Tuesday, November 2, 2010

எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது! எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு! எச்சரிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!

கடந்த 10 ஆண்டுகளில், மலேசியா எலிகளின் பெருக்கத்தில் ஆச்சிரியப்படக் கூடிய வளர்ச்சியை கண்டுள்ளது என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம், மோசமான ஆரோக்கிய பழக்கங்களும், கழிவு முறைகளுமே என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ்.
நகர்புறத்தின் அதிக வளரச்சி, மற்றும் மக்கள் குடியிருக்கும் இடத்தில் முறையாக செயல்படாத திட்டங்களுமே இதற்கு மற்றொரு காரணமும் என்றார் இத்ரிஸ்.

இந்த உலகத்தில், தோன்றிய இயற்கை பிராணியாக ஏற்றுக்கொண்டாலும் மனித உயிருக்கு இந்த எலிகள் இன்று மிகவும் மிரட்டலாக இருக்கின்றது. “லெப்டோஸ்பிரோஸிஸ் எனப்படும் எலிகளின் எச்சத்தால் ஏற்படும் நோய்கள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றார் இத்ரிஸ்.
எலிகளின் சிறுநீர் மற்றும் எச்சத்தால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களும் மரணங்களும் அதிக அளவு அதிகரித்துள்ளது.

கடந்த 2009ல் எலிகளின் மூலமாக 62 மரணங்களும், 1418 நோய்களும் ஏற்பபட்டதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்துள்ளது. மலேசியாவில் எலி தொடர்பான மற்றொரு நோய் தொடர்பான தகவல்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை என்றார் இத்ரிஸ்.

தீபகற்ப மலேசியாவில் எவ்வளவுதான் எலிகள் இருக்கின்றன? கோலாலம்பூரில் மட்டும் ஏறக்குறைய 44 லட்சம் எலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பினாங்கு நகராண்மை கழகம், கடந்த 2009ம் ஆண்டில் 14,639 எலிகளை பிடித்து கொன்றுள்ளதாக அறிவித்துள்ளது என்றார் இத்ரிஸ்.

உண்மையில் எலிகளின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்றார் இத்ரிஸ். ஊதாரணத்திற்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர ஆய்வில், 600 லட்சம் எலிகள் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு ஒரு எலி என்ற விகிதத்தில்.
மலேசியாவில் எலிகளை ஒழிப்பதற்காக, சில இலாக்காக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. எலிகளின் வசிப்பிடங்கள் அதிகரித்துகொண்டே போவதற்கு முக்கிய காரணம், சுத்தமின்மை, உணவுகளை தூக்கி எறிவது மற்றும் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுவதுதான் என்றார் இத்ரிஸ்.

சரியான முறையில் கட்டுப்படுத்த முடியாவிட்டால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருக்கும் என எச்சரித்தார் இத்ரிஸ்.

எலிகள் ஒரு ஆண்டில் நான்கிலிருந்து ஏழு முறை குட்டியிடும். ஒவ்வொரு முறையும் 6லிருந்து 12 குட்டிகளை அது ஈன்றெடுக்கும்.

ஒரு பெண் எலி ஒரு ஆண்டில் 4 முறை குட்டியிட்டால், ஏறக்குறைய ஒரு ஆண்டில் 582லிருந்து 954 எலிகள் சுற்றித்திரியும் என்றார் இத்ரிஸ்.

ஆகவே அதிகித்துவரும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இலாக்காக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். நன்றாக சுத்தத்தை கடைப்பிடிக்கும் உயர்ந்த அடுக்குமாடிகள் மற்றும் உணவங்களில் எலிகள் குடியிருக்கும் போது, சந்தைகள், உணவுச் சந்தைகள் மற்றும் பிற உணவு அங்காடி இடங்களில் எலிகளின் சாம்பிராஜயிம் இருக்காது என்பதில் என்ன உறுதி என்றார் இத்ரிஸ்.

மலேசியாவில் இரண்டுவிதமான எலிகள் இருக்கின்றன. குடியிருப்பு, வாணிபம் மற்றும் தொழிற்துறை பகுதிகளில் இருப்பவை, வீட்டு எலியான ராட்டுஸ் மற்றும் நோர்வே எலியான ராட்டுஸ் நோர்வெகிகுஸ்.

மனித ஆராக்கியத்திற்கு எலிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. பலதரப்பட்ட நோய்களையும் இது ஏற்படுத்துவதாக இத்ரிஸ் கூறினார்.

எலிகளின் சிறுநீர் தாக்கத்ததால் பலருக்கு லெப்டோஸ்பிரோஸிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அப்படி இந்நோய் குணப்படுத்தப்படாவிடில், அந்நோய் சிறுநீரக பாதிப்பு, மூளை மற்றும் ஈரல் பாதிப்பும் ஏற்படலாம்.

எலிகள் நோய்களையும் தருகிறது, உணவுகளை அசுத்தப்படுத்துவதோடு, மின்சார கம்பிகளை கடிக்கின்றன, மேலும் பயிர்களையும் நாசப்படுத்துகின்றன.

எலிகளை கட்டுப்படுத்துவதற்கு பூனைகளை வளர்ப்பது நல்லதுதான். ஆனால், சிறப்பான தூய்மையான சூழலுக்கு, பொது மக்களும், உணவுகளை கையாளுபவர்களும் தங்களது பொருப்பற்றப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் இத்ரிஸ்.
உணவு விற்கப்படும் எல்லா கடைகளிலும் மற்றும் உணவு கிடப்பில் வைக்கப்பட்டிpருக்கும் வர்த்தக இடங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

உணவுகளை தூக்கியெறியும் இடங்களில் எலிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும். ஆகையால் உணவுகளை கண்மூடித்தனமாக தூக்கி எறிவதைவிடுத்து, சுத்தத்திலேயே நாம் கவனம் செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் சுகாதாரம் மற்றும் நமது நன்மைக்காக இந்த எலிகளின் தொல்லை பிரச்சனையை அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்ளவதாக எஸ்எம். முகம்மது இத்ரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.


எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment