Tuesday, August 16, 2011

உருகும் பனிப்பாறைகள் அபாயத்தில் மனித இனம்

மிகப் பெரிய காரியத்தை சாதித்து முடித்தவுடன் இமாலய வெற்றி என்றெல்லாம் கொண்டாடுவோம். அந்தளவுக்கு இமலாயத்தின் பிரமாண்டம் நமக்குத் தெரியும். ஆனால் இப்பொழுது அந்த இமய மலையும் மனிதர்களின் அடாவடித்தனத்தால் கரைய ஆரம்பித்துள்ளது. இமய மலையில் முன்பைப் போன்று அல்லாது வெகு வேகமாக கரைய ஆரம்பிக்கும் இமாலய பனிக்கட்டிகள் ஆசியாவில் உள்ள மிகப் பெரிய 10 நதிகளின் மூலம் வழிந்தோடுகின்றன. உலக உஷ்ணத்தால் 2030லிருந்து 2050க்குள் 35% பனிக்கட்டிகள் உருகிவிடும். இமாயலத்திலிருந்து உருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கும் நீரை நம்பியே 1.3 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா நதிகளுக்கு இமயத்தில் உள்ள சுமார் 16,000 பனிக்கட்டிகள்தான் காரணம்.


இமய மலையில் அடிக்கடி ஏறி இறங்கி வரும் ஷெர்பா ஒருவர் 8000 அடிக்கு மேல் கூட
பனிக்கட்டி உருகி நீராகி இருப்பதைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். இது நாள் வரைக்கும்
பனியையும் பனிக்கட்டிகளையும் பார்த்து வந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படி அளவுக்கு அதிகமாக பனிக்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தால் ஒரு காலத்தின் இமயத்திலிருந்து உருகியோடும் நீரின் அளவு கணிசமான அளவில் குறைந்துவிடும். இந்நிலை
ஏற்படுமானால் அதிகம் பாதிக்கப்படப்போவது விவசாயத்தை நம்பியிருக்கும் ஏழை வர்க்கம்தான்.

No comments:

Post a Comment