Sunday, February 6, 2022

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21

நச்சு புகையின் எதிரொலி - 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம்
10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் முககவரி அணிவது அவசியம்.

300 மீட்டர் பூமிக்கு அடியில் இன்னும் தீ எறிந்து கொண்டுள்ளது. அவசர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்!

நிபோங் திபால் அருகே உள்ள பூலாவ் பூரோங் குப்பை கிடங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ இன்னும் அணைக்கப்படாமலிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.

குப்பைகிடங்கிலிருந்து எறியும் தீயினால் வெளியாகும் நச்சு புகை ஆபத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்த பூலாவ் பூரோங் பகுதியை சுற்றியுள்ள 3 தமிழ் பள்ளிகள் உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.


இந்த நச்சு புகை சிறார்களை கடுமையாக பாதிக்கும் என்ற காரணத்தால், நிபோங் திபால் தமிழ் பள்ளி, ஜங்காட் தோட்ட தமிழ் பள்ளி மற்றும் பைராம் தோட்ட தமிழ் பள்ளி உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி மாநில 

இதிலிருந்து, குப்பை கிடங்கிலிருந்து வெளியாகும் புகை எவ்வளவு நச்சு வாய்ந்தது என தெளிவாக தெரிகிறது என்றார் சுப்பாராவ்.

கடுமையான காற்றின் வெளிப்பாடு வழிகாட்டின் நிலை குறித்து கண்டறியப்பட்ட விபரத்தில் இப்பகுதியில் வெளியாகும் காற்றின் அளவு 3யை எட்டியுள்ளது.

இங்கு சுற்றி வசிப்போரின் ஆரோக்கியத்திற்கும்,உயிருக்கும் இது ஆபத்தை தரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 400 பேர் இவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த ப்பட்டுள்ளனர் என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

பூலாவ் பூரோங் குப்பைகிடங்கின் மொத்த அளவு 16 எக்டர். தீ ஏற்பட்ட பகுதியின் அளவு 6.5 ஏக்டர். அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் 15 லிருந்து 20 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளது. ஏற்பட்ட தீயும் அந்த ஆழத்திற்கு சென்றுள்ளதால், தீயணைப்பு வீரர்கள் கடுமையான சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

தீயணைப்பு இலாகா 25 க்கும் மேற்பட்ட இயந்திரங்களை இங்கே பயன்படுத்தி வருகின்றனர். இங்கே நச்சு உமிழப்படுகின்றது. இது நிறுத்தப் பட வேண்டும்.

புலாவ் பூருங் குப்பைக் கிடங்கில் தீ இன்னும் நிலத்தடியில் எரிந்து கொண்டிருப்பது கவலை தருகிறது.  இருப்பினும் மேற்பரப்பில் உள்ள தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கு கடந்த ஆண்டு பலமுறை தீப்பிடித்து எரிந்ததாகவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் குப்பை கிடங்கில் இருந்து சாயக்கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுவதாக புகார்கள் வந்ததாகவும், இதனால் இங்குள்ள நீர்நிலைகள் மாசுபடுவதுடன் அருகில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

நாட்டிலேயே அதிக மறுசுழற்சி விகிதங்களைக் கொண்ட மாநிலமாக பினாங்கு விளங்குகிறது. நச்சுத்தன்மை கொண்ட பறக்கும் சாம்பல் அபாயகரமான கழிவுகள் என வகைப்படுத்தப்படுகிறது என்பதையும் சுப்பாராவ் தெரிவித்தார்.

அலட்சிய போக்கை கடைபிடித்த குப்பைகளை கையாளும் நிறுனத்தின் உரிமம் பரிக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறினார்.

என் வி சுப்பாராவ்
துணை பொதுச்செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு

No comments:

Post a Comment