. இப்போது டெக்ஸ்ட் செர்வீசஸ் அண்ட் இன்புட் லாங்குவேஜில் (Text Services and input languages) இருக்கும் "டீடெய்ல்ஸ்" (Details) பொத்தானை அழுத்துங்கள்.


10. "இன்ஸ்டால்டு டிவைசஸ்" (Installed devices) பகுதியில் "ஆட்" (Add) பொத்தானை அழுத்துங்கள்.


11. "இன்புட் லாங்குவேஜ்" (Input language) என்பதில் "தமிழ்" (Tamil) என்பதை தேர்ந்தெடுங்கள்.


12. "கீ போர்ட் லே அவுட் / ஐ.எம்.ஈ" (Keyboard layout/IME) என்பதை தேர்வு செய்து அதிலும் "தமிழ்" (Tamil) என்பதை தேர்வு செய்யுங்கள்.


13. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.


14. இப்போது புதிய தமிழ் விசைப்பலகை நிறுவப்பட்டிருப்பதை உங்களால் காண இயலும்.


15. "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள்.


16. "அப்ளை" (Apply) மற்றும் "ஓக்கே" (OK) பொத்தான்களை அழுத்துங்கள்.


17. கணினியின் இயக்கத்தை நிறுத்தி (Restart Computer) மீண்டும் இயக்குங்கள்.


18. டாஸ்க் பாரில் (Task bar) "EN" என்ற எழுத்து இருப்பதைக் காணுங்கள்.


19. லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துவதன் மூலம் தமிழ் விசைப்பலகைக்கு மாற முடியும். தமிழ் விசைப்பலகைக்கு மாறியுள்ளது எனில் டாஸ்க் பாரில் (Task bar) "TA" என்று எழுத்துக்கள் மாறி இருப்பதைக் காணலாம். மீண்டும் ஆங்கில விசைப்பலகைக்கு மாற வேண்டுமெனில் மீண்டும் லெஃப்ட் ஆல்ட்+ லெஃப்ட் ஷிஃப்ட் (Left Alt + Left Shift) என்ற விசைகளை அழுத்துங்கள்.


19. தற்போது நம்மால் ஒருங்குறி தமிழில் (Unicode Tamil) தட்டச்ச இயலும். (இந்த வகை தமிழ் ஒருங்குறி ஃபோனடிக் தட்டச்சு முறையில் இல்லை என்பதை கவனிக்கவும்)


20. எந்த விசைக்கு என்ன எழுத்து என்பதை காண வேண்டுமெனில் ஸ்டார்ட் ( Start ) - ரன் (Run)-க்கு செல்லுங்கள்.


21. பெட்டியில் ஓஎஸ்கே (osk)-என்பதை அடைப்புக்குறிகள் இல்லாமல் தட்டச்சி, "ஓக்கே" (OK) பொத்தானை அழுத்துங்கள். (On Screen Keyboard என்பதின் சுருக்கம்தான் osk).


22. இப்போது திரையில் விசைப்பலகையை காண இயலும். நாம் தேர்வு செய்திருக்கும் விசைப்பலகைக்கேற்ப இந்த திரை விசைப்பலகையில் எழுத்துருக்கள் காணப்படும்.


23. திரை விசைப்பலகையில் தமிழ் எழுத்துருக்களையும் அவ்விதம் காண இயலும். ஷிஃப்ட் விசையை அழுத்தினால் தமிழ் எழுத்துருக்கள் மாறுவதையும் காண முடியும்.


24. முதலில் இவ்விதம் புதிய முறையில் தட்டச்சி பழகுவது சிரமமான காரியம் என்றாலும் நாளடைவில் இது மிகவும் எளிதானது என்பதைக் கண்டு கொள்ள முடியும்.

இவ்வகையில் தட்டச்சுவதில் பல நன்மைகளும் இருக்கின்றன.

எவ்விதம் தமிழ் ஒருங்குறிக்கு மாற்றுவது என்பதை இங்கே தட்டச்சி விளக்கி இருப்பதை யூடியூப்-(YouTube)பில் அசை படமாக (Flash video) நேரே காணலாம்.


இந்த வீடியோவை சொடுக்கவும் :



இங்கு தரப்பட்டிருக்கும் விடயங்களில் மேலும் சேர்க்க வேண்டும் என விரும்பும் நண்பர்கள் தங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.

நன்றி : தமிழ் மன்றம்

கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி


இ-கலப்பை, என்.ஹெச்.எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களை நிறுவி தமிழில் தட்டச்சுவது குறித்து மன்றத்தில் சில திரிகள் இருக்கின்றன.

நமது மன்றத்திலேயே நேரடியாக தமிழை தட்டச்ச வசதி உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதாவது வேறு மென்பொருள் எதையும் நிறுவாமலேயே தமிழில் நேரடியாக தட்டச்சலாம்.

1. கூகிளின் தமிழ் தட்டச்சு வசதி - Google Transliteration Box: இதில் ஃபோனடிக் முறையில் தமிழில் தட்டச்ச முடியும். தட்டச்சியதை நகல் எடுத்து பதிவிட முடியும்.

2. ஒருங்குறி மாற்றி - Unicode convertor : இதில் திஸ்கி, அஞ்சல், மயிலை, பாமினி, டேப், டேம் ஆகிய தட்டச்சு முறைமைகளில் தட்டச்சு செய்தவற்றை ஒருங்குறியாக மாற்றவும், ரோமனைஸ்டு முறையில் தட்டச்சு செய்து ஒருங்குறியாக மாற்றவும் முடியும். அவ்விதம் மாற்றியதை நகல் எடுத்து மன்றத்தில் எளிதாக பதிக்க முடியும்.

இந்த இரண்டு வசதிகளும் மன்றத்தின் பக்கங்களில் கீழ்ப்பகுதியில் இருக்கின்றன.

இப்போது கூகிள் இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் நேரடியாக ஃபோனடிக் முறையில் தமிழில் ஒருங்குறியைத் தட்டச்ச வசதி செய்திருக்கிறது.

அதன்படி மிகச்சிறிய அளவுள்ள ஜாவா நிரலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கருவிப்பட்டையை நமது உலாவியில் நிறுவிக்கொள்ள வேண்டும். நிறுவிக்கொண்ட பின்னர் நேரடியாக தமிழில் தட்டச்சலாம்.

இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அரபி மொழிகளுக்கான கருவிப்பட்டை கிடைக்கிறது.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர், ஃபயர் ஃபாக்ஸ், குரோம், சஃபாரி ஆகிய உலாவிகளில் நாம் அதைப் பொருத்திக்கொள்ள முடியும். கூகிளின் உதவித்தளங்களில், ஒவ்வொரு உலாவியிலும் நாம் எவ்விதம் இந்தக்கருவிப்பட்டையை இணைப்பது என்பதையும், எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதையும் படங்களுடன் தெளிவாக கொடுத்திருக்கிறார்கள்.

எப்படி கருவிப்பட்டையை நிறுவுவது என்பதை அறிய : (How to install transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk...s/help_ta.html

எப்படி பயன்படுத்துவது என்பதை அறிய : (Using the transliteration bookmarklet)
http://t13n.googlecode.com/svn/trunk...lp_ta.html#Use

கூகிளின் இந்த வசதியின் மூலம் பெரும்பாலான வலைத்தளங்களில் நாம் நேரடியாக தமிழில் தட்டச்ச முடியும். ஒரு சில இடங்களில் இது வேலை செய்வதில்லை என்ற குறை இருந்தாலும், உடனடியாக நேரடியாக தமிழில் தட்டச்ச வசதியைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

நான் அதை நிறுவி நமது மன்றத்தில் சோதித்ததில், புதிய திரி தொடங்கும் போது தலைப்புப் பகுதி (தலைப்பு கருவிப்பட்டையைக்கொண்டே தட்டச்சு செய்யப்பட்டது), கூகிள் தமிழ் தட்டச்சும் வசதி, ஒருங்குறி மாற்றி ஆகியவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்ச முடிகிறது. ஆனால் பதிவுகளை தட்டச்சும் பகுதியில் கூகிள் கருவிப்பட்டை வேலை செய்யவில்லை.

வழங்கி, இயங்குதளம் மற்றும் மென்பொருள் ஒத்துழைக்குமெனில் இந்த இடத்திலும் தட்டச்சும் வசதியை மன்ற நிர்வாகம் ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனையை முன் வைக்கிறேன்.
இப்பதிவு யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்வேன்.

Sunday, September 27, 2009

சினிமா நடிகர்களின் கூடாரமாக திகழும் தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை

மயில் இறகு, குத்துவிளக்கு, தீப ஒளி, சூரியோதயம் போன்ற படங்களோடு மிளிரும் தீபாவளி வாழ்த்து கார்டுகளே முன்பெல்லாம் பிரதானமாக விற்பனையிலிருக்கும். ஆனால் இப்பொழுது சினிமா நடிகர் - நடிகைகளின் படங்களை கொண்ட வாழ்த்து கார்டுகளே சந்தையை ஆக்கிரமித்து வருகிறது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்படிபட்ட வாழ்த்து கார்டுகள் தீபாவளியின் மகத்துவத்தை மாசுபடுத்துவதாக இருக்கிறது என பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


தீபாவளியின் மகிழ்ச்சியை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கும் அன்பை பரிமாறிகொள்தற்கும்இ நட்பைத் தொடர்வதற்கும் அன்பான பண்பான வார்த்தைகளால் தீபாவளி வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதற்கும் தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

அதேப்போல் தீபாவளி வாழ்த்துக் கார்டுகளின் அட்டைப்படங்களும் தீபாவளியை நினைவுகூர்ந்து பார்க்கும் வகையில் அமைந்திருப்பதும் மிக முக்கியமாகும் என்றார் சுப்பாராவ்.

முன்பு தீபாவளி வாழ்த்துக் கார்டுகளின் அட்டைப்படங்களில் தீப ஒளிகள் கதிரவன் மயில் இறகு, குத்துவிளக்கு, கண்ணன், ஊதுவர்த்தி பழங்கள்,பூஜை பொருட்கள் போன்றவை அச்சிடப்பட்டு விற்கப்பட்டு வந்தன.

முன்பு சினிமா நடிகர்களைக் கொண்ட வாழ்த்து கார்டுகள் அச்சிடப்பட்டு வந்தாலும் நடிகர் நடிகையின் சிறிய படங்களே அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இப்பொழுது வருகிற வாழ்த்து கார்டுகளில் கவர்ச்சியான நடிகைகளின் படங்களும் சினிமா நடிகர்களின் வன்முறை காட்சிகளும் கொண்ட படங்கள் அச்சிடப்பட்டு வருவது கவலையைத் தருவதாக இருக்கின்றது என்றார் சுப்பாராவ்.

துப்பாக்கி ஏந்தி நிற்பது போலவும் ஒரு நடிகை தான் அணிந்திருக்கும் சட்டையைக் கழட்டுவது போலவும் இன்னொரு படத்தில் குட்டை பாவாடை அணிந்து தொடையைக் காட்டுவது போலவும் உள்ள தீபாவளி வாழ்த்துக் கார்டுகளும் விற்கப்பட்டு வருகின்றன என்றார் சுப்பாராவ்.

முன்பு சிறிய வடிவில் அமைந்திருந்த தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் இப்பொழுது மெகா அளவில் வரத் தொடங்கிவிட்டன.

பி.ப.சங்கம் மேற்கொண்ட ஆய்வில் இது போன்ற கார்டுகள் பினாங்கு, ஈப்போ, கிள்ளான், கோலாலும்பூர், சுங்கைப்பட்டாணி , ஜோகூர் பாரு, போன்ற இடங்களில் பரவலாக விற்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

பள்ளி செல்லும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணி புரிபவர்களிடம் இது போன்ற தீபாவளி வாழ்த்துக் கார்டுகள் மிகவும் பிரபலம் அடைந்து வருவதாக சுப்பாராவ் கூறினார்.

இது போன்ற நிலை தொடருமானால், எதிர்காலத்தில் தீபாவளி சினிமா நடிகர் - நடிகைகளுக்கே கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாக அமைந்துவிடும் என்றும் சுப்பாராவ் எச்சரிக்கை விடுத்தார்.

நமது பாரம்பரிய சின்னங்கள், படங்கள், பணபுநலன்கள் போன்றவை எத்ரகால தலைமிறையினருக்கு காட்டப்படாமலேயே மறைக்கப்படுவதற்கு சினிமா நடிகர் நடிகைககளின் ஊடுருவல் அமைந்துவிடம் என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

இது போன்ற படங்கள் கொண்ட தீபாவளி வாழ்த்துக்கார்டுகளை வாங்க வேண்டாம் என பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.

வியாபாரிகளும் இது போன்ற படங்களைக் கொண்ட தீபாவளி வாழ்த்துக்கார்டுகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விற்க வேண்டாம் என பி.ப.சங்கம் கேட்டு கொள்வதாக என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி

பிரம்மசீடன் எழுதிய... காலம் கட்டவிழ்த்துவிடும் வழி

இருபது ஆண்டுகளாக தமிழீழ மண்ணில் தலைநிமிர்ந்து நின்ற தமிழீழ அரசு, இன்று அஞ்ஞாதவாச நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பொழுதும், தமிழீழ தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கை தணியவில்லை என்பதை நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் ஊடாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களாகிய நாம் வெளிப்படுத்தி வருகின்றோம். இதேபோன்று, தமிழீழ தனியரசை நிறுவுவதற்காக என்றென்றும் எமக்குத் தோள்கொடுத்து உறுதுணை நிற்பதற்கான தமது தார்மீக ஆதரவை எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக மக்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். படை வலிமையின் மூலம் எமது மண்ணை இன்று சிங்களம் ஆக்கிரமித்துவிட்ட பொழுதும், எந்தவிலை கொடுத்தாவது எமது மண்ணை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற ஓர்மம் எம்மை விட்டு அகலவில்லை. இதனையே கரும்புலிகள் நாளில் மேற்குலக தேசங்கள் தோறும் நிகழ்ந்தேறிய உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வுகள் ஊடாக ஈழத்தமிழினம் வெளிப்படுத்தியது. இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பெங்க@ரிலும் உயிர்த்தெழுவோம் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றது. வரலாறு காணாத இழப்புக்களையும், அழிவுகளையும், துன்பங்களையும் சந்தித்து நிற்கும் ஈழத்தமிழினம், உலகத் தமிழினத்தின் உறுதுணையுடன் அக்கினிப் பறவைகளாக உயிர்த்தெழுந்து தமிழீழ தனியரசை மீண்டும் நிறுவும் என்ற மெய்யுண்மையையே இவ்வாறான நிகழ்வுகள் கட்டியம்கூறி நிற்கின்றன எனக்கூறின் அது மிகையில்லை. இவ்வாறான பின்புலத்தில் நின்றவாறு, உலகத் தமிழினம் உடனடியாக ஆற்ற வேண்டிய பணிகளையும், கடப்பாடுகளையும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

11 செப்டம்பருக்குப் பின்னரான உலக ஒழுங்கு என்பது முற்றுமுழுதாக மேற்குலகின் வலிமையில் இருந்து கட்டியெழுப்படுகின்றது. பனிப்போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியம் - அமெரிக்கா என்ற இருதுருவ நிலையில் இருந்த உலக ஒழுங்கு, பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட பல்துருவ நிலையில் இயங்கியது. ஆனால் இதற்கு ஆப்பு வைத்து, அமெரிக்காவை சீண்டியிழுத்து உலக ஒழுங்கை அமெரிக்காவின் முழுமையான மேலாதிக்கத்திற்கு உட்பட்ட ஒருதுருவ நிலைக்கு இட்டுச்சென்றது பின்லாடனின் இஸ்லாமிய அடிப்படைவாதம். சோவியத் ஒன்றியத்தின் சிதைவுடன் பனிப்போர் முடிவுக்கு வந்த பொழுது, பொதுவுடமைத்துவமும், மார்க்சியமும் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகவே அன்றைய தாராண்மைத்துவவாதிகள் வாதிட்டார்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், அப்பொழுது பொதுவுடமைத்துவ ஆடையணிந்தவாறு முதலாளித்துவத்தை ஆரத்தழுவிக் கொண்ட சீனாவின் பொருண்மிய வளர்ச்சியும், தாராண்மைத்துவத்தின் வெற்றியை குறியீடு செய்து வரலாற்றின் முடிவில் மனித குலத்தை கொண்டு வந்திருப்பதாகவே அப்பொழுது பிரான்ஸிஸ் புக்குயாமா மார்தட்டிக் கொண்டார். புக்குயாமாவின் கருத்துப்படி, ஹேகலிடம் கடன்வாங்கி கார்ல் மார்க்ஸ் தரிசித்த வரலாற்றின் முடிவை பொதுவுடமைத்துவம் நிர்ணயிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்தியல்களை வெற்றிகொண்ட தாராண்மைத்துவமே வரலாற்றின் முடிவை நிர்ணயிக்கும் என்பதே புக்குயாமாவின் வாதமாக அமைந்தது. அவரைப் பொறுத்தவரை, தாராண்மைத்துவத்தின் மாற்றுக் கருத்தியல்களாக கருதக்கூடிய இஸ்லாமும், தேசியவாத இயக்கங்களும் கருத்தியல்களுக்கான பண்புகளை கொண்டிருக்கவில்லை. எனவே, பனிப்போரின் முடிவுடன் சனநாயக சமாதானக் கோட்பாட்டை இறுகப் பற்றிக்கொண்ட அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், உலகெங்கும் தாராண்மைத்துவ ஆட்சியைப் பரப்பும் தனது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கக் தொடங்கியது. பனிப்போர்க் காலத்தில் மனிதநேயம் பேசிய ஐக்கிய நாடுகள் சபையும், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்களும், பனிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகின் தூண்களாக தம்மைக் கட்டமைத்துக் கொண்டன.

தேசிய இனங்களின் தன்னாட்சியுரிமை என்பது தாராண்மைத்துவத்தின் மூலவேர்களில் ஒன்று. இதனை பொருளியல் கருத்துலகில் நின்றவாறு மார்க்சியமும் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டதை பல தடவைகள் லெனின் நிதர்சனமாக்கியிருந்தார். ஆனால், துர்ப்பாக்கியவசமாக பனிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கில், இதன் வாரிசுரிமையை முன்னைநாள் சோவியத் ஒன்றிய தேசிய இனங்களான கிழக்கு ஐரோப்பியர்களுக்கு மட்டும் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம் உரித்தாக்கிக் கொண்டது. தமிழீழ தேசத்தின் தன்னாட்சியுரிமையையும், தனியரசுக்கான கோரிக்கையையும் உதாசீனம் செய்த மேற்குலகம், கிழக்கு ஐரோப்பியர்களின் தன்னாட்சியுரிமையை தயக்கமின்றி அங்கீகரித்து அவர்களுக்கு தனியரசு நிலையை வழங்கிக் கொண்டது. அப்படியிருந்த பொழுதும்கூட, ஆயுதவழி தழுவிய விடுதலைப் போராட்டங்களை மேற்குலகம் ஓரங்கட்டிவிடவில்லை. 1997ஆம் ஆண்டில் பன்னாட்டுப் பயங்கரவாதமாக இஸ்லாமிய அடிப்படைவாதம் உருவெடுக்கத் தொடங்கிய பொழுது பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியை அரசியல் அரங்கில் முடக்கும் கொள்கையளவிலான முடிவை அமெரிக்கா எடுத்தது. இதன் வெளிப்பாடாகவே 1997ஆம் ஒக்ரோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துக் கொண்டது. இங்கு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் தேசிய விடுதலை இயக்கங்களின் அரசியல் அபிலாசைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இவ்வாறான தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆணையளித்த தேசிய இனங்களின் விருப்பு வெறுப்புக்களும் இங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை. மாறாக, தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்கு விரோதமான தீண்டத்தகா விடயங்களாகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் கருதப்பட்டன. அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகைப் பொறுத்தவரை, சனநாயகம், தாராண்மைத்துவ பொருளாதாரம், தனிமனித சுதந்திரம், பன்மைத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி உலகில் வேரூன்ற வேண்டும். இங்கு தேசிய இனங்கள் என்றோ, சிறுபான்மை இனங்கள் என்றோ வேறுபாடுகள் இருக்கக்கூடாது. தேசிய இனங்களாயினும், சிறுபான்மை இனங்களாயினும், இன அடிப்படையிலான தேசிய அடையாளங்களைக் கைவிட்டு, ஏற்கனவே இருக்கக்கூடிய தேசிய அடையாளத்துடன் ஒத்திசைவாகவும், நல்லிணக்கத்துடனும் வாழப் பழக வேண்டும். இதுவே தாராண்மைத்துவ உலக ஒழுங்கு நிலைபெறுவதற்கு வழிகோலும்.

இந்த வகையில், ஈழப்பிரச்சினையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளும், சிங்கள தேசத்திடன் இருந்து அவர்கள் பட்டறிந்த கசப்பான அனுபவங்களும், அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலக ஒழுங்கிற்கு பொருட்டாகத் தென்படவில்லை. மாறாக, ஆயுத எதிர்ப்பியக்கம் என்ற நிலையில் இருந்து, ஆயுதங்கள் களையப்பட்ட அரசியல் கட்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பரிணமிக்க வேண்டும், தமிழீழ தனியரசுக்கான கோரிக்கை கைவிடப்பட வேண்டும், சிறீலங்காவின் இறையாண்மையை ஏற்று, ஒன்றுபட்ட சிறீலங்காவிற்குள் அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான அல்லது ஆகக்கூடியது இணைப்பாட்சி வடிவத்தைக் கொண்ட அரசியல் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என்பதே தாராண்மைத்துவ உலகின் நிலைப்பாடாகியது. அதேநேரத்தில், சிங்கள தேசியம் என்ற நிலையைக் கடந்து, சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், பறங்கியர் என நான்கு இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டியெழுப்பி, மத்தியில் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைப் பரவலாக்கி, தாராண்மைத்துவ பொருளாதாரத்தை சிங்கள தேசமும், அதன் அதிகார வர்க்கமும் இறுகத் தழுவிக் கொள்ள வேண்டும் என்பதும் தாராண்மைத்துவ உலகின் நிலைப்பாடாகத் திகழ்ந்தது.

இப்படியான அழுத்தங்களுக்கு முகம்கொடுத்தவாறு நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் மீது, 2001ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு தடைவிதித்தது. அதேநேரத்தில், சமாதானப் புறவாக 1999ஆம் ஆண்டில் ஈழத்தீவில் களமிறங்கிய நோர்வே, 2000ஆம் ஆண்டின் இறுதியுடன் தாராண்மைத்துவ உலகின் நிகழ்ச்சித் திட்டத்தை முழுவீச்சுடன் அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் மூழ்கியது. இங்கு, தமிழீழ மக்களுக்கு நீதியளிப்பது நோர்வேயின் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, ஆயுதவழி தழுவிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதான அரசியல் போராட்டமாகத் தரமிறக்கி, தமிழீழ ஆயுத எதிர்ப்பியக்கமாக விளங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் படைவழியில் பலவீனப்படுத்தி, அதிகாரப் பகிர்வு அல்லது இணைப்பாட்சி என்ற வரையறைகளுக்குள் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை குறுக்கிக் கொள்வதே நோர்வேயின் நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக அமைந்தது. என்றோ ஒரு காலத்தில் ஆயுதக் களைவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்க வேண்டும் என்று 2005ஆம் ஆண்டில் விதார் ஹெல்கிசன் கூறியமை இதற்கு சான்று பகர்ந்தது. அதேநேரத்தில், அன்று தாராண்மைத்துவ உலகின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்கவை அரசியல் - படைவழிகளில் பலப்படுத்தி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக தென்னிலங்கையில் பொருண்மிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து, சிங்கள தேசத்திற்கு முண்டுகொடுக்கும் மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தையும், அப்பொழுது நோர்வே கச்சிதமாக செயற்படுத்தியது.

எனவே, ஈழத்தீவில் மேற்குலகின் தேசிய அல்லது கேந்திர - பூகோள – பொருண்மிய நலன்கள் என்பது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீச்சை சிதைத்து, வலுவான தாராண்மைத்துவ ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய சிறீலங்கா என்ற தேசியத்தைக் கட்டியெழுப்புவதையே மையமாகக் கொண்டிருந்தன. இங்கே தமிழீழ தேசத்தின் அரசியல் அபிலாசைகளும், மனித உரிமைகளும் கிஞ்சித்தளவும் கணக்கிலெடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தமிழீழ விடுதலைப் போராட்டம் சிக்குண்டு சிதறடிக்கப்பட்டது என்பதை விட, தாராண்மைத்துவ உலக ஒழுங்கை ஏற்படுத்தும் மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்தில் நயவஞ்சகமாக தமிழீழ விடுதலைப் போராட்டம் இழுத்துச் செல்லப்பட்டு, யுத்தத்தின் மூலம் பெரும் பின்னடைவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளை சிங்களம் தோற்கடிக்கவில்லை. மாறாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, ஜப்பான் ஆகிய தாராண்மைத்துவக் கூட்டு வகுத்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய, இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானும் வழங்கிய படைவழி உதவிகளுடன், தமிழீழ மண்ணை சிங்களம் ஆக்கிரமித்துக் கொண்டது என்பதே உண்மை.

இன்று தனது நிலங்களையும், இறையாட்சியையும், அரசையும் தமிழீழ தேசம் இழந்துள்ள பொழுதும், தமிழீழ தனியரசை நிறுவும் ஆற்றலை, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இழந்து விடவில்லை. தமிழீழத்தில் இன்று தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் திகழ்வதாக சிலர் கூறுவது அபத்தமானது. தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ தனியரசை நிறுவும் உறுதியுடன் இன்றும் தமிழீழ மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் உள்ளார்கள் என்பதே மெய்யுண்மை. இப்படியான சூழலில், தமிழீழ தேசியத் தலைவரை தமிழ்கூறும் நல்லுலகில் இருந்து அழித்துவிடுவதற்கும், ஆயுதவழி தழுவிய போராட்டம் இனிச் சாத்தியமில்லை என்ற நஞ்சை விதைப்பதற்கும் சில சக்திகள் முற்படுகின்றன. இவற்றுக்கு துணைபோகும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை கொச்சைப்படுத்தும் புழுதிகளும் சில பொய்வழுதிகளால் கிளப்பிவிடப்படுகின்றன. இவற்றை அடியோடு நிராகரித்து, தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ மண்ணில் மீண்டும் தனியரசை நிறுவுவதற்கு உலகத் தமிழர்கள் உறுதிபூண வேண்டும். நாடு கடந்து அரசமைப்பது வேறு. ஆனால், நாட்டில் உள்ள தலைமையை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் கடல்கடந்து அரசமைத்து அமைச்சர்களாக வலம்வரும் முனைப்புக்களில் ஈடுபடுவதும், ஆயுதவழி தழுவிய விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை என்று கூறுவதும், இவ்வாறான சக்திகளின் உண்மையான நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

இதுவரை காலமும் தமிழீழ மக்களை வஞ்சித்து, தமிழீழ அரசை சீர்குலைத்து, சிங்களத்திற்கு வெற்றியை அளித்த அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், இன்று சிங்களத்திற்கு எதிராக வரிந்துகட்டத் தொடங்குகின்றது. வன்னியில் மனிதப் பேரவலத்தை தமிழீழ மக்கள் எதிர்கொண்ட பொழுது அமைதி காத்த உலக ஊடகங்கள், இன்று வதைமுகாம் கொடூரங்களை உலக அரங்கில் அம்பலப்படுத்தத் தொடங்கி விட்டன. யுத்த காலத்தில் சிங்கள தேசத்திற்கு படைய – பொருண்மிய – அரசியல் - இராசதந்திர உதவிகளை வழங்கி, அதற்கு முண்டுகொடுத்த தாராண்மைத்துவ மேற்குலக சமூகம், இன்று தலைகுத்துக்கரணம் அடித்து சிங்கள தேசத்திற்கான பொருண்மிய உதவிகளை இழுத்தடிக்கத் தொடங்கி விட்டது. சிங்கள தேசம் இழைத்த போர்க் குற்றங்களுக்கு எதிரான குரல்கள் இன்று மேற்குலகில் மெதுவாக எழத் தொடங்கிவிட்டன. அன்று யுத்தகாலத்தில் சிறீலங்காவை சொர்க்கபுரியாக வர்ணித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியாவின் மரபுவாத ஊடகமான த ரைம்ஸ் நாளேடு, இன்று சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான முகப்புச் செய்திகளையும், ஆசிரியர் தலையங்கங்களையும், ஆய்வுப் பத்திகளையும் வெளியிடுகின்றது. இதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. இங்கு எமது பரப்புரைகள் வெற்றியை ஈட்டித் தந்திருப்பதாக நாம் மார்தட்டிக் கொள்ளத் தேவையுமில்லை. அன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை மேற்குலகம் புரிந்து கொண்டிருப்பதாக எண்ணி நாம் ஏமாந்து விடவும் தேவையில்லை.

மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துதல் அல்லது அழித்தல் என்ற நிகழ்ச்சித் திட்டத்துடன், இதுவரை காலமும் நோர்வேயின் ஊடாக இயங்கிய மேற்குலகம், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், சிங்கள தேசத்தின் கடும்போக்குவாத மகிந்த ராஜபக்~வின் ஆட்சியை பலவீனப்படுத்தி, தனது தாராண்மைத்துவ மூலோபாயத்தையும், நிகழ்ச்சித் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த முற்படுகின்றது என்பதே உண்மை. சீனாவுடன் சிங்கள தேசம் நெருங்கி உறவாடுவது, இவ்வாறான யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள சிங்களத்தின் அச்சவுணர்வையே புலப்படுத்துகின்றது. இதுவரை காலமும் ஈழப்பிரச்சினையில் மேற்குலகின் ஆதிக்கத்தை நிர்ணயிக்கும் சக்தியாக இந்தியாவே கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அமெரிக்க மேலாதிக்கத்தின் துணாக மாறிவரும் இந்தியா, மேற்குலகின் தாராண்மைத்துவ நிகழ்ச்சித் திட்டத்திற்கு இசைவாகவே ஈழப்பிரச்சினையையும், ஈழத்தீவு தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையையும் கட்டமைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றது. இந்தியா விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஆட்சியில் இருக்கும் வரை, மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டமே இனி ஈழத்தீவில் அமுல்படுத்தப்படும்.

எனவே, இற்றைவரை எம்மை வஞ்சித்து, எமக்குத் துரோகம் இழைத்த மேற்குலகம், இன்று சிங்கள தேசத்திற்கு எதிராக வரிந்து கட்டத் தொடங்குவதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று துடிக்கும் நாம் ஒவ்வொருவரும், இனி சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுக்கப் போகும் பொருண்மிய - இராசதந்திர வலிந்த தாக்குதலுக்கு துணைநின்று, சிங்கள தேசத்திற்கு தகுந்த பாடம்புகட்ட வேண்டும். சிங்கள தேசத்தின் பொருண்மிய வலிமையை முற்றாக சிதறடித்து, அதன் படைவலிமையை சிதைக்க வேண்டும். சிங்கள தேசத்தை நோக்கி மேற்குலகம் ஏவப்போகும் ஒவ்வொரு அம்புகளும், எம்மால் வழங்கப்பட்டவையாக இருக்க வேண்டும். சிங்களத்தை நோக்கி மேற்குலகம் வாளை நீட்டும் பொழுது, அதனைக் கூர்மைப்படுத்திக் கொடுக்கும் வகையில் எமது அரசியல் - பரப்புரைப் பணிகள் அமைய வேண்டும். எம்மை எப்படி மேற்குலகம் ஓரம்கட்டி தீண்டத்தகாத பயங்கரவாதிகளாக புறந்தள்ளியதோ, அதேபோன்று சிங்களத்தை மேற்குலகம் முற்றுமுழுதாக புறந்தள்ளி, அடாவடி அரசு என்ற நிலைக்கு இட்டுச் செல்வதற்கு நாம் இனி உந்துசக்தியாக அமைய வேண்டும். தமிழீழ தேசியத் தலைவரின் வழிநடத்தலில், தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான போராட்டம் மீண்டும் தனது பாய்ச்சலை தொடங்கும் பொழுது, சிங்கள தேசத்தை பலவீனப்படுத்திய பெருமைக்குரியவர்களாக நாம் இருக்க வேண்டும். இதுவே இன்று எம்முன்னே உள்ள தலையாய பணியாகும்.

இதனைவிடுத்து, தேர்தல் சகதியில் இறங்கி சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்வதோ, இந்தியாவின் காலடியில் மண்டியிடுவதோ, அன்றி தமிழீழ மண்ணில் உள்ள தலைமைக்கு மாற்றீடான தலைமையை மேற்குலகில் உருவாக்குவதோ, அன்றி ஏதோ எம்மால் இயலுமானதை செய்கின்றோம் என்றுகூறி தமிழீழ தேசத்தின் தலைமையை அழிக்க முற்படும் சக்திகளுக்கு நாம் துணைபோவதோ, எமது தலையில் நாமே மண்ணை வாரிப்போடும் செயலாகவே அமையும். நாடுகடந்து அமைக்கப்பட்ட அஞ்ஞாதவாச அரசுகளில், முப்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை திபெத் தேசம் கொண்டுள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக திபெத்தில் தோற்றம் பெறும் மக்கள் கிளர்ச்சிகளையும், ஆயுதப் போராட்டங்களையும் அரசியல் வழியில் நசுக்குவதற்கு துணைபோகும் மேற்குலகின் கருவியாக, இந்தியாவில் இயங்கும் தலாய் லாமாவின் அஞ்ஞாதவாச அரசு இயங்குவதை நாம் மறந்துவிட முடியாது. கடந்த ஆண்டு திபெத்தில் மக்களின் ஆயுதக் கிளர்ச்சி ஏற்பட்ட பொழுது, அதனைக் கண்டித்தவர்களில் ஒருவராக தலாய் லாமாவும் விளங்கியிருந்தார்.

எனவே, இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தின் தேவைகளைப் புரிந்து, சிங்கள தேசத்திற்கு எதிராக மேற்குலகம் தொடுக்கப் போகும் பொருண்மிய – அரசியல் தாக்குதல்களுக்கு உந்துசக்தியாக நாம் செயற்படுவோம். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலுக்கு அமைய, மேற்குலகைக் கொண்டு இப்பொழுது சிங்கள தேசத்தை நாம் தாக்குவோம். அதேநேரத்தில், தமிழீழ மண்ணில் தமது உயிரை வேலியாக்கிப் போராடும் எமது போராளிகளையும், தலைமையையும் பாதுகாப்போம். எமது பெருந்தலைவரின் தலைமையில் தேசிய விடுதலைப் போராட்டம் மீண்டுமொரு பாய்ச்சலைத் தொடங்கும் பொழுது, சிங்களத்தைப் பலவீனப்படுத்தி, எமது தேசத்தின் விடுதலையை விரைவுபடுத்திய பெருமைக்குரியவர்களாக மாறுவோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று முன்னெடுத்துச் செல்லும் முழுப்பொறுப்பும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடன் கையளிக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மாறாக, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் உந்துசக்தியாக நின்று, தமிழீழ மண்ணில் எமது தேசிய விடுதலைப் போராட்டம் வீச்சுப்பெறுவதற்கு துணைநிற்கும் கடப்பாடே இன்றும்கூட எம்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைத்துவம் என்றென்றும் தமிழீழ மண்ணில் இருந்தே வழங்கப்படும். அதனை சிதைத்து சீர்குலைக்கும் நோக்கத்துடன் மாற்றுத் தலைமைத்துவத்தை புகலிட தேசங்களில் உருவாக்குவது அல்லது கவர்ச்சிகரமான பூடகமான பெயர்களில் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை துடைத்தழிப்பதற்கு கங்கணம்கட்டி நிற்கும் நாசகார சக்திகளுக்கு துணைபோகும் செய்கையே அன்றி வேறேதும் அல்ல.

கருத்துக்களுக்கு: பிரம்மசீடன் brahmaseedan@yahoo.co.uk