Monday, December 8, 2008

Se-Hari Bersama Masyarakat Kulim

Amirteswari Penang Community Centre (APCC) bersama dengan Majlis Belia India Malaysia (MIYC) Negeri Kedah menganjurkan Se-Hari Bersama Masyarakat Kulim

பினாங்கு அமிர்தேஸ்வரி நல மன்றமும் (APCC) கெடா மாநில மலேசிய
இந்திய இளைஞர் மன்றமும் இணைந்து “மக்களுடன் ஒருநாள்” எனும்
முகாமை நடத்தவுள்ளது. இம்முகாமில் மருத்துவ பரிசோதனை, சட்ட
ஆலோசனை, பயனீட்டாளர் சேவை, காவல் துறையினரின் பங்கேற்பு,
சமூக நல சேவைகள் போன்றவை வழங்கப்படும். சுற்று வட்டார மக்கள்
இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கெடா
மாநில MIYC – யின் செயலாளர் திரு. K.R. சூரிய மூர்த்தி கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு : திரு.மகேந்திரன் (ஏற்பாட்டுக் குழு தலைவர்) 012-4961573

திகதி/Tarikh : 21hb Disember 2008 (Ahad)
நேரம்/Masa : 8pagi hingga 12.30 tengahari
இடம்/Tempat : Ladang Anak Kulim, Kulim, Kedah

விடுதலை இராசேந்திரன் ( Rajeev Gandhi's Thurogam )

தமிழக சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் - ஒரு கற்பனைக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்துக்குப் பிறகு, பிரபாகரன், மூப்பனாரை சந்தித்தாராம். மூப்பனார், பிரபாகரனை ராஜீவிடம் அழைத்துச் சென்றாராம். அப்போது ராஜீவ் தனது பாதுகாப்புக் கவசத்தை பிரபாகரனுக்கு வழங்கியதாக மூப்பனார், பீட்டர் அல்போன்சிடம் கூறினாராம்.

உண்மைக்கு சிறிதும் தொடர்பில்லாத அப்பட்டமான கற்பனை இது. ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்துக்குப் பிறகு பிரபாகரன், தமிழ் நாட்டுக்குள் வரவே இல்லை. புதுடில்லியிலிருந்து தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட பிரபாகரன், பிறகு மீண்டும் ஈழத்துக்கு புறப்பட்டு விட்டார். ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவுக்கோ, தமிழ் நாட்டுக்கோ வராத பிரபாகரன், எப்போது மூப்பனாரை சந்தித்தார்? எப்படி ராஜீவை சந்தித்தார்? பிரபாகரன் மீது அவ்வளவு அக்கரை கொண்டிருந்தார் ராஜீவ் என்ற பொய்யை வலியுறுத்துவதற்காக, இப்படியெல்லாம் கதைகளை உருவாக்குகிறார்கள். “After all two thousand boys” என்று விடுதலை புலிகள் பெரிய சக்தியே இல்லை என்று கேலி பேசி, இந்திய ராணுவத்தை அனுப்பி யவர் தான் ராஜீவ் காந்தி. ராஜீவ் காந்தி செய்த துரோகங்கள் ஒன்றா, இரண்டா?

• “தமிழ் ஈழத்தின் ஒரே பிரதிநிதியாக உங்களைத்தான் அங்கீகரித்திருக்கிறோம்” - என்று பிரபாகரனிடம் பொய்யான வாக்குறுதி தந்து, ரகசியமாக தயாரிக்கப் பட்டிருந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அவரை, தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வந்தார்கள். அப்படி ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கும் செய்தியே பிரபாகரனிடம் கூறப்படவில்லை. பிரபாகரனிடம் பொய்யான தகவலைக் கூறியவர் - இந்திய அரசின் முதன்மைச் செயலாளர் பூரி.

• பிரபாகரனை டெல்லி அசோகா ஓட்டலில் தங்க வைத்தப் பிறகுதான் ஜெ.என். தீட்சத் (இந்தியாவுக்கான இலங்கைத் தூதர்) ஒப்பந்தத்தைக் காட்டினார். உடனிருந்த பாலசிங்கத்திடம் ஆங்கிலத்தில் இருந்த ஒப்பந்தத்தைப் படித்து, தமிழில் பிரபாகரனுக்கு கூறும்படி உத்தரவிட்டு, இரண்டு மணி நேரம் கெடுவைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாக வேண்டும் என்று மிரட்டினார்.

• தங்களின் தனி நாட்டுக்காக தமிழர்கள் போராடியபோது, தமிழர்களிடம் கலந்து ஆலோசிக்காமலேயே, சிங்கள அரசுடன் தன்னிச்சையாக ஒப்பந்தம் போட்டு, தமிழர்கள் மீது திணித்தவர்தான் ராஜீவ்.

• இப்படி திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்ப வில்லை, சென்னையில் ஒப்பந்தம் செய்தமைக்காக ராஜீவ்காந்திக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், பங்கேற்காமல் தவிர்க்க விரும்பி, அமெரிக்கா பயணமாக எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அவரது உடைமைகள் எல்லாம் விமானத்தில் ஏற்றப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆரை வற்புறுத்தி, தனது பாராட்டு விழாவில் பங்கேற்க நிர்ப்பந்தப்படுத்தியவர்தான், ராஜீவ்.

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என்று அறிவித்த பிரபாகரன், ஆனாலும், ‘இந்தியா நேச நாடு. ராஜீவிடம் எங்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஒப்படைத்து, ஆயுதங்களை ஒப்படைக்கிறோம்” என்று யாழ்ப்பாணம் அருகே முதுமலை என்ற இடத்தில் நடந்த மாபெரும் கூட்டத்தில் அறிவித்தார். ராஜீவ் காந்தியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு என்ன நடந்தது?

• சென்னையில் அலுவலகத்தைக் காலிசெய்துவிட்டு, அலுவலகப் பொருள்களை கப்பலில் ஏற்றிக் கொண்டு நிராயுதபாணியாக ராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நம்பி, யாழ்ப்பாணம் நோக்கி வந்த 13 விடுதலைப்புலிகளின் தளபதிகளை சுற்றி வளைத்து, கைது செய்தது சிங்கள ராணுவம். தங்களைக் கைது செய்தது ஒப்பந்தத்துக்கு எதிரானது. ராஜீவ் தலையிட்டு ஜெய வர்த்தனாவிடம் எடுத்துக் கூறி, தங்களை விடுவிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ராஜீவும், அவரது தூதுவர்களும் காதில் போட்டுக் கொள்ளாததால், 13 விடுதலைப் புலிகளும் உயிருடன் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கிக் கொள்ள விரும்பா மல், சைனைட் விஷக் குப்பிகளைக் கடித்து, வீரமரணமெய்தினர். ராஜீவை நம்பி, ஏற்றுக் கொண்ட ஒப்பந்தத்துக்காக ராஜீவ் காந்தி தந்த பரிசு இதுதான்!

• ஒப்பந்தத்தை ஏற்று, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து வரும் போது இந்திய இராணுவம் வேறு சில குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தை செய்தது. போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்த ஜெயவர்த்தனா, அதை அமுல்படுத்த மறுத்தார். ஒப்பந்தத்துக்கு எதிராக ஜெயவர்த்தனா செயல்படுவதை சுட்டிக்காட்டி, இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துதான் அகிம்சை வழியில் திலீபன் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்தார்.

• திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள் 1987 செப்.15. செப்டம்பர் 24 ஆம் தேதி பிரபாகரன், ராஜீவ் காந்திக்கே கடிதம் எழுதி, திலீபன் உண்ணாவிரதத்தின் கோரிக்கையை செவிமடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ராஜீவ் புறக்கணித்தார். பலாலி வரை வந்த இந்தியத் தூதர் தீட்சத்தை மரணத்துடன் போராடும் திலீபனை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டபோது, தீட்சத் சந்திக்கவே மறுத்தார். ராஜீவுக்கு பிரபாகரன் கடிதம் எழுதிய அடுத்த இரண்டாவது நாளிலேயே திலீபன், வீரமரணத்தை தழுவினார். ராஜீவை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்ததற்கு ராஜீவ் வழங்கிய மற்றொரு பரிசு இது!

• ஈழத்தில் நுழைந்த இந்திய ராணுவம் முதலில் தமிழர்கள் நடத்திய ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ நாளேடுகளின் அலுவலகங்களில் குண்டுகளை போட்டு தகர்த்து, தகவல் தொடர்புகளை துண்டித்தது. அந்த நிலையில், 1987 அக்.25 ஆம் தேதி பிரபாகரன், ராஜீவுக்கு மற்றொரு கடிதம் எழுதினார். “எங்களைத் தாக்காதீர்கள்; போரை நிறுத்துங்கள்” என்று அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுத்தார். ராஜீவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 1988 ஜனவரி, 12 ஆம் தேதியும், மார்ச் 9 ஆம் தேதியும் பிரபாகரன் நியாயம் கேட்டு ராஜீவுக்கு கடிதங்கள் எழுதினார். எந்த பதிலும் இல்லை.

• கடலில் கப்பலில் வந்த 13 புலிப்படை தளபதிகள் இறந்த பிறகு, இந்தியாவி லிருந்து ஜானி என்ற விடுதலைப் புலியை இந்திய அரசே தூதராக அனுப்பி, பிரபாகரனிடம் பேசச் சொன்னது. உளவுத் துறையையும், ராஜீவையும் நம்பி, தூதராக சென்ற ஜானியை ஈழத்தில் அவர் காட்டுக்குள் வந்தபோது இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது. ‘நான் இந்தியாவின் தூதராக வருகிறேன்’ என்று கூறிய நிலையிலும் ஆயுதமின்றி, உளவுத் துறையின் தூதராக வந்த விடுதலைபுலியை இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது.

இவ்வளவு துரோகத்துக்கும் காரணமாக இருந்தவர் ராஜீவ் என்பது கரை படிந்த வரலாறு. பீட்டர் அல்போன்சு போன்றவர்கள் உண்மைகளுக்கு மாறான கற்பனைகளை பேசினால், இந்த வரலாற்று உண்மைகளை நாம் பட்டியலிட்டுத் தானே ஆக வேண்டும்!

- கதை அளக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்

Tuesday, December 2, 2008

பகவானே தோழன்


பகவானை எந்த பாவனையில் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால், அதில் முழுவதுமாக லயிக்க வேண்டும். மீராவும் ஆண்டாளும் பிரேம பாவனையில் 'இ'லயித்தார்கள். குசேலனும் அர்ஜீனனும் கண்ணனை நண்பனாக வரித்தார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் இறைவனோடு, ஒவ்வொரு பாவனையில் உறவு. இராமவதாரம் முடிந்த பின் ஆஞ்சநேயன் கண்ணனை குருவாக வரித்து யுத்தத்தில் அர்ஜீனனின் தேர்க்கொடியில் உட்காந்தார். எனவே, நாமெல்லாம்கூட கண்ணனை நமக்குப் பிடித்திருக்கும் எந்தவுருவிலும் வரித்துவிடலாம். ஏனென்றால் பண்பிலே தெய்வம், நல்லாவிரியன், தோழன், மந்திரி, தாய், தந்தை என்ற எல்லா உவவுகளும் கண்ணன் ஒருவனே!

கடைசி உபதேசம்


அன்னை சாரதா தேவி, இராமகிருஷ்ணரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்.இராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின், விதவைக் கோலம் ஏற்க அன்னை முற்ப்பட்டார். அப்போது காட்சி தந்த இராமகிருஷ்ணர், "ஓர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத்தான் சென்றுள்ளேன்" என்று கூறினார். சாரதாதேவி மன ஆறுதல் அடைந்தார். தவிர, கடைசிவரை விதவைக் கோலத்தைத் தவிர்த்தார். அன்னையின் இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்ருந்த வேளை, காய்ச்சல் வந்து உடல்நிலை மோசமானது. அப்போதும்கூட தன்னைப் பார்க்க வந்த ஒரு பக்தைக்கு, " உனக்கு அமைதி வேண்டுமென்றால், மற்றவர்களின் குறைகளைப் பார்க்காதே. அதற்கு பதிலாக, உன்னிடம் இருக்கும் குற்றங்களைப் பார். இந்த உலகம் முழுவதும் உன்னுடைய சொத்தாக ஆக்கிக்கொள்ளக் கற்றுக்கொள். மகளே, இந்த உலகில் யாரும் அந்நியர் இல்லை. உலகம் முழுவதும் உன் சொத்துக்ள்!", என்று கூறி ஆசி வழங்கினார். இதுதான் அன்னை சொன்ன கடைசி உபதேசம்.

கிரியும் சந்தனமும்

ஒரு சமயம் துரியோதனையும் தர்மனையும் பார்தது பீஷ்மர், " உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்களா என்று பார்தது வாருங்கள்" என்று சொன்னார்.

துரியோதனன் உலகத்தைச் சுற்றிப் பார்தது வந்து "தாத்தா, இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லை. அனைவரும் பொல்லாதவர்கள்" என்றார்.

தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு கண்ணாடியில் பார்க்கின்றவனுக்கு எல்லாமே கரியாகத்தான் தெரியும். தருமனோ, " தாத்தா, உலகத்தில் அனைவருமே நல்லவர்கள்தான், சூழ்நிலையினால்தான் பொல்லாதர்களாக மாறிவிடுகின்றனர்!" என்றார்.

இது, ஒருவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு கண்ணாடியைப் பார்ப்பது போன்றது.

என்போதுமே ஒவ்வொருவரின் எண்ணப்படிதான் அவர்களின் பார்வையும் இருக்கும்.

- வாரியார் சொன்னது -

உலக புகைபிடிக்காத தினம் 2008

உலக புகைபிடிக்காத தினம் 2008 ஆண்டு கொண்டாட்டத்தில் 2.73 மில்லியன் புகைபிடிப்பவர்கள் கலந்து கொள்ளப் போகின்றார்கள். இவர்களில் 2.61 மில்லியன் ஆண், 120,000 பெண் புகையாளர்களும் அடங்குவர். சராசரி நாள் ஒன்றுக்கு மவெ.15 மில்லியன் சிகரெட்டுக்காக செலிவிடப்படுகின்றது என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.
இந்த வருட கொண்டாட்டம் “இளைஞர்களைப் புகையிலிருந்து விடுவியுங்கள்” என்ற கருவுடன் கொண்டாப்படுகிறது. 18 வயதுக்கு கீழ்பட்ட 45லிருந்து 50 மலேசிய இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் புகைபிடிக்க தொடங்குக¢ன்றனர், இவர்களில் 8விழுக்காட்டினர் பள்ளி சிறார்களாவர். 2000கும் 2005ம் ஆண்டுக்கும் இடையில் பதின்ம வயதுடைய பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அவர்களிடைய 4 விழுக்காட்டிலிருந்து எட்டு விழுக்காடு அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் 2004ம் ஆண்டில் ஐந்து மலேசிய இளைஞர்களிடையே ஒருவர் புகைப்பிடிப்பவராக இருக்கிறார் என இத்ரிஸ் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி உலகத்தில் ஒவ்வொரு நாளும் 60,000க்கும் 100,000க்கும் இடைப்பட்ட குழந்தைகள் தினமும் புகைபிடிக்க தொடங்குகின்றனர். இதில் பெரும்பகுதியினர் ஆசியாவைச் சார்ந்தவர்கள்.
சிகரெட்டில் 4,000 விதமான இரசாயனங்கள் இருக்கின்றன, இதில் 2000 இரசாயனங்கள் நச்சுத்தன்மையானவை, 63 புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. இருப்பினும் உலகலாவிய நிலையில் நாள் ஒன்றுக்கு அதன் விற்பனை 15 பில்லியன் அல்லது நிமிடத்திற்கு 10 மில்லியனாக இருக்கிறது. ஒவ்வொரு சிகரெட் பிடிக்கப்படும்போது மனிதனின் வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை அது குறைத்து விடுகிறது. உலகத்தில் ஒவ்வொரு எட்டு வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதனால் அல்லது அது சம்பந்தப்பட்ட நோய்களினால் செத்து மடிகின்றனர்.
மலேசியாவில் மட்டும், ஒவ்வொரு வருடமும் 10,000 இறப்புக்கள் புகையினால் சம்பவிக்கிறது. இதில் குறைந்த பட்சம் 3000 நுரையீரல் புற்றுநோய், இருதய நோய் மற்றும் கடுமையான நுரையீரல் நோயாக இருக்கிறது.

சிகரெட் வாங்குபவர்களின் வயது 18லிருந்து 21க உயர்த்தப்பட வேண்டும் என இத்ரிஸ் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். அதோடு வாங்குவதை மட்டும் தடை செய்யாது இளம் குழந்தைகள் புகைபிடிப்பதையும் அரசாங்கம் அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
அமெரிக்காவில் இல்லிநோயிஸ் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து கெடுபிடியான சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு, 69விழுக்காட்டினர் புகைபிடிப்பதை கைவிட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. வயது குறைந்தவர்கள் சிகரெட் வாங்குவதைக் கட்டுப்படுத்திய பிறகு அவர்களிடையே சிகரெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை 3லிருந்து 70 விழுக்காடாக குறைந்திருக்கிறது என அந்த ஆய்வு காட்டுகிறது.
பொதுவாக குடும்பங்களாக செல்லக்கூடிய பொது இடங்களான உணவு கடைகள், உணவகங்கள் பொது கேளிக்கை இடங்களிலும் சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என பி.ப.சங்கம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.

அரசாங்கம் சுகாதார அமைச்சு மூலமாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் ஓய்வு இடங்கள், பொது கேளிக்கை இடங்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் அதிகமாக பொதுமக்கள் செல்லக்கூடிய இடங்களில் சிகரெட்டுக்கு தடை வ¢திக்க வேண்டும் என்றும் இத்ரிஸ் கேட்டு கொண்டார். இது பொதுமக்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் இரண்டாவது புகையாளராக மாறுவதிலிருந்தும் தடுக்கிறது.
710 மில்லியன் குழந்தைகள் உலக அளவில் இரண்டாவது புகையாளராக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 6லிருந்து 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இரண்டாவது புகையாளராக இருக்கும் போது அவர்களிடயே வாசிப்பு, கணித மற்றும் சிந்தனை திறன் குறைவதாக அமெரிக்க சிஞ்சினாத்தி மருத்துவமனையின் ஆய்வு காட்டுகிறது.
பினாங்கில் அமைந்திருக்கும் இளைஞர் பூங்கா மற்றும் பூந்தோட்டத்தில் பொதுமக்கள் புகைபிடிப்பதாக பி.ப.சங்கத்திற்கு புகார்கள் வந்திருக்கின்றன. ஆகையால் இந்த இரு இடங்களிலும் புகைபிடிக்கக்கூடாத பகுதியாக அறிவிக்கும்படி பினாங்கு மாநில அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டு காள்கிறது. இங்கு வருகை புரியும் பொதுமக்கள், மற்றும் உடற்பயிற்சியாளர்களின் நலன் கருதி இந்நடவடிக்கை மிக அவசிமாகிறது என இத்ரிஸ் கூறினார்.

இத்தகைய நடவடிக்கை இளைஞர்களைப் புகையிலிருந்து காப்பதற்காக உதவுவதோடு மட்டுமல்லாமல், புகையிலையின் ஆபத்தைப் பற்றி தனிநபர் மற்றும் சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமயும் என்று பி.ப.சங்க தலைவர் எஸ்.எம். இத்ரிஸ் கூறினார்.