Sunday, February 13, 2022

மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க போடப்பட்டுள்ள் கற்களால் அதிக சிரமம்!

 

பினாங்கு கடற்கரையில் நடப்போருக்கு ஆபத்து. பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை.

பினாங்கு பத்து பிரிங்கி கடற்கரையோரத்தில் அதி வேகமாக வரும் கடல் நீரின் சீற்றத்தால் பல விடுதிகளுக்கு அருகிலுள்ள, மண் சுவரில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பெரிய அளவிலான பாராங் கற்கள் மண் சரிவு ஏற்படாமல் இருக்க பயன் படுத்தப் பட்டு வருகிறது

ஆனால் வேகமாக வரும் கடல் அலையால் அந்த கற்கள் மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்து விடுவதால், கடற்கரையில் நடப்போருக்கும், குளிப்போருக்கும் அதிக ஆபத்தை தருகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் கூறினார்.

கடந்த சில மாதங்களாக இந்த மண் அரிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது.

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீரின் அளவு உலகெங்கிலும் உயர்ந்து கொண்டே வருகிறது என்றார் சுப்பாராவ்.

இதன் காரணமாக பத்து பெரிங்கின் கடலின் நீர் அதிகரித்து வரும் வேளையில், கடல் அலையும் வேகமாக உள்ளது.

இதனால் கடற்கரை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. பத்து பெரிங்கி கடற்கரை ஓரத்தில் இருந்த ஏறக்குறைய 20 தென்னை மரங்கள் கடல் நீரின் அதி வேகத்தால் சாய்ந்து விட்டதாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.

மண் அரிப்பு மேலும் ஏற்படாமல் இருக்க சில தங்கும் விடுதிகள் மிகப் பெரிய பாரங்கற்களை கொண்டு வந்து வைகின்றார்கள்.

ஆனால் கடலிலிருந்து வரும் நீர் இந்த கற்களின் மீது பாய்ந்து, அக்கற்களை மீண்டும் கடலுக்கு இலுத்து சென்று விடுகிறது. கடலுக்கு செல்ல முடியாத கற்கள், நடைபாதயில் தங்கி விடுவதாக சுப்பாராவ் கூறினார்.

இதன் காரணமாக, கடற்கரை ஓரம் நடப்பவர்களுக்கும், காலை மாலையில் உடற் பயிற்சி செய்வோருக்கும் நட பாதையில் இருக்கும் கற்கள் ஆபத்தை தருகின்றன.

பலர் இது குறித்து தங்களிடம் புகார் செய்திருப்பதாக அவர் கூறினார்.

ஆகவே மண் அரிப்பு மேலும் தொடராமல் இருக்க பாராங் கற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மாற்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
மண் சுவர்களில் இரும்பு கம்பிகளால் தடுப்பு சுவர் எழுப்பலாம் என அவர் சிபாரிசு செய்தார்.

இன்னும் பல நூறு தென்னை மரங்கள் கடலோரம் இருக்கின்றது. மேலும் மண் அரிப்பு ஏற்பட்டால் இவையும் சாய்ந்துவிடும்.

ஆகவே பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரும் பத்து பெரிங்கியில் நிகழும் மண் அரிப்பு சம்பவங்கள் தொடராமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் கூறினார்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Sunday, February 6, 2022

நச்சு புகையின் எதிரொலி 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம் 10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது.

பத்திரிகை செய்தி. 18.2.21

நச்சு புகையின் எதிரொலி - 3 தமிழ் பள்ளிகள் உட்பட மொத்தம்
10 பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. 10 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் முககவரி அணிவது அவசியம்.

300 மீட்டர் பூமிக்கு அடியில் இன்னும் தீ எறிந்து கொண்டுள்ளது. அவசர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கும்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்!

நிபோங் திபால் அருகே உள்ள பூலாவ் பூரோங் குப்பை கிடங்கில் ஏற்பட்ட மிக மோசமான தீ இன்னும் அணைக்கப்படாமலிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.

குப்பைகிடங்கிலிருந்து எறியும் தீயினால் வெளியாகும் நச்சு புகை ஆபத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் அந்த பூலாவ் பூரோங் பகுதியை சுற்றியுள்ள 3 தமிழ் பள்ளிகள் உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.


இந்த நச்சு புகை சிறார்களை கடுமையாக பாதிக்கும் என்ற காரணத்தால், நிபோங் திபால் தமிழ் பள்ளி, ஜங்காட் தோட்ட தமிழ் பள்ளி மற்றும் பைராம் தோட்ட தமிழ் பள்ளி உட்பட 10 பள்ளிக்கூடங்கள் வரும் வெள்ளிக்கிழமை வரையில் மூடும்படி மாநில 

இதிலிருந்து, குப்பை கிடங்கிலிருந்து வெளியாகும் புகை எவ்வளவு நச்சு வாய்ந்தது என தெளிவாக தெரிகிறது என்றார் சுப்பாராவ்.

கடுமையான காற்றின் வெளிப்பாடு வழிகாட்டின் நிலை குறித்து கண்டறியப்பட்ட விபரத்தில் இப்பகுதியில் வெளியாகும் காற்றின் அளவு 3யை எட்டியுள்ளது.

இங்கு சுற்றி வசிப்போரின் ஆரோக்கியத்திற்கும்,உயிருக்கும் இது ஆபத்தை தரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுமார் 400 பேர் இவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த ப்பட்டுள்ளனர் என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

பூலாவ் பூரோங் குப்பைகிடங்கின் மொத்த அளவு 16 எக்டர். தீ ஏற்பட்ட பகுதியின் அளவு 6.5 ஏக்டர். அங்கு கொட்டப்பட்ட குப்பைகள் 15 லிருந்து 20 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளது. ஏற்பட்ட தீயும் அந்த ஆழத்திற்கு சென்றுள்ளதால், தீயணைப்பு வீரர்கள் கடுமையான சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.

தீயணைப்பு இலாகா 25 க்கும் மேற்பட்ட இயந்திரங்களை இங்கே பயன்படுத்தி வருகின்றனர். இங்கே நச்சு உமிழப்படுகின்றது. இது நிறுத்தப் பட வேண்டும்.

புலாவ் பூருங் குப்பைக் கிடங்கில் தீ இன்னும் நிலத்தடியில் எரிந்து கொண்டிருப்பது கவலை தருகிறது.  இருப்பினும் மேற்பரப்பில் உள்ள தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கு கடந்த ஆண்டு பலமுறை தீப்பிடித்து எரிந்ததாகவும், அதற்கு முந்தைய ஆண்டுகளில் குப்பை கிடங்கில் இருந்து சாயக்கழிவுகள் பெருக்கெடுத்து ஓடுவதாக புகார்கள் வந்ததாகவும், இதனால் இங்குள்ள நீர்நிலைகள் மாசுபடுவதுடன் அருகில் உள்ள சதுப்புநிலக் காடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது என்பதை சுப்பாராவ் சுட்டிகாட்டினார்.

நாட்டிலேயே அதிக மறுசுழற்சி விகிதங்களைக் கொண்ட மாநிலமாக பினாங்கு விளங்குகிறது. நச்சுத்தன்மை கொண்ட பறக்கும் சாம்பல் அபாயகரமான கழிவுகள் என வகைப்படுத்தப்படுகிறது என்பதையும் சுப்பாராவ் தெரிவித்தார்.

அலட்சிய போக்கை கடைபிடித்த குப்பைகளை கையாளும் நிறுனத்தின் உரிமம் பரிக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறினார்.

என் வி சுப்பாராவ்
துணை பொதுச்செயலாளர்
பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
பினாங்கு

Saturday, January 15, 2022

நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் ஊக்குவிப்பு தர வேண்டும். நூருல் இசா அன்வார் வேண்டுகோள்.

 பத்திரிகை செய்தி 16.1.2022

பினாங்கு பயனீட்டாளர் சங்க பணிமனையில் செயல்படும் இரசாயனமற்ற நகர்புற விவசாயத்திற்கு அரசாங்கம் மேலும் ஊக்குவிப்பு தர வேண்டும் என பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.

அதே நேரத்தில் பொதுமக்களும் இயன்ற வரையில் சுயமாக காய்கறிகள் நடுவதற்கு ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் நூருல் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் முயற்சியில் செயல்படும் இரசானமற்ற நகர் புற விவசாய தோட்டத்திற்கு வருகை புரிந்து, நடைபெற்ற விவசாய பயிற்சியை தொடக்கிவைத்தபின் நூருல் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்

நாளுக்கு நாள் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து கொண்டே போகிறது. மலேசியர்கள் இந்த விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை.

அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிய காரணமாக அவரவர் தங்கள் விருப்பம்போல் விலையை உயர்த்தி பயனீட்டாளர்களுக்கு மேலும் சுமையை தந்துவிடுகின்றனர் என்றார் அவர்.

மலேசியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சுயமாக சிறிய அளவில் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை நட வேண்டும் என நூருல் ஆலோசனை கூறினார்.

இதற்கிடையே இதே நிகழ்வில் பேசிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் நமது தற்போதைய விவசாயம் இரசாயன உள்ளீடுகளை பெரிதும் நம்பியுள்ளது என்றார். குறைந்த அளவிலான வெளிப்பாடுகளில் கூட, இந்த இரசாயனங்கள் பல மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அறிவியல் காட்டுகிறது. குறிப்பாக குழந்தைகளின் வளரும் மனம் மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது என்றார்.

விவசாயத்திற்கான இரசாயனமற்ற அணுகுமுறைகள் சாத்தியமானவை மட்டுமல்ல, விவசாய உற்பத்தியின் பின்னடைவை வலுப்படுத்தும் என்பது தெளிவாகிறது.

இயற்கை மற்றும் இரசாயனமற்ற விவசாயம் விளைச்சலை நிலையான முறையில் அதிகரிக்கும், உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என்றார். இதனை நாங்கள் நிரூபித்து உள்ளோம் என்றார்.

எளிய கொள்கலன்களில் வளர்க்கப்படும் காய்கறிகள் மற்றும் மூலிகைகள், இரசாயன எச்சங்கள் இல்லாத புதிய மற்றும் சத்தான விளைபொருட்களுக்கான குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு அவர்களின் உணவுச் செலவுகளையும் குறைக்கும்.

இதை மழைநீர் சேகரிப்பு மற்றும் தோட்டம் மற்றும் சமையலறை கரிம கழிவுகளை உரமாக்குதல் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்க முடியும்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் பள்ளித் தோட்டத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. உணவு உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு விவசாயம், நடைமுறை ஊட்டச்சத்துக் கல்வி மற்றும் அவர்களின் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் பயிற்சியும் அளித்துள்ளது என்றார் முகைதீன்.

விவசாயம் ஒரு சாத்தியமான வாழ்க்கைப் பாதை என்பதை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விதைப்பதே எங்கள் நோக்கம் என்று அவர் சுட்டிகாட்டினார்.
நாட்டின் விவசாய முறையை 100 சதவீதம் கரிமமாக மாற்றுவதற்கான இலக்கை 2011 இல் அறிவித்த சிறிய மலை நாடான பூட்டான் அதில் வெற்றி கண்டுள்ளது.

டேனிஷ் அரசாங்கம் முழு நாட்டின் விவசாயத்தையும் இயற்கை மற்றும் நிலையான விவசாயமாக மாற்ற பல வழிகளில் செயல்படுகிறது. 2015 ஆம் ஆண்டில், இயற்கை விவசாயத்தை இரட்டிப்பாக்குவதற்கும், 2020 க்குள் நாட்டின் பொது நிறுவனங்களில் அதிக இயற்கை உணவுகளை வழங்குவதற்கும் அவர்கள் ஒரு லட்சியத் திட்டத்தை வெளியிட்டனர்.

இந்தியாவில் சிக்கிம் இப்போது 100% கரிம மாநிலமாக உள்ளது, இரசாயன பூச்சிக்கொல்லிகள் அல்லது உரங்கள் இல்லை. ஒரு முழு பிராந்தியத்திலும் கரிம உணவு சாத்தியம் என்பதை இது காட்டுகிறது.

எனவே ரசாயனமற்ற நிலையான விவசாயத்திற்கான வலுவான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த மலேசிய அரசாங்கத்தை பி.ப.சங்கம் கேட்டுக்கொள்வதாக முகைதீன் அப்துல் காதர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் நூரூல் இசா அன்வார் இரசாயனமற்ற வெண்டைகாயை அறுவடை செய்ததோடு வருகை புரிந்ததற்கான அடையாளமாக தக்காளி செடியையும் நடவு செய்து நடை பெற்ற விவசாய பயிற்சியை தொடக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்குகொண்ட சுமார் 40 பேருக்கு, பி.ப சங்கத்தின் என். வி . சுப்பாராவ், ஓ.சரஸ்வதி தேவி மற்றும் தீபன் குணசேகரன் ஆகிய மூவரும் பயிற்சி கொடுத்தனர்.

நன்றி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

Wednesday, January 12, 2022

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது


 
வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று 
“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” என்ற வழிகாட்டிப் புத்தகத்தை வெளியீடு செய்துள்ளது. இருபது பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் முழு வண்ணத்தில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் என்று 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் பெரும்பாலானோர் சொந்தமாகக் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.  அரசாங்கம் மக்களைத் தங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் பயிர்களை வளர்க்கத் தூண்டுவதோடு நகர்ப்புற பயிர் வளர்ப்புத் திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறது.  

பயிர்களைப் பூச்சிகள் தாக்குவது இயற்கையே.  இதனைக் கையாளும் முறைகளை அறிந்திராத பயனீட்டாளர்கள், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது எப்படி என்று தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பூச்சிகளை அழிப்பதற்காகப் பயனீட்டாளர்கள் நச்சு இரசாயனங்களை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த  வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  பசுமை நடவடிக்கை வாரத்திற்கான கருப்பொருளும் இதுவேயாகும்.

நம் தோட்டத்திற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் இவற்றைப் பிடித்துத் தின்னும் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றின் பங்கு பற்றி இந்த வழிகாட்டி விவரிக்கிறது.  அதோடு, பூச்சிகளை விரட்டுவதற்காக நாமாகவே எப்படிச் சொந்தமாக பூச்சி விரட்டி கரைசல்களைத் தயாரிப்பது, நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி நம்முடைய தோட்டத்திற்குள் வரவழைப்பது என்றும் இந்த வழிகாட்டியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம், நிலைபேறான வாழ்க்கை முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டும், விதைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தோட்டம் போடுதல் குழுமங்களை உருவாக்கி இயங்கி வருகிறது.  இதனோடு நின்றுவிடாமல், நச்சுத்தன்மையுள்ள, ஆபத்தான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.  நம் எதிர்கால சந்ததியினர் நச்சுப் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு இது அவசியமாகும் என்றார் முகைதீன்.

உலகம் முழுக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிளைபோசேட் மற்றும் கிளைபோசேட் சார்ந்த களைக்கொல்லிகளைத் தடை செய்யுமாறு கடந்த வாரம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றினைச் சமர்ப்பித்தது. இந்த வேளாண்-இரசாயனங்கள் யாவும் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் தொடர்ந்து நச்சுத்தன்மைக்கு உள்ளாக்கி வருகின்றன.  இந்த நச்சுகளைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.  அதனோடு இவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கும் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

உலகில், பெரும்பாலான பயிர்களுக்கான மகரந்தச் சேர்க்கை இயற்கை முறையில் பூச்சிகளாலேயே செய்யப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் தொடர்ந்து பயன்படுத்தப் படுமேயானால், நாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று நம்முடைய உணவுத் தேவைக்கு நாமே உலை வைத்துவிடுவோம்.

உணவுப் பாதுகாப்பும், தங்குத் தடையின்றி உணவு கிடைப்பதும் நம் வாழ்வின் தேவையாகும்.  நமக்குத் தேவையான பயிர்களைச் சொந்தமாக வளர்ப்பதே இதனை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகும்.  பகிர்ந்து வாழ்ந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை திரும்பக் கொணரவும், நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நாமே பயிர் செய்யவும், நாம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பயிரிடுதல் தொடர்பாக நம்மிடமுள்ள தகவல்களைப் பகிரவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள்.  



தொடர்புக்கு : CAP MARKETING SECTION :  04-8283511
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


Attachments area

Saturday, January 1, 2022

 

அவரும் நானும்....

ஒத்தநாடி உடம்பு,  வைரம் பாய்ந்த உறுதி, கடல் அளவு அறிவும் மண் போன்ற எளிமையும், விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என வாழ்நாள் முழுதும் பாடுபட்ட இயற்கை மைந்தர் கோ.நம்மாழ்வாரின் நினைவு நாள் இன்று.  

இந்தப் பச்சை மனிதருடன் பயணித்த பேறு இன்றளவும் பசுமையாய் உள்ளது. நம்மாழ்வார் அவர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்திற்கு முதன் முறையாக வருகை  புரிந்த போது அவரைக் கண்டு நெகிழ்ந்த தருணங்களின் ஈரம் நித்தியமானவை. இங்கு அவர் வழங்கிய பயிற்சி பட்டறைகளின் வழி பெற்ற அனுபவமும் அறிவும் ஈடு அற்றவை. 

மேலும்,  2012-ல் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்  ஏற்பாட்டில்  தமிழகப் பயணத்தின் போது இயற்கை நாயகனுடன் மீண்டும்  ஒரு பொன்னான நாள். அவருடன் கழிந்த பொழுதுகள் எங்களின்  வேளாண்மைக்கான தேடலுக்குப் பதில்களாய் அமைந்தன. ஆனால், அதுவே எங்களின் இறுதி சந்திப்பாக அமைந்தது. 8 ஆண்டுகள் கழிந்திருந்தாலும் அவரின் வழிகாட்டலும் அவரது குழந்தைச் சிரிப்பும் அழகு பேச்சும் என்றும் மனம் விட்டு நீங்காதவை.

இயற்கையை நேசிக்கும்  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நாம்மாழ்வார் வாழ்கிறார். இயற்கைக்கு இயற்கையே உரம்.  அவரது எளிய புன்னகையின் புள்ளி மண்ணின் நலத்திலும் வளத்திலும் காண்போம்.

தீபன் குணசேகரன்
Theeban Gunasekaran


Wednesday, December 11, 2013

சாலு மரத திம்மக்கா

"சாலு மரத திம்மக்கா" என்றால், கர்நாடகாவுக்கே தெரியும்
எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பொட்டல் காடாக இருந்த கூதூர் கிராமத்தில்... இன்று சாலை நெடுக இருபுறங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் சலசலக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் வரை நீளும் சுமார் 20 கிலோ மீட்டர் சாலை முழுக்க வரிசையாக (சாலுத) நின்று, ஊருக்கே நிழலாற்றும் அம்மரங்களை நட்டு வளர்த்த திம்மக்கா பாட்டிக்கு இப்போது வயது... 101!

இந்த பசுமைச் சேவைக்காக... சிறந்த தேசியக் குடிமகன் விருது, நான்கு குடியரசுத் தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விருதுகள், பல முதலமைச்சர்கள் அதிசயித்து அளித்த மாநில விருதுகள், தன்னார்வ, பெண் நல நிறுவனங்கள் வழங்கிய விருதுகள், பட்டங்கள் என குவித்திருக்கும் திம்மக்கா பாட்டியின் கூதூர் கிராமம் இருப்பது... செல்போன்சிக்னல் கூட கிடைக்காத பெங்களூரு ஊரக மாவட்டமான மாகடி தாலுகாவில்!

பயணம் நெடுகிலும் திம்மக்கா பாட்டி வளர்த்திருக்கும் ஆலமரங்கள் தலையசைத்து வரவேற்கின்றன. வாசலில் நம்மைக் கண்டவுடன், முந்தானையில் முடிந்திருந்த கசங்கிய 10 ரூபாய் நோட்டைக் கொடுத்து, டீ வாங்கிவர ஆள் அனுப்புகிறார். உடனடியாகக் குளித்து, விபூதி பூசி, பளிச்சென அணிந்து சிரிக்கிறார்... ஐந்து நிமிடங்களுக்குள்!

"ஏழைக் குடும்பத்துல பிறந்தவ நான். 16 வயசுல, என் எசமான் சிக்கையா கையில புடிச்சுக் கொடுத்துட்டாங்க. பேகூர்ல இருந்து கூதூருக்கு வந்துட்டோம். கல்யாணமாகி 10 வருஷம் ஆகியும் குழந்தை எதுவும் உண்டாகல. ஏறாத கோயில் இல்லை. விரதம் இருந்தே உடம்பு வீணாப் போச்சு. அக்கம்பக்கம் ஜாடை மாடையா பேசின பேச்சு, உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது... நிம்மதியான தூக்கமும் இருக்காது. ஒரு கட்டத்துல தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன்.".

இதைச் சொல்லும்போது, இந்த 101 வயதிலும் கண்கள் இடுங்குகின்றன. "வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும்தான் உசுரா...? ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடினு எல்லாமே உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன். "குழி பறிச்சு, கன்று நட்டு, தண்ணிவிட்டு... அந்தச் செடியையே புள்ளையா
வளர்ப்போம்.

ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவைத்தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க வளர்ந்து, இந்த ஆத்தாவுக்கு மட்டுமில்ல... ஊருக்கே நிழல் கொடுக்கும்"னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. இந்த கூதூர் முழுக்க பொட்டல் காடுதான். வெக்கையா திகிக்கும். ரோட்டோர சுமைதாங்கிக் கல் பக்கத்துல ஒரு ஆலங்கன்று நட்டு வளர்த்தேன். ஆரம்பத்துல, "இது என்னாடி கிறுக்குத்தனம்?"னு கோபப்பட்டார் என் எசமான். ஆனா... அந்தச் செடி வேர் பிடிச்சு, இலை துளிர்த்து வளர்ந்தப்போ... வயிறு குளிர்ந்து, மனசு குளிர்ந்து நான் அடைஞ்ச சந்தோஷத்தை ரசிச்சவர், அதுக்குப் பிறகு மரம் நடுற வேலைகள்ல எனக்கு உதவிகள் செய்ய ஆரம்பிச்சார்.

காடு, மேடுனு அலைஞ்சி, திரிஞ்சி நிறைய ஆலமரக் கன்றுகளா கொண்டு வந்து, பதியம் போட்டு வளர்த்து, கொஞ்சம் பெருசானதும், ரோட்டோரத்துல குழி தோண்டி நட்டோம். இப்படி ஆலமரக் கன்றுகளா நட்டுட்டே இருந்தோம். மழை வரும்போதே குழிவெட்டி சேமிச்சாதான் தண்ணி. அப்படி சேர்ந்த தண்ணியை கிணத்துல, குளத்துல இருந்து எடுத்துட்டு வந்து நானும் எசமானும் கஷ்டம் பார்க்காம ஊத்தி ஊத்தி வளர்த்தோம்.

ஒரு தடவை குடிக்கக்கூட தண்ணி இல்லாத அளவுக்குப் பஞ்சம். பக்கத்து ஊர்ல இருந்து ஆளுக்கு ரெண்டு மண்பானையில தண்ணி எடுத்துட்டு வந்து செடிகளுக்கு ஊத்தினோம். சுடுவெயில்ல தலையில ஒண்ணு, இடுப்புல ஒண்ணுனு ரெண்டு பானையோட வரும்போது, கல் தடுக்கி விழுந்து, முட்டியில ரத்தம். கீழ கிடந்து அழ ஆரம்பிச்சுட்டேன். "சரியாயிடும்"னு என் எசமான் பதறிக் கட்டுப்போட, "தண்ணியெல்லாம் கொட்டிப் போச்சேனுதான் அழுவறேன்"னு நான் சொல்ல, கண் கலங்கிட்டார்!" - நாமும் கலங்கித்தான் போனோம்.

"அப்படி நாங்க அரும்பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள்தான், இன்னிக்கு உயர வளர்ந்து ஒய்யாரமா நிக்குது. இந்தப் பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையைச் சோலையாக்கித் தந்திருக்கு. தன் காலடியில கிடக்கிற அத்தனை பேருக்கும் நிழல் தருது. ஊரோட வெம்மையைத் தணிச்சு, குளிர்ந்த காத்தைக் கடத்துது. "மரத்தை வெச்ச மகராசி, நீ நல்ல இருக்கணும்!"னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையைப் பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது!" - திம்மக்காவின் வார்த்தைகளை,

சுற்றி நின்ற ஊர்க்கூட்டம் நன்றியும், நெகிழ்ச்சியுமாக ஆமோதித்தது! திம்மக்கா பாட்டியின் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, இப்போது முதுமையில், தனிமையில் இருக்கிறார் பாட்டி. ஆனால்... சர்க்கரை, இரத்த அழுத்தம் என எந்த நோயும் இல்லை. கண் பார்வை அத்தனை துல்லியம். தொலைபேசியில் பேசுமளவுக்கு கேட்கும் ஆற்றல். அவருடன் நடந்தால் மூச்சு வாங்குகிறது நமக்கு. அரசாங்கம் வழங்கும் முதியோர் நலத்திட்டத் தொகையான 500 ரூபாய் மட்டுமே ஆதார வருமானம். வாசலில் சாணி தெளிப்பது முதல் சமையல் வரை வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார் இந்த 101 வயதிலும்.

"ஊர்ல இருந்து டவுன் ரொம்ப தூரம்ங்கறதால, அவசர ஆபத்துக்கு மருத்துவ உதவி இல்ல; பிரசவத்துக்குப் போற பொண்ணுங்க ரொம்ப சிரமப்படுறாங்க. எனக்கு பெங்களூருல, கவர்மென்ட் வீடு கொடுத்துருக்கு. ஆனா, அதை நான் பார்த்தது கூட கிடையாது. அதெல்லாம் எனக்கு தேவையில்ல... எங்க ஊருல ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்தா போதும்!" என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் இந்த "செஞ்சுரி" பாட்டி... ஆச்சரியக்குறிதான்.

நன்றி : அவள் விகடன், 25.10.2011


Sunday, October 27, 2013

தூக்கு போடும் விழா - பெய்ஜிங்


சீனாவில் உள்ள மாயோவ் யோவ் டான் டோங் சிறுபான்மையினர் நாவோயூ, என்னும் திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

தென் சீனாவில் உள்ள சுய ஆட்சி பிரதேசமான இப்பகுதியில் நடைபெறும் இந்தத் திருநாளின் போது, கம்பத்து மக்கள் ஒன்று கூடி தங்களது விவாசயம் செழிக்கவும், செல்வம் பெருகவும் பிரார்த்தித்து மாட்டை கயிற்றால் கட்டி மரத்தில் தொங்கவிட்டு கொன்று பின்னர் அதன் இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக் கொள்வர்.