Thursday, November 5, 2009

பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்யுங்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய கேடு!

நம் நாட்டில் பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காக பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள். பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும்பொழுது 40 சென்னிலிருந்து அதே நீரை விடுதிகளால் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது.

பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீருக்கும்இ வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்று பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது என்றார் இத்ரிஸ்.

குழாய் நீரில் குளோரின் சேர்த்திருப்பதற்கான வாடை இருக்கும். ஆனால் பாட்டில் நீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழாய் நீருக்கும் பாட்டில் நீருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பாட்டில் நீர் குடிப்பவர்கள் நவீனமாகவும்இ கவர்ச்சியாகவும்இ வசதி படைத்தவர்களாகவும்இ ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்களாகவும் விளம்பரங்கள் பறை சாற்றுவதால் பயனீட்டாளர்கள் பாட்டில் நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பாட்டில் நீர் குடிப்பதால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் கிடைப்பதாக இன்னும் சில பயனீட்டாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம்இ பொட்டேஸியம்இ துத்தநாகம் போன்றவை தண்ணீரில் மிக மிக சொற்ப அளவில் இருக்கிறது. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இத்ரிஸ்.

பாட்டில் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய்இ பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடம் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள்இ பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு பாட்டிலைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன. இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது 1000 வருடங்களாவது பிடிக்கும் என்றார் இத்ரிஸ்.

பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1இ Pநுவுஇ Pநுவுநு ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் தண்ணீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் பாட்டில் நீர்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30ழுஊ சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் பாட்டில் நீர்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரில் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும் என்றார் இத்ரிஸ்.

Pநுவு உபயோகத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பாட்டில் நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத்தன்மை உடையதாக ஆகிறது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும்.

பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை. மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில சிறிது எலுமிச்ச்சையைக் கலந்து குடித்தாலே புத்துணர்வு கிட்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment