Sunday, August 22, 2010

தேவையில்லாத, ஆபத்தான தடுப்பூசித் திட்டத்தை ரத்து செய்யுங்கள்!

நாட்டில் உள்ள 13 வயதுடைய எல்லா சிறுமிகளுக்கும் யூமன் பப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி.) (Human papillomavirus) தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு பரிந்துரைத்து வருவதை பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் எதிர்ப்பதாக அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

பாலியல் தொடர்புகளின் மூலம் பரவும் வைரஸ் தொற்றுக்காக போடப்படும் இந்தத் தடுப்பூசி தேவையில்லாதது, அறிவியல் பூர்வமாக நிருபீக்கப்படாதது. பாதுகாப்பற்றதும் கூட. பல தரப்பிலிருந்து இந்த தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்புக்கள் வந்திருந்தாலும் கூட, அரசாங்கம் சுமார் 300,000 சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசியைப் போடுவதற்கு வருடத்திற்கு மவெ. 150 மில்லியனை செலவு செய்யவிருக்கிறது. வைரஸ் தொற்றால் ஏற்படும் 40 விதமான புற்றுநோய்களில் இரண்டு வகையான புற்றுநோய்க்கு மட்டுமே இந்த தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்று இத்ரிஸ் கூறினார்.

பாலியில் தொடர்புகளினால் எச்.பி.வி. தொற்றுகிறது. பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் அபாயங்களை சமய மற்றும் நன்னெறிக் கல்வி மூலம் தடுப்பதை விட்டுவிட்டு தடுப்பூசி மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முயல்வது அறிவுப்பூர்வமாகப் படவில்லை என்று இத்ரிஸ் கூறினார். எச்.பி.வி. தடுப்பூசி பாலியல் தொடர்பு மூலமாக பரவும் எல்லா விதமான வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பு கொடுக்கும் என்று சிறுமிகளுக்கு தப்பான அபிப்பிராயம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இது மிகவும் ஆபத்தானது.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலமாகவே இரண்டு வருட காலக்கட்டத்திற்குள் 90% எச்.பி.வி. தொற்றுநோயை விரட்டிவிட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இது உண்மை என்றால் இந்த தொற்றுநோய் தடுப்பூசிக்கு தேவையே இல்லை.

எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பிறகு அமெரிக்காவில் ஒவ்வாமை காரணமாக 53 பேர் இறந்துபோயுள்ளனர். எச்.பி.வி. தடுப்பூசியால் ஏற்படும் பலன்களைவிட அது ஏற்படுத்தும் பக்க விளைவுகள் ஏராளம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் டாக்டர் டாயன் ஹாப்பர் கூறுகிறார்.

மெர்க் கம்பெனியின் கார்டாசில் (Gardasil) மற்றும் க்ளாக்சோஸ்மித்க்ளின் கம்பெனியின் செவாரிக்ஸ் (Cervarix) எச்.பி.வி. தடுப்பூசிகளே நம்முடைய குழந்தைகளுக்குப் போடப்படவிருக்கின்றன. கார்டாசில் பக்கவாதம், வலிப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தடுப்பூசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் அதிக தொடர்பிருப்பதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது. மயக்கம் மற்றும் இரத்தம் கட்டிக்கொள்ளுதல் போன்றவை கார்டாசில் வகை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏற்பட்டதாக 2008ன் ஆய்வு காட்டுகிறது. கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட இரண்டு சிறுமிகள் மோசமான நோய்க்கு ஆளானதால் 2009ல் ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சு கார்டாசில் எச்.பி.வி. தடுப்பூசி போடுவதை நிறுத்தியது. செவாரிக்ஸ் எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட பெண்களும் தலைவலி, குமட்டல் மற்றும் இறப்புக்கு ஆளானதாக இங்கிலாந்தில் ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆகையால் சுகாதார அமைச்சு 150 மில்லியனை எச்.பி.வி. தடுப்பூசி போடுவதற்காக செலவு செய்யாமல், அதே தொகையை, இளம் பிராய பாலியல் தொடர்புகளினால் ஏற்படும் ஆபத்துக்கள், எச்.பி.வி. தொற்றுநோய்க்கிருமிகளின் பாதிப்பு பற்றி கல்வி ஊட்டுவதற்கு பயன்படுத்துவது பலனளிக்கும். தடுப்பூசிகளை விட பெப் ஸ்மியர் சோதனையே கருப்பை புற்றுநோய் தடுப்புக்கு இன்னும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார் இத்ரிஸ்.

சென்ற வருடம் நவம்பர் மாதத்திலும் இந்த வருட மார்ச் மாதத்திலும் பி.ப.சங்கம் சுகாதார அமைச்சோடு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் தேவையில்லாத இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தைத் துடைத்தொழிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் பினாங்கில் சுகாதார அமைச்சு நடத்திய சந்திப்புக் கூட்டத்தில், 13 வயது சிறுமிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசி விளக்கங்களை அளித்து தடுப்பூசி தொடர்பான அவர்களுடைய பயத்தைப் போக்கவிருப்பதாக அறிவித்தது. பிறகு இந்த சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களுக்கு இதன் நன்மையை எடுத்து விளக்கி தடுப்பூசி போட அனுமதி பெற வேண்டும்.

தடுப்பூசி தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கமளிக்காமல், அவர்களுடைய குழந்தைகளுக்கு மட்டும் விளக்கத்தை அளிப்பதன் மூலம் பிள்ளைகளின் நலனையும் ஆரோக்கியத்தையும் முடிவு செய்ய வேண்டிய பெற்றோர்களுக்கு தடுப்பூசி தொடர்பான முழு விபரங்களை அளிக்கும் பொறுப்பிலிருந்து இவர்கள் நழுவிக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்றே தெரிகிறது. இது பெற்றோர்களின் உரிமையை மீறும் செயலாகும். எச்.பி.வி. தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளை சுகாதார அமைச்சு பெற்றோர்களுக்கு அவசியம் விளக்கியாக வேண்டும் என்றார் இத்ரிஸ்.

அவசியமற்ற இந்த எச்.பி.வி. தடுப்பூசித் திட்டத்தை சுகாதார அமைச்சு அமல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் முதலில் 13 வயது சிறுமிகளின் எல்லா பெற்றோர்களையும் அழைத்து இந்தத் தடுப்பூசி தொடர்பான முழுமையான விபரங்களை அளிக்க வேண்டும்.

தேவையற்ற, ஆபத்தை விளைவிக்கும் இந்த தடுப்பூசித் திட்டத்தில் உள்ள பக்க விளைவுகளையும் ஆபத்துக்களையும், மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் சுகாதார அமைச்சு முழுமையாக எடுத்து விளக்க வேண்டியது அவசியமாகும். அதோடு எச்.பி.வி. தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுமியாவது பக்க விளைவுகளால் பாதிக்கப்படுவாரானால் அதற்கு சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment