Tuesday, November 18, 2008

மனித உடலின் அணுக்களை (செல்) தாக்கும் குளிர்பானங்கள்

அணுக்களைச்(செல்) சாகடித்து, உடல் பருமனை ஏற்படுத்தும் அதிக கலோரியைக் கொண்ட குளிர்பானங்களின் விற்பனையை நிறுத்த வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

உலகம் முழுவதிலும் உள்ள பல பயனீட்டாளர் கழகங்கள் “உலகளாவிய நிலையில் குளிர்பானத்தை மறுப்போம்” என்ற பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. உலக அளவில் சிறார்களிடையே உடல் பருமன் பிரச்னைக்குக் காரணமாக இருக்கும் அதிக கலோரி கொண்ட குளிர்பானங்களின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என உலகம் முழுதிலும் உள்ள நாடுகளின் அரசாங்கங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன.

குளிர்பானங்களில் இருக்கும் அதிகமான சீனியினால் மட்டுமே பாதிப்பு இருக்கிறது என்று கிடையாது. அதில் மிக பரவலாக பயன்படுத்தப்படும் சோடியம் பென்சொயித் என்ற பதப்பொருள் மரபணுக்களில் முக்கிய அம்சங்களைக் குளறுபடியாக்கி கடுமையான அணுசிதைவை ஏற்படுத்துகிறது என பிரிட்டன் பல்கலைகழக ஆய்வு ஒன்று கூறுகின்றது. முதுமை மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் ஈரல் இறுக்கி நோயான சிரோசஸ் மற்றும் ஓயாத உறுப்புக்கள் நடுக்கத்தை ஏற்படுத்தும் பார்கின்சன் நோயையும் ஏற்படுத்தும் என்று கூறுப்படுகிறது என்று இத்ரிஸ் கூறினார்.

உலகம் முழுவதிலும் குளிர்பானங்களைக் குடிக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சுவைக்கூட்டுப்பொருள் குழந்தைகளிடையே மிகை சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது என்பதும் இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

சோடியம் பென்சோயித் இ211, கேஸ் பானங்களில் மிக பரவலாக உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகிறது. பென்சோயித் அமிலத்திலிருந்து தருவிக்கப்படும் சோடியம் பென்சொயித் குளிர்பானங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

சோடியம் பென்சொயித் புற்றுநோயுடன் சம்பந்தப்படுத்தப்பட்டு வருகிறது, காரணம் குளிர்பானங்களில் இருக்கும் வைட்டமின் சியுடன் இது கலக்கும் போது பென்சின் என்ற இரசயானத்தை உருவாக்கிறது. பென்சின் இரசாயனம் புற்றுநோய் காரணிகளில் ஒன்றாக இருக்கிறது.

உணவு விதி 1985ன் கீழ் பென்சோயிக் அமிலம் அல்லது சோடியம் பென்சோயித் உணவுகளில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுவை சேர்க்கப்பட்ட பானங்களில் 2000 பிபிஎம் அளவும், குளிர்பானங்களில் 800பிபிஎம் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

ஊட்டச்சத்து என்று பார்க்கும் போது குளிர்பானங்களில் மிக குறைந்த அளவே இருக்கிறது ஆனால், சுகாதார கேடுகள் என்று பார்க்கும் போது அதில் ஏரளாமாக மலிந்து கிடக்கிறது. பெரும்பாலான குளிர்பானங்கள¢ல் ஆபத்தான கேஸ், வர்ணம், அமிலம், சுவைப்பொருள், சீனியூட்டப்பட்ட நீர் மட்டுமே இருக்கின்றது. இந்தப் பொருட்களினால் புற்றுநோய், எலும்பு தேய்மானம், உடல் பருமன் சொத்தைப்பல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

சோடியம் பென்சோயித் ஏராளமான சுகாதார கேடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், சுகாதார அமைச்சு இதனை மறு ஆய்வு செய்து, அதன் பயனீட்டை நிறுத்த வேண்டும். இந்த அமிலம் குளிர்பானம் உட்பட மற்ற உணவுகளில் பயன்படுத்தப்படுத்துவதற்கு உணவு விதி 1985 அனுமதிக்கிறது.

No comments:

Post a Comment