Monday, June 20, 2011

மின்சார சைக்கிள்களுக்கு கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் தேவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே, குறிப்பிட்ட சில வகையான மின்சார சைக்கிள்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

மின்சார சைக்கிள்களுக்கு வெவ்வேறு நாடுகள், அந்தந்த நாட்டுக்கு ஏற்புடைய வகையில் சட்டங்களை வகுத்திருக்கின்றன. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகஅளவைக் கொண்ட மின்சார சைகக்கிள்கள் இருக்கின்றன. இவ்வளவு வேகத்தில் மின்சைக்கிளோட்டிகள் அமைதியாக பயணம் செய்யும் போது மற்ற மோட்டாரோட்டிகளால் அவர்கள் கவனிக்கப்படாமல் போய்விட நேரிடும். மேலும் நம்முடைய சாலைகளின் தன்மைக்கு அவை ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என இத்ரிஸ் கூறினார்.

ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஒப்ப மின்சக்தி வழி இயங்கும் சைக்கிளின் பெடல்கள், நம் நாட்டு சூழ்நிலைக்கு மிகவும் ஏதுவாக அமைந்திருப்பதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

40 கிலோ எடை கொண்டிருக்கும் ஒவ்வொரு மின்சைக்கிளும் 400 வாட் மின்சார மோட்டோரை கொண்டிருக்கிறது. ஓடும்போது அதன் வேகம் மணிக்கு 25 கிலோமீட்டர் வரை குறைய கூடியதாக இருக்கிறது. இப்படிபட்ட சைக்கிள்களுக்கு பதிவு, காப்புறுதி அல்லது ஓட்டநருக்கான லைசன்சும் தேவையில்லை என்றார் இத்ரிஸ்.

மின்சைக்கிள்களுக்கு பின்வரும் பாதுகாப்புகள் மிகவும் முக்கியமாகிறது.:
அ) வீடமைப்பு பகுதிகள் மற்றும் கெம்பஸ்களில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்
ஆ) பிரத்தியேக வழிகளைக் கொண்டிருந்தால் மட்டுமே பொது சாலைகளில் அவை அனுமதிக்கப்பட வேண்டும்
இ) சாக்கிள் ஓட்டனர் தலைக்கவசம், பளபளக்கும் பாதுகாப்பு மேலாடை அணிந்திருக்க வேண்டும்
ஈ) மின் சைக்கிள்களின் பிரேக் சரியாக இயங்கும் வகையிலும், பாதுகாப்பு தரத்தைக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தப் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்டு வந்தால், குறுகிய தூர ஓட்டத்திற்கு இது மிகவும் வசதியான மலிவான வாகனமாக அமையும். மேலும் வண்டியை நிறுத்துவதற்கு குறைந்த இடமே தேவை. சுலபமாகவும் பார்க் செய்து விடலாம். பாதுகாப்பான மின் சைக்கிள் உபயோகிதத்துக்கு, சட்டத்தைத் திருத்தி தேவையான பாதுகாப்பு அம்சங்கள் புகுத்துவது மிகவும் அவசியம். அதோடு இதர பிரிவுகளைச் சேர்ந்த சைக்கிள்கள் நமது சாலைகளில் அனுமதிக்கக்கூடாது என பி.ப.சங்க தலைவர் இத்ரிஸ் கூறினார்.

No comments:

Post a Comment