இப்படத்தில் உள்ளவர் மலேசிய தோட்டப் புற மக்களிடையே நன்கு அறிமுகமானவர். ரப்பர் தோட்டத்திலே பிறந்து, வளர்ந்து ஒரு துடிப்புமிக்க தொழிற்சங்கவாதியாக உயர்ந்தவர். பல முக்கிய பொறுப்புக்களை தேசிய தோட்ட தொழிற்சங்கத்தில் வகித்தவர்.
கெப்பேலா ஆரம்பிக்கப்பட்டதற்கு இவர், முக்கிய பங்காற்றியுள்ளார். தோட்ட தொழிலாளியாக இருந்துக் கொண்டே தொழிற் சங்கத்தில் துடிப்போடு பங்காற்றினார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையினால் கடுமையான தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார். தே.தோ.தொ. சங்கம் இப்பொழுது இவரை பழிவாங்குகின்றது.
கெப்பேலாவை நல்ல நிலைக்கு உயர்த்திய இவர், அதே கெப்பேலா பிரச்னையை எதிர்நோக்க ஆரம்பித்தவுடன், தனது தோட்டத் தொழிலை ராஜிநாமா செய்துவிட்டு இப்பொழுது கெப்பேலாவை காப்பாற்றுவதற்காக படாதபாடுபட்டு வருகின்றார்.
எல்லாச் சுமைகளையும் தன் தலையில் அமர்த்திக் கொண்டு, வருகின்றவர்களுக்கு சமாதானம் கூறி, பிரச்னையை தீர்ப்பதற்கு வழிகளையும் வழங்கி வருகின்றார் இவர்.
கெப்பேலா மறுவாழ்வு பெறுவதற்கு அயராது பாடுபட்டவர், இவர் மட்டும் தான். “வேறு யாருமல்ல”?
பயனீட்டாளர் குரல் : மார்ச் 1991
No comments:
Post a Comment