Tuesday, December 29, 2009

அதிகமான இந்தியர்கள் திவால் ஆகின்றார்கள் உத்தரவாதம் வழங்கியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் எச்சரிக்கின்றார் - என்.வி. சுப்பாராவ்

கடந்த சில ஆண்டு காலமாக இந்தியர்கள் பலர் திவால் ஆவதும் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதும் அதிகரித்து வருவது கவலையைத் தருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

திவால் ஆகிறவர்களில் பலர் 30 வயதுக்கு உப்பட்டவர்களாகவும் சிலர் பெண்களாகவும் இருப்பது வேதனையைத் தருவதாக இருக்கின்றது என பி.ப.சங்க கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.

திவாலைத் தவிர்த்து பலரின் சொத்துக்கள் ஏலத்திற்கு விடப்படும் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகின்றது என்றும் சுப்பாராவ் கூறினார்.

இந்தியர்கள் சம்பந்தப்பட்ட திவால் மற்றும் ஏலம் தொடர்பான அறிக்கைகள் ஆங்கில பத்திரிகைகளில் பரவலாக வெளியிடப்பட்டு வருகிறது.

அப்படி வெளியிடப்படும் அறிக்கைகளிலிருந்து பார்ப்போமானால் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் உண்மை தெரிகிறது என்றார் அவர்.

கடன் வாங்கியவர்கள் ஒரு புறமிருக்க அக்கடனுக்காக உத்தரவாதம் வழங்கியவர்களும் இந்தப் பட்டியலில் சிக்கிக்கொள்கின்றனர்.

முறையான திட்டமிடாதது, நிர்வாகத் திறன் இன்மை, அளவுக்கு அதிகமான செலவு, குறைவான நாட்களிலேயே கூடுதலான பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை போன்ற காரணங்களால் இவர்கள் திவால் ஆகக்கூடியவர்களாக அமைந்துவிடுகின்றனர் என்றார் சுப்பாராவ்.

திவால் சட்டப்படி மொத்த கடன் மவெ. 30இ000க்கு மேற்பட்டு இருக்க வேண்டும். வாங்கிய கடனை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் செலுத்த முடியாதவர்களே திவாலாக ஆக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையே வாங்கிய வீட்டிற்கு மாதா மாதம் தவணைப் பணத்தை செலுத்த முடியாததால் ஏலம் விடப்படும் சம்பவங்களும் தொடர்கதையாக தொடர்ந்துகொண்டிருப்பதையும் சுப்பாராவ் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் வீடுகளை கடனுக்கு வாங்கி, சில மாதங்களுக்குப் பிறகு பணத்தைச் செலுத்த முடியாத பட்சத்தில் இவ்வீடுகளை ஏலத்திற்குச் சென்றுவிடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

ஏலம் விடப்படும் அறிக்கைகள் தினசரி பத்திரிகைகளில் தினந்தோறும் பிரசுரிக்கப்பட்டு வருவதாக சுப்பாராவ் கூறினார்.

கடன் வாங்குபவர்கள், இளம் வயதினராக இருப்பதும், அவர்களே திவால்காரர்களாக ஆக்கப்படுவதும், பிறகு அவர்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதும் வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்திற்கு சிறந்தது அல்ல என்றார் சுப்பாராவ்.

தொழில் துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு முறையான நிர்வாகத் திறன் சொல்லித்தரப்படாததே இதற்குக் காரணம்.

வங்கியில் கடன் பெற நினைப்பவர்களும், அவர்களுக்கு உத்தரவாதம் வழங்க இருப்பவர்களும், முறையான திட்டத்தை வகுக்க மிகச் சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டும் என என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Thursday, December 3, 2009

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே

- தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.



சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன. இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம். இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.

- கேரி பேக்குகள்
- காய்கறி கேரி பேக்குகள்
- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்
- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்
- வீட்டு குப்பை பைகள்
- வணிக குப்பை பைகள்
- தொழிற்சாலை லைனர்கள்
- மருத்துவ, ஹோட்டல் குப்பை பைகள்

மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள்

வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்
காகிதம் - 2-5 மாதங்கள்
கயிறு - 3-14 மாதங்கள்
ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள்
உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்
தோல் காலணி - 25-40 ஆண்டுகள்
நைலான் துணி - 30-40 ஆண்டுகள்
தகர கேன் - 50-100 ஆண்டுகள்
அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள்
பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள்

பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள். அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது. நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமை

அனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன.

உண்டி கொடுத்து உயிர் பறிப்போரே!

சென்னை மயிலாப்பூருக்கு அருகில் வாழ்பவன் நான். தினசரி அந்தப் பகுதியை குறைந்தபட்சம் இரண்டு முறை கடக்கும் வாய்ப்பு உண்டு. மாதந்தோறும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்து மதத்தில் பண்டிகைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் ஆத்திகமே கதியென்று கிடக்கிறவர்களுக்கு, சுற்றியிருக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு உணர்வையே இந்தத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. திருவிழா காலங்களை நம்பியே மட்பாண்டம் செய்யும் குயவர்கள், பொம்மை விற்பவர்கள், சின்னச்சின்ன பொருட்களை விற்கும் எளிய மனிதர்களின் வாழ்வு அடங்கியிருக்கிறது. இதைத் தவிர, இந்தத் திருவிழாக்களில் மிகப் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. இதுவும் எவ்வளவு நாள் நீடித்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. விரைவில் இவற்றுக்கு மரணம் சம்பவிக்கும் என்பது மட்டும் நி்ச்சயம்.


காரணம், ஒரு காலத்தில் பண்ருட்டியில் இருந்து மண் பொம்மைகள், சேலத்தில் இருந்து கல்சட்டிகள், ராமநாதபுரத்தில் இருந்து பனையோலை முறங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி தொலைவில் இருந்து வருவதெல்லாம் நின்றுவிட்டது. அதைவிட இன்னும் சோகம், இந்தத் திருவிழாவின்போது, பனையோலை முறத்தைப் போன்ற தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் முறத்தை நான் பார்த்தேன்.

மயிலையில் ஆண்டுதோறும் மிகப் பெரிதாக நடக்கும் விழா பிரம்மோத்சவம்-63 நாயன்மார்கள் விழா. திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்து, அதாவது ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்தத் திருவிழா நடைபெறுகிறதாம். 1909ல் 50,000 பங்கேற்றிருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மக்கள் பாடலான "பீப்பிள்ஸ் பார்க் வழிநடைச் சிந்து" என்ற புத்தகத்தில் இந்தத் திருவிழா காலத்தில் நடத்தப்படும் "கிளாஸ்காரன் தண்ணீர் பந்தல்" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அப்போதிருந்து திருவிழாவில் தண்ணீர் பந்தல் நடப்பதற்கான ஆதாரமும் இருக்கிறது.

இந்த விழாக்களின்போது போக்குவரத்து மாற்றப்படும். ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், ஜனநெருக்கடி அதிகரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. பிரம்மோத்சவம் விழாவின் போது, மயிலாப்பூர் பஸ் டெபோ அல்லது மயிலை குளம் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில், குறிப்பாக ஆர்.கே. மடம் சாலையில் உயரஉயரமான பந்தல்கால்களை நட்டு பந்தல் அமைக்கப்படும். அந்தப் பந்தல்கள் யாருக்கு நிழல் தரும் என்று தெரியவில்லை. ஆனால் உற்சவம் வரும் சாமி அந்த இடங்களில் நின்று செல்லும் என்று நினைக்கிறேன். இவை போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் சாலையின் நடுவில்தான் இந்தப் பந்தல்களை அமைப்பார்கள்.

ஏப்ரல் முதல் வாரம் அறுபத்து மூவர் திருவிழா நடந்த நேரத்தில் பகலில் போக்குவரத்து சுற்றிவிடப்பட்டது. அதிக மக்கள் கோயிலை நோக்கி வருவார்கள் என்பதால், அந்தப் பகுதியில் வாகனங்களைத் தடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இரவில் அலுவலகம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கண்ட காட்சி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

லஸ் கார்னர் துவங்கி, மந்தைவெளி அஞ்சல் நிலையம் வரை, குளத்தைச் சுற்றி நான்கு மாட வீதிகளிலும் ஏதோ பெரிய போரி்ல் அனைவரும் குத்துப்பட்டு சாய்ந்து கிடந்தது போல, எங்கும் நீக்கமற நிறைந்து காணப்பட்டன பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், சில பேப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் பைகள். இவற்றோடு பாதி தின்றுவிட்டு பிடிக்காமலும், அவசரத்திலும் கீழே போட்ட உணவுப் பண்டங்கள், சோறு, இனிப்பு எல்லாம் கலந்து மயக்கத்தை வரவழைக்கும் நாற்றத்தை சந்தோஷமாகப் பரப்பிக் கொண்டிருந்தன. எல்லா குப்பையையும் ஜனக்கூட்டம் தன் சக்தியைச் செலவழித்து மிதிந்து போயிருந்தது. அதனால் எல்லாம் நசுங்கி கெட்டுப் போகத் துவங்கியிருந்த நிலையில்தான் அந்த நாற்றம் எழுந்தது. குப்பைக்குள் மாணிக்கம் தேடு்ம் சிலரைப் போல், தளராத மனதுடன் குப்பையள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் அந்த இரவிலும் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தனர். அநேகமாக அடுத்த நாள் காலை வரை அவர்கள் குப்பையை அள்ளியிருக்க வேண்டும். அவ்வளவு குப்பை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதியை கடந்து சென்றபோதும்கூட, சூட்டில் நிறைய பிளாஸ்டிக் பைகள் தார்ச்சாலையோடு ஒட்டிக் கிடந்தன. நாற்றமும் நீங்கயிருக்கவில்லை.

வருபவர் என்ன சாதி, மதம் என்றெல்லாம் கேட்காமல் அன்னதானம் கொடுப்பது நல்ல பண்புதான். ஆனால் அந்த தானம் உலகை, இயற்கையை சூறையாடுவதாக இருக்கலாமா? பங்குனித் திருவிழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்லக்கூடும். இவர்கள் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சரிதான். அதேநேரம், இத்தனை பெரிய கூட்டமும் நோய் தொற்றிக் கொள்ளாமல், சுகாதாரமாக இருக்க வேண்டாமா? அடியார்களுக்கு உணவு கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ள விரும்புபவர்கள், அதோடு குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமில்லையா? இல்லையென்றால் இந்த ஜென்மத்திலேயே அவர்களுக்கு மட்டுமின்றி யாருக்கு வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.

பிளாஸ்டிக் கோப்பைகள் புழக்கத்துக்கு வருதற்கு முன் இப்படிப்பட்ட பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. பிளாஸ்டிக்கின் விலைதான் அதன் பரவலான பயன்பாட்டுக்குக் காரணமாக இருக்கிறது. பிளாஸ்டிக் என்பது எந்த வகையிலும் நிலையான ஒரு தீர்வல்ல. வளங்களை சூறையாடுவது. அன்னதானம் வழங்க வேண்டும், அதிகமாகச் செலவும் ஆகக் கூடாது என்று நினைப்பவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தொன்னைகளும், பாக்குமட்டை தட்டுகளும் இருக்கின்றன. அதேநேரம், அவற்றை பயன்படுத்திய பின்னரும் முறைப்படி அகற்றுவது அவசியம்.

அன்னதானம் வழங்குகிறவர்கள் குப்பையை முறைப்படி அகற்ற குப்பைப் பெட்டிகள் வைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் வரி வசூலிக்கும் மாநகராட்சி திருவிழா நேரங்களிலாவது இதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். அவசரத்துக்கு ஒதுங்குவதற்காக கோயிலின் வாசல் அருகிலேயே மொபைல் டாய்லெட் வைக்கிறார்கள். அது பத்து நாட்களுக்கு அங்கே நின்று நாறிக் கொண்டிருக்கும். ஆனால் கீழே போடும் குப்பையை அகற்ற ஏற்பாடு கிடையாது.

நாம் எந்த வகையான நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள், எந்த நாகரிக நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வெள்ளிக்கிழமையானால் கவிச்சி சாப்பிடாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். புரட்டாசி மாசம், ஐப்பசி மாசம் கறி சாப்பிடாதவர்கள் இருக்கிறார்கள். கோயிலுக்கு குளிக்காமல் போகக் கூடாது என்கிறார்கள். செருப்பை கழற்றி வைத்துவிட்டுத்தான் கோயிலுக்குள் நுழையலாம் என்கிறார்கள். இப்படி எல்லாவற்றிலும் அறிவிக்கப்படாத ஒழுக்க விதிமுறைகளை பின்பற்றுவோர், ஏன் அன்னதானம் வழங்கப்படும்போது, சாப்பிட்டுவிட்டு அதே இடத்திலேயே பிளாஸ்டிக் தட்டையும் கோப்பையையும் போட்டுவிட்டுச் செல்கிறார்கள்? சாமி சார்ந்த நடவடிக்கைகளில் சுத்தத்தை கடைப்பிடிப்பவர்கள், கோயிலுக்கு வெளியிலும் அதை கடைப்பிடிப்பதை எந்த அம்சம் தடுக்கிறது?

தன் வீட்டில் யாராவது குப்பையை இறைத்து வைத்துக் கொள்ள விரும்புவோமா? வெளியில் மட்டும் அதைப் பற்றி கவலைப்படாமல் இறைப்பது ஏன்? தன் வீடு குப்பையாக இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், சாலை, பார்க், பீச், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கண்ணை மூடிக் கொண்டு குப்பையை போடுகிறோம். ரயில் பயணங்களில் அடுத்தவர் முகத்தில் தண்ணீரும், உணவுப் பருக்கைகளும் தெறி்ப்பது மாதிரி கழுவுவதில், குப்பையை தூக்கியெறிவதில் கைதேர்ந்தவர்கள் நாம். சுற்றுலா தலமானாலும், ரயில் பயணம் என்றாலும் பொது இடத்துக்குப் போகும்போது குப்பையை சரியான இடத்தில் போடுவதுதான் முறை. இந்த எளிய பழக்கத்தை என்றைக்கு நாம் கற்றுக் கொள்கிறோமோ அன்றுதான் நாகரிக சமூகம் என்று அழைத்துக் கொள்கிற தகுதி நமக்கு இருக்கிறது.

Thursday, November 26, 2009

உணவு விரயம் செய்வோருக்கு தண்டனை வழங்க வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

மலேசியர்கள் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கின்றார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? 42 பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களை நிரப்பும் அளவுக்கு நாம் கழிவுகளை உற்பத்தி செய்கின்றோம்!

2005ல் மலேசியர்கள் 7.34 மில்லியன் டன் திட கழிவுகளை உற்பத்தி செய்திருக்கின்றார்கள். இந்த திடக் கழிவு 2020ல் நாள் ஒன்றுக்கு 30,000 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடப்பொருள் கழிவுகளில்இ 45% உணவு கழிவுகளாகும். (ஆதாரம்: வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு)


இந்த புள்ளி விவரம் ஒன்றும் நம்மை ஆச்சிரியப்படுத்தும் விஷயம் இல்லை. உணவுக் கடைகளிலும்,ரெஸ்டாரண்டுகளிலும், காப்பி கடைகளிலும், வீடுகளிலும் கூட சாப்பிடாமல் மீந்து போகும் உணவுகளைக் சர்வ சாதாரணமாக குப்பை தொட்டிகளில் கொட்டுவதை நாம் கண்கூடாக காணலாம். பிறந்தநாள், திருமண வைபவங்களிலும் சாப்பிட்டு முடிக்கப்படாத உணவுகள் குப்பை தொட்டிகளில்தான் தஞ்சம் புகுகின்றன.

சமூகம் வசதியாகி கொண்டு வரும் போது கூடவே உணவு விரய கலாச்சாரமும் சேர்ந்தே வருகிறது. சிங்கப்பூரில் 2008ல் 558,900 டன் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002ல் இருந்த அளவைவிட 6.2 மடங்கு அதிகமாகும். ஜப்பானியர்கள் தங்கள் உணவுகளில் நான்கில் ஒரு பங்கை வீசி எறிகின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் 4.1 மில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். அமெரிக்காவில் வருடத்தில் 30 விழுக்காடு உணவு அதாவது 38.3 பில்லியன் உணவுகளை வீசுகின்றார்கள். ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு வருடமும் 6 பில்லியன் வெள்ளிக்கு சமமான உணவுகளை வீசுகின்றனர். இது ஆஸ்திரேலிய முழுவதிலும் உள்ள மக்களுக்கு 3 வாரங்களுக்கு உணவு கொடுப்பதற்கு போதுமானதாக இருக்கும்.

நாம் ஏன் உணவுகளை விரயம் செய்யக்கூடாது:

உணவுகளை விரயம் செய்வது அதர்மமான ஒரு செயலாகும். உலகில் பலர் உணவு இல்லாத காரணத்தினாலும், பசியினாலும், பட்டினியாலும் செத்து மடிகின்றார்கள். ஐக்கிய நாட்டு உணவு நிறுவனத்தின் கூற்றுப்படி உலகெங்கிலும் 920 மில்லியன் மக்கள் பசியினால் மரிக்கின்றார்கள்.

அமெரிக்காவில் சாப்பிடாமல் வீணாக்கப்படும் உணவுகள் ஒரு நாளைக்கு 4 மில்லியன் மக்களுக்கு உணவாக கொடுக்கப்படலாம்.

நீங்கள் சாப்பிடாத உணவுக்கு காசு கொடுப்பாது அநியாயமான ஒரு செயலாகும்.

நீங்கள் சாப்பிடாத உணவுகளை வாங்குவதுஇ உணவுக்கு போலியான ஒரு தேவையை ஏற்படுத்தி விடும். வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிடாமல் வீசப்படும் உணவினால் அந்த உணவு தேவை அதிகரிப்பதோடு அதன் விலையும் ஏற்றமடைகிறது. இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அல்லலுறுகின்றன.

உணவு உற்பத்திக்காக நிறைய தண்ணீரும், எரிசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கும் கேடாக அமைகிறது.

குப்பை கொட்டும் இடத்தில் கொட்டப்படும் மக்கும் குப்பைகள் உற்பத்தி செய்யும் மெத்தீன் வாயு சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வாயுவாகும்.

உணவு விரயத்துக்கு எதிராக நாம் ஒரு பிரச்சாரம் நடத்தியாக வேண்டும். (பிரிட்டன் உணவை விரும்பு, விரயத்தை வெறு என்ற பிரச்சாரத்தை 2007ல் நடத்தியது) இந்த இயக்கம் உணவுகளை முறையாக திட்டமிடுதல், மீந்த உணவுகளை மிச்சப்படுத்துதல், தேவையான உணவுகளுக்கு மட்டுமே ஆர்டர் செய்வது, கையுடன் ஒரு பையைக் கொண்டு சென்று மிச்ச உணவுகளை வீட்டு நாய்களுக்கு கொண்டு வருவது போன்றவற்றை செய்யலாம். விழக்காலங்கள், பிறந்தநாள், திருமணங்களின் போது விரயத்தைத் தடுப்பதற்கு பயனீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இவை அனைத்தும் உணவு விரயத்தைத் தடுக்கும் எளிமையான நடவடிக்கைகளாகும்.

கழிவுகளை மக்க வைத்து உரமாக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவேண்டும். இல்லை என்றால் இந்த வீட்டுக் கழிவுகளும் கூட குப்பை தொட்டியில் போய் சேரும்.

அரசாங்கங்களும், நிறுவனங்களும் தங்கள் நிகழ்ச்சிகளில் கண்மூடித்தனமாக உணவுகளை பரிமாறக்கூடாது. உணவு விடுதிகள் தட்டுக்களில் மீதம் வைக்கும் உணவுகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். உணவு விடுதிகள், ரொட்டி கடைகள், பேராங்காடிகள் விற்கமுடியாது ஆனால் சாப்பிடும் நிலையில் உள்ள உணவுகளை அனாதை இல்லாங்கள் போன்ற இடங்களுக்கு அனுப்பலாம். பெரிய அளவில் உணவு விரயம் செய்யும் ஓட்டல்கள், சொகுசு உணவு விடுதிகள், தொழிற்சாலை சிற்றுண்டிச்சாலைகளைத் தண்டிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் 5 நட்சத்திர ஓட்டல்களாக இருந்தாலும் கூட அடுத்தவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.

மற்றவர்கள் பசித்திருக்கும் போது உணவுகளைக் கீழே கொட்டுவது ஒரு இழிவான செயல், பணத்திற்குக் கேடு, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துகிறது. நாம் வீசி எறியும் உணவுகள் இன்னொருவரின் பசியை ஆற்றும். ஒருவரின் தட்டுக்கு செல்ல வேண்டிய உணவை வீசி எறிவதற்கு நமக்கு உரிமை கிடையாது. உணவுக்கு மரியாதை கொடுக்கும் கலாச்சாரத்திற்கு உரியவர்கள் நாம். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம் உணவு விரயத்தை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

உணவு விரயத்துக்கு எதிரான போரை இப்பொழுதே தொடங்குவோம்.

எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்இ ஜேபி.
தலைவர்

Monday, November 23, 2009

மலேசிய இந்திய இளைஞர்களின் அவல நிலை!

இந்த வீடியோவை பாருங்கள். நமது இந்திய இளைஞர்களின் திறமைகள் இப்படிப்பட்ட செயல்களில்தான் சிறந்து விளங்குகின்றன.


Find more videos like this on My Journeys Videos

Thursday, November 5, 2009

பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்யுங்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரிய கேடு!

நம் நாட்டில் பாட்டில் நீர் உபயோகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காக பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சிரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள். பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும்பொழுது 40 சென்னிலிருந்து அதே நீரை விடுதிகளால் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது.

பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீருக்கும்இ வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்று பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது என்றார் இத்ரிஸ்.

குழாய் நீரில் குளோரின் சேர்த்திருப்பதற்கான வாடை இருக்கும். ஆனால் பாட்டில் நீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழாய் நீருக்கும் பாட்டில் நீருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.

பாட்டில் நீர் குடிப்பவர்கள் நவீனமாகவும்இ கவர்ச்சியாகவும்இ வசதி படைத்தவர்களாகவும்இ ஆரோக்கியத்தின் மீது அக்கறை இருப்பவர்களாகவும் விளம்பரங்கள் பறை சாற்றுவதால் பயனீட்டாளர்கள் பாட்டில் நீரை வாங்கிக் குடிக்கிறார்கள். பாட்டில் நீர் குடிப்பதால் உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் கிடைப்பதாக இன்னும் சில பயனீட்டாளர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம்இ பொட்டேஸியம்இ துத்தநாகம் போன்றவை தண்ணீரில் மிக மிக சொற்ப அளவில் இருக்கிறது. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இத்ரிஸ்.

பாட்டில் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய்இ பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடம் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள்இ பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு பாட்டிலைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன. இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது 1000 வருடங்களாவது பிடிக்கும் என்றார் இத்ரிஸ்.

பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1இ Pநுவுஇ Pநுவுநு ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இந்தப் பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் தண்ணீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் பாட்டில் நீர்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30ழுஊ சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் பாட்டில் நீர்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார். ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரில் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும் என்றார் இத்ரிஸ்.

Pநுவு உபயோகத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பாட்டில் நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத்தன்மை உடையதாக ஆகிறது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும்.

பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப்போவதில்லை. மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல. அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில சிறிது எலுமிச்ச்சையைக் கலந்து குடித்தாலே புத்துணர்வு கிட்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

Saturday, October 31, 2009

சிங்கப்பூர் வரலாறு - சிங்கபுரம்

எப்போதும் வரலாறுகள் தேவையற்றவை என்பது புதிய தலைமுறையின் வாதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றப் பாதையில் இருந்து பின் நலிந்திவிட்ட ஒரு சமுதாயத்துக்கு வரலாறுகளே மீண்டும் அடியெடுத்துக் கொடுத்து புதிய வரலாறு படைக்க உதவுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ தேவையற்று பின் நோக்கி சென்று நமதி சிந்தைகளை நிலை குத்த வைப்பது போல் இந்த வரலாறு தோன்றினாலும் பின் நோக்கி உங்களை - உங்கள் வரலாற்றை புரிந்துக் கொள்ள அறிவு கிடைக்கிறது.


சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை,அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சில தகவல்கள் கிடைத்துள்ளன.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.



இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975). பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச் சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது. அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடர்ந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்றேறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல்.தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழத் தங்கினான். ஆனால்,மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை.சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரனுக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது.ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தைத் செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்துவிட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைக்கப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடித் தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார், அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிஸ்.அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார்.140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 -இல் சிங்கப்பூர் அன்றைய "மலாயா" வுடன் இணைந்தது.சிங்கப்பூர்,மலாயா இணைந்த நாட்டை "மலேசியா" என அழைத்தார்கள்.ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது.கருத்து வேற்றுமையாலும், கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது. சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசு ஆகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக,அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்கமுடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்குத் தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது.

மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு,மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களைப் பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புகுரியது.

சிங்கப்பூரில் தமிழர்


1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது.1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர். இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர்.தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். "திருவள்ளுவர்", "வாசுகி", "அரவிந்தர்", "நாகம்மையார்", "சாரதா தேவி","கலைமகள்", "உமறுப் புலவர்" போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.


ஆலயங்கள்

வழிபாட்டின் திருவிடங்களாகத் திருக்கோயில்கள் திகழ்கின்றன். திரைகடலோடி திரவியம் தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் உருவாக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது.
அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறன்றன.

ஆலய முகவரி
Sri Krishnan Temple,
152 Waterloo St.,
Singapore 187961
Tel 6337 7957 F, 6334 2712
67695784 F. 67699003
srikrisnatemple@hotmail.com

- கிருஷ்ணன், சிங்கை