Wednesday, October 22, 2008

என் கவிதைகள்

மனிதனா?
வாழ்க்கை என்பது
வாழ்வதற்காகத்தானே?
வாழத் தெரியதவன் முட்டாள்
வாழ அஞ்சுவன் கோழை
வாழ்க்கையை வாழத் தெரிந்தும்
வாழாமல் இரு்ப்பவன் மனிதனா?


ஆதரிக்கிறேன்
நான் சிரிப்பை விட
அழுகையை ஆதரிக்கிறேன்
ஏனெனில் இருள்தான் பகலை
அடையாளம் காட்ட முடியும்
இல்லாததுதான் இருப்பதை நினையவுறுத்தும்.


காதலர் தினம்
ரோஜா பூக்களுக்கு
ரொஜா தரும் நாள்
இதயத்தில் இனம் புரியாத
மகிழ்ச்சி நாள்,
இரு இதயங்கள்
ஒன்றாகும் நாள்
பகிர்ந்து கொள்வதோ, இரு
இதயங்களின் மனதய்,
அதய் சொல்லத்தான்
வருவதோ காதலர் தினம்!!!


தேடுகிறேன்
பாசத்துக்காகவும், அன்புக்காகவும்,
நேசத்துக்காகவும்
என் மனம் அன்பை தேடுகிறது.
கரைந்து போன இதயத்துக்கு நல்ல
துணையைப் பகிர்ந்து கொள்ள
உறவை தேடுகிறது.


தீபாவளி
அன்பு நிறைந்தது தீபாவளி
இன்பமானது தீபாவளி
அமைதியானது தீபாவளி
ஆன்மீகமானது தீபாவளி
தீபத்தின் ஒளியைப் போல்
இறைவனின் அருள் ஒளி
இல்லத்தில் மட்டுமல்ல
நம் இதயத்திலும் ஏற்ற...
இதயம் தூய்மையானால்
இல்லம் தூய்மையாகும்.
இல்லத் தூய்மையே ஒரு
மனிதனை மனிதனாக
வாழவைக்கும் நம்மையெல்லாம்
மனிதனாக வாழவைப்தற்கே
ஆண்டில் ஒரு முறை
வருகிறது தீபாவளி.


பார்த்ததில்லை!
உயிரோடு உயிராக
நான் உன்னை விரும்பினேன்
நீ என்னை நேசித்தாய்
பார்க்காத போது....
ஆனால் இப்பொழுது பார்த்தபோது
நீ என்னை வெறுத்தாய்...
நான் உன்னை நேசிக்கிறேன்
இந்தக் கடல் அலைகளின்
வரையை விட அதிகமாக.....

No comments:

Post a Comment