Tuesday, December 30, 2008

புதிய அத்தியாயம் தேவை - ஆடிய ஆட்டமும், தின்று குவிந்த விருந்து உபசரிப்பும் போதும் - எளிமையான வாழ்க்கைக்கு திரும்புங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம

பிறந்து விட்ட இந்த 2009ம் ஆண்டில் மலேசியர்கள் அதிக அளவு சிக்கனத்தையும் - எளிமையான வாழ்க்கை முறையையும் கடைபிடிக்க வேண்டிய காலத்திற்கு வந்து விட்டதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது.

இவ்வளவு காலம் நாம் அனுபவித்த சொர்க்க வசதிகள் இந்த ஆண்டும் தொடரும் என நாம் எதிர்பார்க்க முடியாது என்கிறார் பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.
பொருளாதாரம் வலுவிழந்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில், பினாங்கில் மட்டும் 2000 தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வருகின்ற அடுத்தடுத்து மாதங்களில் எத்தனை பேர் வேலை இழந்து, பிற தொழிலுக்காக அலைய போகிறார்கள் என்று தெரியவில்லை என சுப்பாராவ் கூறினார்.
இது பினாங்கில் மட்டுமல்ல. மலேசியா முழுவதும் நடைபெறுகின்றது. ஆக தொழிற்சாலையே தங்கள் ஜீவ நாடி என நம்பிக்கை கொண்டிருந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்ற சூழ்நிலையில் நாம் இன்னும் சிக்கனத்தையும் கடைபிடிக்காமல் இருப்பது வேதனை தருகின்றது என்றார் அவர்.

கூடுதல் நேர வேலை ரத்து, வேலை நேர அளவு குறைத்தல், போன்றவற்றையும் தொழிற்சாலைகள் தொடங்கி விட்டன. ஆனால் நாம் கூடுதலான விரையத்தை விடாமல் கட்டிக்காத்து வருகின்றோம் என்றார் சுப்பாராவ்.

விருந்து விருந்து என விரைய விருந்தோம்பல் வைத்து உணவை சாக்கடையில் கொட்டுகின்றோம். பல விதமான விழாக்களை நடத்தி பணத்தையும் நேரத்தையும் அனாவசியமாக்கின்றோம். ஆடம்பர வாழ்க்கையில் மிதக்க கனவு காண்கின்றோம்.
ஆனால், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி தொடங்க ஆரம்பித்து விட்டது. குறைந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது என்றும் சுப்பாராவ் எச்சரிக்கை விடுத்தார்.

நாம் ஆடிய ஆட்டம் போதும், ஆளவேண்டிய நாம் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றோம். வாழ்வதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டிய காலகட்டாயத்திற்கு வந்து விட்டோம் என்றார் சுப்பாராவ்.

உங்களுடைய வாழ்க்கை இந்த புதிய ஆண்டில், ஜொலிக்கப் போகிறது. யோக காலம் கூடவே வருகிறது என ஜோசியர்கள் சொல்வார்கள். ஆனால் நாம், எந்த மாற்றத்தையும் செய்யாமல், சிக்கனத்தை கடைபிடிக்காமல், எந்த நேரமும் செலவு செலவு என விரையத்தைலேயே முழுமூச்சாக இருந்தோமானால், நிச்சயம் நாம் பல பொருளாதார-குடும்ப சிக்கல்களுக்கு ஆளாவோம்.

ஆபாய மணி அடிக்கப்பட்டு விட்டு எச்சரிக்கையும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இனி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும், ஆனந்தமான சூழ்நிலையையும் உருவாக்க வேண்டிய புதிய அத்தியாயத்திற்கு நாம் தயாராக வேண்டும் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் என்.வி.சுப்பாராவ்.

Friday, December 26, 2008

Samsu (Intoxicating Liquor) is popular among youth

Samsu is a cheap intoxicating liquor, widely consumed by young people. A recent CAP survey showed that once commonly consumed by estates workers and village folks has now become a trendy drink among the urbanites. It is popularly drank by youth of all races.
It has been a common practice among youths, mixing this samsu with cola or carbonated drink or pours it into plastic bags with ice cubes and sips it with straws.

The alcohol content in this cheap liquor is alarming high ranging from 17% to 48%. Alcohol associated diseases includes cancers, liver disorders, cirrhosis of liver and heart ailments due to its high content of alcohol the health of many poor people are ruined. Manufacturers of samsu have resorted to many misleading health claims. One brand recommends it for anaemia, loss of appetite, indigestion and healing properties.
Children as young as 12 years can be found consuming samsu and our survey showed that mainly school dropouts are easy targets of this cheap liquor.

There are over hundreds brands of samsu available in the market. This intoxicating liquor gained its popularity because of its cheap price and easy availability. Buying samsu is as simple as buying sweets or candy in sundry shops. Anyone including children can buy it without any hassle.

The price for a bottle of Samsu 150ml varies from between RM3.00 to RM5.00 per bottle, hence making it affordable to children.
Regular drinkers can easily buy samsu on credit.

Under Section 32(1) and 33 (1) of the Excise Act 1976, no person can sell (either wholesale or retail) intoxicating liquor either for use within a premise or outside without a license. The license issued must specify the precise place where sale is allowed. Any sale without a license is an offence under the Act.

A license is required for the sale of samsu. However the demand is great so some shops do not even bother to apply for license to sell this killer brew.

In the past CAP has made several reports to the Customs and Excise Department about the illegal sale of samsu. However till today the illegal sale of samsu is prevailing. More and more unlicensed dealers are engaging in samsu sale.

Monday, December 22, 2008

இரசாயன உரம் உணவை நஞ்சாக்குகிறது இயற்கை வேளாண்மைக்குத் திரும்புங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

விவசாய முறைகளில் நஞ்சைத் தெளிக்காமல் இயற்கை வேளாண்மை முறைகளை விவசாயிகள் பயன்படுத்தினால் பயனீட்டாளர்களின் ஆரோக்கியம் ப¡துகாக்கப்பட்டு லட்சக்கணக்கான வெள்ளியைச் சேமிக்க முடியும் என்கிறது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

விவசாயத்தில் சேர்க்கப்படும் பூச்சி மருந்துகளே பல நோய்களுக்கு மூலகாரணமாகத் திகழ்கின்றது என்றார் பி.ப.சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ். மலேசியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இரசாயன உரம், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என்ற பெயரில் மண்ணின் வளமும், செழிப்பும் அழிக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இரசாயன உரமும், பூச்சிக்கொல்லிகளும் நமது உணவை நஞ்சாக்கி, மனிதர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்து வருகின்றன என்று வேதனையோடு கூறினார் இத்ரிஸ்.

“இயற்கை வேளாண்மையே பசுமை உலகின் வித்து” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இயற்கை விவசாய பயிலரங்கை தொடக்கி வைத்து உரையாற்றியபோது இத்ரிஸ் இவ்வாறு கூறினார். சுமார் 50 விவசாயிகள் கலந்துகொண்ட இப்பயிலரங்கு பி.ப.சங்க பணிமனையில் உள்ள விவசாயப் பகுதியில் நடைபெற்றது. இந்தப் பயிலரங்கு பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சுகாதாரமான உணவையும் உட்கொள்வதற்கு இப்பொழுதுள்ள விவசாய முறை தொடராமல் இருக்க நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். ஆராக்கியமான உணவும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்றார் இத்ரிஸ். இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறுவதால் மனிதகுலத்திற்கு அளப்பரிய சேவையைச் செய்கின்றார்கள். விஷமற்ற உணவைப் பயிராக்கி பயனீட்டாளர்களுக்கு ஆரோக்கியமான உணவைக் கொடுத்து மண்ணையும் வளமாக்குகிறார்கள் என்றார் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்.

அனைத்து இன விவசாயிகளும் கலந்துக்கொண்ட இந்த இலவச விவசாய பயிலரங்கில் 6 விதமான இயற்கை முறையிலான வழிகள் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு சொல்லித் தரப்பட்டன.

முதல் இரண்டு முறைகளை பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் செய்து காண்பித்தார்.
பயிர் வளர்ச்சிக்குப் பயன் தரும் முட்டை ரசம் என சொல்லப்படும் எலுமிச்சை முட்டை கரைசல் முறையை சுப்பாராவ் முதலில் செய்து காட்டினார். ஒரு பயிர் ஊக்கியாக செயல்படும் இந்த எலுமிச்சை முட்டை கரைசல, கரும்பு, வாழை, நெல், காய்கறிகள், கீரை வகைகள், பழ மரங்கள் மற்றும் பூச்செடிகளுக்கும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

அடுத்தது வாழை மட்டையை உபயோகித்து மண்புழு உரம் தயாரிக்கும் மிக எளிமையான முறையையும் சுப்பாராவ் சொல்லிக்கொடுத்தார்.

அடுத்து ஜோகூர், கூலாயில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வரும் த. கண்ணியப்பன் இயற்கை வேளாண்மயில் அனைத்து விவசாயிகளாலும் மிக எளிதாக பயன்படுத்தக்கூடிய மேலும் இரண்டு விதமான முறைகளைச் செய்துகாட்டி விவசாயிகளின் பாராட்டுதலைப் பெற்றார். மீன் கழிவு மற்றும் கருப்புச்சீனியை கலந்து பயன்படுத்தித் தயாரிக்கப்படும் குணப்பசலம் முறையைச் செய்து காட்டினார். அடுத்து பூச்சிகளைச் சாகடிப்பதற்கு இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, சில இலை தழைகளை தேர்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் நீரை உபயோகித்து பூச்சிகளை எவ்வாறு விரட்டலாம் என்பதையும் செய்துகாட்டினார். இது பயிலரங்களில் கலந்துகொண்ட விவசாயிகளை ஆச்சரியப்பட வைத்தது.

இறுதியாக, கெடா, லுனாசில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் க.சன்மார்க்கம் பழங்கள் மூலமாக தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியை தயார் செய்து காட்டினார். இதனைப் பயன்படுத்துவதால் மண்ணை வளப்படுத்துவதோடு, பூஞ்சை மற்றும் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களையும் கட்டுப்படுத்துகின்றன. அடுத்ததாக சன்ம¡ர்க்கம், சாணம், கோமியம் மற்றும் கருப்புச்சீனி ஆகியவற்றின் மூலம் தயாரிக்கப்படும் அமிர்தக் கரைசலையும் செய்து காட்டினார்.
கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் இந்த எளிமையான இயற்கை விவசாய முறையை பின்பற்றப்போவதாகத் தெரிவித்தனர். மலேசிய விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த பி.ப.சங்கம், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு பி.ப.சங்கம் தயாராக இருப்பதாக எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

பள்ளிக்கூடங்களில் போலிகார்பனேட் தண்ணீர் பாட்டில்களைத் தடைச்செய்ய வேண்டும்


போலிகார்பனேட்டில் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களைப் பள்ளிக்கூட மாணவர்கள் உபயோகிப்பது தடை செய்யப்பட வேண்டும். இந்த போலிகார்பனட் பாட்டில்கள் எதிர்கால சந்ததயினருக்கு சொல்லொணா கேடுகளை உண்டாக்கும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

போலிகார்பனேட் தண்ணீர் பாட்டில்கள் தக்கென்று, நீண்ட நாட்களுக்கு உழைக்கும் வண்ணம் பல வித வண்ணங்களில் அழகாக இருக்கும். இவை பேரங்காடிகளிலும், புத்தகக் கடைகளிலும் பரவலாக விற்கப்படுகின்றன. இந்த போலிகார்பனேட் உறுதியாக இருக்கும். இதனுள் முக்கோண வடிவத்தில் பிசி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தால் இவை போலிகார்பனேட் பாட்டில்கள் என்று அடையாளம் காணலாம்.

இன்னும் ஓரிரு வாரங்களில் பள்ளிக்கூடம் திறக்கப்படவிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்தத் தண்ணீர் பாட்டில்களை வாங்கிக் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த போலிகார்பனேட் தண்ண£ர் பாட்டில்களை வாங்கிக்கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். போலிகார்பனேட் பாட்டில்கள், உடலில் ஹார்மோன்களின் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் பிஸ்பெனோல் ஏ என்ற இரசாயனத்தை போலிகார்பனேட் பாட்டில்கள் வெளியாக்குகின்றன. இவை பல்வேறுவிதமான ஆரோக்கியக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இன உற்பத்தி உறுப்புக்களில் சேதம், புற்றுநோய் திசுக்கள் உருவாகுதல், பெண்களுக்குப் பரவலாக ஏற்படும் மார்பகப் புற்றுநோய், ஆண்களுக்கு விரைப் புற்றுநோய் மற்றும் விந்துக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புக்களுக்கும் போலிகார்பனேட் பாட்டில் உபயோகத்திற்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மனிதர்களின் சீரான உடல் இயக்கத்திற்கு உடலில் பல்வேறுவிதமான ஹோர்மோன்கள் சுரக்கின்றன. ப¢ஸ்பெனோல் ஏ இந்த சுரப்பிகளின் சீரான இயக்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அவற்றின் வேலையைக் கெடுக்கிறது. இதனால் உடல் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

போலிகார்பனேட் பாட்டில்களை தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது, அவற்றை வெப்பமான இடங்களில் வைக்கும்பொழுதும், சூடான திரவத்தை அவற்றில் ஊற்றும்பொழுதும் அவற்றின் உள்ள பிஸ்பெனோல் ஏ வெளியாகி அந்தத் திரவத்தோடு கலக்கிறது என்றார் இத்ரிஸ்.

மிசோரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் சாதாரண வெப்ப நிலையில் கூட பிஸ்பெனோல் வளியாவதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 18லிருந்து 74 வயதுக்கு உட்பட்ட 1,455 பேரின் சிறுநீர் மற்றும் இரத்தத்தைப் பரிசோதனை செய்தபொழுது, 25 விழுக்காட்டினருக்கு உடலில் பிஸ்பெனோல் ஏ அளவுக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார் இத்ரிஸ்.

கனடாவின் சுகாதார அமைச்சு பிஸ்பெனோல் ஏ வை ஒரு ஆபத்தான பொருளாக வரையறுத்துள்ளது. போலிகார்பனேட் பொருட்களை உபயோகிக்கும்பொழுது ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து அதனைக் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கையை எடுத்த நாடாக கனடா விளங்குகிறது என்றார் இத்ரிஸ்.

நம் நாட்டிலும் பெற்றோர்கள் இந்த போலிகார்பனேட் பாட்டில்களை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக்கெ¡டுக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.

பிஸ்பினோல் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு, போலிகார்பனேட்டால் தயாரிக்கப்பட்ட தண்ணீர் ப¡ட்டில்களை பள்ளிக்கூடங்களில் உபயோகிப்பதைக் கல்வி அமைச்சு தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Friday, December 12, 2008

The War Against Hinduism

Over the years we have all heard about the many attempts that have been made in India to convert various sections of society from Hinduism to either Christianity or Islam. But only after one of my trips to India did I really get a much clearer understanding of what has been going on. Furthermore, most people, as well as many Indians, are not fully aware of how the war against Hinduism is happening, nor how serious it is. It is taking place on many levels, and because of this, in some areas the practice of Hinduism is declining rapidly.

When I was traveling in June of 2001, I had gone on a lecture tour, speaking every night at places like Mumbai, Nagpur, Warangal, Visakhapatnam, Vijayawada, Hyderbad, Bangalore, Trivandrum, and Chennai. So I had the chance to meet with many of the intellectuals and some of the spiritual leaders in these areas, and learned how conversion was a very hot issue.

Now I don’t have anything in particular against Christianity itself. I was born and raised a Christian, so I know what it is, but also how they work. My main contention is when the teachings that are said to come from Jesus are twisted and misinterpreted into something that does not spread the genuine love of God and humanity that we are all supposed to develop, but becomes the dog-like barking and criticism against every other religion that is not Christian. This does not only go on toward every religion outside of Christianity, but also within it between Catholics and Protestants and other denominations. It seems that this faith has become not something that promotes our similarities for cooperation, but our differences in that everyone who is of an unrelated Christian denomination are all going to hell.

In regard to India, there is a great number of missionaries of various denominations who are working there right now, all competing for the most number of converts. The Southern Baptists alone are a group that has nearly 100,000 career missionaries in North India, all working to spread the “good word.” We also find that in order to make converts from Hinduism some of the numerous Catholic priests in Southern India dress like sannyasis, and call their organizations ashramas. This is to make Christianity more similar to the Vedic traditions. Bharat Natyam dance is also taught in the Christian schools, but with Christian symbols and meanings replacing the Vedic. This is all in the attempt to actively sway Hindus over to Christianity.

One way they are trying to bring Christianity deep into the culture of India is by superimposing its rituals, symbols, and even types of dress on the Hindu forms of the same. Thus, you will see the cross on the lotus, some priests dress in saffron, and some churches have the ambiance of a Hindu temple. If this keeps up, maybe one day Christianity will be more Hindu than Christian.

While traveling in the far Northeastern states of India I have seen some of the tactics that the Christian missionaries have used to help make converts, such as offering cheap polyester pants to the tribals of the Northeast if they become Christian, or even offer motor bicycles if they help convert their brothers, which also means their wives and family. In other places like Madhya Pradesh, as noted in the Neogy Report, the missionaries give small loans on interest to the tribals, who cannot pay back such loans easily. However, if they become Christian, then such loans and the interest are dismissed. This is what goes on in the democracy of India, and under the tolerance of the Hindus, while if one such incidence would ever occur in a Muslim country, the result would be an immediate expulsion of the missionary from that nation.

Another trick that has been done is that missionaries, while treating the sick, will give medicine of no value and ask the tribal to take it while offering prayers to his local deity. Naturally, no cure of disease is likely to occur with the useless medicine. Then the missionary gives the tribal real medicine and asks the tribal to take it while offering prayers to Jesus. Then when there is a recovery, it is attributed to the power of Christ and not to the medicine. Such conversion activities take place these days more often in the tribal areas under the guise of social service. However, true social service should be done without expecting anything in return, including conversion.

Another thing that takes place is mass healings at meetings similar to revivals. What they do is pay people to attend the healings portraying themselves as being sick, or invalids on crutches, etc., who then get called up and are miraculously cured of their disease. This is attributed to the power of Christ, which then convinces many tribals that they too can benefit in various ways if they become Christian. This has not had much of an effect amongst the Brahmana classes, but the lower classes who attend are more vulnerable and are impressed by such things, and are then swayed toward Christianity. This is why Christian conversion tactics have been focused more toward the tribal areas than other regions of India. So these conversions are not taking place due to pure preaching of the Bible or the message of Jesus, but are accomplished by trickery and the emphasis on material facility. This is, of course, what is being objected to by the general Hindu population. However, when or if people convert for purely spiritual reasons, then there is no objection.

Another way conversions are accomplished is with the promise to the Dalits or the lower caste Hindus that they will not have any more caste recognition by becoming Christians. However, after conversion many find out that this is not true. Even amongst the converted Christians there is found to be a caste mentality, with the lower castes forced to use separate doorways, separate seating, or have marriages performed only among equal caste Christians and in separate facilities, or to even be buried in separate cemeteries. When this becomes obvious to those who are newly converted, some of them want to come back to being Hindus again, which has been facilitated by such organizations as the Vishwa Hindu Parishad (VHP).

An interesting point is that in spite of these duplicitous ways of converting that the Christians have used, the Christian churches have threatened violence against the process of reconversion back to Hinduism that had been launched by the VHP. It is as if they do not want anyone to have the right to do what they are already doing. It was Rev. V. K. Nuh, secretary of the Nagaland Baptist Convention who said, “If someone tries to impose their faith, Christians in this region will not surrender. There will be a battle and we shall have no option. There will be a physical and religious war if attempts are made to propagate Hinduism by forceful means in the Northeast.” In this same line of thinking, Rev. M.D. Oaugma, head of the Garo Baptist Convention of Meghalaya said, “It could be a threat to Christianity if we remain silent to the VHP’s game plan of mass conversion. We shall have to fight, we shall have to resist.” (Maharashtra Herald, July 11, 1998)
Of course, it is easy for Hindus to be nonchalant toward other religions because they feel that each spiritual path takes you toward God. So in this light, it is alright to be tolerant of them or let them thrive. But the problem is that not all religions feel the same way toward Hinduism. Some feel that Hinduism is a culture that should be removed or destroyed. An example of this is that in Northeast India, in states like Assam, Nagaland, and Manipur, they have witnessed a surge of nearly 200% in their Christian population in the past 25 years due to the wily tactics of foreign missionaries. Their grasp is so strong now that practicing Hinduism is forbidden in some areas. Where is the democratic freedom in that? Hindus can no longer do worship or arati in the open because of the fanaticism in parts of the land. Durga puja has become almost obsolete as deities are destroyed or stolen in broad daylight. This confrontational climate has led to numerous militant outfits sponsored by the Church who are fighting for secession from India. So now the Northeastern portion of India wants to secede from it, and another part of India will be lost if this should happen.

If the Catholic Church in particular is supposed to espouse the message that God is love, and that it is by love of God and neighbor that mankind is saved, it certainly has not shown much of that kind of love toward any other religion. With the Pope’s recent call for conversions in Asia, it certainly shows that it is not a friend of other religions, but still holds the goal that other spiritual paths should be brought down to be replaced by Christianity. This should be clearly understood. This is also the case with the Baptists and other denominations.

While I was in New Delhi, I also met with Mrs. Shanti Reddy, a member of a government agency called the National Committee for Women. She revealed that another thing that missionaries have done was to kidnap young Indian children. What one Christian missionary couple in Chennai was doing before they were arrested was to bribe tribals into giving their young baby girls to them. They would pay the tribals as little as 2000 to 5000 rupees for baby girls, and then turn around and sell the girls to foreigners for as much as $30,000 to $40,000. According to the records that had been confiscated from the missionaries’ home, this had been a thriving business, and nearly 25 of such transactions had already taken place. The Indian authorities said they probably saved 300 baby girls from such a fate from the indications on the records they found. So this has been another one of the forms of activities that such missionaries do for their own benefit and profit against the real interest of India. However, whenever Hindus react with force against such people, they are labeled as fundamentalists, antagonists, communalists, or worse. But how can you expect that Hindus should not display serious and violent reactions when such activities become obvious? It usually takes a lot to make Hindus react, as they are often most pacifistic and tolerant people. This is also why they make lousy terrorists, they just do not see things that way.

Nonetheless, another way that India is slowly losing its Vedic culture is through the process of secular or English and Christian education. Of course, in public schools all Vedic books have been removed from the curriculum. So there are no possibilities to study the ancient Indian literature or art in such institutions. So Vedic values are no longer part of what the children are taught. Furthermore, the Christian schools, often staffed by Christian missionaries, can teach Christian values in their classes, and include a short study of the Bible everyday, or the Koran if it’s an Islamic school. The so-called secular government has even helped them with free land and facilities. Since these schools offer English in their education, along with good discipline, many of the middle classes of Indians are favoring sending their children to these schools. Today, in the Indian cities, many of the parents of children are the graduates of Christian schools, who also send there own children to such schools. As this trend continues, there will be a decreasing number of Hindus in the educated sector. Thus, children in India, with the help of the secular government, are learning Christian values and perceiving their own history and culture as something less than honorable. They are taught that such important books as the Bhagavad-gita, Ramayana, Bhagavata Purana and other Vedic texts are nothing more than mythology, and not a result of one of the most profound civilizations in the world. They are also taught that their own God is but a demon and the only real way to God is through Jesus.

An example of this is that a few devotees from the New Delhi Iskcon (Hare Krishna) temple go out and give presentations to the children’s classes in schools. Some of the questions that are asked by the children are, “Who is your God?” and “hat can your God do for me?” and so on. Obviously, these questions are nothing but a direct result of the Christian and English oriented education that these children are receiving. Now I ask anyone, isn’t this practically a covert form of conversion? This form of education indoctrinates the children to doubt their own culture, and disrespect their own history and traditions. As a result of this form of education, the Hindu population is slowly forgetting the unique history and lofty culture of their homeland.

As I traveled around, it was not unusual to see elementary schools around India with a name something like “Saint Xavier’s School.” People should know that this Francis Xavier, who is now one of the greatest so-called “saints,” feverishly declared, “When I have finished baptizing the people, I order them to destroy the huts in which they keep their idols; and I have them break the statues of their idols into tiny pieces, since they are now Christians. I could never come to an end describing to you the great consolation which fills my soul when I see idols being destroyed by the hands of those who had been idolaters.” (From “The Letters and Instructions of Francis Xavier,” 1993, pp 117-8) This was his goal, to destroy Indian culture and make India a Christian nation. So it is ironic that now India embraces the schools that honor him in this way. How could they not know his true intention?

What is often not recognized is that, up until recently, for the last 50 years the politicians who have been directing the destiny of India are the ones who have an anti-Hindu attitude. They have set the economic direction and the educational policies that the country has been forced to follow. They have also promised the protection of the religious minorities with the hopes of acquiring votes. This has been one of the reasons why the secularists in the Congress party have treated everything that is Hindu with disdain.

Another aspect of the loss of Vedic culture in India is that the younger Indian people, especially ages from 15 to 25, are readily giving up Vedic customs to follow the more decadent so-called freedoms of the West. They see the western movies, they read what the celebrities say in the papers, and they admire them and want to adopt their forms of dress and lifestyles. Thus, in the big cities like Mumbai you have Indian couples living together without marriage, which is something you never would have seen before a few years back. Now the Vedic principles are looked upon as something obsolete, something that restricts the style that those who look to the West want to adopt. Thus, they are leaving Indian traditions behind and losing respect for anything Vedic. In this way, they adopt foreign standards, or lose so much respect for Indian and Vedic values that they become embarrassed to admit their Hindu background and heritage. Furthermore, Sanskrit scholars at the temples are also slowly dying out, and the modern Indians view the Ramayana and Mahabharata as merely myths or gaudy television shows.

Although India has been invaded by outsiders so many times and has always survived, what we are talking about is more than mere property or geography. What is actually being threatened is the basis of Indian culture itself. As younger generations give up their Vedic heritage, even if they return to it later when they are older and looking for more philosophical support, with whatever percentage of loss occurs with each generation, time has shown that it is never fully recovered. A portion of it is lost forever.

Another way of looking at this is that India presently enjoys an 85% Hindu majority in its population. This may sound quite significant, but in actuality this includes 15% Buddhists, Sikhs, and Jains. So it is really only a 70% majority. How many more generations will go by before we see a big drop in this percentage due to the process of secular (meaning Christian or English, or even Islamic) education, or with the present rate of conversions by tactless Christians? This percentage could easily drop well below 50% in only a few more generations at the present rate of change.

How many more generations will it take before the Hindu majority is no longer a majority, but a minority in its own country? As Hinduism declines, you will see that the demands on the government and those voted into politics will also change, and the laws will also alter more in favor of the increasing minority religions at the expense of declining Hinduism. Then as the years go by there will appear only small clusters of Hindu or Vedic communities, most likely centered around prominent holy places, until the more aggressive religions act in ways to diminish these as well, in the same way that they are presently doing in other countries.

The point of all this information is that it is time for all Hindus and supporters and followers of the Vedic culture, Sanatana-dharma, to realize what is actually happening and give up your timidness or nonchalance and speak out while such freedom still exists. We must become more pro-active for defending this culture. The point is that if you do not take it seriously, I can assure you that there are others who take this inaction and tolerance extremely seriously to promote their own goals and religions in India. It is because of this that India may not always remain the homeland of an active and thriving Vedic culture as it is now. We need to protect whatever is left of it and maintain the present liberties that Hindus or followers of Vedic culture still have in India. Then we all can continue to engage in Vedic traditions without hindrance, and with full freedom. For this, we need to unite ourselves in a concerted effort to make this happen. And it most certainly is possible.

Not long ago, as told to me by Professor Subhash Kak, it was noted in a reputable publication that now 1% of the Russian population claim that they are Hindu. The article stated that this was primarily due to the preaching efforts of Iskcon. This shows a major social impact. This shows what is possible if we can work together in a concerted effort. This is why I am convinced that if we all work in a pro-active way under the banner of a united family of Vedic followers, or Global Vedic Community, we can keep and even expand the present freedoms that we now have to practice Vedic and indigenous traditions, and keep India as the homeland of Vedic culture, the most ancient roots of humanity.

India must be protected and kept as the homeland and center of the Vedic heritage, Sanatana-dharma, Hinduism. Without it, what is its value, in spite of whatever else it accomplishes? The value of Hinduism and India are clearly expressed in the words of the famous English theosophist Dr. Annie Besant. She put great emphasis on the value of India, its history, the Vedic culture, and its importance to the world. As written in the cover notes from the book, Hindus, Life-Line of India, by G. M. Jagtiani, she says: “After a study of some forty years and more of the great religions of the world, I find none so perfect, none so scientific, none so philosophic, and none so spiritual as the great religion known by the name of Hinduism. The more you know it, the more you will love it; the more you try to understand it, the more deeply you will value it. Make no mistake; without Hinduism, India has no future. Hinduism is the soil into which India’s roots are struck, and torn of that she will inevitably wither, as a tree torn out from its place. Many are the religions and many are the races flourishing in India, but none of them stretches back into the far dawn of her past, nor are they necessary for her endurance as a nation. Everyone might pass away as they came and India would still remain. But let Hinduism vanish and what is she? A geographical expression of the past, a dim memory of a perished glory, her literature, her art, her monuments, all have Hindudom written across them. And if Hindus do not maintain Hinduism, who shall save it? If India’s own children do not cling to her faith, who shall guard it? India alone can save India, and India and Hinduism are one.”
In this light, it is absolutely necessary that as followers of Sanatana-dharma, Vedic culture, we realize that we need to repair whatever differences we have between us regarding whatever issues there may be. This is necessary in order to work with some cooperation with whomever we can if we expect to be a substantial force in defending the Vedic cause. Otherwise, all the issues that invariably come up, although these should not be ignored, should not take so much of our attention that our preaching or sharing or promoting of our culture stops. Otherwise, we will only serve as contributors to the continuing deterioration of all spiritual standards as the age of Kali-yuga progresses. This preaching, of course, means that we must all stay in touch with and practice the Vedic standards, and be ready to let others know of its advantages, and to defend it from those who wish to see its demise.

We cannot allow ourselves to be led into the danger of endless debate that leads to inaction. We all must be pro-active in some way to help defend and spread Vedic culture. Then we can work together to keep the freedom we presently have to practice the Vedic traditions and keep India as the homeland of a thriving, dynamic, and still living tradition. Such freedom does not come without its challenges, and we must be prepared as a society to meet those challenges. To take such freedoms for granted means that it’s only a matter of time before they are lost. And that is exactly what some people want to happen. So we must be willing to work all the harder to prevent such a decline of our Vedic heritage.

www.stephen- knapp.com
By Stephen Knapp

Thursday, December 11, 2008

கைத்தொலைபேசியின் குரல் பதிவு கட்டணங்கள்! நிறுவனங்கள் பணத்தைக் கொள்ளயடிக்கின்றன பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அம்பலம்

கைத்தொலைபேசியில், தொடர்பு கொள்ளும் நபர் கிடைக்காத நேரத்தில் பதிவு செய்யப்படும் குரல் பதிவுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமற்ற ஒன்று என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பல புகார்களைப் பி.ப.சங்கம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கூற¢னார்.

குரல் பதிவை மேற்கொள்ளுங்கள் என சேவையாளர்களின் அனுமதியில்லாமலேயே அந்நிறுவனங்கள் இந்தப் பதிலைத் தங்களின் விருப்பப்படியே தொடங்கிவிடுகின்றன என்றார் அவர்.

ஒவ்வொரு முறையும் அழைப்பாளர் தொடர்பு கொள்ளும் போது, அந்த அழைப்பு நேரிடையாக குரல் பதிவுக்கு சென்று விடுகின்றது. தொடர்பு கொள்ளும் எண் பயன்பாட்டில் இருக்கின்றது என்று கூட நமக்கு தெரியாமல் இருந்து வருகிறது என்றார் இத்ரிஸ். இப்படி தொடர்பு கொள்ளாத அல்லது பேசாத தொலைத் தொடர்புக்கு அழைப்பாளர்களிடமிருந்து நிமிடத்திற்கு 33 காசு கட்டணம் விதிக்கப்படுகின்றது. அதிலும் பதிவு பெட்டியில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படாத சூழ்நிலையில் கூட இந்த மோசடி நடக்கிறது என இத்ரிஸ் அம்பலப்படுத்தினார்.

தொடர்புக்கொள்ளும் நபர் தனது கைதொலைப்பேசியை அடைத்து வைத்திருந்தாலோ அல்லது தொடர்பு காள்ளாத எல்லைக்கு அப்பாற்பட்டு இருந்தாலோ எல்லா அழைப்புக்களும் தன்னிசையாக பெட்டிக்கு அனுப்பப்பட்டு, கட்டணம் விதிக்கப்படும் என மெக்சிஸ் நிறுவனம் கூறியிருக்கின்றது. இது நியாயமற்ற ஒரு செயல். எதுதான் காரணம் என்று தெரியாமல் குரல் பதிவு பெட்டிக்குச் சென்று கட்டணம் வசூல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என இத்ரிஸ் கூறினார்.

அழைப்பாளர் ஒருவரைத் தொடர்புகொள்ள முடியாத போது, அவரே பிறகு அழைப்பாளரைத் தொடர்புக்கெ¡ள்ள வேண்டும். அதைவிடுத்து அழைப்பாளரின் அழைப்பு குரல் பதிவு பெட்டிக்கு சென்று, அதற்கு நிமிடத்திற்கு கட்டணம் விதிப்பதை நிறுத்த வேண்டும் அழைப்பாளர் பேசக்கூடா இல்லை, பேசாத அழைப்புக்கு கட்டணமா? என்று இத்ரிஸ் கேள்வி எழுப்பினார்.

குரல் பதிவை ஏற்றுக்கொள்ளுபவர்களிடமிருந்துதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். எந்தவொரு தகவலையும் தெரிவிக்க விரும்பாதவர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அது மட்டுமல்ல கைதொலைப்பேசியை பயன்படுத்தும் எத்தனைபேர் தங்களது குரல் பதிவு பெட்டியை சோதித்து பார்க்கின்றனர்?

பயன்படுத்துகின்றார்களோ அல்லது பயன்படுத்தவில்லையோ குரல் பதிவுக்கான நிமிடத்திற்கு 33 காசு என்பது மிக மிக அதிகம் என பி.ப.சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யதா சேவைகளுக்கு நிறுவனங்கள் செவையை வழக்கி அதற்காக அதிக கட்டணத்தை விதிப்பது என்பது ஒரு வழக்கமாகிவிடக்கூடாது.

இது பற்றி வாடிக்கையாளர் அறிந்திருக்கவில்லை என்றால், மாத இறுதியில் மிகப்பெரிய கட்டணம் அவருக்காக காத்திருக்கும். இந்த வசூல் வேட்டையினால் மலேசியா முழுவதும் கைதொலைப்பேசி பயன்படுத்தும் ஒவ்வொருவரின் சேவையிலிருந்து கைத்தொலைப்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபத்தைப் பெற்று வருகின்றன.

எல்லா பயனீட்டாளர்களும் நன்மையடைய இம்மாதிரியான நியாயமற்ற வர்த்தக சேவைகளுப் எழுப்பட்டுள்ள நியாயமற்ற பிரச்னைகளையும் களைவதற்கு உருப்படியான ஒரு தீர்வை மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்முனை தொழில்நுட்ப வாரியம் ஆராய வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக் கொள்வதாக எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டுக் கொண்டார்.

Monday, December 8, 2008

எட்டிப்பார்க்கும் நம்பிக்கை

03/12/2008

இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சில

கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு,
உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம்
விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம்
சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம்
இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்து
கொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காக
வெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரை
அறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம்
எங்கே!!!!!
இப்படிக்கு,
இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று
எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்
(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த
ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக்
குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின்
ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில்
கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில்
கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்
குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய
போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்
கரைந்திருப்பீர்கள்......

எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு
வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா,
மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.

அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின்
மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்
அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,
நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,
சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட்
அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்
பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........

ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை
நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம்
மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,
இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும்
திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை
அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா
அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது
கிடைக்கும் அல்லவா?

இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு
பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும்
வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம்
பாவமாவது குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின்
பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள்
எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை
வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது
நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான
குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத்
தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள்
தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக்
கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "
சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின்
இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால்
அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில்
எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,
தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில்
முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை
அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று
போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும்,
அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,
எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும்.
ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்
நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின்,
வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத்
தோன்றவில்லை.....எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும் கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம்
அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து
எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,
உலகத் தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின்
விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்
இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்,
உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து

Se-Hari Bersama Masyarakat Kulim

Amirteswari Penang Community Centre (APCC) bersama dengan Majlis Belia India Malaysia (MIYC) Negeri Kedah menganjurkan Se-Hari Bersama Masyarakat Kulim

பினாங்கு அமிர்தேஸ்வரி நல மன்றமும் (APCC) கெடா மாநில மலேசிய
இந்திய இளைஞர் மன்றமும் இணைந்து “மக்களுடன் ஒருநாள்” எனும்
முகாமை நடத்தவுள்ளது. இம்முகாமில் மருத்துவ பரிசோதனை, சட்ட
ஆலோசனை, பயனீட்டாளர் சேவை, காவல் துறையினரின் பங்கேற்பு,
சமூக நல சேவைகள் போன்றவை வழங்கப்படும். சுற்று வட்டார மக்கள்
இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கெடா
மாநில MIYC – யின் செயலாளர் திரு. K.R. சூரிய மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு : திரு.மகேந்திரன் (ஏற்பாட்டுக் குழு தலைவர்) 012-4961573

திகதி/Tarikh : 21hb Disember 2008 (Ahad)
நேரம்/Masa : 8pagi hingga 12.30 tengahari
இடம்/Tempat : Ladang Anak Kulim, Kulim, Kedah

விடுதலை இராசேந்திரன் ( Rajeev Gandhi's Thurogam )

தமிழக சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் - ஒரு கற்பனைக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்குப் பிறகு, பிரபாகரன், மூப்பனாரை சந்தித்தாராம். மூப்பனார், பிரபாகரனை ராஜீவிடம் அழைத்துச் சென்றாராம். அப்போது ராஜீவ் தனது பாதுகாப்புக் கவசத்தை பிரபாகரனுக்கு வழங்கியதாக மூப்பனார், பீட்டர் அல்போன்சிடம் கூறினாராம்.

உண்மைக்கு சிறிதும் தொடர்பில்லாத அப்பட்டமான கற்பனை இது. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்குப் பிறகு பிரபாகரன், தமிழ் நாட்டுக்குள் வரவே இல்லை. புதுடில்லியிலிருந்து தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட பிரபாகரன், பிறகு மீண்டும் ஈழத்துக்கு புறப்பட்டு விட்டார். ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவுக்கோ, தமிழ் நாட்டுக்கோ வராத பிரபாகரன், எப்போது மூப்பனாரை சந்தித்தார்? எப்படி ராஜீவை சந்தித்தார்? பிரபாகரன் மீது அவ்வளவு அக்கரை கொண்டிருந்தார் ராஜீவ் என்ற பொய்யை வலியுறுத்துவதற்காக, இப்படியெல்லாம் கதைகளை உருவாக்குகிறார்கள். “After all two thousand boys” என்று விடுதலை புலிகள் பெரிய சக்தியே இல்லை என்று கேலி பேசி, இந்திய ராணுவத்தை அனுப்பி யவர் தான் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தி செய்த துரோகங்கள் ஒன்றா, இரண்டா?

• “தமிழ் ஈழத்தின் ஒரே பிரதிநிதியாக உங்களைத்தான் அங்கீகரித்திருக்கிறோம்” - என்று பிரபாகரனிடம் பொய்யான வாக்குறுதி தந்து, ரகசியமாக தயாரிக்கப் பட்டிருந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அவரை, தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். அப்படி ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும் செய்தியே பிரபாகரனிடம் கூறப்படவில்லை. பிரபாகரனிடம் பொய்யான தகவலைக் கூறியவர் - இந்திய அரசின் முதன்மைச் செயலாளர் பூரி.

• பிரபாகரனை டெல்லி அசோகா ஓட்டலில் தங்க வைத்தப் பிறகுதான் ஜெ.என். தீட்சத் (இந்தியாவுக்கான இலங்கைத் தூதர்) ஒப்பந்தத்தைக் காட்டினார். உடனிருந்த பாலசிங்கத்திடம் ஆங்கிலத்தில் இருந்த ஒப்பந்தத்தைப் படித்து, தமிழில் பிரபாகரனுக்கு கூறும்படி உத்தரவிட்டு, இரண்டு மணி நேரம் கெடுவைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாக வேண்டும் என்று மிரட்டினார்.

• தங்களின் தனி நாட்டுக்காக தமிழர்கள் போராடியபோது, தமிழர்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே, சிங்கள அரசுடன் தன்னிச்சையாக ஒப்பந்தம் போட்டு, தமிழர்கள் மீது திணித்தவர்தான் ராஜீவ்.

• இப்படி திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்ப வில்லை, சென்னையில் ஒப்பந்தம் செய்தமைக்காக ராஜீவ்காந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், பங்கேற்காமல் தவிர்க்க விரும்பி, அமெரிக்கா பயணமாக எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அவரது உடைமைகள் எல்லாம் விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரை வற்புறுத்தி, தனது பாராட்டு விழாவில் பங்கேற்க நிர்ப்பந்தப்படுத்தியவர்தான், ராஜீவ்.

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்த பிரபாகரன், ஆனாலும், ‘இந்தியா நேச நாடு. ராஜீவிடம் எங்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஒப்படைத்து, ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்” என்று யாழ்ப்பாணம் அருகே முதுமலை என்ற இடத்தில் நடந்த மாபெரும் கூட்டத்தில் அறிவித்தார். ராஜீவ் காந்தியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு என்ன நடந்தது?

• சென்னையில் அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு, அலுவலகப் பொருள்களை கப்பலில் ஏற்றிக் கொண்டு நிராயுதபாணியாக ராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நம்பி, யாழ்ப்பாணம் நோக்கி வந்த 13 விடுதலைப்புலிகளின் தளபதிகளை சுற்றி வளைத்து, கைது செய்தது சிங்கள ராணுவம். தங்களைக் கைது செய்தது ஒப்பந்தத்துக்கு எதிரானது. ராஜீவ் தலையிட்டு ஜெய வர்த்தனாவிடம் எடுத்துக் கூறி, தங்களை விடுவிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ராஜீவும், அவரது தூதுவர்களும் காதில் போட்டுக் கொள்ளாததால், 13 விடுதலைப் புலிகளும் உயிருடன் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொள்ள விரும்பா மல், சைனைட் விஷக் குப்பிகளைக் கடித்து, வீரமரணமெய்தினர். ராஜீவை நம்பி, ஏற்றுக் கொண்ட ஒப்பந்தத்துக்காக ராஜீவ் காந்தி தந்த பரிசு இதுதான்!

• ஒப்பந்தத்தை ஏற்று, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து வரும் போது இந்திய இராணுவம் வேறு சில குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தை செய்தது. போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்த ஜெயவர்த்தனா, அதை அமுல்படுத்த மறுத்தார். ஒப்பந்தத்துக்கு எதிராக ஜெயவர்த்தனா செயல்படுவதை சுட்டிக்காட்டி, இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துதான் அகிம்சை வழியில் திலீபன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார்.

• திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள் 1987 செப்.15. செப்டம்பர் 24 ஆம் தேதி பிரபாகரன், ராஜீவ் காந்திக்கே கடிதம் எழுதி, திலீபன் உண்ணாவிரதத்தின் கோரிக்கையை செவிமடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ராஜீவ் புறக்கணித்தார். பலாலி வரை வந்த இந்தியத் தூதர் தீட்சத்தை மரணத்துடன் போராடும் திலீபனை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டபோது, தீட்சத் சந்திக்கவே மறுத்தார். ராஜீவுக்கு பிரபாகரன் கடிதம் எழுதிய அடுத்த இரண்டாவது நாளிலேயே திலீபன், வீரமரணத்தை தழுவினார். ராஜீவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்ததற்கு ராஜீவ் வழங்கிய மற்றொரு பரிசு இது!

• ஈழத்தில் நுழைந்த இந்திய ராணுவம் முதலில் தமிழர்கள் நடத்திய ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகளின் அலுவலகங்களில் குண்டுகளை போட்டு தகர்த்து, தகவல் தொடர்புகளை துண்டித்தது. அந்த நிலையில், 1987 அக்.25 ஆம் தேதி பிரபாகரன், ராஜீவுக்கு மற்றொரு கடிதம் எழுதினார். “எங்களைத் தாக்காதீர்கள்; போரை நிறுத்துங்கள்” என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார். ராஜீவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 1988 ஜனவரி, 12 ஆம் தேதியும், மார்ச் 9 ஆம் தேதியும் பிரபாகரன் நியாயம் கேட்டு ராஜீவுக்கு கடிதங்கள் எழுதினார். எந்த பதிலும் இல்லை.

• கடலில் கப்பலில் வந்த 13 புலிப்படை தளபதிகள் இறந்த பிறகு, இந்தியாவி லிருந்து ஜானி என்ற விடுதலைப் புலியை இந்திய அரசே தூதராக அனுப்பி, பிரபாகரனிடம் பேசச் சொன்னது. உளவுத் துறையையும், ராஜீவையும் நம்பி, தூதராக சென்ற ஜானியை ஈழத்தில் அவர் காட்டுக்குள் வந்தபோது இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது. ‘நான் இந்தியாவின் தூதராக வருகிறேன்’ என்று கூறிய நிலையிலும் ஆயுதமின்றி, உளவுத் துறையின் தூதராக வந்த விடுதலைபுலியை இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது.

இவ்வளவு துரோகத்துக்கும் காரணமாக இருந்தவர் ராஜீவ் என்பது கரை படிந்த வரலாறு. பீட்டர் அல்போன்சு போன்றவர்கள் உண்மைகளுக்கு மாறான கற்பனைகளை பேசினால், இந்த வரலாற்று உண்மைகளை நாம் பட்டியலிட்டுத் தானே ஆக வேண்டும்!

- கதை அளக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்

Tuesday, December 2, 2008

பகவானே தோழன்


பகவானை எந்த பாவனையில் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால், அதில் முழுவதுமாக லயிக்க வேண்டும். மீராவும் ஆண்டாளும் பிரேம பாவனையில் 'இ'லயித்தார்கள். குசேலனும் அர்ஜீனனும் கண்ணனை நண்பனாக வரித்தார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் இறைவனோடு, ஒவ்வொரு பாவனையில் உறவு. இராமவதாரம் முடிந்த பின் ஆஞ்சநேயன் கண்ணனை குருவாக வரித்து யுத்தத்தில் அர்ஜீனனின் தேர்க்கொடியில் உட்காந்தார். எனவே, நாமெல்லாம்கூட கண்ணனை நமக்குப் பிடித்திருக்கும் எந்தவுருவிலும் வரித்துவிடலாம். ஏனென்றால் பண்பிலே தெய்வம், நல்லாவிரியன், தோழன், மந்திரி, தாய், தந்தை என்ற எல்லா உவவுகளும் கண்ணன் ஒருவனே!

கடைசி உபதேசம்


அன்னை சாரதா தேவி, இராமகிருஷ்ணரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்.இராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின், விதவைக் கோலம் ஏற்க அன்னை முற்ப்பட்டார். அப்போது காட்சி தந்த இராமகிருஷ்ணர், "ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத்தான் சென்றுள்ளேன்" என்று கூறினார். சாரதாதேவி மன ஆறுதல் அடைந்தார். தவிர, கடைசிவரை விதவைக் கோலத்தைத் தவிர்த்தார். அன்னையின் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்ருந்த வேளை, காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமானது. அப்போதும்கூட தன்னைப் பார்க்க வந்த ஒரு பக்தைக்கு, " உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குறைகளைப் பார்க்காதே. அதற்கு பதிலாக, உன்னிடம் இருக்கும் குற்றங்களைப் பார். இந்த உலகம் முழுவதும் உன்னுடைய சொத்தாக ஆக்கிக்கொள்ளக் கற்றுக்கொள். மகளே, இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. உலகம் முழுவதும் உன் சொத்துக்ள்!", என்று கூறி ஆசி வழங்கினார். இதுதான் அன்னை சொன்ன கடைசி உபதேசம்.

கிரியும் சந்தனமும்

ஒரு சமயம் துரியோதனையும் தர்மனையும் பார்தது பீஷ்மர், " உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்களா என்று பார்தது வாருங்கள்" என்று சொன்னார்.

துரியோதனன் உலகத்தைச் சுற்றிப் பார்தது வந்து "தாத்தா, இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லை. அனைவரும் பொல்லாதவர்கள்" என்றார்.

தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு கண்ணாடியில் பார்க்கின்றவனுக்கு எல்லாமே கரியாகத்தான் தெரியும். தருமனோ, " தாத்தா, உலகத்தில் அனைவருமே நல்லவர்கள்தான், சூழ்நிலையினால்தான் பொல்லாதர்களாக மாறிவிடுகின்றனர்!" என்றார்.

இது, ஒருவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு கண்ணாடியைப் பார்ப்பது போன்றது.

என்போதுமே ஒவ்வொருவரின் எண்ணப்படிதான் அவர்களின் பார்வையும் இருக்கும்.

- வாரியார் சொன்னது -

உலக புகைபிடிக்காத தினம் 2008

உலக புகைபிடிக்காத தினம் 2008 ஆண்டு கொண்டாட்டத்தில் 2.73 மில்லியன் புகைபிடிப்பவர்கள் கலந்து கொள்ளப் போகின்றார்கள். இவர்களில் 2.61 மில்லியன் ஆண், 120,000 பெண் புகையாளர்களும் அடங்குவர். சராசரி நாள் ஒன்றுக்கு மவெ.15 மில்லியன் சிகரெட்டுக்காக செலிவிடப்படுகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.
இந்த வருட கொண்டாட்டம் “இளைஞர்களைப் புகையிலிருந்து விடுவியுங்கள்” என்ற கருவுடன் கொண்டாப்படுகிறது. 18 வயதுக்கு கீழ்பட்ட 45லிருந்து 50 மலேசிய இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்க தொடங்குக¢ன்றனர், இவர்களில் 8விழுக்காட்டினர் பள்ளி சிறார்களாவர். 2000கும் 2005ம் ஆண்டுக்கும் இடையில் பதின்ம வயதுடைய பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அவர்களிடைய 4 விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் 2004ம் ஆண்டில் ஐந்து மலேசிய இளைஞர்களிடையே ஒருவர் புகைப்பிடிப்பவராக இருக்கிறார் என இத்ரிஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகத்தில் ஒவ்வொரு நாளும் 60,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட குழந்தைகள் தினமும் புகைபிடிக்க தொடங்குகின்றனர். இதில் பெரும்பகுதியினர் ஆசியாவைச் சார்ந்தவர்கள்.
சிகரெட்டில் 4,000 விதமான இரசாயனங்கள் இருக்கின்றன, இதில் 2000 இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை, 63 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. இருப்பினும் உலகலாவிய நிலையில் நாள் ஒன்றுக்கு அதன் விற்பனை 15 பில்லியன் அல்லது நிமிடத்திற்கு 10 மில்லியனாக இருக்கிறது. ஒவ்வொரு சிகரெட் பிடிக்கப்படும்போது மனிதனின் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை அது குறைத்து விடுகிறது. உலகத்தில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதனால் அல்லது அது சம்பந்தப்பட்ட நோய்களினால் செத்து மடிகின்றனர்.
மலேசியாவில் மட்டும், ஒவ்வொரு வருடமும் 10,000 இறப்புக்கள் புகையினால் சம்பவிக்கிறது. இதில் குறைந்த பட்சம் 3000 நுரையீரல் புற்றுநோய், இருதய நோய் மற்றும் கடுமையான நுரையீரல் நோயாக இருக்கிறது.

சிகரெட் வாங்குபவர்களின் வயது 18லிருந்து 21க உயர்த்தப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அதோடு வாங்குவதை மட்டும் தடை செய்யாது இளம் குழந்தைகள் புகைபிடிப்பதையும் அரசாங்கம் அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
அமெரிக்காவில் இல்லிநோயிஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கெடுபிடியான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, 69விழுக்காட்டினர் புகைபிடிப்பதை கைவிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. வயது குறைந்தவர்கள் சிகரெட் வாங்குவதைக் கட்டுப்படுத்திய பிறகு அவர்களிடையே சிகரெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை 3லிருந்து 70 விழுக்காடாக குறைந்திருக்கிறது என அந்த ஆய்வு காட்டுகிறது.
பொதுவாக குடும்பங்களாக செல்லக்கூடிய பொது இடங்களான உணவு கடைகள், உணவகங்கள் பொது கேளிக்கை இடங்களிலும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பி.ப.சங்கம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசாங்கம் சுகாதார அமைச்சு மூலமாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்வு இடங்கள், பொது கேளிக்கை இடங்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் அதிகமாக பொதுமக்கள் செல்லக்கூடிய இடங்களில் சிகரெட்டுக்கு தடை வ¢திக்க வேண்டும் என்றும் இத்ரிஸ் கேட்டு கொண்டார். இது பொதுமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் இரண்டாவது புகையாளராக மாறுவதிலிருந்தும் தடுக்கிறது.
710 மில்லியன் குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது புகையாளராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 6லிருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டாவது புகையாளராக இருக்கும் போது அவர்களிடயே வாசிப்பு, கணித மற்றும் சிந்தனை திறன் குறைவதாக அமெரிக்க சிஞ்சினாத்தி மருத்துவமனையின் ஆய்வு காட்டுகிறது.
பினாங்கில் அமைந்திருக்கும் இளைஞர் பூங்கா மற்றும் பூந்தோட்டத்தில் பொதுமக்கள் புகைபிடிப்பதாக பி.ப.சங்கத்திற்கு புகார்கள் வந்திருக்கின்றன. ஆகையால் இந்த இரு இடங்களிலும் புகைபிடிக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கும்படி பினாங்கு மாநில அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டு காள்கிறது. இங்கு வருகை புரியும் பொதுமக்கள், மற்றும் உடற்பயிற்சியாளர்களின் நலன் கருதி இந்நடவடிக்கை மிக அவசிமாகிறது என இத்ரிஸ் கூறினார்.

இத்தகைய நடவடிக்கை இளைஞர்களைப் புகையிலிருந்து காப்பதற்காக உதவுவதோடு மட்டுமல்லாமல், புகையிலையின் ஆபத்தைப் பற்றி தனிநபர் மற்றும் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமயும் என்று பி.ப.சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.

Sunday, November 30, 2008

மெல்ல கொல்லும் நோய்

மலேசிய மக்களை மெல்ல கொல்லும் நோய்கள் என்று ஒரு பெரிய பட்டியல் போடலாம். சுருக்கமாக இதோ!

1. பயனீட்டாளர் உரிமை பற்றிய அறியாமை

2. தகவல் சாதனங்களில் வரும் விளம்பரங்கள் யாவும் உண்மை, உண்மையைத் தவிர
வேறெதுவும் இல்லை என்று நம்பிவிடுவது.

3. படித்த அறிவாளிகள் உண்மை அறிந்தும் ஊமையாய்ப் பதவி உயர்வை மட்டும் குறி
வைத்து 55+2 வயது வரை வாழ்வது.

4. நமக்கு மழை வேண்டும், மழைக்கு மரம் வேண்டும் என்று அறிந்தும் அறியாதவர் போல்
இருப்பது.

5. உணவு விசயத்தில் நாக்கை மட்டும் திருப்தி செய்து விட்டுப் பின்பு மருத்துவமனையைக்
குடும்பத்தில் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்வது.

6. தொழில்துறையில் ஓரளவு, மின்னுகின்ற இளைஞர்கள் மகிழ்ச்சி என்றால், அது
மதுபானம் என்றும் மாமிச உணவுகள் என்றும் மயங்கிக் கிடப்பது.

7. இந்து சமயத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளை
வியாபாரமாகவும் வளர்வது.

இப்பட்டியலை வாசகர் தம் ஆராய்ச்சிக்கு ஏற்ப நீடித்துக் கொள்ளலாம்

Monday, November 24, 2008

இடப்பெயர்வில் அழியும் ஈழம்

ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் சமூக, பொருளாதார, உளவியல் சிக்கல்கள், பாதுகாப்பின்மை என, அம்மக்கள் அன்றாடம் படும் வேதனைகள் கற்பனைக்கு எட்டாதவை. என்றாவது ஒரு நாள் நமக்கு விடிவு வரும். நமது ஊர்களுக்குத் திரும்பி இயல்பாக வாழலாம் என்ற ஒற்றை நம்பிக்கையோடு, ஈழத்தமிழர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

Eleam கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே ஈழத்தின் வன்னிப் பெருநிலப் பகுதி. மன்னாரும் முல்லைத்தீவும் கடலோர மாவட்டங்கள். கடற்கரையோரப் பகுதிகள் தவிர, வன்னி நிலப் பகுதி முழுவதும் அடர் காடுகளால் நிறைந்தது. இடை இடையே ஊர்கள் பரந்திருக்கும். வயல்களில் அன்றாடம் கூலி வேலை செய்வது, மீன் பிடித் தொழில், அதை சார்ந்த வியாபாரங்கள் ஆகியவையே இம்மக்களுக்கான பொருளியல் ஆதாரம்.
ஈழத்தில் பெருமளவிலான உள்நாட்டு இடப்பெயர்வு என்பது, 1980களிலேயே தொடங்கிவிட்டது. 80களின் முற்பகுதியில் குண்டு வீச்சினால் சிதிலமடைந்த தங்கள் வீடுகளை விட்டு, தங்கள் ஊர்களிலேயே உள்ள பள்ளிகள், கோயில்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்த மக்கள், ஊரைவிட்டு வெளியேறவில்லை.

என்றாவது தங்கள் வீடுகளை சீரமைத்து மீண்டும் அங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். பின்னர், 80களின் பிற்பகுதியில் இந்திய ராணுவம் அங்கு இருந்த காலத்தில் இடப்பெயர்வுகள் அதிகரித்தன. உள்ளூர் என்பதிலிருந்து அருகில் உள்ள நகரங்கள், பொதுப் பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்கள் எனப் பரவவும் தொடங்கின. 90களின் தொடக்கத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த போது, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இழந்த வாழ்வை செப்பனிடத் தொடங்கினர். ஆனால் அது அதிக காலம் நீடிக்கவில்லை.

அதன் பின்னர் போரும் பேச்சு வார்த்தையும் மாறி மாறி நிகழத் தொடங்கின. பேச்சு வார்த்தை நடைபெறும் காலங்களில் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பி நிலங்களில் பயிரிட்டு, கால் நடைகளைப் பராமரித்து, கடைகள் வைத்து என பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதும், மீண்டும் போர் தொடங்கியதும் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து இடம் பெயர்ந்து வாழ்வதும் - கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையாகிப் போனது.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேறச் சொன்னதால் நடைபெற்ற முஸ்லிம்களின் இடப்பெயர்வும், அதன் பின்னர் 1995 அக்டோபர் 30 அன்று சிங்கள ராணுவம் யாழைக் கைப்பற்றி மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் ஓர் இரவில் இடம் பெயர்ந்ததும் - இது வரை நடந்ததிலேயே பெரும் இடப்பெயர்வுகளாக இருக்கின்றன.

குறிப்பாக, மன்னார் மடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த சூன் மாத காலப்பகுதிக்குள் - ஆறு முறைக்கு மேல் தமது நிரந்தர இடங்களில் இருந்து இடம் பெயர்ந்ததன் பின்னர், தற்காலிக வாழ்விடங்களில் இருந்தும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மடுவில் உலகப் புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 2008இல் மடு தேவாலயத்தை முற்றிலும் அழிக்கும் அளவிற்கு சிங்கள ராணுவம் அதன் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு அது நாள் வரை உறைவிடம் அளித்த அந்த தேவாலயமே தாக்குதலுக்கு உள்ளானது, மக்களிடையே பெரும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் எழுப்பியது. மடு மாதா தாக்கப்பட்டதற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கினர். ஏற்கனவே இடம் பெயர்ந்து தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களும், மடுப் பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த மக்களும் மொத்தமாக வெளியேறத் தொடங்கினர். அன்று தொடங்கிய இடப்பெயர்வு இன்று வரை தொடர்கிறது.

ஈழம் என்பது வடக்கில் யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப் பகுதியையும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இதில் யாழ்ப்பாணமும், கிழக்கும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். இப்பகுதிகளில் ஏறத்தாழ ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை போன்ற வாழ்நிலை. ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் இடம் பெயர்ந்த மக்களே அங்கு வாழ்கின்றனர். யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அத்துடன் கூடிய பொருளாதாரத் தடை காரணமாக உணவு, மருந்து உட்பட எவ்விதப் பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதும் இயலாததாகி விட்டது. யாழிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் பெரும் கட்டுப்பாடுகள், சோதனைகள். தொண்டு நிறுவனங்களும் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு விட்டன. எந்த ஊடகவியலாளரும் அங்கு செல்ல இயலாது. இதனால் யாழ் மக்களுக்கு என்ன நேர்கிறது என்பதே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத்தினர் அறியாத புதிராகவே இருக்கிறது.

கிழக்குப் பகுதியில் ஒரு புறம் ராணுவம், மற்றொரு புறம் ஒட்டுக் குழுக்கள். இவற்றிற்கு இடையில் சிக்கிக் கொண்டு எந்நேரம் என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடனேயே மக்கள் வாழ்கின்றனர். அதோடு அங்கு அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நடத்தப்படுகின்றன. இதனால் மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூட இயலாதவர்களாக, நடமாட்டங்களை குறைத்து முடங்கி இருக்கின்றனர்.

தென்னிலங்கை முழுவதும் சிங்களப் பகுதி. இந்நிலையில் வன்னிப் பெருநிலப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பாதிப்புகளால் இடம் பெயரும் மக்கள், யாழ்ப்பாணத்திற்கோ, கிழக்கு இலங்கைக்கோ, தென்னிலங்கைக்கோ போக முடியாமல், அங்கு போய் சிக்கிக் கொள்ள விரும்பாமல், வன்னிப் பெருநிலப் பகுதியையே சுற்றிச் சுற்றி வரும் அவலம். மிகச் சிறிய தீவான இலங்கையின் ஒரு சிறிய பகுதியே வன்னிப் பெருநிலப் பகுதி. இதைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் அதற்குள் எவ்வளவுதான் செல்ல இயலும்? அதிலும் சிங்களப் பகுதிகளுக்கோ, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ அருகிலுள்ள இடங்களைத் தவிர்த்து உட்புறம்தான் செல்ல வேண்டும். முன்னைப் போல் இந்தியாவிற்கு வருவதும் அத்தனை எளிதாக இருக்கவில்லை.

சற்று வசதி பெற்றவர்கள், குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும் பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப் பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய்விடுகிறது. பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது.

காரணம் எரிபொருட்களின் விலை. தற்போதைய சூழ்நிலையில் மண்ணெண்ணெய் 1 லிட்டர் 130 ரூபாய்க்கும், பெட்ரோல் 1 லிட்டர் 700 ரூபாய்க்கும் டீசல் 1 லிட்டர் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் குழுவாக இணைந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதால், அவர்கள் எடுத்துச் செல்கின்ற தத்தமது உடைமைகளை மட்டுப்படுத்துகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு வண்டி அமர்த்தி செல்லும் வசதியற்ற, அன்றாடம் கூலி வேலை செய்து வந்த ஏழை மக்கள், குடும்பத்தில் அனைவரும் தங்களால் சுமக்கக் கூடியவற்றை தூக்கிக் கொண்டு, பாதுகாப்பான இடங்களைத் தேடி நடந்தே செல்லும் நிலை. இதற்கு குழந்தைகளும், முதியவர்களும் விதிவிலக்கல்லர்.

இதற்கு நடுவில் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களின் விலை. மன்னார், இலங்கையின் நெற்களஞ்சியம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நெல் உற்பத்தி என்பது அறவே அற்றுப் போனதாக இருக்கிறது. வயல்கள், மீன்பிடி நிலையிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால், உணவு உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது. இதனால் ஒரு மீனின் விலை 225 ரூபாய். அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கிடைப்பதே அரிது. ஏனெனில் அவை வெளியிலிருந்து வர வேண்டும். சிங்கள ராணுவம் வன்னிக்குச் செல்லும் பாதையை முற்றுகையிட்டு நிற்கிறது. இதனால் வியாபார ரீதியாக உணவுப் பொருட்களை கொண்டு வருவது இயலாத ஒன்று. தொண்டு நிறுவனங்கள் தாம் உணவுப் பொருட்களை கொண்டு வந்து மக்களுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அதையும் சிங்கள அரசு தடுத்துவிட்டது. மேலும் தொண்டு நிறுவனங்களை வன்னியை விட்டு வெளியேறவும் சொல்லிவிட்டது. அரசின் உத்தரவையும் மீறி ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அங்கு இயங்கி வருகின்றன.

சமைப்பதற்கான பொருள் கிடைத்தாலும், சமைப்பதற்கான உபகரணங்களைச் சுமந்து வர இயலாத நிலையில், விறகு வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஒரு சைக்கிள் சுமை விறகு 300 ரூபாய்க்கு விற்கிறது. அதற்குரிய பணத்தை இடம் பெயர்ந்து வாழும் மக்களால் செலுத்த இயலாது. இந்த காரணங்களால் அன்றாட சமையல் மற்றும் உணவு வழங்கல் என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது. வன்னிப் பகுதி முழுவதுமே காட்டுப் பகுதி நிலமாதலால், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடும். இந்தச் சூழலில் வெட்ட வெளிகளில், மரங்களுக்குஅடியில் கூட்டமாக நெருங்கி வாழ நேரிம்போது பல்வேறு சமூக, சுகாதார பிரச்சனைகளும், காட்டுப் பகுதியில் வாழ்வதால் விஷ உயிரினங்களினாலான ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

Eleam_ வன்னிப் பகுதியில் பெரிய ஆறுகள் இல்லை; குளங்களும், மழை நீர் பெற்று ஓடும் சிற்றாறுகளுமே உண்டு. இதனால் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சராசரி மனிதனுக்கு, சமையல் மற்றும் சுய சுகாதாரத் தேவைகளுக்காக, எட்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது, அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்புரவற்ற கிணறுகளுக்கோ அருகில் உள்ளவர்களில் சிலர் அந்தத் தண்ணீரையே சமையல், குளியல் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இது, நோய்கள்
பரவும் தன்மையில் முக்கியமாக ஓர் அதிகப்படியான சுகாதார முறைகேட்டைத் தோற்றுவிக்கிறது. அருகில் கழிவறை வசதிகள் அற்றவர்கள் தங்களின் கழிவுகளை வெளியேற்ற அகழிகள் உருவாக்க வேண்டும். இது, மக்கள் குறைவாக கூடி வாழ்கின்ற இடங்களில் பிரச்சனையாக இல்லாவிடினும், மக்கள் அதிகப்படியாக சேர்ந்து வாழும் இடங்களில் மிக அதிக அளவிலான சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

இவை தவிர, காட்டுப் பகுதிகளில் வாழ்வதால் நேரக்கூடிய பாம்புக் கடிகள், விஷ பூச்சிகளின் கடிகள் போன்றவற்றிற்கான மருந்து என்பது கிடைக்க வாய்ப்பே இல்லை. மிகவும் அவசர சிகிச்சைத் தேவைப்படும் நோயாளிகளை தூக்கிச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் கிடையாது. இதனால் மிதிவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமே நோயாளிகளை எடுத்துச் செல்லும் நிலை இருக்கிறது.

இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம், குண்டு வீச்சுகளினால் காயம்பட்டவர்கள் மறுபுறம் என மருத்துவமனைகள் எப்போதும் நிரம்பியே இருக்கின்றன. ஆனால் அத்தனை நோயாளிகளையும் கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. பெரும்பாலும் மருத்துவ உதவியாளர்களே சிகிச்சைகளை கவனிக்க வேண்டும். வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் பெரியதும் ஓரளவு வசதிகள் உடையதுமான கிளிநொச்சி மருத்துவமனை, அண்மையில் சிங்கள ராணுவத்தின் விமான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. இருந்த ஒரே நல்ல மருத்துவமனையும் சிதைக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை என்பதே பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர். கல்விக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, மக்கள் இடம் பெயரும் போது, பள்ளிகளும் இடம் பெயரும் விந்தையான சூழல் நிலவுகிறது. பள்ளிகள் இடம் பெயர்வது என்பது, வெறும் உபகரணங்களின் இடப்பெயர்வு அல்ல. அப்பள்ளியில் பயின்ற, பயிலுகின்ற அனைத்து மாணவர்கள் பற்றிய ஆவணங்களையும் பாதுகாப்பாக இடம் மாற்றுவது மிகப் பெரும் பணி. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 115 பள்ளிகள் இடம் பெயர்ந்துள்ளன. ஒன்றிணைக்கப்பட்ட பள்ளிகள் பிரதான பள்ளிகளில் இயங்குகின்றன. சில இடங்களில் ஒரே வளாகத்தில் 10 பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கும் நிலையும் உள்ளது. இந்த எதிர்பாராத சூழல் காரணமாக ஆசிரியர்கள், வகுப்பறைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த இடப்பெயர்வின் அழுத்தம் மாணவர்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்துள்ளன. தேசிய மட்டத்திலான தேர்வுகள் மற்றும் பாடத்திட்டங்கள் சீரற்றவையாக உள்ளன. தங்களின் தேர்வுகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்த
தருணங்களில் சிங்கள விமானங்கள் பள்ளி வளாகத்தில் குண்டு வீச்சை நடத்திய காரணத்தினால், பள்ளிக்கூடங்களை விட்டு நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

உளவியல் தாக்கம் என்பதும் மிகவும் அதிகப்படியானதாகவே இருந்துள்ளது. பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். வகுப்புகளோ, தேர்வுகளோ எது நடந்து கொண்டிருந்தாலும் விமான சத்தம் கேட்டால் எழுந்து ஓடி பதுங்கு குழிகளுக்குள் இறங்கிவிட வேண்டும் என்பது, குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. குண்டு சத்தத்திற்கு அஞ்சி கண்ணையும் காதையும் இறுக மூடித் திறப்பதற்குள் - அருகிலிருந்தவர் செத்து விழும் கொடுமையை காண நேரும் குழந்தைகள், பெரும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பெற்றோரை விட்டு பள்ளியில் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற அனுபவங்களினால் மிகப் பெரிய அளவில் பாதுகாப்பின்மை மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் பெற்றோரை விட்டு பள்ளிக்கு வரவே அஞ்சுகின்றனர். வெளியேறிய இடங்களில் உள்ள ஆசிரியர்களும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, அவர்கள் இந்தப் பள்ளிகளின் தற்காலிக வளாகங்களில் இருந்து வெகு தூரத்தில் இடம் பெயர்ந்துள்ளதால், தங்களின் பள்ளிகளில் தொடர்ந்து கற்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விட, இடப் பெயர்வு என்பது பெரும் சமூகச் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. ஓர் ஊரில் பல தலைமுறைகளாக ஒரே சமூகமாக கூடி வாழ்ந்த மக்கள் பல திசைகளில் சிதறும் பொழுது, சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுகிறது. திருமணம் போன்று வாழ்வில் இயல்பாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் அதனதன் போக்கில் நடக்க இயலாமல் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் பல ஆண்களும் பெண்களும் திருமண வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்கின்றனர். எந்தவொரு அவலத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதற்கு இச்சமூகமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி நிகழும் சாவு, உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை, நிரந்தர வாழ்விடம் இன்றி மாறிக் கொண்டேயிருப்பது போன்றவை, குழந்தைகள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இனம், மொழி, மதம், தேசம் ஆகியவற்றை கடந்த துயரம் இது. இத்தகைய அவலம் உலகில் எந்தப் பகுதியில், யாருக்கு நேர்ந்திருந்தாலும் அத்துயரைத் துடைக்க முன் நிற்பதே - மனித நேயமிக்க ஒவ்வொருவரின் கடமை. உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்று ஒன்று இல்லை. ஆனால், போருக்கு முன்னால் நடுநிலைமை என்பது உண்டு. போரினால் அல்லலுறும் மக்களின் பக்கம் நிற்பதே அது.

Wednesday, November 19, 2008

சட்டக் கல்லூரி: பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை... அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடிய விடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.

ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?

பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.

“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”

“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”

“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா, நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”

“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க - அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”

சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும் தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசுக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally) ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதை வைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.

இது தொடர்பாக என்னுடைய வலைப்பக்கத்தில் எழுதப்பட்ட முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:

“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”

இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை. எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள். ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.

அது போலவே, “எஸ்.சி - பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப்பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.

வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் (ம.க.இ.க.) சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.

பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?

திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?

தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்ல வைக்கப்பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?


அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறி நீதிமன்றத்தின் சாதிவெறியை விடக் கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.

ஒளிபரப்பப்பட்ட ஒரு வன்முறை - ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!

மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான் தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும், ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?

“ஏனென்றால் இவை ஒளிபரப்பப்படவில்லை” என்று சொல்லி சமாதானமடைந்து கொள்வோமா? மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனசாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா? அத்தகைய ‘நியாயம்’ பதில் ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இவையெல்லாம் ஒளிபரப்பப்படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப்பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப்பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்க வேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது. தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.

அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?

“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” - இதுதான் காந்தியின் பதில். எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்டபோது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.

காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார். அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர்சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

இப்படியொரு பச்சைப் பொய்யை சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால் “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால் இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.

தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.

இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம். போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை. இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ பெயரிடப்படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’. அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.

சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள். தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.

சாதித் தலைவரான தேவரை தேசியத் தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித் தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது. மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.

ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது! எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.

டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.

காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் - டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.

கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்
“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.

கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

“சார் வெளியூர் போல... நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

அவர்கள் பத்து பேர் - நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.

“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன். நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.

இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை. பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.

ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும். ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.

பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை - அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானது!