Sunday, August 14, 2011

பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும்

கடந்த 20 ஆண்டுகளில் எல்லா விதமான நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் பாட்டில் நீரின் உபயோகம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதற்கு முன்பு எல்லா வித நிகழ்வுகளிலும் கூஜாவில் தண்ணீர் வைக்கப்பட்டு குவளையில் பரிமாறப்பட்டது. அது ஒரு காலம்.

குழாயைத் திறந்தால் எளிதில் கொட்டும் நீரை உதாசீனம் செய்துவிட்டு மலேசியர்கள் வெறும் தண்ணீருக்காகப் பெரிய தொகையைக் கொடுக்க முன் வருவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மலேசியர்கள் ஒவ்வொரு வருடமும் 100 மில்லியன் பாட்டில் நீர் அருந்துகிறார்கள்.

பேரங்காடிகளில் பெரிய எண்ணிக்கையில் வாங்கும் பொழுது 40 சென்னாகவும் அதே
நீரை விடுதிகளில் வாங்கிக் குடிக்கும்பொழுது மவெ. 5.00 வரைக்கும் ஒரு பாட்டில் நீரின் விலை வேறுபடுகிறது. பாட்டிலின் மூடி வர்ணத்தில் இருந்தால் அது இயற்கையான நீர் என்றும், வெள்ளை மூடி என்றால் அது கிருமி நாசினி செய்யப்பட்ட நீர் என்பதும் பெரும்பாலான பயனீட்டாளர்களுக்குத் தெரியாது.கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உடலுக்குத் தேவையான மெக்னீஸியம், பொட்டேஸியம், துத்தநாகம் போன்றவை பாட்டில் நீரில் மிக மிக சொற்ப அளவில்தான் இருக்கின்றன. இவை உணவில் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் உணவின் மூலமே இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். பாட்டில் பானத்தை வாங்கும்பொழுது அந்த நீருக்காக நீங்கள் கொடுக்கும் தொகை மொத்த
விலையில் 10% மட்டுமே. எஞ்சிய 90% பிளாஸ்டிக் பாட்டிலுக்காக நீங்கள் கொடுக்கும் தொகையாகும். ப ¡ ட் டி ல் நீர் தயாரிப்பு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய கேட்டைக் கொண்டு வருவதாக இருக்கிறது. பெரும்பாலான பாட்டில்கள் இறுதியில் குப்பை கொட்டும் இடங்களில் தஞ்சமடைகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் கொள்கலன் கச்சா எண்ணெய், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வெவ்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் பெரிய தொகையில் நிறைய பணம் செலவழிக்கப்படுகிறது.

கண்ணாடிப் பொருட்கள் தயாரிப்பை விட பிளாஸ்டிக் தயாரிப்புக்கள் 100 மடங்கு அதிகமான நச்சு வாயுக்களை வெளியேற்றுகின்றன.

உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 2.7 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. பாட்டில் நீரை வாங்கிக் குடித்த பிறகு
பாட்டில்களைத் தூக்கி எறிகிறோம். இவை குப்பை மேடுகளை நிறைக்கின்றன.



இவற்றை எரிக்கும்பொழுது மிகவும் மோசமான நச்சு வாயுக்கள் வெளிப்படுகின்றன. இவை மனித மற்றும் பிராணிகள் இனத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். இதே பாட்டில்கள் மண்ணில் புதையுறும் பட்சத்தில் மக்கிப்போவதற்கு குறைந்தது பாட்டில் நீரும் பாழாகும் ஆரோக்கியமும் 500 வருடங்களாவது பிடிக்கும். பெரும்பாலான நீர் பாட்டில்கள் எண் 1, PET, PETE ரகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த குறியீடுகள் பாட்டிலின் அடிப்பாகத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.

பாட்டில் சூடாகும்பொழுது இந்த இரசாயனங்கள் நீருக்குள் கரைகின்றன. நம் நாட்டில் இந்த நீர் பாட்டில்கள் லாரிகளின் மூலம்தான் விநியோகிக்கப்படுகின்றன. சில சமயங்களில் இப்படி ஏற்றிச் செல்லப்படும் பாட்டில்கள் 30OC சூட்டுக்கு உள்ளாகின்றன. பிறகு கிடங்குகளில் வைக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் விற்பனைக்காகக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

வெப்ப நாடுகளில் நீர் பாட்டில்களை கார்களில் விட்டுச் செல்லும்பொழுது அவை சூடாகிப் பாட்டிலின் பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனம் நீரில் கரைகிறது என்று அமெரிக்க இரசாயனக் கழகப் பிரிவின் டாக்டர் கென் ஸ்மித் கூறுகிறார்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் நீரிலும் இந்த இரசாயனங்கள் கரையத்தான் செய்யும். PET ரக பாட்டிலில் உள்ள நச்சு இரசாயனங்களும் தண்ணீரில் உடனடியாகக் கரையக்கூடியவை என்று 2006ல் ஜெர்மனி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பாட்டில்நீர் எவ்வளவு காலத்திற்கு கிடத்தி வைக்கப்படுகிறதோ அவ்வளவு நாட்களுக்கு அது நச்சுத் தன்மை உடையதாக ஆகிறது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை எவ்வளவு காலத்திற்கு உபயோகிக்கிறோமோ அந்த அளவுக்கு நீரில் கலக்கும் நச்சு இரசாயனங்களின் அளவும் அதிகமாகும். பாட்டில் நீர் பயனீட்டாளர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்கப் போவதில்லை.

மாறாக ஆரோக்கியக் கோளாறுகளையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் உண்டாக்கும். பாட்டில் நீர் அருந்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமல்ல.

அது கடந்த 20 வருடங்களாகத்தான் நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பாட்டில் நீர் தடை செய்யப்பட வேண்டும். மாறாக எல்லா நிகழ்வுகளிலும் குவளைகளில் தண்ணீர் பரிமாறப்பட வேண்டும். சாதாரண குடிநீரில் சில துளி எலுமிச்சையைக் கலந்து அருந்தினாலே புத்துணர்ச்சி கிட்டும்.

No comments:

Post a Comment