Monday, November 10, 2008

தாய்மொழிவழிக் கல்வி : தமிழால் இயலாது என்பது தவறு.

ஒவ்வொருவருக்குமான முதன்மையான அடையாளம் என்பது அவரவர் தாய்மொழியால் பெறப்படுவதே ஆகும். குழந்தை தாயின் கருப்பையி லிருக்கும்போதே மொழியைக் கற்கத் தொடங்கி விடு கிறது. எனவே உலகின் அறிவுத் துறைகள் யாவற்றை யும் எந்தெந்த மொழிகளின் வழியாகப் பெற்றாலும் சிந்தனை என்பது தம் தாய்மொழி வழியாகவே அமையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனவேதான் உளவியலறிஞர்களும் மானுடவியலாளர் களும் கல்வி என்பது அவரவர் தாய்மொழியில் அமைந் தால் மட்டுமே கல்வியின் முதன்மை நோக்கமாகிய சிந்தனைத்திறன் வளர்ச்சியும் படைப்பாற்றல் மேம் பாடும் நிகழும் என்கின்றனர். சிந்திப்பது ஒரு மொழி யிலும், கல்வி கற்றலென்பது ஒரு மொழியிலுமாக அமைவது அறிவியல் அடிப்படையிலேயே தவறானது.

குறிப்பாகத் தமிழகத்தின் பெரும்பான்மைப் பெற்றோர்கள், தாம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் சிறப்பான முறையில் கல்வி பெற்றுயர்ந்ததை உணர்ந்தும் கூட, ஆங்கிலமோகம் கொண்டவர்களாகவே இருப்பது தமிழகத்தின் அவலச் சூழல்.

ஆங்கிலம் பயிலல் என்பது வேறு. ஆங்கிலத்தின் வழியாகப் பயிலுதல் என்பது வேறு. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது என்ற நோக்கில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் வயது, கற்றல் வேகம், சூழல் சார்ந்து கற்றுக் கொள்வதென்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் அடிப்படையான அறிவு வளர்ச்சிக்கான பாடங்கள் யாவற்றையும் எந்தக் காரணகாரியங்களும் இன்றி ஆங்கில வழியாகவே (ஆநனரைஅ டிக நுபேடiளா) பயின்றால் தான் அறிவு வளரும் என்பதான பெற்றோர்களின் எண்ணம் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஆங்கிலம் என்பதனை அறிவின் மொழியாகவும் உலகின் அறிவுப்புலங்களுக்கெல்லாம் அதுவே வாயி லாகவும் எண்ணிக்கொள்கிற பல பெற்றோர்கள், தன் குழந்தை குறித்து ‘பிற பாடங்களெல்லாம் நன்றாகப் படிப்பான். ஆங்கில வழியிலேயே படித்ததால் தமிழ் தான் சரியாக வருவதில்லை’ என்று சொல்லிக் கொள்வ தில் பெருமையடைகிறார்கள்.

இன்றைக்கும் பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கியூபா, சீனா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆங்கிலேயர் ஆண்டு விடுதலை வழங்கிய பல நாடுகளிலும் அவரவர் தாய்மொழியில்தான் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை வழங்கப்படுகிறது. இன்று உலகையே தன் தொழில்நுட்ப அறிவால் ஆளுகிற ஜப்பானிய விஞ்ஞானி கள் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என்பது நாம் அறிய வேண்டியது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் அளப்பரிய சாதனைகள் செய்து நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களில்கூட ஆங்கிலம் தெரியாதவர் உள்ளனர். எனவே, ஆங்கிலப் புலமை என்பது அறிவின் அடையாளம் என்ற தவறான மனப்போக்கு மாற வேண்டும்.

நுண்ணிய நூல் பல கற்பினும் தத்தம்
உண்மை அறிவே மிகும்.
- என்ற வள்ளுவர் வாக்கை இப்போக்கில்கூடப் பார்க்கலாம்.

ஒரு குழந்தை இரண்டாவது மொழியாக ஆங்கி லத்தை மட்டுமல்ல வேறு எந்த மொழியைக் கற்க வேண்டுமானாலும் அது முதலில், தன் தாய்மொழியைச் சரியாகக் கற்று வளம் பெற்றால்தான் அந்த இரண்டா வது மொழியறிவையும் வெற்றிகரமாகப் பெறமுடியும். எனவேதான் உளவியல் மற்றும் மொழியியல் அறிஞர் கள் ஒரு குழந்தை தன் தாய்மொழியில் ஓரளவிற்குப் பயிற்சி பெற்ற பின்னர் பிறமொழி அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென்கின்றனர். ஆனால் இங்கோ அ, ஆவிற்கு முன் ஹ, க்ஷ, ஊ, னு அறிமுகப் படுத்தப் படுவதே கௌரவமாகக் கருதப்படும் சூழல். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பு வதைத் தடை செய்ய வேண்டும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வளர்ச்சியடையாத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுதுவது, படிப்பது, கணக்கு சொல்லிக்கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். பள்ளிப் பைகளின் எடை குழந்தையின் எடையில் பத்து சதவீதம் (10சதவீதம்) அதாவது 1 முதல் 1 1 /2 கிலோ வரை இருக்க வேண்டும் என்று இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் அறிவுறுத்துகிறது.

தட்பவெப்பச்சூழலுக்கு முற்றிலும் முரணான வகையில் கழுத்தில் இறுகும் பட்டையையும் (டை) காலுறையையும் (சாக்ஸ்) புதையடியையும் (ஷு) இறுக்கிக் கட்டி குழந்தையின் பிஞ்சு உடலும் மனமும் அரைவேக் காடாகும் வண்ணம் விலங்குகளை அடைப்பதுபோல் அள்ளிக்கொண்டு செல்லும் ஊர்திகளில் ஏற்றி ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்புவதில் அலாதி இன்பம் காண்கின்றனர் கற்றறிந்த பெற்றோர்கள்கூட.

பெரும்பாலும் தமிழ்வழிக்கல்வி என்பது கிராமப் புற ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கானது என்பது போலவும் ஆங்கில வழிக்கல்வி மேல்தட்டு மக்களுக் கானது என்பது போன்றதுமான மாயைச் சூழலைக் களையத் தற்போது சமச்சீர்க்கல்விக்கான முன்வைப்பு கள் மகிழ்ச்சி தருகிறன. பாமரனும்கூட தன் பிள்ளை ஆங்கில வழியில்தான் பயில வேண்டும் என்று முனைப்பு காட்டுவதுதான் தமிழ்ச்சமூகம் ஆங்கில மோகத்தின் வழி, மெக்காலே கண்ட கனவின் வழி மீண்டும் ஓர் அடிமைத்தனத்திற்குத் தயாராகிறது என்பதன் அடையாள மாகும்.

பல்லாண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டிய சோழனின் தொழில்நுட்ப அறிவு இன்றைய பொறியியல் கல்லூரிகள் தந்ததா? கப்பல் கட்டிய அறிவு இங்கிலாந் தில் பெற்றதா? ஒவ்வொரு மொழியும் அவ்வினமும் அறிவுத் தோற்றவியல்( நுயீளைவநஅடிடடிபல) சார்ந்து தனக்கான அறிவுத்தேடலின் பயணப் பதிவை தத்தம் மொழியில் செய்திருக்கின்றன. அம்மொழியில் இன்றைய நவீனத் திற்கும் அதற்கு மேலுமான தொழில்நுட்ப அறிவு புதைந்திருக்கிறது.

அவ்வகையில் நம் செம்மொழித் தமிழால் மருத்துவம், அறிவியல், சட்டம், பொறியியல் கற்பிக்க இயலாது என்பது முற்றிலும் தவறானது. உயர்கல்வி யினைச் சிறப்பாகத் தமிழில் தர முடியும். கல்லூரிப் பாடங்களெல்லாம் ஆங்கிலத்தில் உள்ளன. எனவே தான் எங்கள் குழந்தைகளை ஆங்கில வழிப்பள்ளியில் படிக்க வைக்கிறோம் எனும் பெற்றோர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். படித்த, சென்ற தலைமுறைப் பெற் றோர்களின் ஆங்கிலப் புலமை இத் தலைமுறையினரை விடச் சிறப்பாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்களில்லை. ஒரு மொழிப் பாடமாக மட்டும் ஆங்கிலத்தைப் பயின்றவர்கள்தான்.

உயர்கல்வி பெறும் பருவ வயதிற்கான கேட்டல், எழுதுதல், படித்தல், புரிதல் நிலை வளர்ச்சிவேறு.

“கல்விக்கு சரியான அடிப்படை ஒழுக்கத்தைக் கற்பிப்பதே. ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் போதிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு என் பிள்ளைகளை ஆப்பிரிக்காவில்கூட அனுப்பவில்லை. தாய்மொழி யில்தான் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். எங்களோடு டால்ஸ்டாய் பண்ணையில் வாழ்ந்த குழந்தைகளுக்கு தமிழும், உருதும் சொல்லிக் கொடுப் பதை நான் ஏற்றுக்கொண்டேன்” (சத்தியசோதனை - 238) என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றிற்கேற்ப குழந்தைகளின் வாழ்வு செப்பமானதாக்க தாய்மொழி வழிக்கல்வியை நாடுவோம்.

மன்னார்குடி இரெ.இராசகணேசன்

No comments:

Post a Comment