Monday, November 10, 2008

முதன் முதலாக (1)

1. இன்று தொடர் கதைகளில் முடிவில் ' முற்றும், ' முற்றிற்று' என்று சொற்களை எழுதுகிறோமே! இதை முதன் முதலில் எழுதி வழிக் காட்டியவர் யார் தெரியுமா?
இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தின் ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும், நூலின் முடிவிலும் அவர் இச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

2. முதன் முதலில் தமிழில் ' சதுரகராதி' என்னும் அகராதியை இயற்றியவர் இத்தாலி நாட்டவரான ஒரு பாதிரியார்தான். அவர் பெயர் " கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி' என்பது. ஆனால், நமது நாட்டார் அவரை ' வீரா முனிவர்' என்று அன்புடன் அழைத்தார். 1732-ல் வெளிவந்தது அவ்வகராதி.

3. திருசெந்தூரில் இருந்த கடவுள் படிவம் ஒன்றை டச்சுக்காரர்கள் கைப்பற்றி அது 1853-ல் மீட்கப்பட்டபோது ' வென்றி மலை கவராயர்' என்பது ஒரு கீர்த்தனை நூல் பாடினார். இதுவே கீர்த்தனை என்ற பெயரில் எழுந்த முதல் நூல் ஆகும்.

4. தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய இலக்கியக்கலை களஞ்சியத்துக்கு ' அபிதானகோசம்' என்று பெயர் இயற்றியவர் ' ஆ.முத்துத்தம்பி பிள்ளை. வெளிவந்த ஆண்டு 1902, இடம்: யாழ்ப்பாணம்.

5. 'சென்னை இலக்கியச் சங்கம்' என்று அழைக்கப்படும் ஓர் அரிய நூல் நிலையத்தைப் பற்றி நம்மில் அநேகம் பேருக்குத் தெரியாது.

6. தமிழில் 1879- ஆம் ஆண்டு வெளிவந்த முதல் நாவல் ' பிரதாப முதலியார் சரித்திரம்' . எழுதியவர் : '' முனிசீப் மாயூரம் வேதநாயகம் பிள்ளை".

7. தமிழ்மொழியில் முதல் பயண நூலை எழுதியவர் " சே.ப. நரசிம்மலு நாயுடு". இதுதவிர 94 நூல்களின் ஆசிரியரான இவர் சிறந்த மேடைப் பேச்சாளர். மதுரை சங்கத்தின் உறுப்பினராகவும் இவர் இருந்திருக்கிறார்.

8. 1842- ல் ரெவ. பெ. பெர்சிவல் எனும் பாதிரியார் " தமிழகப் பழமொழிகள்' என்னும் நூலை வெளியிட்டார். இதுவே தமிழில் வெளிவந்த முதல் பழமொழித் தொகுப்பு.

9. தமிழில் 1943 -ல், தான் முதன் முதலாக நாட்டுப்புறப் பாடல்களின் தொகுப்கு வெளி வந்தது. " காற்றிலே மிதந்த கவிதை" என்ற இந்தத் தொகுப்பை மு. அருணாசலம் என்பவர் வெளியிட்டார்.

10. மாத இதழ்களில் முதலில் தோன்றியது ' ஜன விநோதினி', இந்தத் தமிழில் இதழ் 1870- ல் வெளிவந்தது.

1 comment: