Saturday, August 28, 2010

அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டைப் பயன்படுத்துவது சரியான முடிவு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்பு!

அனைத்துலக வர்த்தகத்தில் ரிங்கிட்டை ஒரு நாணயமாக பயன்படுத்துவதற்கு வெளிநாட்டு நாணய மாற்று நிர்வாக விதிகளை தளர்த்துவதற்கு பேங் நெகாரா எடுத்துள்ள முடிவை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வரவேற்கிறது.

இந்த முடிவு சரியான பொருளாதாரத்துக்குச் சாதகமானது என அதன் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

முன்பதாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் உள்நாட்டு வியாபாரத்தின் பல இலட்சக்கணக்கான வெள்ளியை பாதுகாத்திருக்கலாம் என அவர் கூறினார்.

உண்மையில் இப்பிரச்னையை பேங் நெகாராவின் கவனத்திற்கும் நிதி அமைச்சின் கவனத்திற்கும் ஜனவரி 2008ல் பி.ப.சங்கம் கொண்டு வந்தது.

அச்சமயம் நாங்கள் அனுப்பிய கடிதத்தில் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான பலவீனத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் ஏற்றுமதி கணக்கை ரிங்கிட் நாணயத்திலேயே குறிப்பிட்டிருந்திருந்தால் அதிக அளவு அவர்கள் நன்மை அடைந்திருப்பார்கள் என்றார் அவர். அனைத்துலக வர்த்தகத்தில் உள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்துவது இவ்வட்டாரத்தில் பிரபலப்படுத்தப்பட்டால் அமெரிக்க டாலரை சார்ந்திருப்பது குறையக்கூடும் என தாங்கள் நம்புவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ் கூறினார்.

எஸ்.எம்.முகம்மது இத்ரிஸ்
தலைவர்

No comments:

Post a Comment