Thursday, January 29, 2009

இலங்கை வங்கி மீது தாக்குதல்

சென்னை: இலங்கை போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படும் நிலையில், சென்னையில் உள்ள இலங்கை வங்கி மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், "பாங்க் ஆப் சிலோன்' என்ற இலங்கை வங்கி உள்ளது. வங்கியில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். வங்கிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வங்கிக்குள் நேற்று மாலை 30க்கும் மேற்பட்டோர் அதிரடியாக புகுந்தனர். முன்புறம் இருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.


இலங்கையில் தமிழ் ஈழம் மலர வேண்டும் என கோரி, தீக்குளித்து இறந்த வாலிபரை பார்க்க வந்த வக்கீல்களில் சிலர், இலங்கை வங்கி மீது தாக்குதலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.சம்பவ இடத்தை, கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன் பார்வையிட்டார்.வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், "வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்த சிலர் ஒரு பஸ்சில் வந்தனர். பஸ்சை நிறுத்தி கீழே இறங்கினர். வங்கியில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். ஓரிரு நிமிடத்தில், வந்த பஸ்சில் ஏறிச் சென்றுவிட்டனர்' எனக் கூறினர். தாக்கியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ராதாகிருஷ்ணன் பணியிலிருந்த ஒரு எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment