Sunday, February 13, 2022

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

 

பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை.

பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி வேகமாக வரும் கடல் நீரின் சீற்றத்தால் பல விடுதிகளுக்கு அருகிலுள்ள, மண் சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பெரிய அளவிலான பாராங் கற்கள் மண் சரிவு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தப் பட்டு வருகிறது

ஆனால் வேகமாக வரும் கடல் அலையால் அந்த கற்கள் மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்து விடுவதால், கடற்கரையில் நடப்போருக்கும், குளிப்போருக்கும் அதிக ஆபத்தை தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

கடந்த சில மாதங்களாக இந்த மண் அரிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீரின் அளவு உலகெங்கிலும் உயர்ந்து கொண்டே வருகிறது என்றார் சுப்பாராவ்.

இதன் காரணமாக பத்து பெரிங்கின் கடலின் நீர் அதிகரித்து வரும் வேளையில், கடல் அலையும் வேகமாக உள்ளது.

இதனால் கடற்கரை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பத்து பெரிங்கி கடற்கரை ஓரத்தில் இருந்த ஏறக்குறைய 20 தென்னை மரங்கள் கடல் நீரின் அதி வேகத்தால் சாய்ந்து விட்டதாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.

மண் அரிப்பு மேலும் ஏற்படாமல் இருக்க சில தங்கும் விடுதிகள் மிகப் பெரிய பாரங்கற்களை கொண்டு வந்து வைகின்றார்கள்.

ஆனால் கடலிலிருந்து வரும் நீர் இந்த கற்களின் மீது பாய்ந்து, அக்கற்களை மீண்டும் கடலுக்கு இலுத்து சென்று விடுகிறது. கடலுக்கு செல்ல முடியாத கற்கள், நடைபாதயில் தங்கி விடுவதாக சுப்பாராவ் கூறினார்.

இதன் காரணமாக, கடற்கரை ஓரம் நடப்பவர்களுக்கும், காலை மாலையில் உடற் பயிற்சி செய்வோருக்கும் நட பாதையில் இருக்கும் கற்கள் ஆபத்தை தருகின்றன.

பலர் இது குறித்து தங்களிடம் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே மண் அரிப்பு மேலும் தொடராமல் இருக்க பாராங் கற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
மண் சுவர்களில் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர் எழுப்பலாம் என அவர் சிபாரிசு செய்தார்.

இன்னும் பல நூறு தென்னை மரங்கள் கடலோரம் இருக்கின்றது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்டால் இவையும் சாய்ந்துவிடும்.

ஆகவே பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் பத்து பெரிங்கியில் நிகழும் மண் அரிப்பு சம்பவங்கள் தொடராமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் கூறினார்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

No comments:

Post a Comment