Monday, March 15, 2010

சிறப்பான முறையில் நடைபெற்ற எஸ்பிஎம் & எஸ்டிபிஎம் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கு மாணவர்களும் பெற்றோர்களும் பயனடைந்தனர் !


பினாங்கு சுய அறிவாலயம் தியான ஆசிரமம் மற்றும் ஸ்ரீ பால தண்டாயுதபாணி இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த எஸ்.பி.எம் & எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கில் சுமார் 250 மாணவர்களும் 200 பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


எஸ்.பி.எம் & எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான இந்த வழிகாட்டி கருத்தரங்கு 4வது முறையாக இந்த அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என அதன் ஏற்பாட்டு குழுவின் தலைவர் டாக்டர் இரா. சிவகுமார் கூறினார்.


இந்த வழிகாட்டி கருத்தரங்கில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களும் மாணவர்களுக்கான பல விளக்கங்களைத் தந்து உதவினர்.

எஸ்.பி.எம் மற்றும் எஸ்டிபிஎம் மாணவர்கள் தங்கள் பரீட்சை முடிவுகளுக்கு எந்த துறையைத் தேர்ந்தெடுக்கலாம், அரசாங்கம் வழங்குகின்ற சேவை மற்றும் சலுகைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டது.


பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் போது ஏற்படும் செலவுகள் பற்றியும் அவற்றை எப்படி சிக்கனப்படுத்தலாம் என்பது பற்றியும் மிக தெளிவாக விரிவுரையாளர்கள் விளக்கினர். பதிவு பெறாத துறையைத் தேர்ந்தெடுத்து அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் பற்றியும் விவரிக்கப்பட்டது.

மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த மதிப்பெண்களை வைத்து எந்த துறைகளை அவர்கள் தேர்ந்தெடுத்தால் மிக சுலபமாக மலேசிய பல்கலைகழகங்களில் சேரமுடியும் என்பது பற்றிய நுணுக்களை விரிவுரையாளர்கள் விளக்கியது கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

இறுதியாக இந்நிகழ்ச்சி வெற்றி பெற ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய மலேசிய அறிவியல் பல்கலைகழக மாணவர்ளுக்கும் நிதி உதவி வழங்கிய ஆதரவாளர்களுக்கும் தியான ஆசிரம பினாங்கு கிளை ஆலோசகர் என்.வி.சுப்பாராவ் நற்சான்றிதழ் வழங்கினார்.


சரஸ்வதி தேவி
செயலாளர்
சுயஅறிவாலயம் தியான ஆசிரமம் பினாங்கு கிளை

No comments:

Post a Comment