Tuesday, December 2, 2008

பகவானே தோழன்


பகவானை எந்த பாவனையில் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால், அதில் முழுவதுமாக லயிக்க வேண்டும். மீராவும் ஆண்டாளும் பிரேம பாவனையில் 'இ'லயித்தார்கள். குசேலனும் அர்ஜீனனும் கண்ணனை நண்பனாக வரித்தார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் இறைவனோடு, ஒவ்வொரு பாவனையில் உறவு. இராமவதாரம் முடிந்த பின் ஆஞ்சநேயன் கண்ணனை குருவாக வரித்து யுத்தத்தில் அர்ஜீனனின் தேர்க்கொடியில் உட்காந்தார். எனவே, நாமெல்லாம்கூட கண்ணனை நமக்குப் பிடித்திருக்கும் எந்தவுருவிலும் வரித்துவிடலாம். ஏனென்றால் பண்பிலே தெய்வம், நல்லாவிரியன், தோழன், மந்திரி, தாய், தந்தை என்ற எல்லா உவவுகளும் கண்ணன் ஒருவனே!

No comments:

Post a Comment