வெப்ப மண்டலப் பகுதிகளில், கடலோரங்களில் அலை பரவும் பகுதிகளில் நிலைபெற்று வளரும் ரைசோபோரா, அவிசினியா, ஆகிய மரங்களும் பெரும் செடிகளும் சதுப்பு நிலக் காடுகள் எனப்படுகின்றன. இவை கடல் நீரிலேயே வளர்கின்றன. சீறிவரும் நீர¨லைகள் கரையைக் கடக்கும்பொழுது இவை பாதுகாப்பு அரண்கள் போன்று அலைகளின் வேகத்தைக் குறைத்து நிலப்பகுதியைக் காக்கின்றன. சுனாமி போன்ற பேரலைகளிலிருந்து நம்மைக் காக்க கடற்கரைதோறும் இக்காடுகள் வளர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் இக்காடுகள் கடல் அரிப்பைத் தடுக்கின்றன. சதுப்பு நிலப்பகுதி வளம் நிறைந்து இருப்பதால் நைட்ரேட், பாஸ்பேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம். அதனால் நுண்ணுயிர்த் தாவர வகைகளும், நீர்வாழ்வனவும், மீன் உற்பத்தியும் இந்த நீரில் அதிகம். 20 முதல் 30 மடங்கு வரை இந்நீரில் மீன்வளம் காணப்படுகிறது. கடல் மீன்களுக்கும் கடல் உணவைச் சார்ந்திருக்கும் நீர்நாய், முதலை போன்ற பல்வேறு நிலம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும், மீன் உணவை உண்ணும் பறவைகளுக்கும் இந்தசதுப்பு நிலக்காடுகள் வீடுகளாக உள்ளன. ஏனெனில் இப்பறவை இனங்கள் இக்காடுகளில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கின்றன. இக்காடுகள் இல்லாத பகுதிகள் பெரும்பாலும் கடலால் ஏற்படும் நில அரிப்பினால் பாதிக்கப்படுகின்றன.
நன்றி : பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2016
No comments:
Post a Comment