
அரசால் அறிவிக்கப்படும் எந்த திட்டமும் மக்களுக்கு உருப்படியாய்க் போய்ச் சேர்வதில்லை என்பதைத் தமது பட்டினிச் சாவுக்களின் மூலம் உலகுக்கு காட்டியுள்ளனர் ஒரிசாவின் பலங்குடி மக்கள்.
போக்குவரத்து உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்பதற்கு உணவின்றி, மாங்கொட்டைகளைக் கஞ்சியாக்கி உண்டு, பசியாறுவதாய் நினைத்து உயிர்விட்ட ஒரிசா பழங்குடி மக்களின் சோகம் நம் நெஞ்சை உலுக்குகிறது.

"அவர்கள் கெட்டுப்போன மாங்கொட்டைகளை தின்றதால்தான் செத்தார்கள். பட்டினியால் சாகவில்லை" என்ற வியாக்கியானங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. அரிசியோ, கோதுமையோ இருந்திருந்தால் அவர்கள் ஏன் மாங்கொட்டைகளைத் தின்கிறார்கள்?
ஒரிசா அரசாலட நடத்தப்படும் இந்த பட்டினிப் படுகொலைகளை பத்திரிக்கையாளர்களோ அம்பலப்படுத்தி உள்ளனர். ஒரிசாவிலிருந்து வெளியாகும் சாம்பா நாளிதழ், ஈநாடு நாளிதழ்களின் பகுதி நிருபர்களே இச்செய்திகளை வெளியுலகிற்கு கொண்டு வந்தனர். பின்னர் டெல்லி பத்திரிக்கைகள், சர்வதேச தொலைக்காட்சிகள் என ஹெலிகாப்டர்களிலும் நிருபர்கள் வந்து குவிநதனர். இதனிடையே ஒரிசாவின் படாகமடா கிராமத்தில் 1100 ரூபாய்க்கும் 15 கிலோ அரிசிக்கும் 4 வயது சிறுவனும் 2 வயதேயான சிறுமியும் விற்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. தந்தையற்ற, விதவைத் தாயும் பட்டினிக்குப் பலியாகிவிட்ட நிலையில் இக்கொடுமைகள் நடந்துள்ளது.

இத்தகைய செயலைச் செய்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார் ஒரிசா வருவாய்த்துறை அமைச்சர் பிஷ்வபூசன் அரிசந்தன்.
இந்நிலை உருவாக் காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை?
No comments:
Post a Comment