Tuesday, December 2, 2008

கிரியும் சந்தனமும்

ஒரு சமயம் துரியோதனையும் தர்மனையும் பார்தது பீஷ்மர், " உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்களா என்று பார்தது வாருங்கள்" என்று சொன்னார்.

துரியோதனன் உலகத்தைச் சுற்றிப் பார்தது வந்து "தாத்தா, இந்த உலகத்தில் நல்லவர்களே இல்லை. அனைவரும் பொல்லாதவர்கள்" என்றார்.

தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு கண்ணாடியில் பார்க்கின்றவனுக்கு எல்லாமே கரியாகத்தான் தெரியும். தருமனோ, " தாத்தா, உலகத்தில் அனைவருமே நல்லவர்கள்தான், சூழ்நிலையினால்தான் பொல்லாதர்களாக மாறிவிடுகின்றனர்!" என்றார்.

இது, ஒருவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு கண்ணாடியைப் பார்ப்பது போன்றது.

என்போதுமே ஒவ்வொருவரின் எண்ணப்படிதான் அவர்களின் பார்வையும் இருக்கும்.

- வாரியார் சொன்னது -

No comments:

Post a Comment