Tuesday, June 2, 2009

இளைஞர்களைச் சீரழிக்கின்றது சம்சு



புரையோடிய புண் போன்று இந்திய சமூகத்தை மெல்ல மெல்ல கொன்று வரும் சம்சு என்ற கொடிய வகை மதுவுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டது.

மிக வேகமாக மூலைமுடுக்கெல்லாம் விற்கப்பட்டு வரும் இந்த பொல்லாத சம்சுஇ பலரது குடும்பங்களைச் சீரழித்து பலதரப்பட்ட சமுதாய சீர்கேடுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

சம்சு மிகவும் மலிவான மது வகையாகும். இளையோர் முதியோர் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரைம் அடிமையாக்கும் மதுவாக இது இருக்கின்றது. ஒரு காலத்தில் தோட்டப்புறங்களில் உள்ளவர்கள்தான் பெரும்பான்மையாகச் சம்சு குடித்தார்கள். ஆனால் இப்பொழுது நகர்ப்புறங்களில் உள்ளவர்களும் சம்சுவுக்கு அடிமையாகிச் சீரழிகிறார்கள். அதுவும் இளைஞர்களிடையே இந்த சம்சு மிகவும் பிரபலமாக இருக்கின்றது.

இப்போதைய இளைஞர்கள்இ இந்த மலிவான போதை தரும் சம்சுவில் கோலா போன்ற கேஸ் குளிர்பானங்களைச் சேர்த்து குடிக்கின்றனர். பள்ளிச் செல்லும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே இந்த முறை பிரபலம் அடைந்து வருகின்றது.

சம்சுவில் குடிப்பவரின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் 17மூலிருந்து 48மூ மது உள்ளது. புற்றுநோய்இ ஈரல் கோளாறுஇ ஈரல் சிதைவுஇ இருதய நோய் எல்லாம் சம்சு அருந்துபவர்களுக்கு ஒரு காலத்தில் ஏற்பட்டு அவதியுறுகிறார்கள். குடிகாரர்களைக் கவரும் பொருட்டு சம்சு உற்பத்தியாளர்கள் பொய்யான கோரிக்கைகளை சம்சு லேபலில் பொறித்து விற்பனை செய்கிறார்கள். ஒரு பிரண்டு சம்சுவில் இரத்த சோகைஇ பசியின்மைஇ ஜீரணக்கோளாறு போன்றவற்றையெல்லாம் சம்சு போக்கிவிடும் என்று பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்கள் சம்சுவுக்கு அடிமையாகிக் கிடப்பது வேதனையான விஷயம். பள்ளிக்கூட படிப்பைக் பாதியிலேயே நிறுத்திய மாணவர்கள் சிலர் சம்சு குடிக்க ஆரம்பித்துவிடுவது இவர்களுடைய எதிர்காலம் நாசமாவதற்கான அறிகுறி.

சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட சம்சு வகைகள் விற்பனையில் இருக்கின்றன. சம்சுவுக்கு வைக்கப்பட்டிருக்கின்ற பெயர்கள் எல்லாமே சம்சு ஆரோக்கியத்திற்கு உகந்ததுஇ ஒருவருடைய அந்தஸ்தை உயர்த்தும் என்ற தோரணையைக் கொண்டிருக்கின்றன. சம்சு வாங்குவது ஒன்றும் பெரிய சிரமமல்ல. விலையோ மலிவு. மிட்டாய் வாங்குவது போல் சிறார்களுக்கும் எளிதில் கிட்டிவிடுகிறது. 150 மிலி பாட்டில் சம்சு மவெ. 3.00லிருந்து மவெ. 5.00 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. காசு இல்லாவிட்டாலும் கடன் சொல்லியாவது வாங்கி அருந்துகிறார்கள் சம்சுவுக்கு அடிமையானவர்கள்.

சுங்க வரி சட்டம் 1976 பிரிவு 31(1) மற்றும் 33(1)ன்படி ஒருவர் லைசென்ஸ் இல்லாமல் சம்சு விற்கக்கூடாது. லைசென்ஸில் எந்த இடத்தில் சம்சு விற்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறைய கடைகள் சம்சு விற்க லைசென்ஸ் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை.

இந்தப் பிரச்னை தொடர்பாக பல ஆண்டு காலமாக சுங்க இலாகாவுக்குக் கடிதம் எழுதி சட்ட விரோத சம்சு விற்பனையைத் தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்று வரைக்கும் சட்ட விரோத சம்சு விற்பனை ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. லைசென்ஸ் இல்லாதவர்கள் மிகவும் எளிதாக சம்சு விற்றுக் கொள்ளை இலாபம் சம்பாதித்து வருகிறார்கள்.

சம்சு குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் கொண்டு வந்துள்ள கேடுகள் வேதனைக் கதைகள் எண்ணிலடங்கா. குடிப்பவர்கள் சீரழிந்து போவதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பமும் உருக்குலைகிறது. ஒரு தகப்பன் தன்னுடைய பணத்தையெல்லாம் குடிப்பதற்கே அழித்துவிடும்பொழுது குழந்தைகளை முறையாக பராமரிக்க வழி ஏது. குழந்தைகளும் மனைவியும் குடிகாரனின் வன்முறைத் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை இன்னும் கொடூரமானது. இது பல குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளாகும்.

குடும்ப வருமானத்தின் ஒரு பகுதியை சம்சு சூறையாடிச் சென்றுவிடுகிறது. சம்சு குடிக்க ஆரம்பிக்கும் ஒருவர் ஒரு மாதத்திற்கு சுமார் மவெ. 90 செலவு செய்கிறார். பின்பு சம்சுவுக்கு அடிமைப்பட்டுப்போகும்பொழுது குடிக்கும் பாட்டில்களின் எண்ணிக்கை கூடும் பட்சத்தில் மவெ. 300 வரைக்கும் செலவு செய்கிறார்கள்.

ஒருவருடைய மாத வருமானம் மவெ. 600 மட்டும்தான் என்றால் பாதி வருமானம் தொண்டைக்குழிக்குள் சம்சு என்ற விஷத்தை இறக்குவதற்காகவே செலவழிந்து விடுகிறது. விளைவுஇ குடும்பத்தாரின் உணவு மற்றும் ஆடை போன்ற அடிப்படைத் தேவைகள் அடிபட்டுப் போகின்றன. குடும்பத்தார் ஏழ்மைக் சகதிக்குள் தள்ளப்பட்டு தத்தளிக்கின்றனர்.

தன்னுடைய கணவர் சம்சு வாங்குவதற்காக தன்னுடைய பணத்தையெல்லாம் திருடுவதாக பெண்மணி ஒருவர் வேதனையுடன் கூறினார். ஒரு முறை தான் வளர்க்கும் இரண்டு கோழிகளைச் சம்சு வாங்குவதற்காக திருடி விற்றார் என்று அவர் குமுறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்பொழுது சம்சுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று மேலும் பற்பல அவதிகளுக்கு ஆளாகப்போகிறார்கள். குடும்பத்தில் வன்முறைஇ சிறார் கொடுமைஇ சாலை விபத்துக்கள்இ தற்கொலை எல்லாம் சம்சுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் சகஜமான நிகழ்வுகளாகி வருகின்றன.

சம்சு எதிர்கால சந்ததியினரையே பாதிக்கும் ஒரு விஷயம். சமுதாய நலன் கருதி சம்சு என்ற சாக்கடை துப்புறவு செய்யப்பட வேண்டும். தற்போதைய இளைஞர்கள் சம்சுவுக்கு அடிமையாகாமல் இருக்கஇ ஆரோக்கியமான இளைஞர்களாக உருவெடுக்க சம்சுவுக்கு சாவு மணி அடிக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு ஒட்டு மொத்த சமுதாயமும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.

சம்சு உற்பத்தியாளர்கள் விடுக்கும் பொய்யான ஆரோக்கிய கோரிக்கைகளைச் சுகாதார அமைச்சு ஆராய்ந்து மேல்நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்ட விரோத சம்சு விற்பனையைத் தடை செய்ய சுங்க வரி சட்டம் 1976ஐ முறையாக அமல்படுத்த வேண்டும். லைசென்ஸ் இல்லாமல் சம்சு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சும்சு போத்தல்களில் குறிப்பிட்டுள்ள மதுவின் அளவை வைத்து அதன் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். மதுவின் அளவு அதிகமாக இருந்தால் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும். இது குடிப்பவர்களுக்குச் சுமை ஏற்படுத்தக்கூடும்.

No comments:

Post a Comment