Monday, September 13, 2010

தற்கொலை காட்சிகள் தொடர வேண்டுமா? நடிகை ராதிகாவின் செல்லமே தொடர் குடும்ப நல்லுணர்வு சீரழிக்கின்றது பி.ப.சங்கம் குற்றச்சாட்டு!

குடும்ப சமூக மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சினிமாப் படங்களை விட மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடியவையாக அமைந்து வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோமோ அதற்கு எதிராகவே, சின்னத்திரைகளில் காட்சிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன என்றார் பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ்.

சன் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு இங்கே மறு ஒலிபரப்பாக தினமும் திரையிடப்படும் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் குடும்ப சீரழிவை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் ஒவ்வொன்றாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஆகக் கடைசியாக காற்றாடியில் சேலையைத் தொங்கவிட்டு கறுத்தில் இறுக்கி எப்படித் தற்கொலை செய்துகொள்வது என்ற காட்சி அண்மையில் செல்லமே மெகா தொடரில் காட்டப்பட்டது. இந்தக் காட்சி பலரின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக சுப்பாராவ் கூறினார்.

ஆரம்பத்தில் திரைப்படங்களில்தான் தற்கொலைக் காட்சிகள் அதிக அளவு காட்டப்பட்டு வந்தன. ஆனால் இப்பொழுது மெகா தொடர்களில் இதுபோன்ற காட்சிகள் வரத்தொடங்கிவிட்டன என்றார் சுப்பாராவ்.

நமது நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

எப்படித் தற்கொலை செய்து கொள்வது என்பதை இந்த நாடகங்களே சொல்லித் தருகின்றன. தமிழ் மெகா தொடர்களைப் பார்த்தே தமிழ்நாட்டில் பலர் தற்கொலை செய்துகொள்வதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இந்த நிலை மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் ஏற்படக்கூடாது.


செல்லமே போன்ற நாடகங்கள் மிக முக்கிய நேரத்தில் காட்டப்படுவதால் அனைவராலும் பார்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட தற்கொலைக் காட்சிகள் பார்ப்பவர்களின் மன நிலையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் தங்களுடைய சொந்த பிரச்னைகளுக்கு தவறான முடிவுகளை எடுக்கவும் தூண்டிவிடலாம் என்றார் சுப்பாராவ்.

கணவன் மற்றும் மகன், மகளுக்கு எதிரிலேயே அம்மா உயர்ரக மது குடிக்கும் காட்சி, உணவில் விஷத்தைக் கலப்பது, ஆண் பெண்ணை அறைவது, பெண் ஆணை அறைவது, காப்பியில் தூக்க மாத்திரையைப் போட்டுவிட்டு உறவு கொள்வது, பழிக்குப் பழி வாங்குவதற்காக சொந்த தந்தையே தன் மகளை வழி தவறிச் செல்ல உதவுவது போன்ற மனதை நோகடிக்கும், தலைக்குனிவை ஏற்படுத்தும் காட்சிகள் நடிகை ராதிகாவின் செல்லமே தொடரில் தொடர்ந்து கொண்டே போகின்றன.


இப்படிப்பட்ட தொடர்களை ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பார்ப்பதில்லை. பெற்றோர்கள் முதல் குழந்தைகள் வரையிலும் சில சமயங்களில் பாட்டிமார்களும் இத்தொடர்களில் கண் விழித்து பொழுதைக் கழித்துவிடுகிறார்கள்.

மிக மோசமான காட்சிகள் காட்டப்படும்போது அது அவர்களின் மனதில் தங்கிவிடுகிறது. ஏதோ பொழுது போக்கிற்காக பார்க்கக்கூடிய நாடகங்கள் குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போதுதான் அதன் உண்மை நிலை தெரிய வருகிறது என்றார் சுப்பாராவ்.

மற்ற சமூகத்தோடு எல்லா துறைகளிலும் போட்டி போட்டுக்கொண்டும் உரிமைகளுக்காக போராடிக்கொண்டும் இருக்கிற சமூகத்துக்கு செல்லமே போன்ற தொடர் நாடகங்கள் இன்னும் அதிகமாக கேடுகளையே கொண்டு வரும்.

இதுபோன்ற சமூக நலனுக்கு பாதகங்களை விளைவிக்கும் நாடகங்களை ஒளிபரப்புவதை விடுத்து, உருப்படியான நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒலிபரப்ப வேண்டும் என என்.வி.சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.



என்.வி.சுப்பாராவ்
கல்வி அதிகாரி
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
தொலைபேசி : 012-5374899

Tuesday, September 7, 2010

பறவைகள் பலவிதம்










உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் - விவேகானந்தர்

* இந்த உலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமை உடையவர்கள் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சொந்த வளர்ச்சிக்காக தானே வேலை செய்தாக வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. தனி மனிதனுக்குப் பொருந்தும் இந்த உண்மை நாடுகளுக்கும் பொருந்தும். தனி மனிதர்களின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.த அற்ப இதயமுடைய மனிதர் களிடமிருந்து எந்த உருப்படியான வேலையை நீ எதிர்பார்க்க முடியும்? நீ கடலைக் கடக்க விரும்பினால் இரும்பைப் போன்ற மனவுறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கு இருக்க வேண்டும்.

* சிந்தனையின் 90 சதவீத ஆற்றல் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே, தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும்தவறு செய்வதில்லை.

* எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத் தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருகசக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய்ய வேண்டும்.

* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை
மயமாக்கு. அதையே கனவு காண். அந்த கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தையே நிரப்பு. அந்த நிலையில் மற்ற எல்லா கருத்துக்களையும் தவிர்த்துவிடு. வெற்றிக்கு இது தான் வழி. நாம் உண்மையிலேயே பாக்கியவானாக விரும்பினால் நம்முள் நாம் மேலும் ஆழ்ந்து சென்றாக வேண்டும்.

* இவனை நம்பு. அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன்- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. <உன்னைப் பற்றி முதலில் அறிந்து கொள். எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உணர்ந்து நீஅந்த ஆற்றலை வெளிப்படுத்து. நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ சாதிக்கப் பிறந்திருக்கிறாய். உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் போராடினால், பாம்பின் விஷம் கூட சக்தி அற்றதாகிவிடும்.

* உலகம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே! உன் மனமே உனக்கு நீதிபதி. நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உன் காலடியில் பணிந்து கிடக்கும்.

* நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடின மானது தான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடையவேண்டிய உனதுலட்சியமாகிய குறிக்கோளைக் கண்டுபிடி.

* எதிலும் கவனம் வேண்டும்
பேச்சு பேச்சாக இருந்தாலும், நாம் செய்து கொண்டிருக்கும் பணியில் இருந்து கவனம் சிதறிவிடக்கூடாது என்று பெரியவர்கள் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்வது வழக்கம். இது விவேகானந்தரின் விஷயத்தில் நூறு சதவீதம் சரியாக இருந்தது. அவரது நிஜப்பெயர் நரேந்திரன் என்னும் நரேன். இவரது தாயார் புவனேஸ்வரி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து கதைகளையும், நீதிகளையும் மகனுக்கு எடுத்துச் சொல்வது வழக்கம். இதனால் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதில் சிறுவனாக இருந்தபோதே நரேன் உறுதியாக இருந்தார். ஒருநாள் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் ஆர்வத்துடன் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு பாடத்தைக் கவனிக்கவில்லை. கோபம் கொண்ட ஆசிரியர் நரேனை எழுப்பி, நடத்திய பாடத்திலிருந்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். ஆனால், சற்றும் தயங்காமல் அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலளித்தான் சிறுவன் நரேன்.

""நீ பேசிக் கொண்டிருந்தாய் என்று தவறாக எண்ணி விட்டேனே! உண்மையில் இவ்வளவு நேரம் வகுப்பில் பேசிக் கொண்டிருந்தது யார்?'' என்று கேட்டு மற்ற மாணவர்களைப் பார்த்தார் ஆசிரியர்.

நரேன் ஆசிரியரிடம், ""ஐயா! இவ்வளவு நேரம் பேசியது நான் தான்! இருப்பினும், பாடத்தில் இருந்தும் என் கவனம் விலகவில்லை'' என்று உண்மையைச் சொன்னார். ஒரு பணியில் கவனம் செலுத்தும்போது, மற்றொன்றைக் கேட்கும் நிலை வந்தால், அதிலும் கவனம் இருக்க வேண்டும், புரிகிறதா?

* துணிச்சலும் வேண்டும் கருணையும் வேண்டும்
விவேகானந்தரின் வீடு அருகில் உடற் பயிற்சிக் கூடம் ஒன்று இருந்தது. அங்கே நண்பர்களுடன் அவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கிருந்த பெரிய கனமான மரக்கட்டையை சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து உயரமான இடத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அக்கட்டையை அசைக்கக் கூட முடியவில்லை. இதைக் கவனித்த மாலுமி ஒருவர் சிறுவர்களுக்கு உதவ முன்வந்தார். ஆனால், மரக்கட்டை நழுவி மாலுமியின் தலையில் விழுந்து விட்டது. ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி சிறுவர்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர். விவேகானந்தர் தன்னுடைய வேட்டியைக் கிழித்து காயத்தில் கட்டுப் போட்டதோடு அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிய வைத்தார். பெரியவர்களை உதவிக்கு அழைத்து மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்தார். ஆபத்தான நேரத்தில் துணிவோடும், கருணையோடும் செயல்படவேண்டும் என்பது நரேனின் இயல்பான சுபாவமாக இருந்தது

* வெளிநாட்டு சகோதரன்
பேராசிரியர் ரைட் என்பவர் சுவாமி விவேகானந்தருக்காக, சிகாகோவில் நடந்த சர்வ மத மகாசபை மாநாட்டில் பேச அனுமதிக்கும் சிபாரிசு கடிதம் ஒன்றினைக் கொடுத்திருந்தார். சிகாகோவுக்குச் சென்றதும், தன்னிடம் இருந்த சிபாரிசு கடிதம், சர்வமத மகாசபை இருக்குமிடம், செலவுக்கு இருந்த பணம் உட்பட அனைத்தையும் விவேகானந்தர் தொலைத்து விட்டார். குளிரும் பசியும் விவேகானந்தரை வாட்டியது. எங்கு செல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். செல்வந்தர்கள் வாழும் சிகாகோவில் ரோட்டோரத்தில் அமர்ந்து விட்டார். அவரைக் கண்ட ஆங்கிலேயப் பெண்மணி மிசஸ் ஹேல் விவேகானந்தரிடம் வந்து விஷயங்களை அறிந்து கொண்டு தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

தன் கணவர் ஜார்ஜ் ஹேல் உதவியுடன் சர்வ மத மகாசபையில் பேசும் சொற்பொழிவாளர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்தார். ஜார்ஜ் ஹேல் குடும்பம், தனக்கு ஒரு சகோதரனைப்போல அன்பு பாராட்டி உதவி செய்ததாக விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.