Monday, December 11, 2023

அணில்களை வேட்டையாடுவது தேசியக் குற்றம்

அணில்கள் கொரித்து உண்ணும் இனத்தைச் சேர்ந்தவை. உலகெங்கிலும் 250 வகையான அணில்கள் உள்ளன. மர அணில், தரை அணில் மற்றும் பறக்கும் அணில் போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் வகைகளில் சில.

பொதுவாக அணில்கள் தாவர உண்ணிகள் என அறியப்பட்டாலும் சிறு பூச்சிகள், வண்டுகள், முட்டைகள், சிறிய பாம்பு, போன்றவற்றையும் உண்ணுகின்றன.

அணில்கள் 3லிருந்து 6 வாரங்களில் குட்டி ஈனும். கால இடைவெளியும் குட்டிகளின் எண்ணிக்கையும் இனத்திற்கு இனம் வேறுபடும். பெண்ணே குட்டிகளைக் கவனித்துக்கொள்ளும். பிறந்தவுடன் குட்டிகளுக்குக் கண் தெரியாது. காதும் கேட்காது. தாயின் வெப்பத்தை தொடுதலின் மூலமே உணர்ந்துகொள்ளும். இவை தாயிடம் 7 வாரத்திற்குப் பால் குடிக்கும்.|

வளர்ச்சியின்போது தானியம், குருவிகளின் முட்டை போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளும். ஒரு வருடம் ஆனதும் தாய் தனது குட்டிகளை விரட்டிவிடும். பிறகு குட்டி அணில் தன் சுய வாழ்வைத் தொடங்குகிறது. அணில்களின் தோல் மற்றும் மயிர்க்கால்கள் வெளிநாட்டவரின் நாகரிகத் தொப்பிகள் அங்கிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பகின்றன.

தென் அமெரிக்காவில் அணில்களைக் கொன்று நிறைய வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் அணில்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகின்றன. தற்பொழுது ஐ.நா. சபை, அணில்களை வேட்டையாடுவதைத் தேசியக் குற்றமாக அறிவித்துள்ளது.

நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

No comments:

Post a Comment