Friday, May 7, 2010

நினைவில் கொள்வோம்


மனிதன் இன்னொரு மனிதனோடும், மற்ற உயிரனங்களோடும், இயற்கையோடும் இயந்து சந்தோஷமாக வாழவே மதங்கள் வழிகாட்டுகின்றன.

சடங்குகள் மனித மனத்தை அமைதிப்படுத்தி மனமலர்ச்சியை உண்டு பண்ண ஒரு வடிகாலாகப் பயன்பட்டன.

விழாக்கள் நம்மை நம்முடைய கலைத்தன்மையை விஸ்தரித்து நம்மை சந்தோஷப்படுத்தும் ஒன்றாக இருக்கின்றன. அவற்றின் விதவிதமான வண்ணங்களின் பங்கு முக்கியமாக இருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அவற்றில் சில திரிந்துபோய் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு போயுள்ளன.


உலகின் பல பகுதிகளில் உள்ள இந்துக்கள் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சிலைகளை ஆற்றில் அல்லது கடலில் கரைக்கப்படும் நிகழ்வு இந்தியா முழுவதும் பரவலாக இருக்கின்றது. இந்த விநாயகர் சிலைகள் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அவை கரைக்கப்படும் பொழுது பாதகமில்லை.
ஆனால் இப்பொழுது வண்ண வண்ண சாயக் கலவைகளைப் பூசி அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மக்கள் வாங்கி அலங்கரிக்கிறார்கள்.

விநாயகருக்கு பூசப்படும் சாயங்களில் காரீயம், குரோதியம் , கேட்மியம், ஆர்சினிக், சிலிக்கோன், மெக்னீஸியம், பொட்டேஸியம் போன்ற நச்சு இராசயனங்கள் நிறைந்துள்ளன. இவற்றை கடல்களில் கரைக்கும்பொழுது கடல் நீர் தூய்மைக்கேட்டுக்கு உள்ளாகி கடலில் வாழும் உயிரினங்களின் உயிரையும் மாய்த்து விடுகிறது. இவற்றில் காரீயம், பாதரசம் மற்றும் ஆர்சனிக் அதிக ஆபத்துக்கள் வாய்ந்தவை.


விநாயகரைக் கரைக்கும்பொழுது அவரோடு பிளாஸ்டிக் மற்றும் பெரிய பெரிய சாக்குகளையும் சேர்த்துக் கரைத்துவிடுகின்றனர்.
மும்பையில் ஒவ்வொரு வருடமும் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ( கை எழும்பு உடைந்துவிட்டால் போடப்படும் சிமென்ட் ) 70,000 – 80,000 சிலைகள் கடல்களில் கரைக்கப்பட்டன.


சாயங்கள் பூசப்படு, மினுமினுக்கும் துணிகள், நிறைய நகைகள் போன்றவற்றால் இந்தச் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு கடலில் வி்டப்படுகின்றன.


சில சிலைகள் ஓங்கி வைத்து தூக்கிக் கடலில் கரைக்கும் அளவுக்கு பெரிதானவை.

ஆந்திராவின் ஹட்ராபாட்டில் உள்ள 2500 ஏரிகள் குடிநீருக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் செப்டம்பர் மாத விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் இந்த எல்லா ஏரிகளிலும் கரைக்கப்படுகின்றார். கர்நாடகாவில் விதவிதமான வர்ண விநாயகர்கள் மிகவும் பிரபலம்.


ஒவ்வொரு வருடமும் 3,051 சி லைகள் சென்கி ஏரியிலும், 642 லால்பாக் ஏரியிலும், 962 சிலைகள் எடியூர் ஏரியிலும் கரைக்கப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டன.
அவற்றுக்குச் சாயம் பூசப்படவில்லை.
அவை கரையும் பொழுது கடல்களை மாசுப்படுத்தியதி்ல்லை. அரிசி பதார்த்தங்களைச் சமைத்து வழிபாட்டுக்குப் பின் கடலில் விடுவார்கள். கடலில் உள்ள மீன்களுக்கு இவை நல்ல உணவாகிவிடும். விநாயகரை அலங்கரிக்கும் இலைகளுக்கும் மூலிகைக்கும் மருத்துவ குணம் இருந்தது.

ஆனால் இப்பொழுது நிலைமையே வேறு. மக்கள் சாயம் பூசப்படாத கணேசரை வாங்க விரும்புவதில்லை என்று சிலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இராசயன சாயத்திற்குப் பதிலாக மூலிகைகளால் ஆன சாயத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றுக்கு அதிக செலவு செய்ய வேண்டும்.

இன்னொரு கோணத்தில் மக்கள் இந்த சாயம் பூசப்பட்ட விநாயகரின் ஆபத்துக்களை உணரத் தொடங்கியும் இருக்கின்றனர். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகருக்கு நச்சு இரசாயனக் கலவைகள் அடங்கிய சாயங்கள் பூசப்படாத விநாயகரைப் பயன்படுத்துமாறு கர்நாடகாவின் கிராமப்புற தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் ஒன்று பிரச்சாரம் செய்து வருகிறது.


மும்பையிலும் காகிதக்கூழைப் பயன்படுத்தி விநாயகர் சிலைகளைச் செய்வதைப் பிரபலப்படுத்தி வருகின்றார்கள். சில இடங்களில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
மனிதனுக்கு எல்லா விதத்திலும் ஏற்படும் இடர்பாடுகளைக் களைத்து இன்புற்று வாழவே வழிப்பாடு ஏற்பட்டது. ஆனால் பிறப்பித்துக்கொள்ளும் அளவுக்கு மனிதனுடைய நடவடிக்கைகள் உருவெடுத்திருப்பது வேதனையான விஷயம்தான்.


மனிதன் சுமூகமாக வாழ இடையூறுகளை தகர்த்தெறியும் கணேசரே இந்தப் பிரச்சனையை விரைவில் களைய வழிகாட்டுவாராக.

No comments:

Post a Comment