Wednesday, October 28, 2009

எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றி தகவல் பெறுவதற்காக பி.ப.சங்கத்திற்கு வருகை

சுங்கைப்பட்டாணியில் அமைந்துள்ள எயிம்ஸ் பல்கலைக்கழகத்தின் 85 உயிரியல் தொழில்நுட்ப மாணவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணி மனைக்குஇ கல்வி தொடர்பாக வருகை மேற்கொண்டார்கள்.


(பி்.ப.சங்கத்தின் இயற்கை வேளாண்மை பட்டறை பயிற்ச்சிக்கு கலந்து கொண்ட எயிம்ஸ் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர்)

டாக்டர் ஹஷாமுடின் ரஹ்மாட் தலைமையில் வந்த இம்மாணவர்களுக்கு பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் பணிமனையில் உள்ள இயற்கை வேளாண்மை தொடர்பான பல விளக்கவுரைகள் இம்மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டன.

சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த செயல் விளக்க முறை நடவடிக்கையில் எலுமிச்சை முட்டை கரைசல்இ நுண்ணுயிர் ஊக்கிஇ குணப்பசலம்இ மூலிகை பூச்சி விரட்டிஇ மண்புழு குளியல் நீர்இ மண்புழு இயற்கை உரம் தொடர்பான தெளிவான விளக்கங்கள் தரப்பட்டதாக இச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.


பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் அவர்கள், மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க
இம்மாணவர்களின் கல்விக்குத் தொடர்பான இந்த செயல்விளக்க முறைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக டாக்டர் ஹிஷாமுடின் அமாட் தெரிவித்ததாகவும் சுப்பாராவ் கூறினார்.


என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

No comments:

Post a Comment