Friday, May 7, 2010

நவீனமயத்தால் அழிந்து வரும் சிட்டுக்குருவிகள்


" சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு.....தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...." என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமான சுற்றித்திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பி மறக்கவில்லை.

உருவத்தில் சிறியதாக அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப்போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்கபலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது.

வீட்டுத்தோட்டங்களில் பூச்சுகளை குருவிகள் உண்பதால், "விவசாயகளின் நண்பன்" என அழைக்கப்பட்டது. பலசரக்கு கடைகள் முன் சிதறிக்கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் நடந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும், சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும் குரலின் மென்மையையும் இரம்மியாக இரசிக்கலாம்.

அழியும் சிட்டுக்குருவிகள் :

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள் போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

- வெளிக்காற்று வீட்டிற்குள் வரமுடியாதபடி, வீடு முழுவதும், "ஏசி" செய்யப்பட்ட வீடுகளில், குருவிக்கு கூடுகட்டி குடியிருக்க இயலாமல் போனது.

- பெட்ரோலில் இருந்து வெளியேரும், "மீத்தைல் நைட்ரேட்" எனும் இராசாயனக் கழிவு புகையால், காற்று மோசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவு பற்றாக்குறையால்,நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

- பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக கடைகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுதால், சாலைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், சாலைகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.

- வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.

- இவையனத்துக்கும் மகுடம் சூட்டியதுபோல், கைத்தொலைப்பேசிகள் (தொல்லைபேசிகள்) வருகைக்குப் பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்து விட்டன. கைதொலைப்பேசிகளிலிருந்து வெளியேறும், கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

- ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாயந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இனம் அழிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற்கையை பாதுகாக்க சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும்.

Bookmark and Share

No comments:

Post a Comment